ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Showing posts with label தீவிரவாதம். Show all posts
Showing posts with label தீவிரவாதம். Show all posts

Sunday, 19 September 2021

பாகிஸ்தான் தலைநகரில் இரத்தச்சிவப்பு மசூதி

 இந்தப் படத்தில் உள்ள கட்டடம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள லால் மஸ்ஜித். இங்கு உள்ள ஜாமியா ஹஃப்ஸா என்ற மதரசாவில் ஆண், பெண், குழந்தைகள் உள்ளிட்ட பலர் படிக்கிறார்கள். அவர்கள் மாணவர்கள் என்பதால் தாலிப் என்று அழைக்கப்படுகிறார்கள். ஆஃப்கன் ஆட்களிடமிருந்து வித்தியாசம் காட்ட பாகிஸ்தானி தாலிபான் என்பார்கள்.

இவர்கள் 2007ல் மூன்று பெண்களைக் கடத்தி அவர்கள் விபச்சாரம் செய்தார்கள் என்று குற்றம் சுமத்தி கல்லால் அடித்து கொல்ல வேண்டும் என்றார்கள். சீனத் தூதுவர் தலையிட்டதும் ஏதும் சொல்ல முடியாமல் பாகிஸ்தான் அரசு போலீஸை அனுப்பி அவர்களை மீட்டது.

Thursday, 24 October 2013

இராம ஜென்ம பூமி - தேர்தல் ஆயுதமல்ல தேசத்தின் தேவை.

சமீபத்தில் சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒரு விவாதம் நடந்தது. இராம ஜென்ம பூமியில் இராமருக்கு ஆலயம் அமைப்பது குறித்துப் பேசினார்கள். இதில் விவாதிக்க ஏதுமில்லை என்பதே உண்மை. ஆனால் விவாதிப்போம் என்று கூடிப் பேசுகிறார்கள். காரணம் பாஜக மூத்த தலைவர் முரளி மனோஹர் ஜோஷி அவர்கள் “இராமர் கோவில், இராமர் பாலம், பசுப் பாதுகாப்பு, கங்கை சுத்தப்படுத்துதல், 370ஆவது பிரிவை நீக்குதல், பொது உரிமையியல் சட்டம் ஆகியன பாஜகவின் செயல்திட்டத்தின் பிரிக்கவியலாத அம்சங்கள்” என்று கூறியதே.

Saturday, 24 August 2013

தன் தேசத்தை உயர்த்திக் காட்டுவதே தேசத் தலைமையின் லட்சியம்

தமிழ்த்தாமரையில் வெளிவந்த என் கட்டுரை.

உத்தரேத் ஆத்ம நாத்மாநம் நாத்மாநம் அவஸாதயேத் |
ஆத்மைவ ஹ்யாத்மநோ பந்து ராத்மைவ ரிபுராத்மந:

தன்னைத்தானே உயர்த்திக் கொள்ள வேண்டும். தன்னைத்தானே தாழ்த்திக் கொள்ளக் கூடாது. தனக்குத் தானே நண்பன், தனக்குத் தானே பகைவன்.

இது கீதையில் கண்ணன் சொன்னது. கீதை என்பது போர்க்களத்தில் உறவுகளை எதிரே கண்டு துவண்ட பார்த்தனை ”போரிடுவது தீமையை அழிக்கவே! உறவுகள் தீமையின்பாற்பட்டு நின்றால் எதிர்ப்பது கடமையன்றி வேறில்லை” என தெளிவித்துத் தேற்றிய உரை.

Thursday, 6 December 2012

தேவசகாயம் பிள்ளை முக்தி - புதிரா புனிதமா

மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை முக்திபேறு பெற்றவர் என அறிவிக்கும்  பெருவிழா நாகர்கோவிலில் கார்த்திகை மாதம் 17ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (02/12/12) நடைபெற்றது. இது ஜெயா தொலைக்காட்சியின் கூட்டற்குறி அலைவரிசையில் (Jaya Plus Channel) நேரலை காட்டப்பட்டது. அப்போது பிள்ளைவாள் என்ன தவம் செய்து முக்தி பெற்றார் என்று  தேடிப் பார்ப்போம் என்று இணையத்தில் இணைந்த போது குழப்பமே மிஞ்சியது. 

