tag:blogger.com,1999:blog-64936985270919624902024-03-12T22:19:28.663-07:00ஐயன்சொல்!அரசியல், பொருளாதாரம், நிர்வாகம், சர்வதேச உறவுகள், நாட்டு நடப்பு, குறித்த என் எண்ணங்களையும், என் அனுபவங்களையும் இங்கே பதிவேன்!Arun Ambiehttp://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.comBlogger115125tag:blogger.com,1999:blog-6493698527091962490.post-695136339399341712022-01-09T06:03:00.004-08:002022-01-09T06:03:55.442-08:00பிரதமரின் பாதுகாப்பும் தேசத்தின் எதிர்காலமும்<p>கடந்த ஜனவரி 5ஆம் நாள் காலை பஞ்சாப் சென்றார் பிரதமர் மோடி. 40000 கோடி ரூபாய்கள் பெறுமானமுள்ள மத்திய அரசின் திட்டங்களை அர்ப்பணிப்பதும், சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதும் செய்யவிருந்தார். பஞ்சாபின் படிண்டா விமானப் படைத் தளத்துக்கு விமானத்தில் வந்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய பலிதானிகள் நினைவிடம் செல்லவிருந்தார் பிரதமர். அங்கே அஞ்சலி செலுத்தியபின் ஃபெரோஸ்பூரில் பொதுக்கூட்டத்துக்குச் சென்று நலத்திட்டங்களைத் துவக்கி வைத்து மக்களிடையே உரையாற்றத் திட்டமிட்டிருந்தார். படிண்டா விமான தளத்தில் இறங்கியபோது வானிலை சரியில்லை என்று சற்று நேரம் பொறுத்து ஹெலிகாப்டர் எடுக்கலாம் என்று விமானப்படை ஆலோசனையை ஏற்றுக் காத்திருந்தார். ஆனால் தலைமைத் தளபதி ராவத்தின் விமான விபத்தை அடுத்து வானிலை முற்றிலும் சரியாகாமல் விமானப்படை அனுமதி தருவதாக இல்லை.</p><span><a name='more'></a></span><p>பஞ்சாப் டிஜிபியிடம் தொடர்பு கொண்டு பிரதமர் தரை வழியாகப் போகிறார். வழிகளைத் தயார் செய்துவிட்டுச் சொல்லுங்கள் என்று கேட்டுள்ளது பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புக் குழு. அந்தப் பகுதி ஐஜியிடம் பேசிவிட்டு சாலை வழியே செல்லலாம் என்று பஞ்சாப் டிஜிபி உறுதி சொல்லியிருக்கிறார். பிரதமர் சாலைவழியே ஹுசைனிவாலா சென்றுள்ளார். பிரதமருடன், மாநில முதல்வர், தலைமைச் செயலர், டிஜிபி என்று எவரும் வரவில்லை.</p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><span style="text-align: left;"><div class="separator" style="clear: both; text-align: center;"><span> </span><span> </span><span> </span><img border="0" data-original-height="683" data-original-width="1024" height="266" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEi0MdS7rXYqCo5EKVw_oAwOnh8Z-z9es9vBTMnnRDF2kkPGwRFOsdTgdeBtuhFEG46qD-OCanLJHJ5OeDVfJBa6VU1JSOXB09hAtrDxEdqBd6qewBQ4Yun_xvdj2afi-W5apyxJfm5mIlX4sidirhrNE--ATfdgDlDCg9sFi2i4SRHls0M9CblsMg=w400-h266" width="400" /><span style="text-align: left;"> </span></div></span></div><p></p><p>வழியில் ஒரு மேம்பாலத்தில் ஏறிய பிரதமரின் கார் அணிவகுப்பினை நிறுத்தினர் உள்ளூர் போலீஸார். எதிர்ப்பக்கம் இறங்கும் வழியை மறித்து போராட்டக்காரர்கள் வண்டிகளை நிறுத்தியுள்ளனர் என்றும் மாற்றுப்பாதை குறித்து எந்த அறிவுறுத்தலும் இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள். பிரதமர் 15 நிமிடங்கள் காத்திருந்தார். அந்த நேரத்தில் பஞ்சாப் முதல்வர், டிஜிபி உள்ளிட்டோர் பிரதமரின் பாதுகாப்புக் குழுவின் தொடர்புக்கு வரவில்லை. பல முறை முயன்றும் முதல்வரையோ, தலைமைச் செயலரையோ, டிஜிபியையோ தொடர்பு கொண்டு பேச முடியவில்லை. உள்ளூர் போலீஸார் ”வேறு வழியில்லை, போராட்டக்காரர்களை விரட்டவும் முடியாது. மாற்றுப்பாதை குறித்தும் எங்களுக்கு உத்தரவு இல்லை”என்று சொல்ல, பிரதமரின் வண்டிகள் திரும்பி படிண்டா விமானத்தளம் வந்துள்ளன.</p><p>பிரதமர் மோடி படிண்டா விமானப் படைத்தளம் வந்ததும் உடன் வந்த பஞ்சாப் போலீஸ் அதிகாரியை அழைத்து ”நான் உயிரோடு படிண்டா விமானப் படைத்தளம் வந்துவிட்டேன் என்று உங்கள் முதல்வரிடம் சொல்லி, அவருக்கு மிக்க நன்றி சொன்னேன் என்றும் சொல்லுங்கள்” என்று எள்ளல் தொனிக்கச் சொல்லிவிட்டு விமானம் ஏறியுள்ளார்.</p><p><img border="0" data-original-height="900" data-original-width="1600" height="180" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEg9g21RccDuvdE1BTRNg65FGUX7iRbtRXCBvNzeyHNvCdeacN5oNNJRiazaWJCfg1J8f1vn0pu0MrvUcgIF28t2kOJFklMa8KvDDDi2dscN8zySASp5Wtj6zOBbcjpbjEQSvAjfoq8wwtbqJO6QPYqVze1p51V9bmNZyBfCkntg5Srq_Lik3q3VWg=s320" width="320" /> <a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhlZtKPGQO4-Af7gIycM21nlKJqP7boRvKr-osw_pc4wLOs0qbB4tILQt0Ac6SkR1ekHPYiFpWPz0QwSMxSNMnmrN_1Cv9MFNGv7UnO-04pozTqtYvmlZJ3IUFJvbCGHIV58agebChh8Nm-ai-QT_C1d-u7uh4RGi2vr78_IB_gTCCpTKBdPZ2vnw=s1230" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" data-original-height="757" data-original-width="1230" height="187" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhlZtKPGQO4-Af7gIycM21nlKJqP7boRvKr-osw_pc4wLOs0qbB4tILQt0Ac6SkR1ekHPYiFpWPz0QwSMxSNMnmrN_1Cv9MFNGv7UnO-04pozTqtYvmlZJ3IUFJvbCGHIV58agebChh8Nm-ai-QT_C1d-u7uh4RGi2vr78_IB_gTCCpTKBdPZ2vnw=w304-h187" width="304" /></a></p><p>மத்திய உள்துறை அமைச்சகம் பஞ்சாப் டிஜிபியை அழைத்து நடந்த பாதுக்காப்பு அச்சுறுத்தலுக்கு உரிய விளக்கம் சொல்லுங்கள் இல்லை என்றால் நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள் என்று கண்டித்துள்ளது.</p><p>பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி “தனக்குக் கொரோனா தொற்று இருப்பதாக ஐயப்படுவதால் பிரதமரின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை” என்று அறிக்கை விட்டார். ஆனால் முகக்கவசம் அணியாமல் ஆட்கள் புடைசூழ பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். ஃபோனை எடுத்தால் கொரோனா வருமா என்றால் பதிலில்லை. இவரது அரசின் தலைமைச் செயலரும், டிஜிபியும் ஏன் எடுக்கவில்லை, அவர்களுக்கும் கொரோனா சந்தேகமா, வேறேதும் உத்தரவா என்று கேள்வி எழுகிறது. மேலும் பத்திரிகையாளரிடம் (முககவசம் அணியாமல்) பேசிய முதல்வர் சன்னி மத்திய உள்துறை அமைச்சகம் எழுப்பிய கேள்விகள் பற்றிக் கேட்ட போது “உள்துறை அமைச்சகத்தை உடைப்பில் போடுங்கள்” என்று சொல்லியிருக்கிறார்.</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEi5SLkzWusClgUkMhvqvOGc2UPZWhJ63w0gUttqJgu3nXkkjez-oyRzhv-7kDW33amGQtW3nnOAcldbet8oyZhM_3luDMb671N8Fw72HKWSEsgtbn_Cs57ovrKIpJnzkLoe3pfe5G1dpTyX-snufVKrslumo4iHcR0dvNy_0shBeG_O9yrGCejwhg=s770" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="433" data-original-width="770" height="225" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEi5SLkzWusClgUkMhvqvOGc2UPZWhJ63w0gUttqJgu3nXkkjez-oyRzhv-7kDW33amGQtW3nnOAcldbet8oyZhM_3luDMb671N8Fw72HKWSEsgtbn_Cs57ovrKIpJnzkLoe3pfe5G1dpTyX-snufVKrslumo4iHcR0dvNy_0shBeG_O9yrGCejwhg=w400-h225" width="400" /></a></div><p>“பிரதமரின் போக்குவரத்துக்கு மாற்றுப் பாதை ஏற்பாடு செய்யாமல் கோட்டை விட்டு மேம்பாலத்தின் மேலே வண்டிகளை நிறுத்தி வைத்தது பாதுகாப்புக் குறைபாடு, இது மாநில அரசின் தவறு” என்று பஞ்சாபின் துணை முதல்வர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா கூறியுள்ளார். பஞ்சாப் காங்கிரசின் தேர்தல் பிரச்சாரக்குழுத் தலைவர் சுனில் ஜாக்கர் “இது