ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Showing posts with label பிரதமர். Show all posts
Showing posts with label பிரதமர். Show all posts

Saturday, 24 August 2013

தன் தேசத்தை உயர்த்திக் காட்டுவதே தேசத் தலைமையின் லட்சியம்

தமிழ்த்தாமரையில் வெளிவந்த என் கட்டுரை.

உத்தரேத் ஆத்ம நாத்மாநம் நாத்மாநம் அவஸாதயேத் |
ஆத்மைவ ஹ்யாத்மநோ பந்து ராத்மைவ ரிபுராத்மந:

தன்னைத்தானே உயர்த்திக் கொள்ள வேண்டும். தன்னைத்தானே தாழ்த்திக் கொள்ளக் கூடாது. தனக்குத் தானே நண்பன், தனக்குத் தானே பகைவன்.

இது கீதையில் கண்ணன் சொன்னது. கீதை என்பது போர்க்களத்தில் உறவுகளை எதிரே கண்டு துவண்ட பார்த்தனை ”போரிடுவது தீமையை அழிக்கவே! உறவுகள் தீமையின்பாற்பட்டு நின்றால் எதிர்ப்பது கடமையன்றி வேறில்லை” என தெளிவித்துத் தேற்றிய உரை.

Sunday, 23 December 2012

மோடி விளையாட்டும் குஜராத் வெற்றியும்

குஜராத் குஷிமிகுந்து காணப்படுகிறது. மோடி, மஸ்தான்களுக்கு ஆகாதவர், அதனால் அவர் தோற்கவண்டும் என்ற ஆசைகள், பொதுக்கருத்து உருவாக்க முயற்சிகள், உள்குத்து வேலைகள் எல்லாம் பொய்த்துப் போய் கையறு நிலையில் கவலைக்கிடமாகி நிற்க, ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்ற கவிவாக்குப் படி மோடி மேன்மை மிக்க வெற்றியைப் பெற்றிருக்கிறார். 


Monday, 19 September 2011

தில்லி ஐகோர்ட்டில் குண்டுவெடிப்பு

தில்லி உயர்நீதிமன்றத்தில் குண்டு வெடித்து பலர் மாண்டு போயினர். தேசத் தலைநகரத்தின் பாதுகாப்பு பல்லிளிக்கிறது. தீவிரவாதிகள் வந்தார்கள் கொன்றார்கள் சென்றார்கள். அரசு இயந்திரம் சத்தம் கேட்டு விழித்து சுற்று முற்றும் பார்த்து சுதாரித்து காயமடைந்தோரை அசுபத்திரியில் சேர்த்து மாண்டோரின் பிணங்களை அப்புறப்படுத்தி வந்து "என்னப்பா, ஆச்சு?" என்று விசாரிக்க ஆரம்பிக்கையில் குண்டு வைத்தவன் கராச்சி தாண்டிப் போயிருப்பான் அடுத்த கட்ட ஆயத்தப் பயிற்சிக்கு.