ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Friday, 9 December 2011

சேட்டன்களின் சென்னைச் சில்மிஷங்கள்??


முல்லைப்பரியாறு அணையின் வலு குறித்த பிரச்சினையே கேரள அரசால் உருவாக்கப்பட்டு பெரிதாக்கப்பட்டு பயங்காட்டப்படும் ஒரு அரசியல் நாடகம் என்ற உண்மை பலரால் பல விதங்களில் சொல்லப்பட்டு வந்தாலும் அறிவு ஜீவிகளின் மேடையாகக் கருதப்படும் ஆங்கில நாளிதழ்கள்  நடுவுநிலை என்ற பெயரில் கேரள சார்புடன் (இடது பக்கம் போய்விட்டு left of the center என்று வெட்கமில்லாமல் சிலர் பேசுவது போல) எழுதிவருகின்றன.  கேரள அரசின் தவறுகள் மூடி மறைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தி இருவரும் சமாதானமாக இருக்கும்படி எழுதுகின்றன.

Saturday, 26 November 2011

26/11 கொடுமையும் இந்திய-இஸ்ரேல் நட்புறவும்

கடந்த 2008 நவம்பர் 26 அன்று மும்பை நகரில் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 200க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். அதில் காவல்துறை கைது செய்த கசாப் இன்றும் மும்பை சிறையில் சகல வசதிகளுடன் இருக்கிறான். தீவிரவாதிகள் தாக்குதலுக்குத் தேர்வு செய்த இடங்கள் வணிக முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், மத இன பேதமற்று அனைத்து மக்களும் அதிகம் கூடும் இடங்கள். ஒரு தொடர்வண்டி நிலையம், ஒரு தேநீர் விடுதி, இரண்டு நட்சத்திர விடுதிகள், ஒரு யூத சமூக மையம் ஆகிய இடங்கள் தாக்குதலுக்கு உள்ளாயின.

Thursday, 20 October 2011

கூடங்குளம்... சில உண்மைகள்... என் பார்வை

கூடங்குளம் பிரச்சினை சிக்கலானதே! மின்சாரம் கிடைக்கும் என்பது தவிர வேறெந்தப் பெரிய பயனும் இருக்காது. அணு உலை அமைக்கப்பட்ட போதே எழுந்த எதிர்ப்புகள் பூர்ஷ்வாயிசம், பழமைவாதம் என்று முத்திரை குத்தப்பட்டு புறந்தள்ளப்பட்டன. முத்திரைக்கு மை தடவிக் கொடுத்த பெருமை இடது சாரிகளையே சாரும். ஏனென்றால் கூடங்குளம் அணு உலை சோவியத் ரஷ்யத் தயாரிப்பு. அதைக் குறை கூறுவது தெய்வக் குற்றம்... சீ... இல்லை இல்லை அதையும் தாண்டி........... பிற்போக்குவாதம். (நீங்களும் உங்க உருப்படாத முற்போக்கும் ___________போக)...

Monday, 19 September 2011

தில்லி ஐகோர்ட்டில் குண்டுவெடிப்பு

தில்லி உயர்நீதிமன்றத்தில் குண்டு வெடித்து பலர் மாண்டு போயினர். தேசத் தலைநகரத்தின் பாதுகாப்பு பல்லிளிக்கிறது. தீவிரவாதிகள் வந்தார்கள் கொன்றார்கள் சென்றார்கள். அரசு இயந்திரம் சத்தம் கேட்டு விழித்து சுற்று முற்றும் பார்த்து சுதாரித்து காயமடைந்தோரை அசுபத்திரியில் சேர்த்து மாண்டோரின் பிணங்களை அப்புறப்படுத்தி வந்து "என்னப்பா, ஆச்சு?" என்று விசாரிக்க ஆரம்பிக்கையில் குண்டு வைத்தவன் கராச்சி தாண்டிப் போயிருப்பான் அடுத்த கட்ட ஆயத்தப் பயிற்சிக்கு.

Wednesday, 17 August 2011

சமச்சீர் கல்வி - கருணாநிதிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!!

சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிலோ அங்கே சமச்சீர் கல்விக்காக வைக்கப்படா வாதங்களிலோ தவறு காண முடியாது, தமிழக அரசு சமச்சீர் கல்வி குறித்த அமலாக்க நடைமுறைகளில் சற்றே சறுக்கி விட்டது. சென்னை உயர்நீதிமன்றத்  தீர்ப்பு 2011ஆம் கல்வியாண்டிலோ அதற்குப் பிறகோ சமச்சீர்கல்வியை அமல் படுத்தவேண்டும் என்பதே. தரக் குறைபாடுகளை எடுத்துச் சொல்லி 2012ல் அமல் படுத்துகிறோம் என்று சொல்லி இருக்கலாம்.

Tuesday, 19 July 2011

மீண்டும் மும்பையில் குண்டு வெடிப்பு!