மிகவும் கண்டிக்கத்தக்க விஷயம். பிரதமரின் பாதுகாப்பில் அரசியல் செய்வது நல்லதில்லை” என்று சொல்லிவிட்டு வெளிநாடு சென்றுவிட்டார். </p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhMpqrYOKUx48qgHExrG9R0SXISjIRvgZQmSHlOBKi3w0ECudNp2oAHB_7x-qiTnGAHECzIGj9KvCFUnIqpVez3U_45IAN8gAxzu49-I_TWeIluj5nOiduvOd6Agphby5QDw5o_ICi6AzjdbP6uvCwg5wRlRUcyo7haUFiw_EzI17KAPPz8NFXeXQ=s855" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="571" data-original-width="855" height="268" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhMpqrYOKUx48qgHExrG9R0SXISjIRvgZQmSHlOBKi3w0ECudNp2oAHB_7x-qiTnGAHECzIGj9KvCFUnIqpVez3U_45IAN8gAxzu49-I_TWeIluj5nOiduvOd6Agphby5QDw5o_ICi6AzjdbP6uvCwg5wRlRUcyo7haUFiw_EzI17KAPPz8NFXeXQ=w400-h268" width="400" /></a></div><p></p><p>பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து “உழவர்கள் வருடக்கணக்கில் விவசாயச் சட்டம் வாபஸ் பெறக் காத்திருந்தார்கள். மோடி 15 நிமிடங்கள் காத்திருந்தது என்ன பெரிய சிக்கல்?” என்று கேட்டுள்ளார். மேலும் அவர் “பஞ்சாப் துணை முதல்வர் ஒரு வேலைக்கும் லாயக்கிலாத ஆள்” என்று பேசியிருக்கிறார். இதைக் கண்டித்து பஞ்சாப் துணை முதல்வர் ராஜினாமா செய்வதாகச் சொல்லியிருக்கிறார், மேலும் ”ராகுல் காந்தி ரகசிய வேலைகள் சந்திப்புகளுக்காக வெளிநாடு போயிருக்கிறார், அதற்கு அவருக்கு உரிமையில்லையா?” என்றும் பேசியிருக்கிறார் சித்து.</p><p>இந்நிலையில் 16 ஓய்வு பெற்ற டிஜிபிக்கள், 27 முன்னாள் காவல்துறை உயரதிகாரிகள் இந்தச் சம்பவம் காவல்துறை வரலாற்றில் பெரிய களங்கம் என்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும் என்றும் கேட்டுக் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். மேலும் சில ஓய்வு பெற்ற அதிகாரிகள், ராணுவத்தளபதிகள் பேசுகையில் “டிஜிபி ஒரு பாதையைச் சரி என்று ஒப்புக்கொண்டு பிரதமர் போகலாம் என்று சொன்னபிறகு அந்தப் பாதையை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் போக்குவரத்தை முறைப்படுத்தி வைப்பது மாநிலக் காவல்துறையின் கடமை. அதில் மாற்றுப் பாதை என்பது இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் காலத்தில் அல்லது எதிர்பாராத சம்பவங்கள் நேருங்காலத்தில் மட்டுமே பயன்பாட்டுக்கு வரவேண்டியது. டிஜிபி ஒப்புக்கொண்ட பாதையில் போராட்டக்காரர்களை அனுமதித்தது மாநில காவல்துறையின் தவறு” என்று கூறியிருக்கிறார்கள். மேலும் நெறிமுறைகளின் படி முதல்வரோ, தலைமைச் செயலரோ, டிஜிபியோ பிரதமருடன் ஏன் போகவில்லை என்றும் கேள்வி எழுந்துள்ளது.</p><p>மேலும் தகவல்களை அலசுகையில் பஞ்சாபின் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஜனவரி இரண்டாம் தேதி அன்று டிஜிபிக்கும், ஃபெரோஸ்பூர் ஐஜி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிய கடிதத்தில் ஒரு லட்சம் பேருக்கு மேல் பிரதமரின் கூட்டத்துக்கு வருவார்கள் என்றும் போராட்டக்காரர்கள் அங்கே போய்விட்டால் சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படும் என்றும் ஆகவே போராட்டக்காரர்களை அனுமதிக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார். இந்தக் கடிதத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? எச்சரித்தும் சட்டம் ஒழுங்கு சீர்கெட எப்படி அனுமதித்தார்கள் என்பது கேள்வி. பதில் வரவில்லை.</p><p>இந்நிலையில் பாரதிய கிசான் யூனியன் என்ற போராட்ட அமைப்பின் தலைவர் டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ”பிரதமர் வான்வழியே ஹுசைனிவாலா போய்விட்டு மாநாட்டுக்கு வருவார் என்பது தான் செய்தி. நாங்கள் மாநாட்டுப் பகுதியில் போராட்டம் செய்யக் காத்திருந்தோம். ஆனால் திடீரென்று காவல்துறையினர் பிரதமர் தரை மார்க்கமாக ஹுசைனிவாலா வருகிறார் என்று சொன்னார்கள். அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று நினைத்து பலரிடம் பேசினோம். தரைவழியே தான் போகிறார் என்று உறுதி கிடைத்த பிறகு ஹுசைனிவாலா போகும் வழியிலேயே மறித்துவிட்டோம்” என்று கூறியிருக்கிறார்.</p><p> <a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgbkqyiOED8NDF2odOhj8txS038JnsDgI1yzdr7KoaQ8VIoJGXPFAXsesMjR_sHTLEJ6Pg4E8QBMExV7xLbZ5i25qEbVX1eQzfGdHYSQUJJf8545FWV2keYJsWvTdttJADlVCejDx_BxLQBVpMKbS0sAqueMvwadG39PjswPsLPSstGB8A4EGle5g=s1606" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" data-original-height="1606" data-original-width="1080" height="320" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgbkqyiOED8NDF2odOhj8txS038JnsDgI1yzdr7KoaQ8VIoJGXPFAXsesMjR_sHTLEJ6Pg4E8QBMExV7xLbZ5i25qEbVX1eQzfGdHYSQUJJf8545FWV2keYJsWvTdttJADlVCejDx_BxLQBVpMKbS0sAqueMvwadG39PjswPsLPSstGB8A4EGle5g=s320" width="215" /></a> <a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEiSC11qcudRbdLac_Fe9_aHgVJNydjcaJMNg4mmwcnur3vnrcUyw3PtCD_MXZuA6VOvWlNJamS3j4gyE6V0iaJOjHfe9qGqaIXo2hcs4w-awQO71TdQkCjEr-V5juIyointikxjdWBJXCUagCd5k9gQm519WOVd15Wfpdp4NDsC9ku-gL7511-y3Q=s480" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" data-original-height="360" data-original-width="480" height="224" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEiSC11qcudRbdLac_Fe9_aHgVJNydjcaJMNg4mmwcnur3vnrcUyw3PtCD_MXZuA6VOvWlNJamS3j4gyE6V0iaJOjHfe9qGqaIXo2hcs4w-awQO71TdQkCjEr-V5juIyointikxjdWBJXCUagCd5k9gQm519WOVd15Wfpdp4NDsC9ku-gL7511-y3Q=w298-h224" width="298" /></a><br /><br /></p><p>நம் நாட்டில் உள்ள 0.5 கும்பல் ”திரும்பி வந்துவிட்டாரா மோடி” என்று வருந்துகிறது. ஆனாலும் 15 நிமிடங்கள் நிறுத்தி வைத்தது பெருமை என்று பீற்றிக்கொள்கிறது. பஞ்சாப் காங்கிரசின் ஐடி செல் ’மோடியின் கூட்டத்துக்கு ஆள் சேரவில்லை, அதனால் கூட்டத்துக்குப் போகாமல் பாதுகாப்பு பற்றிக் குறை பேசுகிறார்கள்” என்று கேவலமாகக் கொக்கரிக்கிறது. மோடியைப் பிடிக்காத பத்திரிகைக்காரர்கள் கூகிள் மேப்பில் வழிபார்த்துப் போகத் தெரியாமல் என்ன ஐபிஎஸ் அதிகாரிகள் இவர்கள் என்று பிரதமரின் பாதுகாப்புக் குழுவைக் கேட்கிறார்கள்.</p><p>பிரதமர் மோடி மீதான கொலைவெறித் தாக்குதல்களில் இது மூன்றாவது முயற்சி.</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhrXda0XhcBUfxXd4XhQdDEH67qiyqBJFLo7XiTJIzkzPbfCh4Gd-wIAwJZKNy7jIZW1_RPCsR-up680ugfUNoWFS7JVU3rmmR-a1x_HLR8bXmK30tvM_b2jkCFXXUkBgHCiKM7A49WbjXdv50pz9R21NSsWslQLJk_dUAytaG3oBgzpGsCTE72fg=s404" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="316" data-original-width="404" height="313" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhrXda0XhcBUfxXd4XhQdDEH67qiyqBJFLo7XiTJIzkzPbfCh4Gd-wIAwJZKNy7jIZW1_RPCsR-up680ugfUNoWFS7JVU3rmmR-a1x_HLR8bXmK30tvM_b2jkCFXXUkBgHCiKM7A49WbjXdv50pz9R21NSsWslQLJk_dUAytaG3oBgzpGsCTE72fg=w400-h313" width="400" /></a></div><p>முதல் முயற்சி ஜூன் 15, 2004 அன்று இஷ்ரத் ஜஹான் என்ற தீவிரவாதப் பெண் மூலம் தாக்கிக் கொல்ல குஜராத்தில் நடந்த முயற்சி. அதில் மோடி தப்பினார். இஷ்ரத் ஜஹானை காவல்துறை சுட்டுக் கொன்றது. அதை போலி என்கௌண்டர் என்று சொல்லி வழக்காடினர் 0.5 கும்பல். ஆனால் நீதிமன்றத்தில் நிற்கவில்லை.