கோவையில் கொலை, திருத்தணியில் திமிருக்கு நடந்த தாக்குதல் இதெல்லாம் சட்டம் ஒழுங்குத் தோல்வி என்ற வகையில் தான் அடங்கும். பெற்றோரின் வளர்ப்புத் தோல்வி, ஆசிரியர்களின் கண்டிப்புத் தோல்வி எல்லாமே அரசின் தலையில் தான் விடியும்.
காரணம்?
அரசியல், பொருளாதாரம், நிர்வாகம், சர்வதேச உறவுகள், நாட்டு நடப்பு, குறித்த என் எண்ணங்களையும், என் அனுபவங்களையும் இங்கே பதிவேன்!
நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.
இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.
அன்புடன் என்றும்,
அருண்அம்பி. (@arunambie)
கோவையில் கொலை, திருத்தணியில் திமிருக்கு நடந்த தாக்குதல் இதெல்லாம் சட்டம் ஒழுங்குத் தோல்வி என்ற வகையில் தான் அடங்கும். பெற்றோரின் வளர்ப்புத் தோல்வி, ஆசிரியர்களின் கண்டிப்புத் தோல்வி எல்லாமே அரசின் தலையில் தான் விடியும்.
காரணம்?
இங்க பாரு…. உருண்டாச்சு பொரண்டாச்சு… குட்டிக்கரணம் கூட போட்டாச்சு. ஒண்ண்ணும் ஒத்துவல்லே… ஜனங்க சீரியஸா எடுத்துக்க மாட்டேங்கறா… நீங்க gen-z இளசுகள் புரக்ஷி பண்ணுவான்னு வாய ஆன்னு தெறந்து வெச்சுண்டு பாக்கறேள்.… அவங்கதான் மோடி மோடின்னு அந்த மனுஷன் பின்னாடியே போறான். அவங்க கூட உக்காந்து பேசறதுக்கும் அப்டேட்டடா இருக்கார் அந்த மனுஷன்.
உங்காளு என்ன பண்றான்? ஜியோல ரீல்ஸ் போட்டா அதானிக்கு காசு போறதுன்னு ஒளர்றான். அம்பானி மொறைக்கறான். இளசுகள் எதால சிரிக்கறதுன்னு இன்ஸ்டால பேசிக்கறதுகள். எங்க உருப்படறது?
ஓட்டுத் திருட்டுங்கறான். ஆதாரம் ரீம் ரீமா பேப்பர்ல இருக்குங்குங்கறான். கோர்டுக்குப் போயேண்டான்னா போன தடவ அவா ஒதைச்சதே இன்னும் வலிக்கறது. அதனால தெருத்தெருவா இப்படிப் பேசிண்டு திரிவேன், கோர்ட்டுக்கு மட்டும் போக மாட்டேங்கறான். ஜனங்க இருக்கட்டும் ஏ ஹே ஹேய்… பாத்தியா நோக்கே சிரிப்பு வரது.
இவன் தீக்குளிச்சாக்கூட சிரிக்கத்தான் செய்வா தெரியுமோ. ஏன்னு கேக்கறியா? ஊத்திக்கற பெட்ரோல்ல இருந்து அதானிக்கு ரூபிள்ல லாபம் வருதும்பன் இவன். இம்போர்ட் பண்ற அம்பானி பல்லக் கடிப்பன். இளசுகள் தலேல அடிச்சுண்டு போடா பொம்மான்னு டீ குடிக்கப் போயிடும்.
ஒண்ணூ உனக்கா விஷய ஞானம் இருக்கணும். இல்லே சொல்லித்தரவன் புத்திசாலியா இருக்கணும். இங்க ரெண்டும் இல்லே… எங்கிட்ட பொலம்பி என்ன ஆகப் போறது?
நேட்டோ போன்ற ஒரு அரபு அமைப்பை ஏற்படுத்த அரபு நாடுகள் முனைகின்றன. காரணம் அமெரிக்கா தன் நலனுக்காக மட்டுமே செயல்படும் என்பதை வெளிப்படையாக உணர வைக்கின்றனர் ட்ரம்ப் நிர்வாகத்து ஆட்கள். பழையவர்கள் பேசிப்பேசியே ஆளைக் கரைத்துத் தன் நலத்தைச் சாதிப்பார்கள். அதனாலேயே இஸ்ரேல், அரபு நாடுகள் என்று ஒன்றை மற்றொன்று அழிக்க நினைக்கும் இரு சக்திகளைச் சமநிலையில் வைத்துத் தன் நலத்தைப் பேணிக் கொண்டது அமெரிக்கா.
நேபாளத்தின் இப்போதைய தன்னெழுச்சியான “இளசுகள்” போராட்டத்தை முன்னின்று நடத்தியது “ஹமி நேபாள்” என்ற NGO. இந்த அமைப்பின் தலைவர் சுடங் குருங் என்பவர்.
