ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Tuesday, 22 February 2011

வேலையற்றோர் தொழில் தொடங்க அரசு பணம்!!

இன்று காலை மின்னஞ்சலைத் திறந்ததும் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. தேர்தலுக்காக இப்படியெல்லாம் ஆரம்பித்து விட்டார்களா என்று எண்ணிவிட்டேன். 176000 கோடியை இப்படி பிரித்துக் கொடுத்து ஓட்டு வாங்குகிறார்களோ? மாட்டார்களே என்றும் தோன்றியது.

Saturday, 12 February 2011

சம்ஸ்க்ருத படிப்பு - நன்றை இன்றே!!

ச்ருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தை அலங்கரித்த ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் உபதேசத்தில் இருந்து எனக்குப் பல தெளிவுகள் குருவருளால் கிடைத்தன. சம்ஸ்கிருதத்தில் இருக்கும் வேதாதி விஷயங்கள் விவாதத்துக்குரியன அல்ல என்று நண்பர் ஒருவர் சொன்னார். மறுத்தேன். அவர் வேத விற்பன்னர் என்பதால் தமக்குத் தெரிந்த சில ச்லோகங்களைச் சொல்லி தன் தரப்பை வலுப்படுத்தினார்.

Sunday, 6 February 2011

பாராளுமன்றத்தின் எதிரே தீக்குளிப்பு

மேஜர்.சந்தீப் உன்னிகிருஷ்ணனின் சித்தப்பா தீக்குளித்து இறந்துவிட்டார். இது பெரும்பாலான ஊடகங்கள் உரக்கச் சொல்லாத செய்தி. ஏனென்றால் இதைவிடச் 'சூடான' செய்திகள் அவர்களுக்கு இருந்தன. 3 இடியட்ஸில் விஜய், மலேசியாவில் சினிமா கலைஞர்களின் அட்டகாசம், திரைப்படக் குழுவினர் பேட்டி, பாட்டுக் கச்சேரிகள் மற்றும் இன்னபிற களியாட்டங்களுக்கு மத்தியில் இதற்கு நேரமும் பார்வையாளர்களும் இல்லை. தகவலுக்காக: மேஜர்.சந்தீப் உன்னிகிருஷ்ணன் மும்பை 26/11 தாகுதலில் தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடி உயிர் விட்ட கமாண்டோ!