</p><p>இரண்டாவது முயற்சி 27 அக்டோபர் 2013 அன்று பாட்னா காந்தி மைதானத்தில் மோடியின் கூட்டத்தில் குண்டு வெடித்து மக்கள் காயமுற்றனர். ஆனால் மேடைக்கு அருகே எந்தச் சேதாரமும் ஏற்படும் முன்பே தலைவர்களைக் காவல்துறை பாதுகாப்பாகக் கூட்டிச் சென்றுவிட்டது.</p><p>மூன்றாவது இந்த ஜனவரி 5, 2022 அன்று பஞ்சாபில் பாகிஸ்தான் எல்லையில் இருந்து 10 கிமீ தொலைவில் மேம்பாலத்தின் உச்சியில் 15 நிமிடங்கள் உட்காரவைத்தது. பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலமாகவோ வேறு வகையிலோ தாக்குதல் வரலாம் என்று எதிர்பார்த்து படிண்டா விமானத்தளத்தின் தளபதி தன் அனைத்து விமானங்களையும் உத்தரவிட்ட நொடி பறக்கத் தயாராக நிறுத்தி வைத்தார். ஏதும் நடந்தால் இந்தப்பக்கமும் 10 கிமீ தூரம் தான் என்று எச்சரிக்கை தரப்பட்டது நவ்ஜோத் சிங் சித்துவின் பாய்ஜான்களுக்கு. பிரதமர் பத்திரமாகத் திரும்பிவந்தார்.</p><p>பிரதமர் மூன்று முயற்சிகளிலும் தப்பிவந்தது தெய்வச் செயல் என்று சொல்வது முற்றிலும் தகும். நடந்த சம்பவங்களை அலசிப் பார்க்கிற போது breaking India forces என்று சொல்லப்படும் இந்தியாவைத் துண்டாடும் சக்திகள் முழுமூச்சில் வேலை செய்வது புரிகிறது. அவர்களின் நோக்கம் பல்வேறு வழிகளில் வந்து கொண்டிருந்த வருமானத்துக்கு வேட்டு வைத்து நாட்டின் கடைக்கோடி ஆட்களை முன்னேற்ற முயலும் மோடி மற்றும் அவருக்குத் துணை நிற்பவர்களை அகற்றிவிடுவது. அதை நாம் முடிந்தவரையில் முயன்று தடுப்போம்.</p><p>விதிக்கை வரைந்த வினைகளைத் துதிக்கை கொண்டு துடைத்தருளும் விநாயகப் பெருமானைத் துணைவேண்டி தேசப்பணியில் முன்னேறுவோம். வந்தே மாதரம்.</p><div>(<span style="color: #2b00fe;">ஜனவரி 7, 2021 அன்றைய</span><span style="color: #ffa400;"><b> ஒரே நாடு</b></span> <span style="color: #2b00fe;">இதழில் வெளிவந்த கட்டுரை</span>)</div>Arun Ambiehttp://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6493698527091962490.post-26450345911007713602021-12-01T04:21:00.017-08:002023-02-02T01:28:24.088-08:00விவசாய சட்டங்கள் - 2020, நடைமுறைகள், நீக்கம், விளைவுகள் <div><span style="color: #cc0000;"><b><u>ஒரே நாடு - டிசம்பர் 1-15, 2021 இதழில் வெளியானது</u>:</b></span></div><div><span style="color: #cc0000;"><b><br /></b></span></div>கடந்த 2020ஆம் ஆண்டு நம் மத்திய அரசு 3 விவசாயச் சட்டங்களை இயற்றியது. இவற்றை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்த போது எதிர்க்கட்சிகள் எதிர்த்தன. எதிர்ப்பு கோஷம், கூச்சல் குழப்பம் வெளிநடப்பு என்று விவகாரம் செய்தனர். இவ்வளவுக்கும் 2019 தேர்தல் உள்ளிட்ட பல தேர்தல்களில் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என்று இதே சட்டங்களைக் கொண்டுவர இதே எதிர்க்கட்சிகள் பரிந்துரைத்து வாக்குறுதியும் கொடுத்திருந்தனர். பிறகு ஏன் எதிர்ப்பு? அரசியல் என்பது தவிர வேறு பதில் இல்லை. நல்ல சட்டங்கள் சிறப்பான திட்டங்கள் என்று இருந்த போதும் நடைமுறையில் சில ஓட்டைகளை விட்டு தங்கள் ஓட்டு வங்கி உள்ளிட்ட வங்கி விவரங்களைப் பலப்படுத்திக் கொள்வது வழக்கத்தில் இருந்தது என்றும், இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் விதம் அப்படிப்பட்ட வங்கி விவகாரங்களுக்குத் தோதாக இருக்காது என்பதுமே காரணம் என்று அரசியல் கூர்நோக்கர்கள் பலர் கருத்துச் சொல்கிறார்கள்.<div> <br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEieZuDI2NLW3RCO4QbozuG3pmgyvPlyUzBq-IhVc_m65ts6wbRvGb7Fp2YjJwY5lYiKh0mT_V_v4ZtR4Imc29r_d_gLoKTkkUQNetpcow3UGAeafHARl7gSiPOBV2_jW0LjFHPmyVqXksTBnCohVYEzhvIKCbCwCapB4kZFVNazToYdJ1nJHd3aHw/s3913/IMG_2376.HEIC" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" data-original-height="2038" data-original-width="3913" height="167" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEieZuDI2NLW3RCO4QbozuG3pmgyvPlyUzBq-IhVc_m65ts6wbRvGb7Fp2YjJwY5lYiKh0mT_V_v4ZtR4Imc29r_d_gLoKTkkUQNetpcow3UGAeafHARl7gSiPOBV2_jW0LjFHPmyVqXksTBnCohVYEzhvIKCbCwCapB4kZFVNazToYdJ1nJHd3aHw/s320/IMG_2376.HEIC" width="320" /></a><br />ஏன் என்று இந்த விவகாரத்தின் உள்ளே புகுந்து ஆராயுமுன்னர் சட்டங்கள் குறித்து சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.<br /><br />2017ஆம் ஆண்டு மத்திய அரசு மாதிரிச் சட்டங்கள் என்று பல வரைவுகளை பொதுமக்கள் பார்வைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் வைத்தது. விவசாயத்துக்கான பாராளுமன்ற நிலைக்குழு 2018-19ல் இந்த மாதிரிச் சட்டங்களில் சொல்லப்பட்ட பல்வேறு நடைமுறைகள் ஏற்கனவே பல்வேறு மாநில/மத்திய சட்டங்களில் இருந்தாலும் பலவும் அமல்படுத்தப்படவில்லை என்று தெரிவித்தது. <br /><br />மேலும் விவசாய விளைபொருள் விற்பனைக் குழுமம் என்ற பெயரில் அமைக்கப்பட்ட மண்டிகள், சந்தைகள் நேர்மையான முறையில் செயல்பட்டு நியாயவிலையை விவசாயிகளுக்கு வழங்கவில்லை என்றும் அதீதமான தரகுத் தொகை, தேவைக்கு மீறிய கட்டணங்கள், மண்டி/சந்தைகளின் ஏகபோகம் என்று விவசாயிகளுக்கு பாதிப்பே அதிகம் என்று நிலைக்குழு அறிக்கை அளித்தது.<br /><br />விவசாயச் சட்ட அமலாக்கம் குறித்து ஆராய ஜூலை 2019ல் ஏழு முதலமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. பின்னர் ஜூன் 2020ல் மத்திய அரசு விவசாயச் சட்டங்கள் மூன்றைப் பிறப்பித்து உத்தரவிட்டது. அவற்றின் விவரம் இங்கே:<br /><br />1.விவசாயப் பொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தக(விரிவாக்கம் மற்றும் எளிதாக்கல்) சட்டம் 2020<br /> அ. குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே விற்பனை என்று இருந்த நடைமுறையை மாற்றி வணிகத்தின் எல்கையை விரிவாக்குகிறது. (திருநெல்வேலி விவசாயி நல்ல விலை கிடைத்தால் நேரடியாக தில்லி வியாபாரிக்கு விற்கலாம். வட்ட, மாவட்ட, மாநில எல்லைகள், முகமைகள் கட்டுப்படுத்தாது)<br /> ஆ. விவசாய விளைபொருட்களை இணையச் சந்தையில் விலைபேசி விற்க வகை செய்கிறது.<br /> இ. மாநில அரசுகள், வரி, கட்டணம் என்று எந்தவிதமான வசூல்களும் விளைபொருள் மீதோ, இணைய வியாபாரத்தின் மீதோ செய்யத் தடை விதிக்கிறது. <br /><br />2.விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதிப்பாடு மற்றும் பண்ணை சேவைகள் ஒப்பந்தச் சட்டம், 2020<br /><br /> அ. விவசாயிகள் விளைபொருள் வாங்குவோரிடம் முன் ஒப்பந்தம் செய்து கொள்ளல் (விலை உள்பட)<br /> ஆ. இதில் ஏற்படும் சர்ச்சைகளுக்குத் தீர்வு காணவும் வரைமுறை வகுக்கப்பட்டுள்ளது.<br /><br />3.அத்தியாவசியப் பொருட்கள் (திருத்தச்) சட்டம், 2020<br /> <br />அசாதாரணமான சூழ்நிலைகளிள் தவிர பிற நேரங்களில் <br /> அ. தானியங்கள், பருப்பு வகைகள், உருளைக்கிழங்கு, வெங்காயம், எண்ணை வித்துக்கள், சமையல் எண்ணை இவற்றை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இவற்றை கிடங்குகளில் வைப்பதற்கு இருந்த வரம்புகள் நீக்கப்பட்டுள்ளது. <br /> ஆ. அசாதாரணமான விலையேற்றம் ஏற்பட்டால் கிடங்குகளில் சரக்கு வைக்கும் அளவுக்கு வரம்புகள் விதிக்கப்படும்.<br /><br />இவையே மூன்று சட்டங்கள். இவற்றை எதிர்த்து பஞ்சாப், ஹரியாணா, மேற்கு உத்தரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் போராட்டங்கள் நடந்துவருகின்றன.