மும்பையில் மூன்று இடங்களில் குண்டு வெடித்துள்ளது. மும்பா தேவி கோவிலுக்கருகே ஒரு குண்டு வெடித்துள்ளது. அனுமார் கோவிலுக்கருகே ஒரு குண்டு வெடித்துள்ளது. ஓபெரா ஹவுஸ் எனப்படும் இடத்தருகே ஒரு குண்டு வெடித்துள்ளது. 17 பேர் சம்பவ இடத்திலேயே பலியகியுள்ளனர். 120 பேருக்கு மேல் காயமடைந்துள்ளனர்.மும்பாதேவி கோவிலுக்கருகே உள்ள ஜவேரி பஜார் தங்க வைர நகைக்கடைகள் நிறைந்த பகுதி. மதக் கண்ணாடியைக் கழற்றி வைத்து விட்டுப் பார்த்தாலும் பெருவணிகர் பகுதி இது.

Sunday, 3 July 2011

(சமச்)சீர்கெட்ட கல்வி

Let Schools not interfere in Education- Mark Twain. பள்ளிகள் கல்வியில் தலையிடாதிருக்கட்டும் என்று மார்க் ட்வெய்ன் சொன்னதைச் சற்றே மாற்றி கல்வியில் அரசியல் தலையிடாதிருக்கட்டும் என்று நம்பிக்கை தெரிவிக்க விழையலாம் என்ற நம்பிக்கை இப்போது துளிர்த்திருக்கிறது. சீர்கேட்டை சீர் என்று சீரற்ற முறையில் வாதிட்ட திமுகவின் தான்தோன்றித்தனம் வழக்கொழிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டே இந்தியாடுடே பத்திரிகை திமுக செயல்படுத்த விழையும் சமச்சீர் கல்வி தரத்தைத் தாழ்த்தும் வகையானது என்றும் அதன் தீமைகளையும் விளக்கி எழுதியது. ஆனாலும் "சென்ட்ரலும் நானே! ஸ்டேட்டும் நானே" என்று மமதையில் மிதந்துகொண்டே படிக்காதவனுக்கு இணையாக படிப்பவனையும் தரம் தாழ்த்துவதே சமத்துவம் என்று கொள்கைப் பிடிப்போடு செயல்பட்டது திமுக அரசு. பள்ளிக்கல்வியைக் கூட முழுதாய் முடிக்காத தனக்கு டாக்டர் பட்டம் வேண்டுமென்று மாணவர் காங்கிரஸ் தலைவர் உதயகுமாரைக் கொன்ற கருணாநிதியிடம் கல்வித் தரம் பற்றி வேறென்ன எதிர்பார்க்க முடியும்.

தான் எழுதிய கவிதைகளைக் களைந்துவிட்டு பாடங்களை நடத்தலாமே என்று திருவாய் மலர்ந்த கருணாநிதி ஒருவிஷயத்தை மறைக்கப்பார்க்கிறார். அடிப்படையே ஆட்டம் கண்ட திட்டம் அது. தப்பும் தவறுமாய்ப் பாடங்கள், பிழைகள் மண்டிய தகவல்கள், படித்தால் பயன் என்பது மருந்துக்குமில்லை என்ற அளவில் இருக்கும் இந்தப் பாடத்திட்டத்தால் எதிர்காலத் தலைமுறை சிந்திக்கும் திறனிழந்து மனிதக் குப்பைகளாய் நடமாடுவதே நடக்கும். அப்படி இருந்தால் தானே திமுக ஆட்சி தொடரமுடியும்?

பாரா அவர்களின் கட்டுரை பல்வேறு பாடங்களில் மொழியின் அடிப்படை இலக்கணங்கள் மீறப்பட்டு அர்த்தமற்ற வகையில் பாடங்கள் எழுதப்பட்டுள்ளதைக் காட்டுகிறது. 400 கோடி செலவில் செம்மொழிக்கு மாநாடு போட்ட முத்தமிழ் வித்தகரின் ஆட்சியில் செய்யப்படும் வேலைகளில் தமிழ் குற்றுயிருடன் தள்ளாடுவது வேதனைக்குரிய விஷயம். டாஸ்மாக் கடைகளை அகலத்திறந்து வைத்து செம்மொழி மாநாடு போட்டால் தமிழ் தள்ளாடாமல் என்ன செய்யும்?

