ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Thursday, 18 September 2025

சௌதி - பாக் ஒப்பந்தம்: அடுத்த நேட்டோ என்றால் பூட்டோ கதி தான்

 நேட்டோ போன்ற ஒரு அரபு அமைப்பை ஏற்படுத்த அரபு நாடுகள் முனைகின்றன. காரணம் அமெரிக்கா தன் நலனுக்காக மட்டுமே செயல்படும் என்பதை வெளிப்படையாக உணர வைக்கின்றனர் ட்ரம்ப் நிர்வாகத்து ஆட்கள். பழையவர்கள் பேசிப்பேசியே ஆளைக் கரைத்துத் தன் நலத்தைச் சாதிப்பார்கள். அதனாலேயே இஸ்ரேல், அரபு நாடுகள் என்று ஒன்றை மற்றொன்று அழிக்க நினைக்கும் இரு சக்திகளைச் சமநிலையில் வைத்துத் தன் நலத்தைப் பேணிக் கொண்டது அமெரிக்கா. 

Sunday, 14 September 2025

தன்னெழுச்சியான “இளசுகள்” போராட்டம் - பின்னணியில் யார்?

நேபாளத்தின் இப்போதைய தன்னெழுச்சியான “இளசுகள்” போராட்டத்தை முன்னின்று நடத்தியது “ஹமி நேபாள்” என்ற NGO. இந்த அமைப்பின் தலைவர் சுடங் குருங் என்பவர்.

இவரது NGOக்கு நிதி அளித்து ஆதரிப்பவர்கள் பட்டியலில் Infinity Holdings என்ற ஆயுத வியாபார நிறுவனத்தின் தலைவர் தீபக் பட்டா முதன்மையானவர். இவர் மீது இத்தாலிய நிறுவனத்திடம் நேபாள போலீசுக்கு துப்பாக்கி வாங்கியதில் ஊழல் செய்ததாக வழக்கு உள்ளது.

கொரோனா காலத்தில் நேபாளத்தில் தெர்மாமீட்டர் பதுக்கி அதிகவிலைக்கு விற்ற குற்றவாளி சாஹில் அகர்வால் என்பவர் ஹமி நேபாளுக்கு நிதியளிப்பவர்களில் மற்றொருவர்.

டாக்டர் சந்துக் ருயிட் எனும் மகசேசே விருது பெற்ற கண் மருத்துவர் மற்றொரு சர்வதேச ஆதரவு, நிதி திரட்டும் ஆள்.

இப்படியாகத்தான் நேபாளத்தின் தன்னெழுச்சியான போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

Saturday, 6 September 2025

டாலர் ஆதிக்கம் விழும் - ஸ்டான்ஃபோர்டு பே

 Matteo Maggiori. இவர் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியர். குறிப்பாக geo-economics நிபுணர்.  6500 பொருளாதார ஆராய்ச்சிக் கட்டுரைகளில் எழுதியோ, மேற்பார்வை செய்தோ, வழிகாட்டியோ சம்பந்தப்பட்டவர். இவர் ட்ரம்புக்கு ஒரு பாடம் எடுக்க முனைந்திருக்கிறார். டரம்புக்கு ஏறாது. நாம் பார்ப்போம். 


உலக அளவில் ஆதிக்கம் என்பது இரு வகைப்படும். சிறுகூறுகளில் ஆதிக்கம். பேரளவிலான ஆதிக்கம். 

சிறுகூறுகளிலான ஆதிக்கம் என்பது சில துறைகள் சார்ந்த ஆதிக்கம். உதாரணமாக செமி கண்டக்டர், தாதுக்கள், மருந்துகள், ஆயுதங்கள் போன்றவை.

Friday, 15 August 2025

புவி வெப்பத்தினால் ஆன மின்சாரம் - பூகா - லே (லடாக்)

 பூகா (Puga) 14400 அடி உயரத்தில் உள்ள இமாலயப் பள்ளத்தாக்கு. லேயிருந்து 170 கிமீ தூரம். இங்கே வெப்பநிலை கடுங்கோடையில் -10 டிகிரி. குளிர் காலத்தில் -40 டிகிரி. இயற்கையான வெந்நீர் ஊற்றுகள் இப்பகுதியில் அதிகம். இங்கே உள்ள சில கிராமங்களுக்கு மின்சாரம் டீசல் ஜெனரேட்டர் மூலமாகவே இதுவரை கிடைத்துவந்தது. 