<br /><br />இந்த ஆண்டு ஜனவரி 12 அன்று உச்சநீதிமன்றம் இந்தச் சட்டங்களை அமல்படுத்துவதை நிறுத்தி வைத்தது. விவசாயிகளுக்கு எதிரான அம்சங்கள் என்னென்ன என்பதை ஆராய்ந்து சொல்ல ஒரு குழுவை அமைத்தது. பிப்ரவரி மாதத்தில் இந்தக் குழு பொதுமக்கள் விவசாயிகளிடம் இந்தச் சட்டங்கள் குறித்த சிக்கல்களை விளக்கிச் சொல்லக் கேட்டது.<br /><br />பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் இந்தச் சட்டங்களுக்கு மாற்றாக மாநிலச் சட்டங்களை இயற்றின. அவை ஆளுநர் ஒப்புதல் பெறக் காத்திருக்கின்றன. <br /><br />செப்டம்பர் 20 அன்று வானொலியில் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் “விவசாயிகளுக்கு நன்மை செய்ய பல கட்சிகள் வாக்குறுதி கொடுத்தார்கள். நாம் அவற்றை நல்லபடியாகச் சட்டமாக்கியிருக்கிறோம்” என்றார். இதன் மூலம் விவசாயிகளுக்கு மிகுந்த நன்மை விளையும். விவசாயம் லாபகரமாக மாறும் என்று பிரதமர் சொன்னார். கீதா கோபிநாத் எனும் ஹார்வார்டு பொருளாதார அறிஞர் (சர்வதேச நிதியத்தின் முன்னாள் பொருளாதார ஆலோசகர்) இந்தச் சட்டம் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும், இடைத்தரகர்களின் லாபத்தை மட்டுப்படுத்தும் என்று கருத்துச் சொன்னார். மேலும் தில்லி பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், கோரக்பூர் பல்கலைக்கழகம், ராஜஸ்தான் பல்கலைக்கழகம், குஜராத் பல்கலைக்கழகம் என்று பல பல்கலைக்கழகங்களின் 866 பொருளாதார, விவசாயத்துறைப் பேராசிரியர்கள் இந்தச் சட்டம் விவசாயிகளுக்கு நல்லது என்று கருத்துக் கூறி அறிக்கை தந்தனர்.<br /><br />அதே நேரம் கௌஷிக் பாசு எனும் உலகவங்கி முன்னாள் பொருளாதார ஆலோசகர் இது தவறான சட்டம், விவசாயிகளுக்கு எதிரானது என்றார். மேலும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஐஐடி சென்னை, ஐஐடி மும்பை, ஐஐடி கான்பூர், கொல்கத்தாவிலுள்ளா இந்தியப் புள்ளியியல் நிறுவனம், லண்டன் சினிமா பள்ளி, தென்னாப்பிரிக்க ஜோஹானிஸ்பர்க் பல்கலைக்கழகம், ஐஐஎம் கொல்கத்தா, பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம், நார்வேயிலுள்ள ஓஸ்லோ பல்கலைக்கழகம், அமெரிக்க மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகம், பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகம் இவற்றில் இருந்து 413 பேராசிரியர்கள் சட்டங்களுக்கு எதிராகக் கருத்துக்கூறி அறிக்கை அளித்துள்ளனர். <br /><br />ஷேத்காரி சங்கடனா எனும் மராட்டிய விவசாயிகள் அமைப்பு இந்தச் சட்டம் அவசியமானது என்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை விவசாயிகளை பலவீனமானவர்களாகவே ஆக்குகிறது என்றும் தீர்மானம் நிறைவேற்றியது. <br /><br />பாரதிய கிசான் சங்கம் எனும் அமைப்பு பாராளுமன்ற நிலைக்குழு இந்தச் சட்டங்களை ஆராய வேண்டும் என்றும் அவசரமாக இந்தச் சட்டங்களை நிறைவேற்றியது தவறு என்றும் சொன்னது. குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டபூர்வமாக்கவேண்டும் என்று பல விவசாய அமைப்புகள் கூறின. மத்திய விவசாய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் முந்தைய சட்டங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலை சேர்க்கப்பட்டதில்லை ஆகவே புதிய சட்டத்தில் சேர்க்கவேண்டியதில்லை என்று சொன்னார். பல்வேறு அமைப்புகள் விவசாயிகளுக்குச் சட்டத்தை விளக்கவும், விவாதிக்கவும் அழைப்பு விடுத்தன. பலனில்லை.<br /><br />உச்சநீதிமன்றக் கமிட்டியில் போய்க் கருத்துச் சொல்ல போராட்டக்காரர்கள் மறுத்தனர். சட்டங்களைத் திரும்பப் பெற்றால் மட்டுமே போராட்டத்தை நிறுத்துவோம் என்றனர். உச்சநீதிமன்றம் செய்வதறியாது திகைத்து நின்றது.<br /><br />போராட்டக்காரர்களுக்கு உணவும், இருப்பிடமும் போராட்டம் நடக்கும் இடத்திலேயே அமைத்துக் கொடுக்க கனடா, ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் வாழும் சீக்கியர் அமைப்புகள் பண உதவி செய்தன. இதில் அரசு சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுத்தது. வெளிநாட்டு நிதி அளித்தல்/பெறுதல் சட்டங்களின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் கொடுத்த நிதி தடுக்கப்பட்டது.<br /><br />ஆனால் பாகிஸ்தானின் உளவு அமைப்பின் ஆதரவோடு இந்தப் போராட்டங்களில் கலகம் செய்ய காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் முற்பட்டன என்று தகவல்கள் வந்தன. தில்லியில் கலவரம், தேசியக்கொடி அவமதிப்பு, போராட்ட களத்தில் கொலைகள் என்று அரசு இரும்புக்கரம் நீட்டத் தேவையான அத்தனை வேலைகளும் நடந்தன. ஆனாலும் அரசு அமைதிகாத்து போராட்டக்காரர்களின் பின்புலங்களை ஆராய்ந்து தேசப் பாதுகாப்புக்கு பங்கம் வராமலிருக்க நடவடிக்கைகளை மேற்கொண்டது. <br /><br />இந்நிலையில் சில உள்நாட்டு நிகழ்வுகள் மத்திய அரசின் கவனத்தையும் தேசப்பாதுகாப்பு ஆலோசனை மையத்தின் கவனத்தையும் ஈர்த்தன. பஞ்சாப் மாநிலத்தில் போதைப் பொருள் நடமாட்டம் குறித்த தகவல்கள், எல்லை கடந்து ஆளில்லா குறு விமானங்கள் (drone) மூலமாக ஆயுதங்கள் கடத்தும் முயற்சிகள் (முறியடிக்கப்பட்டன என்பது நமது காவல்துறை மற்றும் உளவு அமைப்புகளின் சாதனை), போராட்டத்தில் கலவரம் செய்ய ஆள் அனுப்பும் பாகிஸ்தான் முயற்சிகள், ஆஃப்கனிஸ்தானில் தாலிபான்களின் ஆதிக்கமும் அவர்களின் நோக்கமும் என்று பல முனைகளில் எல்லைப் பகுதியில் அச்சுறுத்தல்கள் எழுந்தன.<br /><br />பஞ்சாபின் அப்போதைய முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று சில விஷயங்கள் பற்றிப் பேசினார். அவருக்கு எதிர்ப்பு எழுந்தது. எல்லைக்கோட்டுக்கு இருபுறங்களில் எப்புறம் இருந்தாலும் பஞ்சாபியர்கள் சகோதரர்கள் என்று பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவஜோத் சிங் சித்து பேசினார். அதன் பிறகு மத்திய உள்துறை அமைச்சர், தேசப் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரைச் சந்தித்தார் அமரிந்தர் சிங், அப்போது பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டு முக்கியமாக எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகாரம் அதிகரிக்கப்பட்டது. <br /><br />மேலும் அமரிந்தர் சிங்குக்கு நெருக்கமான சிலர் பேசுவதிலும் எழுதுவதிலும் இருந்து நாம் அவதானிப்பது ஒரு விஷயம். இந்த விவசாயிகள் போராட்டம் என்பதை முன்னிலையில் வைத்து அமெரிக்காவில் ட்ரம்ப் ஆட்சியின் கடைசிக் கட்டத்தில் நடந்தது போல காவல்துறை அல்லது ராணுவ நடவடிக்கைக்குத் தூண்டி அதைப் பெரிய போராட்டமாக்கி தங்களுக்கு இணக்கமானவர்களை அதிகாரத்தில் அமர்த்த சில சர்வதேச சக்திகள் முயல்கின்றன. அரசு 1984ல் பொற்கோவிலுக்கு ராணுவத்தை அனுப்பியது போல ஒரு நடவடிக்கை எடுத்தால் காலிஸ்தான் பிரிப்பது சுலபம், தேசத்தை பலவீனப்படுத்துவது எளிது என்று கணக்குகள் உள்ளன. <br /><br />விவசாயப் போராட்டத்துக்கு பஞ்சாப் ஹரியாணா மேற்கு உத்தரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் இருந்து கட்டாயமாக வீட்டுக்கு ஒருவர் என்று வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரும் முன்னாள் ராணுவ வீரர்கள் அல்லது இந்நாள் ராணுவ வீரர்களின் தந்தை, அண்ணன் தம்பி போன்ற நெருங்கிய உறவினர்கள். போராட்டக்களத்தில் ஏதும் அசம்பாவிதம் நிகழ்ந்து ராணுவ வீரர்களின் நெருங்கிய உறவுகளுக்கு ஏதும் நிகழ்ந்தால் அவர்களை உணர்வுப்பூர்வமாகப் பாதிக்கும். உள்நாட்டிலும் கலவரத்தை அடக்க சிறப்புப் படைகள் ராணுவம் என்று வரவேண்டிய நிலை வந்தால் மக்களிடையே அமைதியின்மை ஏற்பட்டு அரசு மீது வெறுப்பை உருவாக்கலாம். இத்தகைய திட்டங்களைக் கண்டறிந்து உளவுத்துறையும் பஞ்சாபின் முதல்வராக இருந்தவரும் மத்திய அரசிடம் தெரிவித்தனர்.