ராபர்ட் கால்டுவெல்லின் தமிழ்ப் பணியைப் பெருமைப்படுத்தும் வகையில் அவரது 200வது ஆண்டு நிறைவு விழாவை அரசு விழாவாகக் கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த உத்தரவு நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும், ஒற்றுமைக்கும், பண்பாட்டிற்கும் எதிரானது. அறிவியல், மொழியியல், வரலாறு, பண்பாடு என அனைத்து மட்டத்திலும் மிகத் தவறு என்று நிரூபிக்கப்பட்ட மோசடியான, ஆரிய-திராவிட இனவாதத்தின் தந்தை ராபர்ட் கால்டுவெல்.
கிறிஸ்துவ மதமாற்றத்திற்காக தமிழகம் வந்து தமிழ் படித்து, தமிழைத் திரித்து சூழ்ச்சி செய்து தமிழர்களைப் தமிழ்ப் பண்பாட்டிலிருந்து பிரித்தவரே இந்த ராபர்ட் கால்டுவெல். தமிழர் வரலாறு என்ற போர்வையில் சாதிச் சண்டைகளை ஊக்குவிக்கும் விதமாக இவர் எழுதிய பல கருத்துகள் ஆவணங்களாக எடுத்துக் கொள்ளப்பட்டு இன்றும் தீராத பிரச்னைகளாக நம் முன் தலைவிரித்தாடுகிறது. கமுதி வழக்கில் நாடார்கள் தீண்டத்தகாதவர்கள் என்று வெள்ளையர்கள் தீர்ப்பளித்ததற்கு இவரின் சமூக வரலாற்று ஆய்வே காரணமானது. இதன் விளைவாக தென்தமிழகத்தில் அதிக அளவில் வசிக்கும் நாடார்கள் பெருமளவில் மதம் மாற்றப்பட்டார்கள்.
கருணாநிதி நடத்திய செம்மொழி மாநாட்டில் தமிழைச் செம்மொழி என்று உணர்த்தியவர் கால்டுவெல் என்று அவர் அறிவித்தார். கால்டுவெல் தமிழை உயர்தனிச் செம்மொழியாக எங்கும் குறிப்பிடவில்லை. கால்டுவெல் செந்தமிழ், கொடும் தமிழ் என்று தமிழை இரண்டாகப் பிரித்துக் காட்டிய தொல்காப்பியத்தின் மரபை மட்டுமே சுட்டிக் காட்டினார். உலக வரிசையில் உயர்தனிச் செம்மொழியான ஐந்து மொழிகளுடன் கால்டுவெல் தமிழை அங்கீகரித்துச் சொல்லவில்லை. கால்டுவெல் எழுதிய ஒப்பிலணக்கன நூலில் ஹல்ல கன்னடா என்று, கொடும் கன்னடம், செம்மையான கன்னடம் என்ற கன்னட மரபையும் குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் கன்னட மொழிக்கு முகவரி கொடுத்தவர் கால்டுவெல் என்று எந்த கன்னடக்காரர்களும் போற்றுவதில்லை.
தமிழர்களை மதமாற்றுவதற்கு அந்நிய கிறிஸ்துவ மதத்திற்கு சில அடையாளங்கள், பிம்பங்கள் தேவைப்பட்டது. அதற்காக மோசடியாக உருவாக்கப்பட்டவரே ராபர்ட் கால்டுவெல். தமிழுக்கும், தமிழ்ப் பண்பாட்டிற்க்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் குந்தகம் விளைவித்த கால்டுவெல்லுக்கு விழா எடுப்பது தமிழருக்கும் தமிழினத்துக்குமே அவமானம். ஆகவே ஓட்டு அரசியலை ஒதுக்கிவைத்து, தமிழ்த் துரோகிகளுக்கு அங்கீகாரம் தரும் ஈனச் செயல்களை தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் கைவிடுமாறு வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் கேட்டுக் கொள்கிறது.
- பால. கௌதமன்.
இயக்குனர்
வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம்
அரசியல், பொருளாதாரம், நிர்வாகம், சர்வதேச உறவுகள், நாட்டு நடப்பு, குறித்த என் எண்ணங்களையும், என் அனுபவங்களையும் இங்கே பதிவேன்!
Disclaimer
நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.
இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.
அன்புடன் என்றும்,
அருண்அம்பி. (@arunambie)
Wednesday, 7 May 2014
Thursday, 17 April 2014
கவனமாக எழுதுங்கள் தோழரே!
புலமைபித்தன் தமிழக அரசியலில் எழுதிய (வழமையான) ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு பால.கௌதமன் அவர்களின் தெளிவான பதில்.