இங்கே நம் ராணுவமும் ஓஎன்ஜிசியும் இணைந்து பனிப்படங்களின் அடியில் உறைந்து போன தாதுக்கள் பற்றி ஆராய்ந்தபோது இங்கே இயற்கை வெப்பம் பனிப்படலத்தின் அடியில் அதிகமாக இருப்பதை அறிந்தனர். அதுவே வெந்நீர் ஊற்றுகளுக்கு ஆதாரம் என்று கண்டனர். இந்த வெப்பத்தின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது பற்றி ஆராய்ந்து, நம் நாட்டுத் தொழில்நுட்பம் கொண்டு துரப்பண வேலைகள் செய்து Geo thermal energy என்று ஆங்கிலத்தில் வழங்கப்படும் புவி வெப்பத்தினால் ஆன மின்சாரத்தை எடுத்தனர். 


இப்போது இதை ஓஎன்ஜிசி பெரிய அளவில் செய்யும்.  இதன் மூலம் அங்கிருக்கும் கிராமங்கள் டீசல் மீதான சார்பின்றி மின்சாரம் பெறும். இந்த மின்சாரம் தட்பவெப்ப, சூழல் சார்பின்றி எல்லாக் காலங்களிலும் கிடைக்கும். புகை, கரிவாயு போன்ற களுதை குருதைகள் கிடையாது. செலவு மிகக் குறைவு. 

வந்தே மாதரம் 🙏 விடியோ 👇🏻

Thursday, 14 August 2025

பாகிஸ்தானிகளின் சவடால்கள் - சிரிப்புக்குப் பஞ்சமில்லை

 சிறு குழந்தைகளைக் கவனித்திருப்போம். பெரியவர்கள் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் பூனை ஒன்று அருகே வந்தாலும் “ஏ பூஞை! உன்ன அதிச்சு நொயிக்கிப்புவேன். ஓதுதா” என்று வீரம் பேசும். அதே குழந்தை பெரியவர்கள் அருகில் இல்லாத வேளையில் பூனை தூரத்தில் இருந்தாலும் ஓடியே போய் பெரியவர்களின் மடியில் அமர்ந்து கொண்டு “பூஞை வட்டு. கயிக்கும்.” என்று பயத்தோடு ஒண்டிக்கொள்ளும். ஃபெயில்டு மார்ஷல் அசீம் முனீர் தலைமையிலான பாகிஸ்தான் ராணுவம் பஹல்காம் கொடூரத்திற்குப் பிறகு நாம் பாகிஸ்தானுக்குள்ளே புகுந்து தீவிரவாத முகாம்களைத் தாக்கி அழித்த போது வசனம் பேசிக்கொண்டே இருந்தார்கள்.  11 விமானத் தளங்கள் அடித்து நொறுக்கப்பட்ட போது நேராக அமெரிக்கா போய் ஐயா வலிக்கிதுங்க என்று அழுதார்கள். அமெரிக்கர்கள் நீதான் பேசணுமாம் போய் சமாதானம் பேசு என்றதும் வந்து சமாதானம் பேசிவிட்டு அவர்கள் நாட்டுப் பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகங்களில் வெற்றி வெற்றி என்று கூவினார்கள். 

Saturday, 2 August 2025

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் 25% வரி மிரட்டல் - குறுகிய காலத்து வலி

