ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Sunday 30 September 2012

இறைவனை அடைய வேண்டாம்

அவாவறுத்தல் என்பது மிகக் கடினமான செயல். அவா எனப்படுவது மிகவும் மெல்லிய உணர்விழை. ஆனால் பட்டு நூலிழை போன்று அறுக்கக் கடினமானது.   உயர்ந்த பொருள் இப்படிப் போனதே என்று பட்டு நூலை அறுத்தால் மனம் அடித்துக் கொள்ளும். அதே போல ஆசை  விடுப்பது சுலபம் எனினும் மனம் தான் எண்ணியது ஈடேறவில்லை என்று துவளும். பல பணிகளுக்கு ஊறு செய்யும்.

Saturday 8 September 2012

விடுதலையின் வக்கிரமும் அரவிந்தன் நீலகண்டனின் சகோதர பாசமும்

சென்னைக்கு விஜயம் செய்து சாதுர்மாஸ்ய சமயத்தில் சீடர்களுக்கு வேதாந்தக் கருத்துக்களை உபதேசித்து அருள் பாலித்து வரும் ஸ்ருங்கேரி ஜகத்குரு அனந்தஸ்ரீ விபூஷித பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் அவர்களை கல்கி பத்திரிக்கையில் சிறு பேட்டி கண்டு வெளியிட்டனர்.  சுயஜாதி அபிமானியும் ப்ராமணத்வேஷியுமான ஈரோடு ராமசாமி நாயக்கரின் சொத்தை ஏகபோகமாக பரம்பரை பாத்தியதையுடன் அனுபவித்து வரும் கி.வீரமணி தன் விடுதலை பத்திரிக்கையில் யார் இந்த சிருங்கேரி சங்கராச்சாரியார்கள்? என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார். வழக்கம் போலவே வடிகட்டிய பொய்யை தம் வழக்கமான பாணியில் ஆதாரம் காட்டுவதாகக் கூறி புனைந்து வைத்துள்ளார். இதோ:

Saturday 1 September 2012

திராவிடஇயக்கத்தினரின் வெட்டி வாதங்களை வேரறுப்பது எப்படி?

ஆகஸ்டு 19 ஞாயிறன்று தேசிய சங்கப் பலகையின் பயிலரங்கம் நடைபெற்றது. மூத்த பத்திரிகையாளர் சுப்பு அவர்கள் முகநூலில் தெரிவித்த தகவலின் மூலம் விண்ணப்பித்துப் போயிருந்தேன். திருக்குறளும் சிலப்பதிகாரமும் விவாதிக்கப்படும், அந்தப் புத்தகங்களைக் கொண்டு வருதல் சிறப்பு என்று சொல்லியிருந்தார்கள். தமிழய்யாக்களின் சொல்பேச்சுக் கேட்பது  பள்ளிப்பருவத்தில் இருந்தே பழக்கத்தில் இல்லாததால் குறிப்பெழுதிக் கொள்ள ஒரு சிறு ஏட்டை மட்டும் எடுத்துக் கொண்டு போனேன்.