ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Wednesday 17 August 2011

சமச்சீர் கல்வி - கருணாநிதிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!!

சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிலோ அங்கே சமச்சீர் கல்விக்காக வைக்கப்படா வாதங்களிலோ தவறு காண முடியாது, தமிழக அரசு சமச்சீர் கல்வி குறித்த அமலாக்க நடைமுறைகளில் சற்றே சறுக்கி விட்டது. சென்னை உயர்நீதிமன்றத்  தீர்ப்பு 2011ஆம் கல்வியாண்டிலோ அதற்குப் பிறகோ சமச்சீர்கல்வியை அமல் படுத்தவேண்டும் என்பதே. தரக் குறைபாடுகளை எடுத்துச் சொல்லி 2012ல் அமல் படுத்துகிறோம் என்று சொல்லி இருக்கலாம்.