இந்த அடிப்படை விஷயத்திலேயே தரத்தை தாழவிட்டு அதை நியாப்படுத்தும் சமச்சீர் கல்விக் குழு பாடங்களின் தரத்தையோ கல்வியின் தரத்தையோ உயர்த்தப் பாடுபட்டிருக்கும் என்று யாரும் கோவிலில் சூடன் ஏற்றியோ அல்லது பெரியார் சமாதியில் மலர் வளையம் வைத்தோ அல்லது முரசொலி மாறன் மீது ஆணையிட்டோ (கருணாநிதியின் மனசாட்சி) சத்தியம் செய்தாலும் நம்பமுடியாது. பாடத்திட்டக் குழுவில் அவருடைய அடிவருடிகள் பலர் நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் துதிபாடி நன்றிக்கடன் செலுத்தவே தலைப்பட்டார்களே தவிர மாணவர்களின் எதிர்காலம் பற்றிக் கவலைப்படவில்லை. காரணம் அவர்களின் பிள்ளைகள் CBSE பள்ளிகளில் படித்து, வெளிநாட்டுக் கல்லூரிகளுக்குப் போய்விடுவர். காசுக்கு ஓட்டு விற்கும் கும்பலுக்கு என்ன கல்வித்தரம் வேண்டிக்கிடக்கிறது என்ற திமுகவின் அலட்சியமே இதற்குக் காரணம்.

பாடத்திட்டக் குழுவில் நியமிக்கப்பட்டதும், பற்கள் 32ஐஇயும் காட்டியபடி ஆளுயர மாலையுடன் கட்சித் தலைவரைப் பார்க்க கிளம்பிவிடுகிற அரசியற் குட்டையில் ஊறிய மட்டைகள் எத்தகைய கல்வி பற்றியும் சிந்திக்கத் தகுதியானவை தானா? ஒன்றுக்கும் லாயக்கற்ற தனக்கு இவ்வளவு பெருமை கொடுத்த தன் தலைவன் புகழ் ஓங்க எதுவும் செய்யலாம் என்பது தவிர வேறெதுவும் தெரியாதவர்கள் இந்த மூடர்கள். அப்படிப்பட்டவர்களே வேண்டுமென்பது தான் கருணாநிதியின் கருத்தும் கூட.  தன்னைப் புகழும் கூட்டங்கள், விழாக்களுக்குச் சென்று புன்னகைத்தபடி புகழுரைகளைக் கேட்டு மகிழ்வது தவிர தமிழக முதல்வருக்கு வேறு பணியில்லை என்று கருதுமளவுக்கு பாராட்டுவிழா நாயகனாக அல்லவா அவர் இருந்தார்?

முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை சென்னை வேளச்சேரியில் நடத்தும் சன்ஷைன் சீனியர் செகண்டரி பள்ளியில் ஏன் சமச்சீர் தமிழ்க் கல்வி இல்லாமல் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டம் வழங்கப்படுகிறது? பள்ளிக்கு நல்ல தமிழில் கதிரொளி கல்விக்கூடம் என்று ஏன் பெயர் வைக்கவில்லை? இந்தி எதிர்ப்பில் வளர்ந்த இயக்கத்தின் குடும்பப்பள்ளியில் இந்தி பாடமாக வைக்கப்பட்டுள்ளது ஏன் ? ஏன் திமுகவினர் இவற்றை எதிர்த்துக் கேள்வி கேட்காமல் சோற்றாலடித்த பிண்டம் (2Gஆல் அடித்த பிண்டம் என்றும் சொல்லலாம்) போல் இருந்துவிட்டு அதிமுக அரசுக்கு எதிராக மட்டும் லாவணி பாடி வருகிறார்கள்? 2G கொள்ளையின் கதாநாயகி கனிமொழி இந்தி படித்ததையே எதிர்க்க முதுகெலும்பில்லாத அவர்களா இதைக் கேட்கப்போகிறார்கள்?

அடித்த 176000 கோடியில் ஒரு நயா பைசா கூடப் பெறாத தொண்டன் மட்டுமே "கலைஞர் நல்லவர்பா" என்கிறான். கொள்ளையில் பங்குபெற்ற துடிபாடிகள் தம் பங்கைக் காப்பாற்றிக் கொள்ள காட்டிக்கொடுக்கத் தயாராகிறார்கள். மக்கள் நிர்வாகத்தின் அடிப்படை கூடப் புரியாத தற்புகழ்ச்சிக்கு மயங்கித்திரியும் ஒரு தற்குறி பற்றிய கட்டுரைகளும் அது கக்கி வைத்த கவிதைகளும் பாடமாக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் எந்தத் தமிழனும் சீர்கெட்டு விழுந்துவிடவில்லை.

திமுகவின் புரிதலின் படி சமச்சீர் கல்வி என்பது சமமாகச் சீர்கெடுக்கப்பட்ட கல்வி. தமிழக அரசு 10+2 புத்தகங்களைவிட சி.பி.எஸ்.இ 10+2 புத்தகங்களில் விசயம் தெளிவாகவும், நல்ல நடையிலும் விளக்கப்பட்டுள்ளதாக இருக்கிறது. எல்லாவிதமான நுழைவுத் தேர்வுக்கும் சி.பி.எஸ்.இ பாடப்புத்தங்களின் அடிப்படையில் தான் கேள்விகள் கேட்க்கப்படுகின்றன. அந்தத் தரத்துக்குத் தமிழக மாநிலக் கல்வியை உயர்த்துவது சமச்சீராகுமேயன்றி, இருப்பதையும் தாழ்த்திவிட்டு வடக்கு வாழ்கிறது தெற்குதேய்கிறது என்று வசனம் பேசுவது முட்டாள்தனம். தெற்கைத் தேயவிட்டது யார் என்று வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் கருணாநிதியின் பங்கு 90%.