<br /><br />இதை தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஷரத் பவாரின் கருத்தோடு பொருத்திப் பார்க்கவேண்டும். “பஞ்சாபை தொந்தரவு செய்து இந்திராகாந்தி உயிரை இழந்தார். பஞ்சாபைத் தொட்டால் மோடிக்கும் அதுவே கதி.” என்றார் பவார். அவர் சொன்னதன் நோக்கம் பிரதமரை மிரட்டவா அல்லது எச்சரிக்கவா என்பது விவாதத்துக்குரியது. ஏனென்றால் பவார் இரட்டைக் குதிரைகளில் அரசியல் சவாரி செய்பவர். அவருக்கு பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் அரசியல்வாதிகள், செல்வாக்கான மனிதர்களுடன் தொடர்பில் இருப்பவர். தகவல் கசிந்திருக்க வாய்ப்புள்ளது என்பதே உளவுத்துரைகள் சொல்லும் கோணம். <br /><br />இப்படி ஒரு கலவரத்தை நடத்தி நாட்டின் அமைதியைச் சீர்குலைத்துவிட இந்த விவசாயச் சட்டங்களைப் பயன்படுத்த எதிரிகள் விழைகிறார்கள் என்ற தகவல் பிரதமர் மோடிக்கு ஆதாரங்களுடன் தரப்பட்டன என்றும் அதன் மீதான் ஆலோசனைகள், கருத்துப் பரிமாற்றங்கள், கலந்தாய்வுகள் என்று பலகட்டப் பேச்சுக்களுக்குப் பிறகே பிரதமர் நவம்பர் 20 அன்று குருநானக் ஜெயந்தி அன்று மக்களுக்கு உரையாற்றும் போது இந்தச் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.<br /><br />இந்தச் சட்டங்களை வைத்துக் கொண்டு தேசத்துக்கு எதிராகச் செயல்பாட்டில் இறங்கத் தீர்மானித்திருந்த எதிரிகளின் கைகளில் இருந்து ஆயுதங்களைப் பிடுங்கிவிட்டார். ஆனால் மக்களிடம் பேசும் போது ”விவசாயிகளின் நன்மை கருதியே இந்தச் சட்டங்களை இயற்றினோம். ஆனால் சில விவசாயிகளுக்கு எங்களால் நன்மைகளைப் புரியவைக்க இயலவில்லை. அது எங்கள் தவத்தில் ஏற்பட்ட குறைபாடாக நான் கொள்கிறேன்” என்றார். மேலும் கூறுகையில் “இந்தச் சட்டங்கள் குறித்துச் சீராய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டும். விவசாயிகள், சட்ட வல்லுநர்கள், அரசு அதிகாரிகள் என்று பல தரப்பினரும் இதில் பங்கேற்று அனைவருக்கும் நன்மை தரும் வகையில் சட்டங்களை மீண்டும் இயற்றி நடைமுறைப்படுத்துவோம். ஆகவே விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு வீடுகளுக்குச் செல்லுங்கள்” என்று சொன்னார்.<br /><br />ஆனால், போராட்டக்காரர்கள் இப்போது பிரதமர் சொல்வதை ஏற்கமாட்டோம். நாங்கள் திட்டமிட்டபடி ஊர்வலம் பேரணி என்று போவோம் என்கிறார்கள். சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டாலும் புதிய கோரிக்கைகளை வைத்துப் போராட்டத்தைத் தொடர முனைகின்றனர். தில்லியைச் சுற்றிலும் சாலைகளில் நடைபெறும் போராட்டங்கள் அப்படியே தொடரும் என்கிறார்கள். பொதுமக்கள் பாதிக்கப்படுவது பற்றிக் கவலையில்லை. சட்டமன்றத் தேர்தல் நடக்கும் இடங்களில் ஊர்வலம் பேரணி என்று நடத்தி போராட்டத்தின் வேகம் குறையாது பார்த்துக் கொள்வோம் என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.<br /><br />விளைச்சலுக்கு ஆகும் மொத்தச் செலவுகளையும் உள்ளடக்கிய குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வ உரிமையாக்கித் தரவேண்டும் என்று புதிய கோரிக்கை வைக்கிறார்கள். அந்த குறைந்தபட்ச ஆதரவு விலை தற்போதுள்ள 23 பயிர்களுக்கு மட்டும் இல்லாமல் எந்தப் பயிர் விளைவித்தாலும் அரசு குறைந்தபட்ச ஆதரவு விலை தரவேண்டும் என்பது அவர்கள் வைத்துள்ள புதிய கோரிக்கைகளில் ஒன்று. அத்துடன் புதிய மின்சாரச் சட்டத்தையும் வாபஸ் பெறச் சொல்கிறார்கள் போராட்டக்காரர்கள். இந்தச் சட்டம் இலவச மின்சாரத்தை அளவீடு செய்து வழங்க வகை செய்கிறது. அளவீடு செய்து வழங்கும் மின்சாரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை அடுத்ததாகச் செய்வார்கள் என்று அஞ்சுகிறோம் ஆகவே சட்டம் கூடாது என்று சொல்கிறார்கள் போராட்டக்காரர்கள். <br /><br />இப்படி ஒவ்வொரு கோரிக்கையாக வைத்துப் போராட்டத்தைத் தொடர்வது நல்லதல்ல என்று பல விவசாய அமைப்புகள் சொல்கின்றன. ஆனாலும் ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் எனும் அமைப்பினர் போராட்டம் இந்தியாவில் மட்டுமல்ல, கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, நெதர்லாந்து, போன்ற நாடுகளிலும் நடத்தப்படும் என்றும் தங்கள் கோரிக்கைகளை ஏற்காவிட்டால் பாஜகவை எதிர்த்து வரும் சட்டமன்றத் தேர்தல்களில் பிரச்சாரம் செய்யப் போவதாகவும் சொல்கிறார்கள். <br /><br /><p>சட்டங்கள் வாபஸ் ஆன பிறகு வந்திருக்கும் தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட அறிவிப்புகளால் போராட்டம் விவசாயச் சட்டங்களுக்கு எதிரானதா அல்லது பாஜகவுக்கு எதிரானதா என்ற கேள்வியை பொதுமக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. முள்ளில் பட்டுத்துணி விழுந்திருக்கிறது. துணி கிழிந்துவிடாமல் பொறுமையாக மீட்டெடுக்கவேண்டும் என்ற அரசின் முயற்சிக்கு தேசப்பற்றுக் கொண்ட அனைவரும் துணைநிற்பதே இப்போது செய்யத்தக்கது. வந்தே மாதரம். </p><span><a name='more'></a></span><span><!--more--></span><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><br /></div>Arun Ambiehttp://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6493698527091962490.post-68823291158754286872021-11-15T11:11:00.000-08:002023-02-03T11:19:11.382-08:00திரும்பும் வரலாறு - ஏர் இந்தியா - மீண்டும் டாடா நிறுவனத்திடம்...<p> 1,57,339 கோடி ரூபாய்கள். எங்கோ கேட்டது போலவே இருக்கும். இது அது இல்லை. கடந்த பத்தாண்டுகளில் ஏர் இந்தியா நிறுவனத்திற்காக அரசு செலவு செய்த பணம். இந்த ஆண்டு டிசம்பரில் டாடா நிறுவனத்துக்கு கையளித்துவிட்டு உட்கார்ந்து கணக்குப் பார்த்தால் தோராயமாக இவ்வளவு நட்டக்கணக்கு வரும் என்று நிறுவனத்தையும் கணக்கு வழக்குகளையும் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். 2000ஆவது ஆண்டில் இருந்து தனியாரிடம் கொடுக்கலாம் என்று அரசு முயன்று முடியாது போய் லாபம் நட்டம் என்று மாறி மாறி வந்துகொண்டிருந்த நிறுவனம் ஏர் இந்தியா.</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3rZpm-jZDNRiiRDzTE2JvmS-oRZaGE8PSVLcY4Wyg07beSPEbjG7fbop-Kl1QpmpXX1LI2KCQxLxu_osxUyPElmVESOXzah2GxpIGK25Dusz1ZKrufz_FvMm7DSW5DxAhUOm_mhAbuwIhJQeN5VIoeEOSo2YGavJqEZB-zpb42-oa70_vyEWLwQ/s3757/IMG_2379.HEIC" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1107" data-original-width="3757" height="189" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3rZpm-jZDNRiiRDzTE2JvmS-oRZaGE8PSVLcY4Wyg07beSPEbjG7fbop-Kl1QpmpXX1LI2KCQxLxu_osxUyPElmVESOXzah2GxpIGK25Dusz1ZKrufz_FvMm7DSW5DxAhUOm_mhAbuwIhJQeN5VIoeEOSo2YGavJqEZB-zpb42-oa70_vyEWLwQ/w640-h189/IMG_2379.HEIC" width="640" /></a></div><p>கொஞ்சம் சரித்திரம் பார்ப்போம். </p><span><a name='more'></a></span><p>1932ல் பிரித்தானிய அரசுக்கு கராச்சி, பம்பாய், மெட்ராஸ் உள்ளிட்ட மாகாணத் தலைநகரங்களுக்குத் தபால்களும் சிப்பங்களும் (தமிழில் பார்சல் என்று சொல்லலாம். நல்ல தமிழில் சிப்பம்) எடுத்துப் போக ஆள் தேவை ஏற்பட்டது, விரைவாகப் போகவர இருக்கவேண்டும், எனவே விமானம் வாங்கி ஓட்ட முடிந்தவர்கள் விண்ணப்பிக்கவும் என்று சொன்னார்கள். ஜேஆர்டி டாடா களமிறங்கினார். இங்கிலாந்தில் இருந்து இரண்டு ஒற்றை இஞ்சின் விமானங்களை வாங்கிவந்தார். இவர் ஒன்றையும் அங்கிருந்த நண்பர் நெவில் வின்செண்ட் என்பவர் இன்னொரு விமானத்தையும் ஓட்டினார்கள். ஆங்கிலேய அரசு டாடாவுக்கு தபால் கொண்டு செல்லும் ஒப்பந்தத்தைக் கொடுத்தது. டாடா ஏர் சர்வீசஸ் என்பது கம்பெனியின் பெயர். வாரம் ஒருமுறை கராச்சி, பம்பாய், மெட்ராஸ், அகமதாபாத் ஆகிய ஊர்களுக்குத் தில்லி, கல்கத்தாவில் இருந்து தபால் கொண்டு போக வேண்டும், அங்கிருந்து இங்கே கொண்டு வரவேண்டும் என்பது ஒப்பந்தம். </p><p><br /></p><p>சிறப்பாக ஓட்டிக் காட்டிய டாடா வியாபாரத்தை விரிவுபடுத்தினார். 