ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Showing posts with label பாஜக.. Show all posts
Showing posts with label பாஜக.. Show all posts

Saturday, 7 May 2016

தமிழக சட்டசபைத் தேர்தல் 2016 - ஒரு பார்வை

2016 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான ஓட்டத்தில் விலை பேசப்பட்ட, சரியான அடிப்படை இல்லாத பல்வேறு கருத்துக் கணிப்புகள் மக்களைக் குழப்பியிருப்பது உண்மை.

15 சீட் தேறினால் பெரிய விஷயம் என்றிருந்த திமுக ஒரு 30 - 35 சீட் தேற இது உதவும். அசுர பல மெஜாரிட்டி என்றிருந்த அதிமுக சிலபல சீட்கள் குறையவும் இது உதவலாம். இலவசம் பொங்கி வழிந்தோடும் தேர்தல் அறிக்கை தொங்கு சட்டசபை என்ற திரிசங்கு சொர்க்கத்தைத் தடுக்க உதவ வாய்ப்புண்டு.

எதிர்க்கட்சிகள் எதுவுமே ஆளுங்கட்சிக்கு எதிராக உருப்படியான ஒரு பிரச்சினையைக் கிளப்பி ஆட்சியின் மீதான அதிருப்தியைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதே anti incumbencyஐ முக்கியமாக எதிர்கொள்ளும் அதிமுகவின் பலம்.

Wednesday, 23 October 2013

தங்க வேட்டையும் சோபனச் சாமியாரும்..

உத்திரப் பிரதேசம் உன்னாவ் தங்கவேட்டை புகழ் சுவாமி ஷோபன் சர்க்கார் மோடியைக் கிழி கிழி என்று கிழித்தார் என்று மானாட மயிலாட எஃபெக்டில் பங்களா ஜந்து சொம்புத்திரன் துவங்கி காதவழி பெயரில்லாத சில கழுதைகள் வரை பலர் முகநூலில் ஸ்டேட்டஸ் போட்டு திருப்திப் பட்டுக் கொள்கின்றனர். பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியைப் படித்துவிட்டு அதை வைத்து புளகாங்கிதம் எய்தி அந்த மனநிலையிலேயே கருத்துப் பேசுகிறார்களோ என்று தோன்றுகிறது.

Saturday, 24 August 2013

தன் தேசத்தை உயர்த்திக் காட்டுவதே தேசத் தலைமையின் லட்சியம்

தமிழ்த்தாமரையில் வெளிவந்த என் கட்டுரை.

உத்தரேத் ஆத்ம நாத்மாநம் நாத்மாநம் அவஸாதயேத் |
ஆத்மைவ ஹ்யாத்மநோ பந்து ராத்மைவ ரிபுராத்மந:

தன்னைத்தானே உயர்த்திக் கொள்ள வேண்டும். தன்னைத்தானே தாழ்த்திக் கொள்ளக் கூடாது. தனக்குத் தானே நண்பன், தனக்குத் தானே பகைவன்.

இது கீதையில் கண்ணன் சொன்னது. கீதை என்பது போர்க்களத்தில் உறவுகளை எதிரே கண்டு துவண்ட பார்த்தனை ”போரிடுவது தீமையை அழிக்கவே! உறவுகள் தீமையின்பாற்பட்டு நின்றால் எதிர்ப்பது கடமையன்றி வேறில்லை” என தெளிவித்துத் தேற்றிய உரை.