ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Friday, 15 August 2025

புவி வெப்பத்தினால் ஆன மின்சாரம் - பூகா - லே (லடாக்)

 பூகா (Puga) 14400 அடி உயரத்தில் உள்ள இமாலயப் பள்ளத்தாக்கு. லேயிருந்து 170 கிமீ தூரம். இங்கே வெப்பநிலை கடுங்கோடையில் -10 டிகிரி. குளிர் காலத்தில் -40 டிகிரி. இயற்கையான வெந்நீர் ஊற்றுகள் இப்பகுதியில் அதிகம். இங்கே உள்ள சில கிராமங்களுக்கு மின்சாரம் டீசல் ஜெனரேட்டர் மூலமாகவே இதுவரை கிடைத்துவந்தது. 

இங்கே நம் ராணுவமும் ஓஎன்ஜிசியும் இணைந்து பனிப்படங்களின் அடியில் உறைந்து போன தாதுக்கள் பற்றி ஆராய்ந்தபோது இங்கே இயற்கை வெப்பம் பனிப்படலத்தின் அடியில் அதிகமாக இருப்பதை அறிந்தனர். அதுவே வெந்நீர் ஊற்றுகளுக்கு ஆதாரம் என்று கண்டனர். இந்த வெப்பத்தின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது பற்றி ஆராய்ந்து, நம் நாட்டுத் தொழில்நுட்பம் கொண்டு துரப்பண வேலைகள் செய்து Geo thermal energy என்று ஆங்கிலத்தில் வழங்கப்படும் புவி வெப்பத்தினால் ஆன மின்சாரத்தை எடுத்தனர். 


இப்போது இதை ஓஎன்ஜிசி பெரிய அளவில் செய்யும்.  இதன் மூலம் அங்கிருக்கும் கிராமங்கள் டீசல் மீதான சார்பின்றி மின்சாரம் பெறும். இந்த மின்சாரம் தட்பவெப்ப, சூழல் சார்பின்றி எல்லாக் காலங்களிலும் கிடைக்கும். புகை, கரிவாயு போன்ற களுதை குருதைகள் கிடையாது. செலவு மிகக் குறைவு. 

வந்தே மாதரம் 🙏 விடியோ 👇🏻

Thursday, 14 August 2025

பாகிஸ்தானிகளின் சவடால்கள் - சிரிப்புக்குப் பஞ்சமில்லை

 சிறு குழந்தைகளைக் கவனித்திருப்போம். பெரியவர்கள் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் பூனை ஒன்று அருகே வந்தாலும் “ஏ பூஞை! உன்ன அதிச்சு நொயிக்கிப்புவேன். ஓதுதா” என்று வீரம் பேசும். அதே குழந்தை பெரியவர்கள் அருகில் இல்லாத வேளையில் பூனை தூரத்தில் இருந்தாலும் ஓடியே போய் பெரியவர்களின் மடியில் அமர்ந்து கொண்டு “பூஞை வட்டு. கயிக்கும்.” என்று பயத்தோடு ஒண்டிக்கொள்ளும். ஃபெயில்டு மார்ஷல் அசீம் முனீர் தலைமையிலான பாகிஸ்தான் ராணுவம் பஹல்காம் கொடூரத்திற்குப் பிறகு நாம் பாகிஸ்தானுக்குள்ளே புகுந்து தீவிரவாத முகாம்களைத் தாக்கி அழித்த போது வசனம் பேசிக்கொண்டே இருந்தார்கள்.  11 விமானத் தளங்கள் அடித்து நொறுக்கப்பட்ட போது நேராக அமெரிக்கா போய் ஐயா வலிக்கிதுங்க என்று அழுதார்கள். அமெரிக்கர்கள் நீதான் பேசணுமாம் போய் சமாதானம் பேசு என்றதும் வந்து சமாதானம் பேசிவிட்டு அவர்கள் நாட்டுப் பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகங்களில் வெற்றி வெற்றி என்று கூவினார்கள். 

Saturday, 2 August 2025

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் 25% வரி மிரட்டல் - குறுகிய காலத்து வலி

 டோனல்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் போது Make America Great Again என்ற கோஷத்தை முன் வைத்தார். அதாவது அமெரிக்காவைச் சிறந்த நாடாக்குவோம் என்றார். அதற்காக பல வேலைகளை அமெரிக்காவில் உருவாக்குவோம். கள்ளக்குடியேறிகளை விரட்டுவோம் என்று பல விஷயங்கள் சொன்னார். அதை எல்லாம் செய்யத் தொடங்கி பல ரௌடிக் கும்பல்களைப் பிடித்து தென்னமெரிக்காவில் சிறை வைத்தார். விசா இல்லாது வந்த பலரை அவரவர் நாடுகளுக்குத் திருப்பியனுப்பினார். அதன் பிறகு ஒவ்வொரு அமெரிக்கக் கம்பெனியாகப் பிடித்து அமெரிக்காவில் தொழிற்சாலை தொடங்கு, இங்கே வேலை கொடு என்று ஆரம்பித்தார். இங்கே தான் தொடங்கியது சிக்கல். பல கம்பெனிகள் சோலியைப் பாருமய்யா என்று சொல்லிவிட்டனர். அவர்களுக்கு அமெரிக்காவில் தொழிலைச் செய்வதில் முக்கியமான சிக்கல்கள் தேவையான ஆளில்லாமை, அதிகச் செலவு, கடும் தொழிலாளர் சட்டங்கள்.