1938ல் ஆறு பேர் அமர்ந்து போகும் விமானம் ஒன்றை வாங்கி பம்பாய்-திருவனந்தபுரம் வான்வழியில் ஓட்டினார். டாடா ஏர்லைன்ஸ் என்று பெயரிட்டார். கொழும்பு-தில்லி வழித்தடத்திலும் பறந்தன டாடா விமானங்கள். 1939ல் இரண்டாம் உலகப் போர் வந்தது. அப்போது விமானம் பழுபார்ப்பது உள்ளிட்ட ஒப்பந்தங்களை விமானப் படையிடம் பெற்றார். அது தவிர அகதிகள் மீட்பு, காயமடைந்தோரை மீட்பது, உணவு உடை என்று ராணுவத்துக்கு கொண்டு போவது என்று சவாலான அதே நேரம் ஆபத்து நிறைந்த வேலைகளைச் செய்து கொடுத்தார். பயணிகள் விமானப் போக்குவரத்து நின்று போனாலும் வியாபாரம் ஓடியது, 1932ல் 60000ரூபாய் லாபம் ஈட்டினார். 1939ல் 6 லட்சமாக உயர்ந்தது லாபம். </p><p><br /></p><p>போர் முடிந்ததும் 1946ல் ஏர் இந்தியா என்ற பெயரில் கம்பெனியைப் பதிவு செய்தார். விடுதலைக்குப் பிறகு 1948ல் 49% பங்குகளை இந்திய அரசு எடுத்துக் கொண்டது. 1948லேயே லாக்ஹீட் கம்பெனியின் விமானத்தை வாங்கி லண்டன் முதல் பம்பாய் வரை பயணிகள் போக்குவரத்துக்கு ஓட்டினார். விமானத்துக்கு மலபார் இளவரசி என்று பெயரிட்டார் டாடா. 1953ல் விமானக் கம்பெனிகள் சட்டம் மூலமாக பெரும்பான்மைப் பங்குகள் அரசின் வசம் வந்தது. கம்பெனி ஏர் இந்தியா இண்டர்நேஷனல் என்று பெயர் மாற்றப்பட்டது. உள்நாட்டு விமானப் போக்குவரத்து இந்தியன் ஏர்லைன்ஸ் என்ற பெயரில் செயல்படத் தொடங்கியது. ஆனால் டாடா நிர்வாகம் செய்ய ஒப்புக்கொண்டார் அன்றைய பிரதமர் நேரு. </p><p><br /></p><p>1960ல் போயிங் விமானங்களை வாங்கி ஓட்டத் தொடங்கியது ஏர் இந்தியா. முழுவதும் ஜெட் விமானங்கள் என்ற இலக்கோடு பல போயிங் விமானங்கள் வாங்கப்பட்டன. கென்யா, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கு விமானப் போக்குவரத்து நடத்திய ஏர் இந்தியா, அமெரிக்காவுக்கு லண்டனில் விமானம் மாற்றிக் கொடுத்து பயணித்தது. வானத்தில் ஓர் அரண்மனை என்று ஆடம்பர விமானப் பயணமும் நடத்திக் காட்டினார் டாடா. சேவைக்குறைபாடுகளைக் கண்டறிந்து உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தார். பலமுறை டாடாவுக்கும் விமானப் போக்குவரத்து அமைச்சருக்கும் முட்டிக் கொண்டது. ஆனாலும் வண்டி லாபத்தில் பறந்தது. </p><p><br /></p><p>1977-78ல் ஏர் இந்தியா வரலாற்றில் அதிக லாபம் ஈட்டியது. மொரார்ஜி தேசாயைச் சந்தித்த டாடா இதுபற்றிப் பெருமையாகச் சொன்னார். ஆனால் சந்திப்புக்குப் பிறகு ரேடியோவில் டாடாவை மொரார்ஜி நீக்கிவிட்ட செய்தி வந்தது. அவருக்கு பதிலாக நியமிக்கப்பட்ட விமானப்படை அதிகாரி பிசி லால் என்பவர் அலுவலகம் வந்து “நான் தான் புது சேர்மன். பிரதமர் உங்களை நீக்கிவிட்டார்.” என்று சொன்னார். இதை அவரே என்னிடம் சொல்லியிருக்கலாம் என்று வருத்தப்பட்டார் ஜேஆர்டி டாடா. 1980ல் இந்திராகாந்தி ஆட்சிக்கு வந்தவுடன் ஏர் இந்தியா இயக்குநர் குழுவில் டாடாவை மீண்டும் நியமித்தார். ஆனால் தலைமைக்கு அதன் பிறகு டாடா வரவில்லை. இதில் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம் ஏர் இந்தியா நல்ல லாபம் ஈட்டிய காலம் ஒன்று இருந்தது என்பதே. </p><p><br /></p><p>நல்ல லாபத்தில் ஓடிக்கொண்டிருந்தது ஏர் இந்தியா. ஆனால் பல தொழிலாளர் கொள்கைகள், அரசின் சில நடைமுறைகள் வியாபாரத்துக்கு உதவாது என்று டாடா சொல்லிக் கொண்டே இருந்தார். அவர் பேச்சு அம்பலம் ஏறவில்லை. 1986 வரை ஏர் இந்தியா இயக்குநராக இருந்த டாடா தன் மருமகன் ரத்தன் டாடாவை ராஜீவ் காந்தி ஏர் இந்தியா தலைவராக்கிய போது போர்டில் இருந்து விலகினார். புது சேர்மன் சுதந்திரமாகச் செயல்படட்டும் என்று சொன்னார். 1989ல் விபி சிங் அரசு ரத்தன் டாடாவை நீக்கியது. </p><p><br /></p><p>1991ல் பொருளாதார தாராளமயமாக்கல் வந்தது. நரசிம்மராவ் அரசு தனியார் முதலீட்டை ஊக்குவித்தது. ஏர் இந்தியாவில் பங்கு முதலீட்டிற்கு அனுமதி கேட்டது டாடா குழுமம். கிடைக்கவில்லை. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 40% டாடா 60% என்று பங்குபோட்டுக் கொண்டு புதிய விமானக் கம்பெனிக்கு விண்ணப்பித்தார் ரத்தன் டாடா. ஆனால் புதிதாகக் களமிறங்கியிருந்த NEPC, Jet, East-West, Air-Sahara உள்ளிட்ட கம்பெனிகள் வெளிநாட்டு முதலீடு 25%க்கு அதிகமாக இருப்பதை ஆட்சேபித்து அரசிடம் முறையிட்டன. டாடா - சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூட்டுக் கம்பெனிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஏர் இந்தியாவில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. கடும் வியாபாரப் போட்டிக்குத் தயாராக வேண்டியிருந்தாலும் அரசு நிறுவனம் என்பதால் சில நடைமுறைச் சிக்கல்கள் முட்டுக்கட்டைகளாக இருந்தன. ஆனாலும் 2006 வரை பழுதற்ற லாபத்திலே பறந்து கொண்டிருந்தது ஏர் இந்தியா. </p><p><br /></p><p>2005ல் இந்தியன் ஏர்லைன்ஸ், அல்லையன்ஸ் ஏர் உள்ளிட்ட சில விமானக் கம்பெனிகள் ஏர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன. ஒரே கம்பெனி உள்ளுர் வெளிநாட்டு விமானப் போக்குவரத்தை நிர்வகிக்கும் என்று சொல்லப்பட்டது. 2005-06ல் இரண்டு கம்பெனிகளுக்கும் சேர்த்து 111 போயிங் விமானங்களை 70000 கோடி ரூபாய்க்கு வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது. 70000 கோடி உபரி லாபம் உள்ளதா இல்லையெனில் இந்தப் பணம் எங்கிருந்து வரும் என்ற கேள்விக்கு கடனுக்கு வாங்குகிறோம், போக்குவரத்தை அதிகப்படுத்தி அந்த வருவாயில் கடனை அடைப்போம் என்றது அரசு. வருவாயில் அடைப்பதா லாபத்தைக் கொண்டு கடனை அடைப்பதா என்ற கேள்விக்கு சரியாக பதில் இல்லை. </p><p><br /></p><p>ஏன் அவசரமாக 111 விமானங்கள் வாங்க வேண்டும் என்ற கேள்விக்கு உலகம் முழுதும் பறக்கப் போகிறோம் என்றது அரசு. ஆனால் 2005-06ல் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இந்தியா வந்த போது அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் சில கட்டுப்பாடுகளில் இருந்து விலக்குப் பெற்றுத் தருவதாகவும் அதற்கு பதிலாக அமெரிக்க நிறுவனங்களுடன் இந்தியா பெரிய அள்வில் வியாபாரம் செய்ய வேண்டுமென்றும் பேசப்பட்டு அதன்படி 111 விமானங்கள் அமெரிக்க போயிங் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் தரப்பட்டது என்பது அன்றைய செய்தி.</p><p><br /></p><p>இந்த சம்பவங்களுக்குப் பிறகு நட்டங்களில் மூழ்கத் தொடங்கியது ஏர் இந்தியா. லாபகரமான பயணத் தடங்கள் உள்நாட்டு வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்குத் தரப்பட்டு லாபம் குறைந்த வழித்தடங்கள் ஏர் இந்தியாவுக்கு வழங்கப்பட்டன. சேவைத் தரம் என்பதே இல்லாத நிலைக்கு வந்தது ஏர் இந்தியா. பல்வேறு அவசியமற்ற செலவுகள் செய்யப்பட்டன. 2010ல் 38,423 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டது ஏர் இந்தியாவுக்கு. இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை ஏர் இந்தியாவுடன் தவறான நேரத்தில் இணைத்ததும், கடன் வாங்கி 68 விமானங்கள் ஏர் இந்தியாவுக்கும் 43 விமானங்கள் இந்தியன் ஏர்லைன்ஸுக்கும் என்று 111 புதிய விமானங்களை 70,000 கோடி ரூபாய்க்கு வாங்க முனைந்து பணம் கொடுத்ததும், வியாபார வரவில் கடனை அடைப்போம் என்று முடிவெடுத்ததுமே நட்டத்துக்கு மூலகாரணம் என்று 2011ல் நாட்டின் தலைமைக் கணக்காயர் (CAG)கண்டித்தார், </p><p><br /></p><p>ஏர் இந்தியாவிடம் சொத்து இருக்கிறது என்று பெயரே தவிர அந்தச் சொத்துக்களால் பயனேதும் இல்லாத நிலை. செலவுகள் தொடர்ந்து லாபம் குறைந்து சீர்செய்ய சரியான நடவடிக்கைகள் இன்றி நிறுவனத்தின் வீழ்ச்சி வேகம் பிடித்தது. 