 டோனல்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் போது Make America Great Again என்ற கோஷத்தை முன் வைத்தார். அதாவது அமெரிக்காவைச் சிறந்த நாடாக்குவோம் என்றார். அதற்காக பல வேலைகளை அமெரிக்காவில் உருவாக்குவோம். கள்ளக்குடியேறிகளை விரட்டுவோம் என்று பல விஷயங்கள் சொன்னார். அதை எல்லாம் செய்யத் தொடங்கி பல ரௌடிக் கும்பல்களைப் பிடித்து தென்னமெரிக்காவில் சிறை வைத்தார். விசா இல்லாது வந்த பலரை அவரவர் நாடுகளுக்குத் திருப்பியனுப்பினார். அதன் பிறகு ஒவ்வொரு அமெரிக்கக் கம்பெனியாகப் பிடித்து அமெரிக்காவில் தொழிற்சாலை தொடங்கு, இங்கே வேலை கொடு என்று ஆரம்பித்தார். இங்கே தான் தொடங்கியது சிக்கல். பல கம்பெனிகள் சோலியைப் பாருமய்யா என்று சொல்லிவிட்டனர். அவர்களுக்கு அமெரிக்காவில் தொழிலைச் செய்வதில் முக்கியமான சிக்கல்கள் தேவையான ஆளில்லாமை, அதிகச் செலவு, கடும் தொழிலாளர் சட்டங்கள்.

Sunday, 27 July 2025

AI - தொழில்நுட்ப மாற்றம் - மனிதத் தேவை குறையும் - மேற்செல்ல வழி என்ன?

 Blunt truth. தொழிலநுட்ப மாற்றம் வர வரப் பழைய நுட்பங்கள் போகத்தான் செய்யும். புதியன வரத்தான் செய்யும். 

Phone booth 500₹ செல்ஃபோனால் முற்றாக அழிந்தது. Browsing center ரிலையன்ஸ், ஹாத்வே போன்ற இண்டர்நெட் இணைப்புகளால் வீழ்ச்சி தொடங்கி ஜியோவால் முற்றழிந்தது. 

கொரியன் லேப்டாப் 10000/15000 என்று கிடைக்கத் தொடங்கியபோது கம்பியூட்டர் ஒப்பந்தப் பணி நிலையங்கள் பயனிழந்து போயின.  

இப்போது லேப்டாப் (i-macஏ ஆனாலும்) சுமையாகிறது. 

இது போலவே IT வேலைகள் பழைய ஊதியப் பளபளப்பை இழக்கும். பல வேலைகள் ஏஐ வசம் போகும். இதுவரை மரியாதைக்குரிய வேலைகள் என்று பார்க்கப்பட்டவை மனிதர்கள் தேவையில்லை என்றாகும். உம்: coding, web design, security monitoring/patching, customer care, healthcare basics, basics of any work that involves computers, so to speak. 

Ethics சம்பந்தப்பட்ட வேலைகள், சட்டம்-முறைமைகள் பின்பற்றுதல் உள்ளிட்ட பணிகளில் மனிதத் தலையீடு தேவைப்படும். மருத்துவத்தில் மனிதத் தலையீடு கண்டிப்பாக இருக்கும், ஆனால் மிகக் குறைவாக. பாரா மெடிக்கல் வேலைகள் சில ஏஐக்குப் போகும். 

கணினித் துறை பழைய mass employer, mega paymaster அந்தஸ்தை இழக்கும். ஏஐ கற்றுக்கொண்டு ஓரளவு பிழைக்கலாம். ஆனால் பல விளம்பரங்கள் அளப்பது போல ஏஐ கற்றால் ஆண்டுக்கு 70லட்சம் என்பது எர்வாமேட்டின் கூந்தல் வளர்த்த கதை தான்.

அரசு தலையிட்டுக் காசு தருமா என்றால் ராகுல் காந்தி அவரோடு திரியும் அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டஃப்லோ உள்ளிட்ட பொர்லாதார வல்லுனிஸ்ட்கள் அப்படித் துட்டு தரச் சொல்ல வாய்ப்புள்ளது. அது விளங்காத செயல்பாடு. மோடி அப்படிக் காசு கொடுத்துச் செலவு செய்யச் சொல்ல மாட்டார். 

எந்த regulated பொருளாதார அமைப்பும் காலத்தால் நிலைக்காது. ஏற்ற இறக்கம் தன்னாலே நிகழும். சில வரைமுறைகள் மாறும். அதற்குப் பழகிக் கொள்வதே நீடித்திருக்க வழி.

