ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Monday 27 August 2012

வேதாந்தம் படும் பாடு - பாகம் 2

கீழே உள்ளது இதன் தொடர்ச்சி....

உனக்கெப்படித் தெரியும் என்று கேள்வி வரும். முதலிலேயே சொல்லிவிடுகிறேன் நான் வேதாந்தியோ மெய்ஞ்ஞானத் தேடல் உள்ளவனோ அல்ல. கொஞ்சம் விவாதம் செய்வேன். அதற்காகவும் அதன் மூலமும் கொஞ்சம் கற்பேன். என் குருநாதர் போற்றுதற்குரிய நிறைஞானி ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் அவர்கள் வேதாந்தம் கற்க அடிப்படைத் தேவை என்னென்ன என்று தம் அருளுரை ஒன்றில் சொல்லியிருக்கிறார்.

வேதாந்தம் படும் பாடு - பாகம் 1

நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.  அவர் அலுவலகத்தில் வேலை செய்வார். பொழுது போக்க சினிமா, டிவி என்று பார்த்துக் கொண்டிருப்பார். கோவிலுக்குக் கூட அதிகம் போகமாட்டார்.  திடீரென்று என்னிடம் ”நான்  இப்ப பக்கா ஆன்மீகவாதி ஆயிட்டேன் தெரியுமா?” என்றார். ”அப்படியா! ரொம்ப  சந்தோஷம்”, என்றேன்.  “நீ நம்பலை. இரு.” என்று சொல்லிவிட்டுப் போனார். ஒரு ஏழோ எட்டோ சான்றிதழ்களுடன் வந்தார்.

Thursday 16 August 2012

அண்ணா இருந்த உண்ணாவிரதம்

அண்ணா என்ற சொல் பொதுவில் மூத்த சகோதரரைக் குறிக்கும். பகுத்தறிவு(??!!) கும்பலைப் பொறுத்தவரை அது கண்ணீர்த்துளிக் கூட்டம் என்று ராமசாமி நாயக்கரால் சுட்டப்பட்ட குழுவுக்குத் தலைமை ஏற்று திமுக கண்ட முன்னாள் முதல்வர் C.N. அண்ணாத்துரை அவர்களைக் குறிக்கும். சற்றே சமீபகாலமாக அந்தச் சொல் ராலேகாவ்ன் சித்தி என்ற மராட்டிய கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் அண்ணா ஹசாரே அவர்களைக் குறிக்கிறது.