ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Thursday 2 July 2015

மணிபத்ரபுரி @ மாணா - பாரதத்தின் கடைசிக் கிராமம்

வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று பீற்றித் திரியும் அரசியலார், தமிழ் பிழைப்பாளர்கள் கெடுத்த தமிழகத்தில் வெளியூர்த் தமிழனே ஏமாற்றப்படும் அவலம் அடிக்கடி நடப்பது. அப்படி இருக்கையில் மொழி தெரியாத வேற்று மாநிலத்தவர், வேற்று நாட்டார் நிலை?

ஆனால், வடக்கே நிலை வேறு. பத்ரிநாத்துக்கு அருகில் இருக்கிறது அப்பகுதியின் பாரதத்தின் கடைசிக் கிராமமான மணிபத்ரபுரி என்கிற மாணா. நவீன வசதிகள் மிகச் சிலவே எட்டிப் பார்த்திருக்கும் அங்கே இந்த வந்தாரை வாழவைக்கும் மனப்பாங்கைக் கண்கூடாகக் கண்டோம்.