ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Monday 18 April 2016

ஆநிரை பேணலும் அறவழி நிற்றலும்

பசு மாடு சிறு வயதிலிருந்து பழகிய ஜீவன். நடுவே சிலகாலம் டச் இல்லை. பள்ளிக்கூட நண்பர்களைப் போல. விடுமுறையில் பாட்டி வீட்டுக்கு இராஜபாளையம் செல்கையில் எங்கள் வீட்டுப் பசுவைக் கண்டு குசல விசாரிப்புகள் முடித்துத் தான் வீட்டுக்குள்ளேயே போவேன். அந்தப் பசு கன்று ஈன்ற போது அதைப் பார்ப்பது பார்வதி-பரமேஸ்வரனை நேரில் தரிசிப்பது போல என்று சொல்லக்கேட்டு ஒருமணி நேரத்துக்கு ஒரு முறை கொட்டிலுக்குப் போய்ப் பார்த்துவிட்டுக் கணக்கு வைத்துக் கொண்டிருந்தேன். பிறகு சீம்பாலின் சுவை  குறித்து யாரோ சொல்லத் தொடங்க தரிசனக் கணக்கு மறந்துவிட்டது!