இவரது NGOக்கு நிதி அளித்து ஆதரிப்பவர்கள் பட்டியலில் Infinity Holdings என்ற ஆயுத வியாபார நிறுவனத்தின் தலைவர் தீபக் பட்டா முதன்மையானவர். இவர் மீது இத்தாலிய நிறுவனத்திடம் நேபாள போலீசுக்கு துப்பாக்கி வாங்கியதில் ஊழல் செய்ததாக வழக்கு உள்ளது.
கொரோனா காலத்தில் நேபாளத்தில் தெர்மாமீட்டர் பதுக்கி அதிகவிலைக்கு விற்ற குற்றவாளி சாஹில் அகர்வால் என்பவர் ஹமி நேபாளுக்கு நிதியளிப்பவர்களில் மற்றொருவர்.
டாக்டர் சந்துக் ருயிட் எனும் மகசேசே விருது பெற்ற கண் மருத்துவர் மற்றொரு சர்வதேச ஆதரவு, நிதி திரட்டும் ஆள்.
இப்படியாகத்தான் நேபாளத்தின் தன்னெழுச்சியான போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
Matteo Maggiori. இவர் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியர். குறிப்பாக geo-economics நிபுணர். 6500 பொருளாதார ஆராய்ச்சிக் கட்டுரைகளில் எழுதியோ, மேற்பார்வை செய்தோ, வழிகாட்டியோ சம்பந்தப்பட்டவர். இவர் ட்ரம்புக்கு ஒரு பாடம் எடுக்க முனைந்திருக்கிறார். டரம்புக்கு ஏறாது. நாம் பார்ப்போம்.
உலக அளவில் ஆதிக்கம் என்பது இரு வகைப்படும். சிறுகூறுகளில் ஆதிக்கம். பேரளவிலான ஆதிக்கம்.
சிறுகூறுகளிலான ஆதிக்கம் என்பது சில துறைகள் சார்ந்த ஆதிக்கம். உதாரணமாக செமி கண்டக்டர், தாதுக்கள், மருந்துகள், ஆயுதங்கள் போன்றவை.
பூகா (Puga) 14400 அடி உயரத்தில் உள்ள இமாலயப் பள்ளத்தாக்கு. லேயிருந்து 170 கிமீ தூரம். இங்கே வெப்பநிலை கடுங்கோடையில் -10 டிகிரி. குளிர் காலத்தில் -40 டிகிரி. இயற்கையான வெந்நீர் ஊற்றுகள் இப்பகுதியில் அதிகம். இங்கே உள்ள சில கிராமங்களுக்கு மின்சாரம் டீசல் ஜெனரேட்டர் மூலமாகவே இதுவரை கிடைத்துவந்தது.
இங்கே நம் ராணுவமும் ஓஎன்ஜிசியும் இணைந்து பனிப்படங்களின் அடியில் உறைந்து போன தாதுக்கள் பற்றி ஆராய்ந்தபோது இங்கே இயற்கை வெப்பம் பனிப்படலத்தின் அடியில் அதிகமாக இருப்பதை அறிந்தனர். அதுவே வெந்நீர் ஊற்றுகளுக்கு ஆதாரம் என்று கண்டனர். இந்த வெப்பத்தின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது பற்றி ஆராய்ந்து, நம் நாட்டுத் தொழில்நுட்பம் கொண்டு துரப்பண வேலைகள் செய்து Geo thermal energy என்று ஆங்கிலத்தில் வழங்கப்படும் புவி வெப்பத்தினால் ஆன மின்சாரத்தை எடுத்தனர்.
வந்தே மாதரம் 🙏 விடியோ 👇🏻
சிறு குழந்தைகளைக் கவனித்திருப்போம். பெரியவர்கள் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் பூனை ஒன்று அருகே வந்தாலும் “ஏ பூஞை! உன்ன அதிச்சு நொயிக்கிப்புவேன். ஓதுதா” என்று வீரம் பேசும். அதே குழந்தை பெரியவர்கள் அருகில் இல்லாத வேளையில் பூனை தூரத்தில் இருந்தாலும் ஓடியே போய் பெரியவர்களின் மடியில் அமர்ந்து கொண்டு “பூஞை வட்டு. கயிக்கும்.” என்று பயத்தோடு ஒண்டிக்கொள்ளும். ஃபெயில்டு மார்ஷல் அசீம் முனீர் தலைமையிலான பாகிஸ்தான் ராணுவம் பஹல்காம் கொடூரத்திற்குப் பிறகு நாம் பாகிஸ்தானுக்குள்ளே புகுந்து தீவிரவாத முகாம்களைத் தாக்கி அழித்த போது வசனம் பேசிக்கொண்டே இருந்தார்கள். 11 விமானத் தளங்கள் அடித்து நொறுக்கப்பட்ட போது நேராக அமெரிக்கா போய் ஐயா வலிக்கிதுங்க என்று அழுதார்கள். அமெரிக்கர்கள் நீதான் பேசணுமாம் போய் சமாதானம் பேசு என்றதும் வந்து சமாதானம் பேசிவிட்டு அவர்கள் நாட்டுப் பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகங்களில் வெற்றி வெற்றி என்று கூவினார்கள்.