சமச்சீர் கல்வியாளர்கள் பேசாமல் சி.பி.எஸ்.இ பாடப்புத்தகத்தை தமிழில் மொழியாக்கம் செய்து (நடுநடுவில் மானே,தேனே, பொன்மானே எல்லாம் போட்டு) தமிழக அரசு பாடநூலாக வெளியிட்டாலே தமிழக மாணவர்களின் எதிர்காலம் காப்பாற்றப் பட்டுவிடும் என்றொரு வாதத்தை பின்னூட்டங்களில் கண்டேன். திமுக ஆட்சியில் செய்யப்படும் மொழியாக்கத்தில் நடுவில் போடும் மானே தேனே பொன் மானே கூட கலைஞரே, தலைவரே, முத்தமிழறிஞரே என்றே போட வேண்டியிருக்கும். ஆட்சி மாறினால் அதை மாற்ற ஒரிரு மாதங்கள் புத்தகமில்லாது பள்ளிக்கூடங்கள் செயல்பட வேண்டியிருக்கும்.

மேலும் நாம் கைக்கொண்டிருக்கும் இந்தக் கல்விமுறை சிந்தனையைச் சீரான வழியில் செலுத்தும் முறை அல்ல. தனக்கு அடிவருடியபடியே தன் பணிகளுக்கு உதவும் எழுதப்படிக்கத் தெரிந்த கூலிகளை உருவாக்கும் மெக்காலே என்ற ஆங்கிலேயன் வகுத்த திட்டம். இட்ட பணியைச் செய்துவிட்டு அதற்கே இறுமாந்து திரியும் ஒரு அடிவருடிக்கூட்டத்தை உருவாக்கும் இந்தக் கல்வி முறையை இன்னும் செம்மையாக்கி அடிமைக்கூட்டமாகத் தமிழரை அழுத்தி வைக்கும் சதியே கருணாநிதி கொண்டுவந்த சமச்சீர் கல்வி.

Affirmative Action என்ற கோட்பாட்டின் மூலம் கறுப்பின மக்களைக் கல்விகற்க வைத்து சம உரிமை படைத்த முடிமக்களாக ஆக்கிய அமெரிக்காவிலும் தரம் தாழ்த்தி சமச்சீர் கல்வி புகட்டி சம உரிமை நிலைநாட்டப்படவில்லை. வெள்ளையின மக்கள் படிக்கும் அதே பாடத்திட்டத்தை அதே சட்டதிட்டங்களுடனே படித்துத் தான் முன்னேறினர் கறுப்பின மக்கள். பிந்தங்கியவர்களை முன்னேற்றுவது சமச்சீர். முன்னேறியோரைத் தாழ்த்தி சமச்சீர் காண்பது என்ற முட்டாள் தனத்தைக் கருணாநிதி எந்தப் பாசறையில் பயின்றார் என்பது தெரியவில்லை.

ஒன்று மட்டும் உறுதி. எந்தப் பாசறையிலும் பயின்ற எந்தக் கொள்கையையும் கருணாநிதி பின்பற்றவில்லை என்பது வரலாறு. திராவிடக் கூத்தாடினாலும்  திரவியத்தில் மட்டுமே கண்வைப்பது அவரது பழக்கம். ஆகவே சமச்சீர் என்ற பெயரில் அவர் கொண்டு வந்த இந்தச் சீர்கேடு ஒழிவது சாலச் சிறப்பு. அரசு தற்போது ஈடுபட்டுள்ள சீர்படுத்தும் முயற்சி நன்று.

Wednesday, 27 April 2011

ஸித்தியடைந்தார் ஸத்ய ஸாயி பாபா!!

எத்தனையோ மஹான்கள் இந்த பாரத பூமியில். வந்தார்கள்... சென்றார்கள்...  பலர் தன்னுள் ஒடுங்கி இறையை உணர்ந்து உலகைவிட்டு விலகியே இருந்து சென்றவர்கள். சிலர் உள்ளே கண்டதை உலகுக்கு அறிவித்து அதன்பின் தனக்கு உத்தரவான வழியில் சென்றனர். அந்த வரிசையில் உலகளாவிய பக்தர் கூட்டம் கொண்டு தன் பக்தர்களை ஒரு நிறுவனத்தில் இணைத்து மனிதத் தொண்டு செய்தும் செய்வித்தும் வந்தவர் ஸத்ய ஸாயிபாபா.


கடவுள் அவதாரம் என்று அவர் உரிமை கோரியது விவாதத்துக்கு உரியது எனினும், கடவுளை அடைய அவர் சொன்ன வழிகள் முறையாகப் பின்பற்றினால் சரியாகும் என்ற வகையினது. மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று சொன்னதோடு நில்லாது செய்தும் காட்டினார். அதற்குச் சில சாட்சிகள் புட்டபர்த்தியிலும், பெங்களூருவிலும் உள்ள இலவச மருத்துவமனைகள், கல்லூரிகள்,  சென்னைக் குடிநீர் ஆகியன.