_____________________________________________________________________________
நடுநிலையாளராக
விமர்சிப்பதற்கு நாணயம் தேவை. ஈ.வே.ராவின் தொண்டன் என்பதால் மட்டுமே நீங்கள் நடுநிலையாளராகி
விட முடியாது. ஐயா புலமைப்பித்தன் அவர்களே, மோடி அவர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸின் சித்தாந்தத்தில்
உறுதியாக உள்ளவர் என்றும் தாங்கள் ஈ.வே.ராவின்
கொள்கையை ”அணு அளவும் பிசகாமல் ஏற்றுக் கொண்டவர்”
என்றும் 16.04.2014 தமிழக அரசியலில் எழுதி உள்ளீர்கள். இதில் தாங்கள் வைக்கும் குற்றச்சாட்டு
காந்தியை கொன்றது ஆர்.எஸ்.எஸ் என்பது. காந்தி கொலைக்கும் ஆர்.எஸ்.எஸ்க்கும் உங்களால்
சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் வீர சாவர்கர்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்று உச்சநீதிமன்றம்
தீர்ப்பளித்த பின்னும் பொய்யுரைத்து மெய்ப்பிக்கும் கோயாபல்ஸ் தத்துவத்தை நீங்கள் பின்பற்றலாமா?
நீங்கள் இம்மியளவும் பிசகாமல் பின்பற்றும் ஈ.வே.ராவின் தத்துவமும் பொய்யின் அடிப்படையிலானது
தானோ?
Saturday, 25 January 2014
இந்து சின்னங்களுக்கு தடை - இராமநாதபுரம் கலெக்டரின் தாலிபானிஸம்
இக்கட்டுரை வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் கள ஆய்வு செய்து வெளியிட்டது.
இராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டையில் அமைந்துள்ள அரசு உதவி பெரும் முஸ்லீம் தனியார் பள்ளியான முகமதியா மேல் நிலைப்பள்ளியில் தாயத்து மற்றும் செந்தூரம் அணிந்து வந்த மாணவர்கள் அஜீஸ் என்ற உடற்பயிற்சி ஆசிரியரால் (PT Master) தடுத்து நிறுத்தப்பட்டனர். அந்த மாணவர்கள் கழுத்திலும் கையிலும் இருந்த ரட்சை கயிறுகள், தாயத்துகள் மற்றும் டாலர்கள் அறுக்கப்பட்டன. நெற்றியில் அணிந்திருந்த செந்தூரம் அழிக்கப்பட்டது. இந்தக் கொடுமையைக் கேள்விப்பட்ட பெற்றோர்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெரினா லோட்டஸ் அவர்களிடம் சென்று முறையிட்டனர்.
இராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டையில் அமைந்துள்ள அரசு உதவி பெரும் முஸ்லீம் தனியார் பள்ளியான முகமதியா மேல் நிலைப்பள்ளியில் தாயத்து மற்றும் செந்தூரம் அணிந்து வந்த மாணவர்கள் அஜீஸ் என்ற உடற்பயிற்சி ஆசிரியரால் (PT Master) தடுத்து நிறுத்தப்பட்டனர். அந்த மாணவர்கள் கழுத்திலும் கையிலும் இருந்த ரட்சை கயிறுகள், தாயத்துகள் மற்றும் டாலர்கள் அறுக்கப்பட்டன. நெற்றியில் அணிந்திருந்த செந்தூரம் அழிக்கப்பட்டது. இந்தக் கொடுமையைக் கேள்விப்பட்ட பெற்றோர்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெரினா லோட்டஸ் அவர்களிடம் சென்று முறையிட்டனர்.
Saturday, 21 December 2013
சன் நியூஸில் ஒரு பின் லாடன்
வேதவிஞ்ஞான ஆராய்ச்சி மையத்தில் வெளிவந்த இக்கட்டுரையை எனது தளத்தில் பகிர்வதில் மகிழ்கிறேன். நண்பர் கௌதமன் எழுதியது.
______________________________________________________________________________________________________
ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகங்கள்! இந்த நாட்டின் நலவாழ்வை அவைதான் தூக்கிப் பிடிக்கின்றன! ஊடகங்களே மக்களுக்குப் பல புதிய கண்ணோட்டங்களைக் கொடுத்துச் சிந்திக்கத் தூண்டுகின்றன! அதிலும் தமிழ் நாட்டில் நடுநிலை, உண்மை, உறுதி என்ற அடிப்படையில் பல கருத்துக்களை விவாதம் மூலம் கொண்டு சேர்ப்பதில் முன்னணியில் இருக்கிறோம் என்று மார் தட்டிக் கொள்வது சன் நியூஸ் தொலைக்காட்சி! இதில் “நேருக்கு நேர்” என்கிற விவாத நிகழ்ச்சியை ஒருவர் பல வருடங்களாக நடத்தி வருகிறார்! நிகழ்ச்சியில் இவர்தான் அதிகமாகப் பேசுவார்! அவர் கருத்துக்கு மாற்றுக் கருத்துடையவர்களை பேச விடமாட்டார்! சிலசமயம் ஏளனமும் செய்வார்! இவரின் சித்தாந்தப் பின்னணியிலுள்ளவர்களுக்கு, குறிப்புகள் எடுத்துக் கொடுத்து அதற்குப் பதில் சொல்பவர்களைப் பாதியில் பேச விடாமல் தடுப்பார்! முடிவுரை என்ற பெயரில், அவர் கருத்துக்களை ஒரு சொற்பொழிவாக நிகழ்த்திவிட்டு, மக்கள் மன்றத்திடம் முடிவை விட்டுவிடுகிறேன் என்று தன் பொறுப்பைத் தட்டிக் கழிப்பார்! இந்த விவாதங்களுக்கு ‘’நடுநிலை, உண்மை, உறுதி’’ என்ற சிலாகிப்புகள் வேறு! இவர் யாரென்று தெரிந்ததா?