மக்கள் IT தவிர்த்து வேறு core வேலைகளுக்குப் போவது நடக்கும். புதிய வேலைகள் தோன்றி அவற்றுக்கும் போகலாம். ஆனால் herd mindsetல் படிப்பில் ஒரே துறையைச் சார்வதும் அதிலும் ஓப்பியடித்தாலும் பட்டம் வாங்கிவிட்டால் போதும் விரல் பாவத் தெரிந்தால் வேலை என்பதும் நடக்காது. கற்றவை கற்றபின் எந்தளவுக்கு நிற்கிறதோ அந்தளவுக்குக் கற்றவன் நிற்கலாம். 

எதையும் ஆழ, அகலப் படித்துக் கூரோடு இருந்தால் மேம்படலாம். அல்லாத நிலையில் also ran அல்லது attempted run என்று வாழ்க்கை முடியும்.

Sunday, 6 July 2025

கூட்டணி, அவமானம் - தமிழக அரசியல்

 யூ நோ கர்நானிதி? இப்படித்தான் விஜயகாந்தை நோக்கி பளம் நளுவும் பால்ல வுளும்னு பொதுவிலேயே பேசி கூட்டணிக்கு ஆசையா இருந்தார். பளம் அவர் தோதுக்கு வுளலை. ஒடனே ஒரு மநகூ போட்டு விஜயகாந்தை ஓச்சுக்கட்டிட்டார். 


ஆகப்பெரிய ஆளுமை அம்புட்டுக்கு ஆவாரா என்றால் நிச்சயம் இல்லை. ஏணி இன்னும் மிதிவாங்கத் தயங்காதிருப்பதால் மட்டுமே அவர் ஆளுமை. சிறு தயக்கம் வந்தாலும் சோலி முடிஞ்.


ஆனால்  திமுகவில் சிலர் இன்னும் இருக்கிறார்கள். ஓரளவு திட்டம் போட்டு ஏற்றிவிட்டு இறக்கி கீஈஈழே வைப்பார்கள். அதில் கில்லாடிகள். அவர்களுக்கென்று திட்டத்தைச் செயல்படுத்த உதிரிகள் கட்சி நடத்துகிறார்கள். செலவுக்கும் அச்சமில்லை. 


உதயா இல்லை விசயா என்று சர்ச் மேலிடம் முடிவு பண்ண வேண்டும். அந்த முடிவில் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்துவதில் திமுகவினர் எம்டன்கள். அங்கே இருக்கிறது விசய்க்கான விசை.


அப்படியானால் தமிழக பாஜக முகத்தைத் மீண்டும் மீண்டும் துடைத்துக் கொண்டு விசயை அழைத்துக்கொண்டே இருக்கிறார்களே? 2024ல் அதிமுக மன்சூரலிகானை சரிக்கு சமமாக உட்கார்த்தி வைத்துத் தொகுதிப் பங்கீடு பேசியது நினைவிருக்கிறதா? அரசியல் அப்படித்தான். 


நிற்க. தமிழக பாஜகவில் திமுகவைத் தள்ளிவிட்டு நமிர்ந்து நிற்பதற்கு வலுவான, தெளிந்த அரசியல் ஆட்டக்காரர்கள் யாரும் எனக்குத் தென்படவில்லை. அண்ணாமலை ஓட்டு % அதிகரித்தார். ஆனால் கட்சி அமைப்பைக் வலுவாகக் கட்டமைத்து திராவிடக் கட்சிகளுக்குச் சவால் விடும் வகையில் அவர் செய்தவை தேவைக்கேற்ப இல்லை. அதற்கென இருப்பவர்கள் தேவையான வலுவில், வேகத்தில் சுழலவில்லை என்பதும் சுணக்கத்தின் காரணம். சச்சின் டெண்டுல்கரே ஆனாலும் அவரும் எதிரே நிற்பவரும் ஒன்றாக ஓடவேண்டும். அப்படி ஓடினால் தான் ரன் கணக்கு வரும். அரசியல் என்பது டெஸ்ட் மேட்ச். பொறுப்பேற்றவர் அனைவரும் அவரவர் பங்கைச் சரியாக அளிக்கவேண்டும். ஒருவர் மட்டும் அடித்து ஆடி வெல்வது நடக்கிற விஷயமில்லை.  