நாட்டு அரசாங்கத்தில் பெயர் சொல்லும் அளவுக்கு யார் இருந்தாலும் அவர்களைத் தன்வசம் இழுத்துக் கொண்டு அவர்களின் சேவையைப் பயன்படுத்திக் கொண்டார் பாபா. அப்துல்கலாம் ஐயா முதற்கொண்டு அவர் ஆற்றிய கல்விச் சேவையைப் போற்றாத ஆளில்லை. பாபா காட்டும் சித்து விளையாட்டுக்களைப் பெரிதாகப் பேசும் பொதுஜனம் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளை கேட்டுப் பின்பற்றியதா என்பது சந்தேகமே! பகவத் கீதை துவங்கி உபநிஷத்துக்கள் வரை அவரது விளக்கங்கள் தனித்தன்மையது.

இவ்வளவு இருந்தும் ஆசிரமத்தில் அவ்வப்போது உரசல்கள், சச்சரவுகள் நடக்கிறதே? பாதகங்கள் சில நடந்தனவே என்று கேட்டதற்கு அவர் அளித்த விளக்கம் "விஷப்பூச்சிகளை நான் என்னருகே வைத்துக் கொண்டேன். அவற்றை வெளியில் விட்டால் உலகம் தாங்காது". சட்டப்படி ஏற்க முடியாது எனினும் சற்றே சிந்திக்க வைத்தது. அமானுஷ்ய சக்திகள் கொண்ட அவரே திணறும் போது நாமெல்லாம் எம்மாத்திரம்? எதுக்கும் சாக்கிரதையாவே இருப்போம் என்று நல்லவர்களை இதன்மூலம் முடிவெடுக்க வைத்தார் ஸாயிபாபா.

வேத மந்திரங்கள் பாராயணம் நடந்தால் கவனித்துக் கேட்பாராம். வேத வித்துக்களை ஊக்குவித்து அவர்களுக்கு தனிச்சிறப்பு அளிப்பார் என்று சென்னை ஸம்ஸ்க்ருதக் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பண்டிதர் ஜெயராம ஷர்மா அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். பாபாவிடம் எனக்குப் பிடித்த மற்றொரு விஷயம் தாய்மொழிக்கு அவர் தந்த மதிப்பு. ஆங்கிலம் தெரிந்திருந்தாலும் தம் தாய்மொழியிலேயே பேசுவார். பல சமயங்களில் மொழிபெயர்ப்பாளர் திணறி நிற்க பாபா ஆங்கிலத்தில் சொல்லி அதை மொழிபெயர்ப்பாளர் அப்படியே ஒப்பித்த கதை வாடிக்கை.

மதங்கள் பற்றிப் பேசுகையில் நீ உன் முன்னோர் காட்டிய வழியில் செல்வதே சிறப்பு  என்று வலியுறுத்தினார் பாபா. எங்கிருந்தும் எங்கும் மாறுவதை அவர் ஊக்குவித்ததில்லை. ஸநாதன தர்மத்தை தெளிவுற விளக்கி அதை ஓங்கிப் பிடித்தவர் அவர். பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும் கடவுள் ஒருவரே என்று சொல்லி அதற்கு அவர் தாயைக் காட்டித் தந்த உதாரணம் தனிச்சிறப்பு வாய்ந்தது. மகள், தாய், மனைவி, மாமி, பாட்டி என்று பலருக்குப் பல வகைகளில் உறவு முறை இருந்தாலும் அந்த முறைகளின் மூலம் குறிப்பிடப்படுவது உன் தாய் தானே! அது போலத்தான் கடவுள். பல பெயர்களில் பலர் அழைத்தாலும் அவர் ஒருவரே என்றார். logic ஓகே.

96 வயது இருப்பேன். அதன் பிறகு மறைந்து மாண்டியாவில் பிறப்பேன், என்று அறிவித்தார். நெடுங்காலம் தன் பேச்சுக்களை மொழிபெயர்த்த கஸ்தூரி என்ற பெரியவர் பெண்ணாகப் பிறப்பெடுத்து தன் அடுத்த அவதாரத்தைப் பெற்றெடுப்பார் என்றும் அறிவித்தார். யாகவா முனிவர் என்றொரு காமெடி பீஸ் இப்படியாகத்தானே பேசியது! இவரும் இப்படியே பேசுகிறாரே! அதைப் போலவே இவரும் குறித்து வைத்த நேரத்துக்கு முன்பே போய்விட்டால் என்ன ஆகும் என்று யோசித்தேன். அவ்வாறே நடந்தும் விட்டது.