Sunday, 29 July 2012

டெசோ - அரசியலில் பிழைத்திருக்க திமுகவின் ஆயுதம்!

(நிஜமாகவே) சமீப காலமாக டெசோ வருகிறது. விழுப்புரத்தில் இருக்கிறது. விக்கிரவாண்டி தாண்டிவிட்டது, செங்கல்பட்டு வந்துவிட்டது. ஆகஸ்டு 12ல் சென்னை வந்து சேரும் என்று பலவிதமான அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அது போலவே ஈழம் காண்பதே லட்சியம் என்று முழங்கி, ஈழம் லட்சியம் தான் ஆனால் இப்போது லட்சியம் செய்யவேண்டியது ஈழத்தமிழர் நல்வாழ்வு மட்டுமே என்று இறங்கி, தனி ஈழம் கோரித் தீர்மானம் என்று தீர்மானித்து, சிதம்பர ரகசியத்தால் தனி ஈழத்தீர்மானத்தைத் தீர்மானமாகத் தீர்த்துக் கட்டி தனி ஈழம் லட்சியம் வாழ்வாதாரம் நிச்சயம் என்று நைச்சியம் பேசி ழப் போர் நிறுத்த உண்ணாவிரதப் புகழ்  மு. கருணாநிதி குட்டிக்கரணங்கள் பல அடித்து வருகிறார்.

Saturday, 26 November 2011

26/11 கொடுமையும் இந்திய-இஸ்ரேல் நட்புறவும்

கடந்த 2008 நவம்பர் 26 அன்று மும்பை நகரில் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 200க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். அதில் காவல்துறை கைது செய்த கசாப் இன்றும் மும்பை சிறையில் சகல வசதிகளுடன் இருக்கிறான். தீவிரவாதிகள் தாக்குதலுக்குத் தேர்வு செய்த இடங்கள் வணிக முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், மத இன பேதமற்று அனைத்து மக்களும் அதிகம் கூடும் இடங்கள். ஒரு தொடர்வண்டி நிலையம், ஒரு தேநீர் விடுதி, இரண்டு நட்சத்திர விடுதிகள், ஒரு யூத சமூக மையம் ஆகிய இடங்கள் தாக்குதலுக்கு உள்ளாயின.

Monday, 19 September 2011

தில்லி ஐகோர்ட்டில் குண்டுவெடிப்பு

தில்லி உயர்நீதிமன்றத்தில் குண்டு வெடித்து பலர் மாண்டு போயினர். தேசத் தலைநகரத்தின் பாதுகாப்பு பல்லிளிக்கிறது. தீவிரவாதிகள் வந்தார்கள் கொன்றார்கள் சென்றார்கள். அரசு இயந்திரம் சத்தம் கேட்டு விழித்து சுற்று முற்றும் பார்த்து சுதாரித்து காயமடைந்தோரை அசுபத்திரியில் சேர்த்து மாண்டோரின் பிணங்களை அப்புறப்படுத்தி வந்து "என்னப்பா, ஆச்சு?" என்று விசாரிக்க ஆரம்பிக்கையில் குண்டு வைத்தவன் கராச்சி தாண்டிப் போயிருப்பான் அடுத்த கட்ட ஆயத்தப் பயிற்சிக்கு.

Tuesday, 19 July 2011

மீண்டும் மும்பையில் குண்டு வெடிப்பு!

மும்பையில் மூன்று இடங்களில் குண்டு வெடித்துள்ளது. மும்பா தேவி கோவிலுக்கருகே ஒரு குண்டு வெடித்துள்ளது. அனுமார் கோவிலுக்கருகே ஒரு குண்டு வெடித்துள்ளது. ஓபெரா ஹவுஸ் எனப்படும் இடத்தருகே ஒரு குண்டு வெடித்துள்ளது. 17 பேர் சம்பவ இடத்திலேயே பலியகியுள்ளனர். 120 பேருக்கு மேல் காயமடைந்துள்ளனர்.மும்பாதேவி கோவிலுக்கருகே உள்ள ஜவேரி பஜார் தங்க வைர நகைக்கடைகள் நிறைந்த பகுதி. மதக் கண்ணாடியைக் கழற்றி வைத்து விட்டுப் பார்த்தாலும் பெருவணிகர் பகுதி இது.