மற்றவர்கள் எதிமுகவையே அண்ணாந்து பார்க்கிற நிலை தான். ஆட்டத்தில் தெளிந்த, துணிந்த சில ஜித்தர்கள் தேறும்வரை அமித்ஷா அவரது புரிதலுக்கேற்ற ஆட்டத்தை ஆடுவார். ஆட்டம் பிடித்திருந்தால் பார்க்கலாம், விரும்பினால் கூடச் சேர்ந்து ஆடலாம். இல்லை என்றால் விதியே என்று தேர்தல் நாளில் தாமரை தென்பட்டால் பொத்தானை அழுத்தலாம். தென்படாத இடங்களில் அவரவர் விருப்பம் போல அழுத்தலாம். 


வந்தே மாதரம். 🕉


ஆபிரகாம் ஒப்பந்தம், பாலஸ்தீனம், அரபு நாடுகள் - பாக்ஸ்டான் சோற்றுப் பிரச்சனை

 பாக்ஸ்டான் Abraham Accordsன் படி இஸ்ரேலை அங்கீகரிக்கவேண்டும் என்று GCC அழுத்துகிறது. ஆனால் பாக்ஸ்டான் ராணுவம் தயங்குகிறது. காரணம் அங்கே பாலஸ்தீனப் பிரச்சனை தீர்ந்தாலோ அல்லது back burner நிலைக்குப் போனால் கூட அரபு நாடுகள் அடுத்த சோலிகளைப் பார்க்கப் போகும். 

Monday, 19 May 2025

காங்கிரசும் துருக்கிய பாசமும் - காந்தி காலத்துத் தொடர்பு

 துருக்கி ஒரு காலத்தில் ஓட்டாமன் பேரரசு என்று அரசியல்ரீதியாக அறியப்பட்டாலும் உலக இஸ்லாமியர்களுக்கு மதத் தலைமை ஏற்று இஸ்லாமியர் என்பவர் துருக்கியர் என்று அழைக்கப்படக் காரணமாக இருந்தது. பாரதியார் கூட திசை தொழும் துருக்கர் என்றே பாடினார். 1914-18 முதலாம் உலகப் போரில் ஓட்டாமன் பேரரசு தோற்றது. பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் வென்றன. ஓட்டாமன் பேரரசின் நிலப்பரப்பும் அதிகாரங்களும் மிகவும் குறைத்து வரையறுக்கப்பட்டு வெர்செய்ல்ஸ் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் இரண்டாம் அப்துல் ஹமீதின் மதத் தலைமைக்கு எந்த ஆபத்தும் வராது என்று போரில் வென்ற ஐரோப்பியத் தலைவர்கள் வாக்களித்தனர். ஆனால் துருக்கியிலேயே தேசிய இயக்கம் இளைஞர்களால் தொடங்கப்பட்டது. அவர்கள் மன்னர், காலிஃப் என்பவற்றை ஏற்காமல் அரசியல் பாதை அமைக்க எண்ணினர்.


ஒரு கட்டத்தில் இவர்கள் ஆயுதம் தாங்கிப் போரிட்டு மன்னரை நீக்க விழைந்தனர். இது துருக்கிய விடுதலைப் போர் என்று அறியப்பட்டது. 1919லிருந்து 1923 வரை போர் நடந்தது. 1920ல் லண்டன் மாநாட்டில் காலிஃப் பற்றிப் பேச்சு வரவே அரபு நாடுகள் எதிர்த்தனர். இது தங்கள் தேசங்களை மீண்டும் துருக்கிக்கு அடிபணியச் செய்யும் என்றனர். ஆனால் துருக்கியிலோ முஸ்தபா கமால் ஆத துர்க் எனும் ராணுவத் தளபதி இந்த மன்னர் சரியில்லை நாட்டை உருப்படியாக வழிநடத்தவில்லை என்று களத்தில் இறங்கினார். உள்ளூரில் மக்கள் பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் பேச்சு வார்த்தை சரிவரவில்லை என்று ஆயுதப் போரில் இறங்கிய ஆத துர்க்கை சமாளிக்க முடியாமல் மன்னரின் படை பல இடங்களில் பின்வாங்கியது. 1922ல் சுல்தானிய அரசை ஒழித்து ஜனநாயக அரசு அமைப்போம் என்று பதவியேற்றார் ஆத துர்க். 1924ல் காலிஃபெல்லாம் இல்லை என்று மதத் தலைவர் பதவியை ஒழித்துவிட்டார். 