இவை போனற சிலபல சர்ச்சைகள், முரண்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், ஸத்ய ஸாயி பாபா செய்திருப்பது மகத்தான மனிதகுலத் தொண்டு. அதற்காக அந்த மனிதரை வாழ்த்தலாம். அவர் ஸந்நியாச தர்மத்தைக் கைக்கொண்டு ப்ரம்மச்சரியம் காத்து வாழ்ந்து மறைந்தவர். அதற்காக அவரை வணங்கலாம். Help ever; Hurt never என்பதைத் தாரக மந்திரமாகக் கொள்வீர் என்று முழங்கினார் அவர். பின்பற்றுவது சற்றே கடினம் என்றாலும் முயல்வது தவறில்லை.

பணத்தைக் கொள்ளையிட்டுப் பதுக்கும் இன்றைய உலகில் இவர் போன்று பொதுத் தொண்டு செய்யும் பெரியோர் பலர் நமக்கு அவசியத்தேவை. ஆகவே, ஸத்ய ஸாயி பாபாவின் ஆத்மா இறைவன் திருவடி நிழலில் சற்றே இளைப்பாறிவிட்டு மீண்டும் தன் மானிட சேவைப் பயணத்தைத் தொடங்க தென்னாடுடைய சிவபெருமானைப் பிரார்த்திப்போம்.



சிவோஹம்...சிவோஹம்...சிவோஹம்!!!

Tuesday, 19 April 2011

செம்மொழியான தமிழ் மொழியாம்!!

நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரத்தில் தமிழைச் செம்மொழி ஆக்கிய கோமகனே என்று கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினர் திமுக கூட்டணியினர். 450 கோடி ரூபாய் செலவில் டாஸ்மாக் கடைகளை ஓவர்டைம் பணியாற்ற வைத்து திமுகவின் குடும்பம் குதூகலித்து மகிழ நடத்தப்பட்ட விழா அது என்பது ஊரறியும். அப்படிப்பட்ட விழா நடந்ததால் தமிழுக்கு என்ன பயன்? தமிழனுக்கு என்ன பயன்?

செம்மொழி அறிவிப்பு வந்தவுடன் தமிழனுக்கு என்ன பயன் என்ற கேள்விக்கு பதிலளித்த கவிஞர் அப்துல்ரகுமான் தமிழன் பாக்கெட்டுக்குப் பத்து ரூபாய் வருமா என்று பார்ப்பது தவறு. தமிழ் என்ற மொழியைக் கற்க ஆவலுடன் இருப்போர்க்கு இது பேருதவியாக இருக்கும். நன்மை பல கிடைக்கும். மொழி செம்மை பெறும். தமிழ்ப் பண்பாடு சிறப்பெய்தும் என்றெல்லாம் அடுக்கினார்.

நல்லதுதானே! நல்லமனிதர் சொல்கிறாரே என்று பலரும் ஏற்றோம். ஆனால் தமிழைச் செம்மொழியாக்கிய கோமகன் ஆளும் அரசு இயக்கும் பேருந்துகளில் திருக்குறள் எழுதிப்போட்டு வள்ளுவம் போற்றுதும் என்று மார்தட்டும் வேளையில் மற்ற விஷயங்களை எப்படி தப்பும் தவறுமாக எழுதி வைத்திருக்கிறார்கள் பாருங்கள்.


உலகச் செம்மொழியைப் (ஒருக்கால்) படித்துவிட்டு வரும் பிற மொழிக்காரர்கள் அல்லது பிற நாட்டவர், வாழும் வள்ளுவர் (இது வேற!) ஆளும் அரசு நடத்தும் பேருந்திலேயே இப்படி அவலமாகத் தமிழ் எழுதி வைத்திருப்பதைப் பார்த்து என்ன நினைப்பர்? தமிழ் தமிழ் என்று பேசி ஆட்சிக்கு வந்த இந்தக் கூட்டம் தமிழை வைத்தும் எப்படி சம்பாதிக்கலாம் என்பதிலேயே குறியாக இருக்கிறது. தமிழ் என்பது பதவியில் இருப்போருக்குப் பணம் தரும் ATM  இயந்திரம் மட்டுமே என்றாகிவிட்ட நிலையில்...முருகா! ஞானபண்டிதா!! எமைக் காக்கும் ஷண்முகா!!! தமிழையும் தமிழரையும் தமிழகத்தையும் நீதான் காப்பாற்ற வேண்டும்.

தமிழ் மொழியாம் எங்கள் தமிழ் மொழியாம்!! வாழிய வாழியவே! தமிழ் வாழிய வாழியவே!!

Sunday, 20 March 2011

கல்லிடைக்குறிச்சியில் சிவாலயம்!

நெல்லை மாவட்டத்தில் கல்லிடைக்குறிச்சி என்றாலே உடனே நினைவுக்கு வருவது ஸ்ரீதேவி பூதேவி ஸ்மேத ஸ்ரீலக்ஷ்மீபதி என்று போற்றப்படும் ஸ்ரீவராஹப் பெருமாள் கோவில், தாமிரபருணி நதி ஆகியன தான். ஸாஸ்தா ப்ரீதி விமரிசையாகக் கொண்டாடுவர்.

