ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Saturday 13 May 2017

வாழ்க்கை வாழ்வதறகே!

+2 தேர்வு எழுதி முடிவுகள் தெரியப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். 10ஆவது, +2 வெற்றி, தோல்வி என்பது கவலைப்படத்தக்க ஒரு விஷயமில்லை என்பதை நீட் தேர்வு நிரூபித்துவிட்டது. இங்கே தொண்ணூறு தொட்டவன் அங்கே திணறி நிற்கிறான். நீட் பற்றி நிறையப்பேர் நிறையச் சொல்லிவிட்டார்கள். ஆகவே அது பற்றி நான் ஏதும் பேசப் போவதில்லை.

கல்வித்திட்டம், பாடங்கள் கற்றுத்தரப்படும் விதம் இவற்றில் குறைகள் எண்ணிலடங்காது இருந்தாலும் இங்கே அடுத்த கட்ட நகர்வுக்கு குறைந்த பட்சத் தேர்ச்சி ஒரு அச்சாரம் என்பதை மனதில் கொள்ளுங்கள். தேர்ச்சி தேவை. முதல் முயற்சியில் வந்தால் மகிழ்ச்சி. வராவிட்டால் மேலும் சற்றே முயன்று பெற்றுவிடலாம். கம்பசூத்திரம் இல்லை நம் பாடத்திட்டம்.