இதனிடையே மெக்காவின் நகரத் தலைவர் உசைன் பின் அலி என்பவர் தன்னைக் காலிஃப் என்று அறிவித்துக்கொண்டு அங்கிருந்த துருக்கியப் படைகளை விரட்டினார். அவர் மீது போர் தொடுத்து அவரை வென்று ஒரு அரசை நிறுவினார் இபன் சௌத் எனும் உள்ளூர் தலைவர். அந்த அரசு தான் இன்றைய சௌதி அரேபியா. பிற முஸ்லிம் நாடுகள் தனித்தனியாகப் பிரிந்து கொண்டன.

இந்தக் காலகட்டத்தில் காங்கிரஸ் தலைவர் காந்தியார் 1919ல் ஒரு போராட்டம் அறிவித்தார். அதாவது துருக்கிய அரசரை காலிஃப் என்ற மதத் தலைவராகத் தொடர விடவேண்டும் என்ற போராட்டம். அந்த நாட்டுமக்கள் என்ன கருதுகிறார்கள், உலகின் மற்ற இஸ்லாமியர் என்ன எண்ணவோட்டத்தில் இருக்கிறார்கள் என்ற திட்டமே தெரியாமல் தொடங்கப்பட்ட போராட்டம் இது. மௌலானா முகமதலி என்பவரும் அவரது சகோதரர் மௌலானா சௌகதலி என்பவரும் சேர்ந்து 1920ல் கிலாபத் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டார்கள். அதில் பிரிட்டன் இரண்டாம் அப்துல்ஹமீது அல்லது அவரது சகோதரர் ஐந்தாம் மகமதுவையோ காலிஃபாக்க உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு நம் நாட்டு விடுதலையைப் பார்க்கலாம் என்று ஜின்னா உள்ளிட்ட பலரும் சொல்ல அதெல்லாம் இல்லை காலிஃப் அவர் தான் என்று அறிவிக்கும் வரை போராடுவோம் என்று காந்தியார் கிலாஃபத் இயக்கத்தை அறிவிக்க, துருக்கி சுல்தானுக்குக் கொடி பிடித்தது காங்கிரஸ். இந்து முஸ்லிம் ஒற்றுமை என்று பேசப்பட்டது. ஆத துர்க் துருக்கி தலைவரான பிறகு துருக்கிக்கு ஆதரவாக காங்கிரஸ் போராடியதாம், நன்றி. நீங்கள் விரைவில் சுயராஜ்ஜியம் பெற வாழ்த்துகள் என்று சொன்னார்.

ஜின்னாவே சொன்னாலும் கேட்காமல் துருக்கிக்கு ஆதரவு கொடுத்த காங்கிரசின் துருக்கி பாசம் அளப்பரியது. விடுதலைக்குப் பிறகு காங்கிரசின் நிலைப்பாடுகள் தெரிந்ததே. ஆனால் துருக்கியின் இந்தியப் பாசம் பாகிஸ்தான் பாசமானது. ஏன்? மதம். ஆத துர்க் உள்ளிட்டோர் அமெரிக்க ஆதரவு நிலைப்பாடு எடுக்க நேரு அணி சேரா இயக்கம் என்று எங்கும் சேராமல் நின்றும் கம்யூனிச பாசத்தால் சோவியத் பக்கம் சாய்ந்துகொண்டும் இருந்த நிலை. பாகிஸ்தான் அமெரிக்க ஆதரவு நேட்டோ ஆதரவு என்று நின்றது. துருக்கி பாகிஸ்தானை அணைத்துக் கொண்டது. நம் நாட்டில் துருக்கியில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் ஆள்கொல்வது முதல் ஆள்பிடிப்பது வரை நடந்தது. ஆனாலும் காங்கிரஸ் அரசுகள் எஜமான் என்று கைகட்டி நின்றதன்றி வேறெதுவும் செய்ததில்லை.  2000ல் பைலேண்ட் எட்ஜவிட் என்பவர் பிரதராகி நம்முடன் நல்லுறவு பேணினார். அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி அவர்கள் துருக்கிக்குச் சென்றுவந்து கப்பல் கட்டுதல் உள்ளிட்ட பல வியாபாரங்களில் பெரிய அளவில் கைகோர்த்து நடைபோட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அதன் பின்னர் வந்த எர்துவான் ஆரம்பத்தில் நல்லுறவெல்லாம் பேணினார். ஆனால் 2006க்குப் பிறகு மாறினார். 2008ல் மொத்தமாகப் பாகிஸ்தானுடன் கைகோர்த்தார். பாகிஸ்தானிகள் 2008ல் நம் மீது 26/11 தாக்குதல் நடத்தியபோது கூட பாகிஸ்தானுக்கு ஆதரவு பேசினார். கஷ்மீர்தத்தைப் பாகிஸ்தானுக்குக் கொடுப்பதே நல்லது என்று பேசியவர். ஆனாலும் காங்கிரஸ் அரசு துருக்கியைக் கண்டித்து ஒரு சொல் பேசவில்லை. எவ்வளவு அடித்தாலும் திருப்பி அடிக்க மாட்டேன் என்று மன்மோகன்சிங் பேசியது அவர்களுக்கு அதிக அனுகூலம் ஆனது.