2000 கோடி ரூபாய் மதிப்பில் ஓவியங்கள் இருக்கின்றன என்று கணக்குப் புத்தகத்தில் உள்ளது. ஆனால் அவற்றை ஏலத்தில் விட்டால் எடுக்க ஆளில்லை. 8000 கோடிக்கு நிலம் உள்ளது, 4000 கோடிக்கு கட்டிடங்கள் உள்ளன என்று கணக்குச் சொன்னாலும் சந்தை விலை மிகவும் குறைந்துவிட்டது. </p><p><br /></p><p>ஏர் இந்தியா பணியாளர்களுக்கு வீடுகள் கட்டித்தரப்பட்டது. இன்று பல ஆண்டுகள் கழித்து முக்கிய நகரங்களில் நிலத்தின் விலைக்கு மட்டுமே வியாபாரம் பேசும் நிலை. தில்லியில் 2.5 ஏக்கர் நிலத்தில் அலுவலகக் கட்டிடமும், சென்னையில் 3 ஏக்கரில் உள்ள அலுவலகக் கட்டிடமும், மும்பை குடியிருப்புகளும் 200-250 கோடி ரூபாய் விலை போகும் என்று மதிப்பிடுகிறது அரசு. ஆனால் 200 அதிகம் என்கிறார்கள் வியாபாரிகள். தில்லி பணியாளர் குடியிருப்பை 2700 கோடி என்று மதிப்பிட்டுள்ளது ஏர் இந்தியா. ஆனால் அந்த விலை போகாது என்கிறார்கள் வியாபாரம் பேசுபவர்கள். </p><p><br /></p><p>2015ல் ஏர் இந்தியாவின் சில நிலபுலன்களை விற்க முடிவெடுத்து ஏலம் விட்டது அரசு. 2000 கோடி மதிப்பு என்று அரசு சொன்ன சொத்துக்களை 780 கோடிக்கு மேல் யாரும் கேட்கவில்லை என்பதால் ஏலம் ரத்தானது. தரை விரிப்புகள், திரைச்சீலைகள், கம்பளங்கள், ஆஷ்டிரேக்கள், இவற்றை மறுமதிப்பீடு செய்து இவற்றோடு ஓவியங்களையும் சேர்த்து 2000 கோடி ருபாய்கள் என்றாலும் வாங்க ஆளில்லை. கொஞ்சம் கூர்ந்து பார்த்தால் 1960-70களில் ஏர் இந்தியாவுக்கு ஓவியம் வரைந்து கொடுத்ததால் மட்டுமே பிரபல ஓவியர் என்று அறியப்பட்டார் ஒரு பெண்மணி, சந்தையில் இவரது ஓவியத்துக்குப் பெரிய ஈர்ப்பில்லை. காரணம் சோகம், வறட்சி இவற்றையே ஓவியங்களாக இவர் வரைவார். இந்தச் சொத்துக்களால் வணிகப் பயன் என்பது ஏதுமில்லை. ஓவியங்கள் பல சந்தை விலையை விட அதிக விலைக்கு வாங்கப்பட்டவை அல்லது மறு விற்பனைக்கு வாய்ப்பற்றவை என்று தெரிந்தும் வாங்கப்பட்டவை என்கிறார்கள் ஆடிட்டர்கள். மற்ற பொருட்கள் வாங்கியது நிர்வாக அதிகாரிகளின் தனிப்பட்ட முடிவு என்பதால் சொல்வதற்கு ஏதுமில்லை. லாபம் இருந்த காலத்தில் அள்ளிச் செய்த செலவு. இப்போது கையைக் கடிக்கிறது. </p><p><br /></p><p>பல தனியார் மயமாக்கும் முன்னெடுப்புகளுக்குப் பிறகு 2017ல் தொடங்கி தற்போது முடிவடைந்துள்ள ஏர் இந்தியா பரிவர்த்தனையில் 18000 கோடி ரூபாய்க்கு டாடா நிறுவனம் ஏர் இந்தியாவை வாங்கிக் கொள்ள முடிவானது. இதில் ஏர் இந்தியா நிறுவனத்தையும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தையும் முழுமையாகவும், ஏர் இந்தியா விமான நிலையக் களப்பணி நிறுவனமான (ஏர் இந்தியா சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இரண்டின் கூட்டு நிறுவனம்) AISATSல் 50% பங்குகளும் டாடா பெறுகிறது. இந்த பரிவர்த்தனை முடிந்தவுடன் அரசுக்கு ஏர் இந்தியாவின் நிலபுலன்கள், அத்தியாவசியமற்ற பிற சொத்துக்கள் மற்றும் 46,262 கோடி ரூபாய் கடனும் இருக்கும். இதை Air India Assets Holding Ltd என்ற நிறுவனத்துக்கு அரசு மாற்றிவிடும். மொத்தக் கடனான 61,562 கோடி ரூபாய்களில் டாடா நிறுவனம் 15,300 கோடிக்குப் பொறுப்பேற்கும். மீதமுள்ள 46,262 கோடி ரூபாய்கள் அரசு பார்த்துக் கொள்ளவேண்டும். இந்த ஆண்டு டிசம்பரில் டாடாவிடம் ஒப்படைக்கும் வரையில் ஏதேனும் நட்டமோ, கடன்களோ சேர்ந்தால் அரசே பொறுப்பேற்க வேண்டும் என்பது ஒப்பந்தத்தின் ஷரத்து. ஏர் இந்தியா வாங்கிய கடன்கள், கைமாற்றாகப் பெறப்பட்ட தொகைகள், இவற்றுக்கான வட்டி ஆகிய விவகாரங்கள் அரசின் பொறுப்பு. </p><p><br /></p><p>ஏர் இந்தியாவின் தேவைக்கதிகமான நிலபுலன்கள், வருமானத்துக்கு லாயக்கற்ற சொத்துக்களை விற்று நட்டத்தை ஈடுகட்டிக் கொள்ளவும், வருமானத்துக்கு வழி உள்ள நிலம், சொத்துக்களைப் பராமரித்து வருமானம் ஈட்டவும் இந்த Air India Assets Holding Ltd நிறுவனத்தின் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் Air India Air Transport Services Ltd., Airline Allied Services Ltd.(இந்த நிறுவனம் Alliance Air எனப்படும் மலிவுக் கட்டண விமான சேவையை லாபத்தில் நடத்துகிறது), Air India Engineering Services Ltd. (இதில் தான் அரசு விமானங்கள், பிரதமர், ஜனாதிபதி விமானங்கள் பராமரிப்பு வருகிறது.) and Hotel Corporation of India(நட்டத்தில் நடக்கும் அரசின் நட்சத்திர ஓட்டல்கள்) ஆகியவற்றை அரசு வைத்துக்கொண்டு Air India Assets Holding Ltd மூலமாக அடுத்தகட்ட முன்னெடுப்புகளைச் செய்யும். </p><p><br /></p><p>தேவை ஏற்படும் போதெல்லாம் பணம் கொடுத்துக் காப்பாற்றியதைத் தவிர தான் ஜாமீன் போட்ட ஏர் இந்தியாவின் கடன்களை அரசு அடைத்தது, இப்படி எஞ்சிய சொத்துக்களை மதிப்பிட்டு வைத்து, மிஞ்சிய கடன்களைக் கணக்கிட்டு வைத்து, தொழில் ஓட்டத்துக்கு படியளந்த கணக்கு உள்பட அரசுக்குக் கடந்த பத்தாண்டுகளில் (2009-10 முதல் 2019-20 வரை) செலவான தொகை என்று பார்த்தால் ஏர் இந்தியாவை நடத்த 1, 57, 339 கோடி ரூபாய்கள். இதில் ஒரு பைசா கூட முதலீடு இல்லை. நட்டத்தை ஈடுகட்டவும், அடுத்தகட்ட ஓட்டத்துக்கும் வெள்ளையானையின் வாயில் போடப்பட்டு வந்த கரும்புக் கணக்கு இது. ஆண்டொன்றுக்குத் தோராயமாகப் ரூ15000 கோடிகளை விழுங்கிவந்த வெள்ளையானை வரும் டிசம்பரில் இருந்து டாடா நிறுவனத்தின் பொறுப்பு. நல்ல பட்டத்து யானையை சண்டித்தனம் மிகுந்து போன வெள்ளையானையாக ஆக்கியது யார் என்று ஆராய்ந்தால் 2005-06 முதல் 2015-16 வரை இருந்த ஏர் இந்தியா நிர்வாகம் என்று பதில் வரும். அந்த நிர்வாகத்தை வழிநடத்தியது யார் என்று பார்த்தால் மூலகாரணம் யார் என்பது புலப்படும். இனிவரும் காலங்களில் நல்ல லாபத்தில் செயல்படும் நிறுவனமாக ஏர் இந்தியா இயங்க நல்வாழ்த்துகளைத் தெரிவிப்போம். </p><p><br /></p><p>அனைத்து விஷயங்களையும் தானே செய்து கொண்டிருக்காமல் சரியான சட்டதிட்டங்கள் மூலம் அனைத்து நடைமுறைகளையும் நெறிப்படுத்தி தன் மக்களின் நலனைப் பேணுவதே சிறந்த அரசு நிர்வாகம். Minimum Government, Maximum governance. இந்த முறையில் நாட்டின் நலனுக்குத் தேவையானவை தவிர பிறவற்றை விட்டு வெளிவந்து நாட்டு நலன், மக்கள் நலனில் முழுக்கவனம் செலுத்துவதே ஒரு அரசு செய்யத்தக்கது. அந்த வழியில் ஒரு முக்கிய நகர்வே ஏர் இந்தியாவை டாடாவுக்கு விற்க எடுத்த முடிவு. அல்லவை தேயட்டும், நல்லவை ஓங்கட்டும். வந்தே மாதரம்.</p>Arun Ambiehttp://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6493698527091962490.post-85555274929253545562021-10-21T04:03:00.005-07:002021-10-21T04:03:56.853-07:00 Fab India நிறுவனம் சமீப காலங்களில் சர்ச்சைக்கு உள்ளாகிறது. ஏன்?<p>இந்த Fab India நிறுவனம் 1960ல் தொடங்கப்பட்டது. ஜான் பிஸ்ஸெல் என்ற அமெரிக்கர் தொடங்கினார். முதலீடாக 20000 அமெரிக்க டாலர்களை இறக்கினார். இன்றைய டாலர் மதிப்பில் ஏறத்தாழ 2 லட்சம் அமெரிக்க டாலர்கள். ஏது காசு என்ற கேள்விக்கு பாட்டி உயில் எழுதி வைத்தார். அவர் இறந்து போனதும் வந்த பணம் என்று சொன்னார்.