Tuesday, 10 December 2013
காங்கிரஸ் கட்சிகள்
புதுச்சேரியிலிருந்து வெளிவந்த 28.11.1908 தேதியிட்ட இந்தியா இதழில் மஹாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதிய கட்டுரை
ஒரு மனிதன் தன் மனிதில்இரண்டு விதமான மாறுபட்ட அபிப்பிராயங்கள் தோன்றி, இது நியாயமா அது நியாயமா என்று நிச்சயிப்படாமலிருக்கும்போது, தான் செய்யவேண்டுவது யாதெனில், பின்னிட்டு அனுபவத்தினாலேனும், அல்லது தக்க பெரியோரின் போதனையினாலேனும் தனக்கு உண்மை தெரியுமளவும் இரண்டு பக்ஷங்களிலே ஒன்றின்மீதும் சார்வு கொள்ளாமல் தன் மனதைச் சமநிலையிலே வைத்திருக்க வேண்டும்.
ஒரு மனிதன் தன் மனிதில்இரண்டு விதமான மாறுபட்ட அபிப்பிராயங்கள் தோன்றி, இது நியாயமா அது நியாயமா என்று நிச்சயிப்படாமலிருக்கும்போது, தான் செய்யவேண்டுவது யாதெனில், பின்னிட்டு அனுபவத்தினாலேனும், அல்லது தக்க பெரியோரின் போதனையினாலேனும் தனக்கு உண்மை தெரியுமளவும் இரண்டு பக்ஷங்களிலே ஒன்றின்மீதும் சார்வு கொள்ளாமல் தன் மனதைச் சமநிலையிலே வைத்திருக்க வேண்டும்.
Wednesday, 6 November 2013
கற்பனை, பிதற்றல், புரட்டு, சூது - பால.கௌதமன்
உலகம் முழுவதும் இந்துக்களாலும், சமணர்களாலும், சீக்கியர்களாலும், இந்திய பண்பாட்டை ஏற்று கொள்ளும் பிற மதத்தவர்களாலும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை தான் தீபாவளி. இந்த தீபாவளியைத் தன் ஆத்திரம் தீர முன்னோடி நாளிதழ்களான The Deccan Chronicle, The Asian Age ஆகியவற்றின் Op Ed பகுதியில் அடித்துத் துவைத்திருக்கிறார் கஞ்சன் இலையா என்ற புதின எழுத்தாளர். இவர் ஹைதராபாத், மௌலானா ஆஸாத் தேசிய உருது பல்கலைக்கழகத்தின் Study of Social Exclusion and Inclusive Policy மையத்தின் இயக்குனராக பணி புரிகிறார். தன்னை தலித் விடுதலைக்காக குரல் கொடுக்கும் சமூக சீர்திருத்தவாதி என்று அடையாளம் காட்டிக் கொள்பவர். மதம் மாறிய தலித்துக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை கிறிஸ்த்துவ மதமாற்றத்தை வேகப்படுத்துவதற்காக முன் வைத்தவர். இந்த நாட்டில் தலித்துக்கள், மனிதர்களாக நடத்தப்படுவதில்லை என்று சர்வதேச அரங்கான Unrepresented People’s Congressல் இந்தியாவிலிருந்து பிரதிநிதிகளை அனுப்பி, நம் நாட்டில் பிரிவினைவாதத்திற்கு உலக அங்கிகாரம் பெற்றுத்தரத் துடியாக துடித்தவர். மனித நேயத்தை பற்றி மாய்மாலம் செய்துவிட்டு மனித உயிர்களை குடிக்கும் மாவோயிஸ்டுகளுக்கு வக்காலத்து வாங்குபவர். அது மட்டுமா? நான் ஏன் ஹிந்து இல்லை என்ற நூலை எழுதி விட்டு, மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரக் கூடாது என்று குரல் கொடுத்த போலி மதச்சார்பின்மை பேசிய மாமேதை.
Thursday, 24 October 2013
இராம ஜென்ம பூமி - தேர்தல் ஆயுதமல்ல தேசத்தின் தேவை.
Subscribe to:
Posts (Atom)
