ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Friday 28 January 2011

தரையிலிட்ட மீன் - கலைஞர் கடிதம்

(இது கற்பனை தான் என்றாலும் நிஜத்தின் சாயல் சற்றே தெரிவதற்கு நான் பொறுப்பல்ல)


உடன்பிறப்பே!


Thursday 27 January 2011

அரசு டிவி - சலுகை சரக்குள்ள வரை மட்டுமே!

சமீபத்தில் ராஜபாளையம் சென்றிருந்தேன். 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை திடீரென்று எங்கள் வீட்டு வேலைக்காரி மதியம் 12 மணிக்கு வந்து "அம்மா, ரேசன் கடையில் டிவிக்கு டோக்கன் தாராகளாம்" என்றார். என் தந்தை கிளம்பிப் போனார். 15 நிமிடங்களில் திரும்பி வந்தார்.

Tuesday 25 January 2011

வந்தே மாதரம் என்போம்!


வந்தே மாதரம் என்போம் - எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம்.

நளிர்மணி நீரும் நயம்படு கனிகளும் குளிர்பூந் தென்றலும் கொழும்பொழிற் பசுமையும் வாய்ந்துநன் கிலகுவை வாழிய அன்னை!

தெண்ணில வதனிற் சிலிர்த்திடும் இரவும் தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும் புன்னகை ஒளியும் தேமொழிப் பொலிவும் வாய்ந்தனை இன்பமும் வரங்களும் நல்குவை. 

-பாரதியார்.

Friday 21 January 2011

நட்பும், கதைத்தலும், சிறு சொதப்பலும்

நாம் சில தருணங்களில் சில விஷயங்களை தவற விட்டுவிட்டு பிறகு "சொதப்பிட்டியேடா" என்று பின் தலையில் தட்டிக்கொள்வோம். அதுபோல நேற்று ஒரு நிகழ்வு நடந்தது. பதிவர் டோண்டு ராகவன் அவர்கள். பேசுவோம் என்று எதிர்பாராது இருந்த போது சட்டென்று அழைத்தார், பேசினோம். நெடுநாள் பழகிய மனிதர் போல நன்றாகப் பேசினார்.

Wednesday 19 January 2011

'சோ'காப்பர்: ஈழச் சொல்லிழுக்கு

நடந்து முடிந்த துக்ளக் ஆண்டுவிழாவில் சோ வழக்கம் போல கலக்கிவிட்டார். கருணாநிதியின் நிர்வாகத்திறம் பற்றிய அவரது கருத்து நெத்தியடி. "எல்லா வேலைகளையும் தானே செய்பவன் நிர்வாகியே அல்ல". இதற்கு அவருக்கே உரித்தான நகைச்சுவை கலந்த விளக்கம் (தோண்டுப்பா, மண்ண அள்ளுப்பா). ஜெயலலிதா பற்றிய அவரது கருத்துக்கள் வழக்கம் போல ஜெயலலிதாவின் குணாதியங்களைச் சிறப்பித்து இருந்தன.

Monday 17 January 2011

ஹிந்து தீவிரவாதமும் கடமை தவறாத சட்டமும்!

2007ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி பானிபட் நகருக்கு அருகில் ஸம்ஜௌதா எக்ஸ்பிரஸ் (Friendship Express என்ற ஆங்கில மொழியாக்கத்தை நட்பு விரைவுத் தொடர்வண்டி என்று தமிழாக்கலாம்) தொடர்வண்டியில் பயங்கரமான குண்டு வெடித்தது. 68 பேர் இறந்து போனார்கள், 50 பேர் காயமடைந்தார்கள். லஷ்கர் எ தய்யிபா, ஜய்ஷ் எ மொஹமது போன்ற அமைப்புகளும் அவர்களுடன் சேர்ந்த பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கங்களும் காரணம் என்று நம் அரசு அறிவித்தது.

Saturday 15 January 2011

இராணுவ தினம்!

இன்று இராணுவ தினம். நாம் நலம் வாழ தம் சுகம் துறந்து பாடுபடும் அந்த உன்னதச் சகோதரர்களுக்குத் தலை வணங்குகிறேன்!

வாப்பா குதிருக்குள் இல்லை

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தீவிரவாத இயக்கங்கள் அந்நாட்டு அரசின் ஆசியோடும் ISIன் துணையோடும் செயல்படுவது உலகறிந்த விஷயம். இதை பாகிஸ்தான் மறுத்து வந்துள்ளது. 26/11 மும்பை தாக்குதல் ஜமாத் உத் தாவா அமைப்பின் ஆசியோடு நடத்தப்பட்டது. நாம் அஜ்மல் கசாபை வைத்துப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறோம். அவனைத் தூக்கிலிடுங்கள் என்று மும்பை நகரமே கொதித்துப் போய்ச் சொல்லியும் மத்திய அரசு வழக்கம் போல் வெண்டைக் காயை விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி வைத்தது போல வழ வழ கொழ கொழ என்று கொள்கை பேசுகிறது.

Friday 14 January 2011

சொம்பு அடிப்பதில் உள்ள சிக்கல்

நான் முன்பு வேலை செய்த கம்பெனியில் ஒருவன் எங்கள் அணியில் வேலை செய்தான். சொம்பு என்றால் அப்படி ஒரு சொம்படிப்பான். மேனேஜர் தம்மடிக்ப் போவார், கூடவே போய் அவருக்கும் வாங்கிக் கொடுத்து இவனும் தம்மடிப்பான். தேநீரும் அப்படியே. அந்த ஆண்டு ரிவ்யூ வந்தது. வழக்கம் போல இவனுக்கு நல்லதோர் சிபாரிசு செய்துவிட்டார் மேனேஜர். அது Program Manager இடம் இருக்கிறது என்றதும் ஒரு சிலுவையை வாங்கி கயிற்றில் கோர்த்து கழுத்தில் மாட்டிக் கொண்டான்.

Tuesday 11 January 2011

சுய புராணம்

எனக்கு ஊர் இராஜபாளையம். சற்றே மீதமிருக்கும் பசுமை படர்ந்த மலைகள் சூழ்ந்த எளிய அழகிய சிறுநகரம் அது. இறக்குமதியான நவநாகரிகம் ஆங்காங்கே தலைகாட்டினாலும் பாரம்பரியப் பாசத்தை தம்மகத்தே இன்னும் கொண்டிருக்கும் மக்கள் எமர்.