Sunday, 6 March 2011

இலங்கை ஆட்சியாளர்களுக்குக் கருணாநிதி ஆதரவு ஏன்?

அழகிரியும் ஸ்டாலினும் இராவணன் - கும்பகர்ணன் மாதிரி வாழட்டும்! என்று தமிழ்நாடு முதல் அமைச்சர் - திமுக தலைவர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் குமுதம் பேட்டியில் கூறியுள்ளார்.துக்ளக்கில் இதை வழக்கம் போல தோல்வியின் சகுனம் என்று நக்கலடித்து ஒரு கேலிச் சித்திரம் வந்தது. உடனே ஐயகோ பார்ப்பனீயம் என்று சுயதம்பட்ட பகுத்தறிவுவாதிகள் கூவுகிறார்கள். அட விவரம் கெட்டவர்களே!! இது கருணாநிதி முயன்று தோற்கும் திசை திருப்பல்களில் ஒரு வகை.

Tuesday, 22 February 2011

வேலையற்றோர் தொழில் தொடங்க அரசு பணம்!!

இன்று காலை மின்னஞ்சலைத் திறந்ததும் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. தேர்தலுக்காக இப்படியெல்லாம் ஆரம்பித்து விட்டார்களா என்று எண்ணிவிட்டேன். 176000 கோடியை இப்படி பிரித்துக் கொடுத்து ஓட்டு வாங்குகிறார்களோ? மாட்டார்களே என்றும் தோன்றியது.

Saturday, 12 February 2011

சம்ஸ்க்ருத படிப்பு - நன்றை இன்றே!!

ச்ருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தை அலங்கரித்த ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் உபதேசத்தில் இருந்து எனக்குப் பல தெளிவுகள் குருவருளால் கிடைத்தன. சம்ஸ்கிருதத்தில் இருக்கும் வேதாதி விஷயங்கள் விவாதத்துக்குரியன அல்ல என்று நண்பர் ஒருவர் சொன்னார். மறுத்தேன். அவர் வேத விற்பன்னர் என்பதால் தமக்குத் தெரிந்த சில ச்லோகங்களைச் சொல்லி தன் தரப்பை வலுப்படுத்தினார்.

Sunday, 6 February 2011

பாராளுமன்றத்தின் எதிரே தீக்குளிப்பு

மேஜர்.சந்தீப் உன்னிகிருஷ்ணனின் சித்தப்பா தீக்குளித்து இறந்துவிட்டார். இது பெரும்பாலான ஊடகங்கள் உரக்கச் சொல்லாத செய்தி. ஏனென்றால் இதைவிடச் 'சூடான' செய்திகள் அவர்களுக்கு இருந்தன. 3 இடியட்ஸில் விஜய், மலேசியாவில் சினிமா கலைஞர்களின் அட்டகாசம், திரைப்படக் குழுவினர் பேட்டி, பாட்டுக் கச்சேரிகள் மற்றும் இன்னபிற களியாட்டங்களுக்கு மத்தியில் இதற்கு நேரமும் பார்வையாளர்களும் இல்லை. தகவலுக்காக: மேஜர்.சந்தீப் உன்னிகிருஷ்ணன் மும்பை 26/11 தாகுதலில் தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடி உயிர் விட்ட கமாண்டோ!

Friday, 28 January 2011

தரையிலிட்ட மீன் - கலைஞர் கடிதம்

(இது கற்பனை தான் என்றாலும் நிஜத்தின் சாயல் சற்றே தெரிவதற்கு நான் பொறுப்பல்ல)


உடன்பிறப்பே!


Thursday, 27 January 2011

அரசு டிவி - சலுகை சரக்குள்ள வரை மட்டுமே!

சமீபத்தில் ராஜபாளையம் சென்றிருந்தேன். 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை திடீரென்று எங்கள் வீட்டு வேலைக்காரி மதியம் 12 மணிக்கு வந்து "அம்மா, ரேசன் கடையில் டிவிக்கு டோக்கன் தாராகளாம்" என்றார். என் தந்தை கிளம்பிப் போனார். 15 நிமிடங்களில் திரும்பி வந்தார்.

Tuesday, 25 January 2011

வந்தே மாதரம் என்போம்!


வந்தே மாதரம் என்போம் - எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம்.

நளிர்மணி நீரும் நயம்படு கனிகளும் குளிர்பூந் தென்றலும் கொழும்பொழிற் பசுமையும் வாய்ந்துநன் கிலகுவை வாழிய அன்னை!

தெண்ணில வதனிற் சிலிர்த்திடும் இரவும் தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும் புன்னகை ஒளியும் தேமொழிப் பொலிவும் வாய்ந்தனை இன்பமும் வரங்களும் நல்குவை. 

-பாரதியார்.