மேலும் துருக்கியின் செலபை என்ற நிறுவனம் (எர்துவானின் குடும்ப நிறுவனம்) இதற்கு நம் நாட்டு விமான நிலைய செயல்பாடுகளை நிர்வகிக்க ஒப்பந்தம் போட்டது. ஆண்டுக்கு ₹1522 கோடி வருமானம் வரும் ஒப்பந்தம் இது. இது தவிர நம் நாட்டு விமான நிலையங்களில் மொத்த நிர்வாகம் பயணிகள் விவரம், தரவுகள் என்று பலவும் இவர்கள் கைக்குப் போகும். 2016க்கு பிறகு சில கட்டுப்பாடுகள் வந்தன.

2014ல் மோடி அவர்கள் பிரதமரான பிறகு ஏன் எங்கள் உள் விவகாரம் கஷ்மீரத்தில் மூக்கு நுழைகிறீர்கள் என்று பேசிப் பார்த்தார். சரிவரவில்லை என்றவுடன். எங்களுக்கும் மூக்கு இருக்கிறது, உங்களுக்கும் கிரேக்கம், சைப்ரஸ், ஆர்மீனியா என்று எல்லைப் பிரச்சனைகள் இருக்கிறது என்ற நிலைப்பாட்டை எடுத்தார். இவர்கள் எப்படி இப்படிப் பேசலாம் என்று கொதித்தார் எர்துவான். போய்யா பொம்மா என்று சொன்னார் மோடி. ஆனால் வியாபாரிகள் நாமெல்லாம் நல்ல நண்பர்கள் என்று பேசி வியாபாரம் செய்தனர்.

2019ல் 370ஐ நாம் நீக்கியவுடன் துருக்கி கொதித்தது. ஐநா சபையில் பாகிஸ்தானின் தீர்மானத்துக்கு ஆதரவாக அரற்றியது. சிரியாவில் நீ ஏன் ராணுவ நடவடிக்கை எடுக்கிறாய் என்று நாம் கேட்க பிரச்சனை வரும் என்று வாய் மூடியது துருக்கி. நக்ஸலைட்டுகளுக்கு எதிரான நம் நடவடிக்கையைக் கண்டித்தது துருக்கி. சோலியைப் பாரு என்றோம் நாம்.

