குஜராத் குஷிமிகுந்து காணப்படுகிறது. மோடி, மஸ்தான்களுக்கு ஆகாதவர், அதனால் அவர் தோற்கவண்டும் என்ற ஆசைகள், பொதுக்கருத்து உருவாக்க முயற்சிகள், உள்குத்து வேலைகள் எல்லாம் பொய்த்துப் போய் கையறு நிலையில் கவலைக்கிடமாகி நிற்க, ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்ற கவிவாக்குப் படி மோடி மேன்மை மிக்க வெற்றியைப் பெற்றிருக்கிறார்.
அரசியல், பொருளாதாரம், நிர்வாகம், சர்வதேச உறவுகள், நாட்டு நடப்பு, குறித்த என் எண்ணங்களையும், என் அனுபவங்களையும் இங்கே பதிவேன்!
Disclaimer
நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.
இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.
அன்புடன் என்றும்,
அருண்அம்பி. (@arunambie)
Sunday, 23 December 2012
Friday, 14 December 2012
இதிஹாச நாயகர்களும் இந்த மண்ணின் பாரம்பரியமும்
உமைக்கு ஒரு பாகத்து ஒருவனும், இருவர்க்கு
ஒரு தனிக் கொழுநனும், மலர்மேல்
கமைப் பெருஞ் செல்வக் கடவுளும், உவமை
கண்டிலா நகர்அது காண்பான்,
அமைப்புஅருங் காதல் அதுபிடித்து உந்த,
அந்தரம், சந்திராதித்தர்
இமைப்பு இலர் திரிவர்; இது அலால் அதனுக்கு
இயம்பல்ஆம் ஏதுமற்றுயாதோ!
”அயோத்தி நகருக்கு ஈடான, உவமை காட்டத்தக்க இன்னொரு நகரத்தை, உமையொரு பாகனாம் கயிலையம்பதியும், திருமகளும் நிலமகளும் நாயகனாய் வணங்கும் வைகுண்டபதியும், பொறுமையின் திருவுருவாய் விளங்கும் சத்தியலோகத்துப் பிரமனும்கூடக் கண்டதில்லை. அயோத்தி மாநகரத்துக்கு உவமையாகச் சொல்லக் கூடிய நகரம் எது என்பதைக் கண்டறியும் அடக்கமுடியாத ஆவலால் தானே சந்திரனும் சூரியனும் வானத்தில் கண்ணை இமைக்காமல் வலம் வருகிறார்கள். இதற்கு மேல் அயோத்தியின் சிறப்பு குறித்து எடுத்தியம்ப ஏதுமில்லை” என்பது தன் வீட்டுக் கட்டுத்தறியையும் கவிபாடச் செய்த கம்பநாட்டாழ்வார் சொல்.
ஒரு தனிக் கொழுநனும், மலர்மேல்
கமைப் பெருஞ் செல்வக் கடவுளும், உவமை
கண்டிலா நகர்அது காண்பான்,
அமைப்புஅருங் காதல் அதுபிடித்து உந்த,
அந்தரம், சந்திராதித்தர்
இமைப்பு இலர் திரிவர்; இது அலால் அதனுக்கு
இயம்பல்ஆம் ஏதுமற்றுயாதோ!
”அயோத்தி நகருக்கு ஈடான, உவமை காட்டத்தக்க இன்னொரு நகரத்தை, உமையொரு பாகனாம் கயிலையம்பதியும், திருமகளும் நிலமகளும் நாயகனாய் வணங்கும் வைகுண்டபதியும், பொறுமையின் திருவுருவாய் விளங்கும் சத்தியலோகத்துப் பிரமனும்கூடக் கண்டதில்லை. அயோத்தி மாநகரத்துக்கு உவமையாகச் சொல்லக் கூடிய நகரம் எது என்பதைக் கண்டறியும் அடக்கமுடியாத ஆவலால் தானே சந்திரனும் சூரியனும் வானத்தில் கண்ணை இமைக்காமல் வலம் வருகிறார்கள். இதற்கு மேல் அயோத்தியின் சிறப்பு குறித்து எடுத்தியம்ப ஏதுமில்லை” என்பது தன் வீட்டுக் கட்டுத்தறியையும் கவிபாடச் செய்த கம்பநாட்டாழ்வார் சொல்.
Monday, 10 December 2012
நியூ திக கம்பெனி நடத்தும் (இயர் எண்டிங் ஸ்டாக் க்ளியரன்ஸ்) இனமான வியாபாரம்
கடைகளில் வேலை செய்பவர்களில் சிலர் தொழில் கற்றுக் கொண்டு சில காலம் கழித்து எதிர்க்கடை போடுவர். அதற்கு புதிதாகப் பெயர் வைப்பர், அல்லது நியூ என்று சேர்த்து ப்ரபலமான கடைப் பெயர்களை வைப்பர். உதாரணம் உட்லண்ட்ஸ் - நியூ உட்லண்ட்ஸ், சரவணபவன் - நியூ சரவணபவன் போன்றவை. பிறகு நடக்கும் போட்டி யார் சிறந்த வியாபாரி என்பதைத் தீர்மானிக்கும்.
Thursday, 6 December 2012
தேவசகாயம் பிள்ளை முக்தி - புதிரா புனிதமா
மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை முக்திபேறு பெற்றவர் என அறிவிக்கும் பெருவிழா நாகர்கோவிலில் கார்த்திகை மாதம் 17ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (02/12/12) நடைபெற்றது. இது ஜெயா தொலைக்காட்சியின் கூட்டற்குறி அலைவரிசையில் (Jaya Plus Channel) நேரலை காட்டப்பட்டது. அப்போது பிள்ளைவாள் என்ன தவம் செய்து முக்தி பெற்றார் என்று தேடிப் பார்ப்போம் என்று இணையத்தில் இணைந்த போது குழப்பமே மிஞ்சியது.
Tuesday, 4 December 2012
புனிதப் புரட்டு - பால.கௌதமன்
நண்பர் பால கௌதமன் அவர்கள் எழுதிய இந்த ஆராய்ச்சிக் கட்டுரைப் பதிவு கிறிஸ்தவ தேவாலயங்கள், அவற்றின் செயல்பாடுகள் குறித்த மிக முக்கியமான பல கேள்விகளை எழுப்புகிறது. அவரது பதிவை அப்படியே இங்கே தருகிறேன். பதிவு நீளமானது. பொறுமையாகப் படிக்கவும். தேவசகாயம்பிள்ளை பெற்ற முக்தி குறித்த என் கேள்விகள், கருத்துக்கள் பின்னொரு பதிவில்.
Subscribe to:
Posts (Atom)