Friday, 21 January 2011

நட்பும், கதைத்தலும், சிறு சொதப்பலும்

நாம் சில தருணங்களில் சில விஷயங்களை தவற விட்டுவிட்டு பிறகு "சொதப்பிட்டியேடா" என்று பின் தலையில் தட்டிக்கொள்வோம். அதுபோல நேற்று ஒரு நிகழ்வு நடந்தது. பதிவர் டோண்டு ராகவன் அவர்கள். பேசுவோம் என்று எதிர்பாராது இருந்த போது சட்டென்று அழைத்தார், பேசினோம். நெடுநாள் பழகிய மனிதர் போல நன்றாகப் பேசினார்.

Wednesday, 19 January 2011

'சோ'காப்பர்: ஈழச் சொல்லிழுக்கு

நடந்து முடிந்த துக்ளக் ஆண்டுவிழாவில் சோ வழக்கம் போல கலக்கிவிட்டார். கருணாநிதியின் நிர்வாகத்திறம் பற்றிய அவரது கருத்து நெத்தியடி. "எல்லா வேலைகளையும் தானே செய்பவன் நிர்வாகியே அல்ல". இதற்கு அவருக்கே உரித்தான நகைச்சுவை கலந்த விளக்கம் (தோண்டுப்பா, மண்ண அள்ளுப்பா). ஜெயலலிதா பற்றிய அவரது கருத்துக்கள் வழக்கம் போல ஜெயலலிதாவின் குணாதியங்களைச் சிறப்பித்து இருந்தன.

Monday, 17 January 2011

ஹிந்து தீவிரவாதமும் கடமை தவறாத சட்டமும்!

2007ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி பானிபட் நகருக்கு அருகில் ஸம்ஜௌதா எக்ஸ்பிரஸ் (Friendship Express என்ற ஆங்கில மொழியாக்கத்தை நட்பு விரைவுத் தொடர்வண்டி என்று தமிழாக்கலாம்) தொடர்வண்டியில் பயங்கரமான குண்டு வெடித்தது. 68 பேர் இறந்து போனார்கள், 50 பேர் காயமடைந்தார்கள். லஷ்கர் எ தய்யிபா, ஜய்ஷ் எ மொஹமது போன்ற அமைப்புகளும் அவர்களுடன் சேர்ந்த பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கங்களும் காரணம் என்று நம் அரசு அறிவித்தது.

Saturday, 15 January 2011

இராணுவ தினம்!

இன்று இராணுவ தினம். நாம் நலம் வாழ தம் சுகம் துறந்து பாடுபடும் அந்த உன்னதச் சகோதரர்களுக்குத் தலை வணங்குகிறேன்!

வாப்பா குதிருக்குள் இல்லை

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தீவிரவாத இயக்கங்கள் அந்நாட்டு அரசின் ஆசியோடும் ISIன் துணையோடும் செயல்படுவது உலகறிந்த விஷயம். இதை பாகிஸ்தான் மறுத்து வந்துள்ளது. 26/11 மும்பை தாக்குதல் ஜமாத் உத் தாவா அமைப்பின் ஆசியோடு நடத்தப்பட்டது. நாம் அஜ்மல் கசாபை வைத்துப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறோம். அவனைத் தூக்கிலிடுங்கள் என்று மும்பை நகரமே கொதித்துப் போய்ச் சொல்லியும் மத்திய அரசு வழக்கம் போல் வெண்டைக் காயை விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி வைத்தது போல வழ வழ கொழ கொழ என்று கொள்கை பேசுகிறது.

Friday, 14 January 2011

சொம்பு அடிப்பதில் உள்ள சிக்கல்

நான் முன்பு வேலை செய்த கம்பெனியில் ஒருவன் எங்கள் அணியில் வேலை செய்தான். சொம்பு என்றால் அப்படி ஒரு சொம்படிப்பான். மேனேஜர் தம்மடிக்ப் போவார், கூடவே போய் அவருக்கும் வாங்கிக் கொடுத்து இவனும் தம்மடிப்பான். தேநீரும் அப்படியே. அந்த ஆண்டு ரிவ்யூ வந்தது. வழக்கம் போல இவனுக்கு நல்லதோர் சிபாரிசு செய்துவிட்டார் மேனேஜர். அது Program Manager இடம் இருக்கிறது என்றதும் ஒரு சிலுவையை வாங்கி கயிற்றில் கோர்த்து கழுத்தில் மாட்டிக் கொண்டான்.

Tuesday, 11 January 2011

சுய புராணம்

எனக்கு ஊர் இராஜபாளையம். சற்றே மீதமிருக்கும் பசுமை படர்ந்த மலைகள் சூழ்ந்த எளிய அழகிய சிறுநகரம் அது. இறக்குமதியான நவநாகரிகம் ஆங்காங்கே தலைகாட்டினாலும் பாரம்பரியப் பாசத்தை தம்மகத்தே இன்னும் கொண்டிருக்கும் மக்கள் எமர்.