ஆனால் காங்கிரஸ் கட்சி நவம்பர் 2019ல்  வெளிநாட்டுக் காங்கிரஸ் அமைப்பின் சார்பில் துருக்கியில் அலுவலகம் திறந்தது.  துருக்கி ஆபீசுக்கு  முகமது யூசுப் கான் என்பவர் தலைவர் என்று அறிவித்தது. அவர் துருக்கி - பாரத உறவுகளைப் பேண நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என்றது. இவரால் தான் என்று உறுதியாகத் தெரியாவிட்டாலும் இந்த ஆபீஸ் திறந்த பிறகு உள்ளூரில் பல பல்கலைக்கழகங்களுடன் துருக்கி நாட்டுப் பல்கலைக்கழகங்கள் ஒப்பந்தம் போட்டன. மாணவர் பரிமாற்றம், பாடத்திட்ட பரிமாற்றம் என்று பல விஷயங்களில் ஒப்பநதங்கள் வந்தன. குறிப்பாக JNU, ஜாமியா மிலியா இஸ்லாமியா, Lovely Professional University என்று அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் துருக்கியுடன் ஒப்பந்தங்கள் போட்டன. துருக்கிக்கு வருமானம். அசர்பைஜான் நாட்டுடனும் சில விமானங்கள் சம்பந்தப்பட்ட படிப்புக்காக ஒப்பந்தங்கள் உள்ளன. அங்கே காங்கிரசுக்கு என்ன உறவு என்று விசாரிக்க வேண்டும்.

ஆனால் 2025ல் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு நிலை மாறி துருக்கி பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்தததில் நம் மக்கள் பலரும் துருக்கி சுற்றுலாவை ரத்து செய்தனர். வியாபாரிகள் துருக்கியைப் புறக்கணித்தனர். துருக்கிய சுற்றுலாத்துறை ஒரேடியாக நஷ்டப்படுவோம் என்று இந்திய மக்களை பூப்போல சுற்றிக்காட்டி பொன் போலப் பாதுகாப்போம் வாருங்கள் என்று அறிக்கை விட்டது. பூவாவது பொன்னாவது போய்யா என்றனர் நம் மக்கள். வியாபாரிகளும் அதே நிலை எடுக்கின்றனர். நம் நாட்டுப் பல்கலைக்கழகங்கள் ஒவ்வொன்றாக துருக்கிய, அசர்பைஜான் பல்கலைக்கழகங்களுடனான ஒப்பந்தங்கள் ரத்து என்று அறிவிக்கின்றன.

ஆனால் இந்த துருக்கியைப் புறக்கணிப்பது பற்றிக் கருத்துக் கேட்ட போது காங்கிரஸின் ஜெயராம் ரமேஷும் பவர் கேடாவும் மச்சான் நீ பேசேன் மச்சான் நீ பேசேன் என்று மைக்கை ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றித் தள்ளிவிட்டுக் கடைசியில் கேடா மைக் பிடித்து “அதாகப்பட்டது நாங்கள் யோசித்துச் செல்லுவோம்” என்றார். கண்டிக்கக் கூட மாட்டீர்களா துருக்கியை என்று பாஜக கேட்டதற்கு “அரசாங்கம் தான் அயல் நாட்டு உறவைப் பேணவேண்டும் எதிர்க்கட்சி என்னத்துக்கு கண்டிக்கவோ பாராட்டவோ வேண்டும்?” என்றார்கள். அப்போ எதிர்க்கட்சிக்கு எதற்கு அயல்நாட்டில் ஆபீஸ்? அதுவும் கடைந்தெடுத்த பாகிஸ்தான் ஆதரவு நாடான துருக்கியில்? பதில் சொல்ல மறுக்கிறது காங்கிரஸ். கடைந்தெடுத்த பாரத விரோதமே உன் பெயர் தான் காங்கிரஸா? பதில் வரும் வரை விடாது கேள்வி கேட்போம். வந்தே மாதரம்.

Sunday, 11 May 2025

ஆபரேஷன் சிந்தூர் - பொட்டு வெச்ச தங்கக் குடம் தான், மற்ற அலங்காரங்களையும் பார்ப்போம்

 ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து பாகிஸ்தானை அடக்கவேண்டும் என்று தான் முதலில் திட்டமிட்டார் பிரதமர் மோடி. ஆனால் அவருக்கும் தெரியும் அடங்கமாட்டார்கள் என. ஆனாலும் பக்கத்து நாடு, பகையோ உறவோ பிரச்சனை கொடுக்காமல் இருந்தால் சரி என்ற குருநாதர் கொள்கையில் யோசித்தார். அடங்க வாய்ப்பில்லை என்று அஜித் டோவல் உறுதி செய்ய என்ன செய்தால் நமக்கு நல்லது என்று திட்டமிட்டார்கள். திட்டங்களை விரிவாகப் பார்க்கலாம்.