</p><span><a name='more'></a></span><p>Ford Foundation ஜான் பிஸ்ஸெலை 1958ல் தத்தெடுத்துக் கொண்டது. ஆலோசகர் என்று இந்தியாவுக்கு வந்தார். இரண்டாண்டுகள் நிலைமையை உற்று நோக்கினார். 1960ல் இந்திய கைவினைப் பொருட்கள், கைத்தறி உள்ளிட்டவற்றை சர்வதேச சந்தையில் விற்றுத் தருகிறேன் என்று ஆரம்பித்தார். வீட்டின் ஒரு அறையில் அலுவலகம், மற்றொரு அறை குடோன் என்று வைத்துக் கொண்டார். 10 ஆண்டுகள் ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் என்று சுற்றினார். கைத்தறி நெசவாளர்கள், கைவினைஞர்கள் என்று பலரிடமும் பேசி ஒப்பந்தம் போட்டு அவர்கள் விற்கும் விலையை விட கொஞ்சம் அதிகம் கொடுத்தார்.</p><p><br /></p><p>அமெரிக்காவில் பெரிய கடைகளைப் பிடிக்காமல் சின்னக் கடைகள், அண்ணாச்சி கடை போன்ற கிராம, சிறு நகரக் கடைகளில் பொருட்களை விற்றார். 1964ல் லண்டனைச் சேர்ந்த டெரென்ஸ் கோன்ரன் என்ற பிரித்தானியருடன் நட்பு பாராட்டி வியாபாரம் பேசினார். அவருடைய Habitat என்ற நிறுவனத்துக்கு சால்வைகள், தரை விரிப்புகள், போர்வைகள், திரைச்சீலைகள், பொம்மைகள், பரிசுப் பொருட்கள் என்று வேலைப்பாடுகள் நிறைந்த கைத்தறி, கைவினைப் பொருட்களை விற்றார்.</p><p><br /></p><p>ஜான் பிஸ்ஸெலுக்கு உள்நாட்டுத் தரகராகத் தொடங்கி தனியாக பொருட்கள் விற்கும் கடை தொடங்கிய கேரா என்பவர் 1965ல் 20 லட்ச ரூபாய்க்கு வியாபாரம் செய்திருந்தார். 1976 வரை ஓஹோவென்று ஓடிய வியாபாரத்தில் இவர்கள் சொன்னதே கணக்கு, வைத்ததே விலை, கொண்டதே லாபம்.</p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4NPeKc75wec5CoixQMvOErNyKoWSgGmqljoEsgc9E0ElhDcx5FQJwhK3ljYa1f0jlQ4W8BVifPKuICtEQD3rnm-WRmvYiIVF2uDB8CG1n5Bijk1J6zBKXfUSehiv9cMVsak58GT07/s330/245838061_1236662120145531_8607039395556254350_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="117" data-original-width="330" height="113" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4NPeKc75wec5CoixQMvOErNyKoWSgGmqljoEsgc9E0ElhDcx5FQJwhK3ljYa1f0jlQ4W8BVifPKuICtEQD3rnm-WRmvYiIVF2uDB8CG1n5Bijk1J6zBKXfUSehiv9cMVsak58GT07/s320/245838061_1236662120145531_8607039395556254350_n.jpg" width="320" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div></div>1975-76ல் ரிசர்வ் வங்கி வெளிநாட்டினர் நடத்தும் வியாபாரங்களில் 40% பங்குகளுக்கு மேல் அவர்கள் வைத்துக் கொள்ளக்கூடாது என்று சட்டம் போட்டது. உடனடியாக கேராவுக்கும், இன்னபிற உள்ளூர்த் தரகர்களுக்கும் பங்கு கொடுத்து, ஒரு லாப நோக்கற்ற நிறுவனம் தொடங்கி அதில் கைவினைஞர்கள், நெசவாளர்கள் உள்ளிட்டவர்களைச் சேர்த்து அந்த நிறுவனத்தின் பேரில் உள்ள பங்குகளுக்கு அவர்கள் உரிமையாளர்கள் என்று அறிவித்தார் ஜான். அந்த லாப நோக்கற்ற நிறுவனத்தை நிர்வகித்தது ஜானுடைய உறவினர்கள்.<p></p><p><br /></p><p>குடியிருப்பு வீட்டில் கடை நடத்தினால் குற்றம் என்று எமர்ஜென்சி காலத்தில் சட்டம் வந்தது. உடனடியாக தில்லி கான்மார்க்கெட் அருகில் உள்ள Golf links என்ற பகுதியில் ஒரு இடத்தைப் பிடித்து அங்கே கடை திறந்தார் ஜான். அதுவே Fab Indiaவின் முதல் கடை. பிறகு பல்வேறு கிளைகள் திறந்தார். ஆனால் வாடிக்கையாளர்கள் என்று பார்த்தால் மிட்டா மிராசுகளும், அரசு உயரதிகாரிகளும் வசதி மிக்கவர்களுமே இருந்தனர். ஏனென்றால் Fab India விற்ற விலை அவர்களுக்கே கட்டுபடியானது. உள்ளூர்ப் பொருளை வெள்ளைக்காரனிடம் வாங்கிப் பெருமைப்படும் ஆட்கள் அங்கே குழுமினர்.</p><p><br /></p><p>காதி ஏழைகளுக்கான கடை, Fab India வசதிபடைத்தவர்களின் காதி என்பதே அக்காலத்தில் பேச்சாக இருந்தது. 1988ல் ஜானின் மகன் வில்லியம் படிப்பு முடித்துவிட்டு இந்தியா வந்தார். வியாபாரத்தை சிறு நகரங்களில் மேலும் விஸ்தரித்தார். ஆனால் 1992ல் Habitat நிறுவனத்தை IKEA வாங்கியதில் இவர் ஐரோப்பிய சந்தையில் பெரும்பகுதியை இழந்தார். IKEA இந்தியாவில் ஆள் வைத்து நேரடிக் கொள்முதல் செய்தது. 1998ல் ஜான் மறைந்த பிறகு வில்லியம் நிர்வாகத்தில் Fab India 111 கிளைகளை இந்தியா முழுவதும் திறந்தது.</p><p><br /></p><p>துணிகள், கைவினைப் பொருட்கள் என்று இருந்த Fab India டிசைனர் சரக்குகள் என்று கைத்தறி, கைவினைப் பொருட்களைத் தாண்டி விற்க ஆரம்பித்தது. டிசைனர் நகை, டிசைனர் துணி, டிசைனர் உடை, டிசைனர் நோட்டுப் புத்தகம் என்று விற்றார் வில்லியம். கைவினைஞர்களைக் காதி நிறுவனத்தில் விற்றுக் கொள்ளச் சொல்லி அனுப்பிவிட்டார்கள். சீனப் பொருட்கள் லாபம் பெரியதாகத் தந்தது.</p><p><br /></p><p>2008ல் 200 கோடி ரூபாய் லாபம் ஈட்டிய Fab India, 2014ல் FABELS என்ற பெயரில் மேற்கத்திய ஆடைகளை இந்தியாவில் விற்கத் தொடங்கியது. இவ்வளவு பெரிய இந்தியச் சந்தையில் வியாபாரம் செய்வதை விட்டுவிட்டு மற்ற நாடுகளில் விற்பது வியாபாரத் தந்திரமே அல்ல என்றார் வில்லியம்.</p><p><br /></p><p>ஆனாலும் இந்தியக் கைவினைக் கலைஞர்களை நாங்கள் தான் பாதுகாக்கிறோம் என்று வலியுறுத்தியது Fab India. அகில இந்திய கைவினைஞர் நலச் சங்கம் ஒன்றை தில்லியின் பிரபல டிசைனர்களுடன் சேர்ந்து ஆரம்பித்து 81000 உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது Fab India.</p><p><br /></p><p>2015ல் கோவாவில் உள்ள Fab India கடையில் துணி போட்டுப் பார்க்கும் அறையில் காமிரா இருந்ததாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி புகாரளித்தார். வில்லியம் உள்ளிட்ட த்லைமை நிர்வாகப் பொறுப்பில் இருந்த பலரும் முன் ஜாமீன் பெற்றார்கள்.</p><p><br /></p><p>தற்போது தீபாவளி என்பதை ஜஸ்ன் ஏ ரிவாஸ் என்று இந்திய மொழி அல்லாத ஒன்றில் மொழிபெயர்த்து விளம்பரம் செய்துள்ளது Fab India. பலரும் கண்டனம் தெரிவித்த பிறகு விளம்பரத்தைத் தூக்கிவிட்டது.</p><p><br /></p><p>இந்நிறுவனம் நம் கைவினைப் பொருட்களை விற்று உலகம் முழுக்கக் கொண்டு சென்ற போதும் கைவினைஞர்கள் வாழ்வின் முன்னேற்றத்துக்கு ஏதும் பெரிய பங்களிப்பெல்லாம் செய்யவில்லை. தற்போது சீனாவோடு போட்டி போடும் விலையில் கைவினைஞர்களை விற்கச் சொல்கிறது.</p><p><br /></p><p>இந்நிறுவனத்திடம் வியாபாரம் செய்வதால் அமெரிக்கக் குடும்பம் ஒன்றுக்கு லாபமும் Ford Foundationக்கு பங்குப் பணமும் கிடைக்கவே வழி செய்வதாக ஆகும். நம்மூர் ஆட்களிடமே வாங்குவோம். உள்ளூர் மக்களை ஊக்குவிப்போம்.</p>Arun Ambiehttp://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6493698527091962490.post-38396148001198688102021-10-15T12:19:00.012-07:002023-02-04T09:46:02.814-08:00தொழில் வளர்ச்சியும் சீனப்பாடமும்<p> சீனாவின் மிகப் பெரிய கட்டுமான நிறுவனம் எவர்கிராண்ட் கழுத்துவரை கடன் பிடியில் உள்ளது. 300 பில்லியன் டாலர் கடன் அந்த நிறுவனத்துக்கு உள்ளது. ஒரு பில்லியன் என்பது 100 கோடி. கணக்குப் போடுங்கள் 2ஜி ஊழலை விட அதிகத் தொகை வரும். இவ்வளவு கடனில் உள்ள நிறுவனம் நொடித்துப் போனால் சீனப் பொருளாதாரம் படுத்துவிடும். அதுதவிர உலகில் அந்தக் கம்பெனியில் முதலீடு செய்துள்ள பல நிறுவனங்கள் பலத்த அடிவாங்கும். சில பல லீமேன் பிரதர்ஸ் சம்பவங்கள் நிகழலாம். சீன அரசு நொடித்தால் நொடிக்கட்டும் என்றே சென்ற வாரம் வரை இருந்தது. ஆனால் இன்றைய நிலையில் உள்நாட்டிலும் பண விஷயத்தில் பலமான அடிவிழ வாய்ப்பு என்ற நிலையில் வங்கிகள், நிதி ஆலோசகர்கள் என்று பலரையும் அமர்த்தி அடி கொஞ்சம் மெதுவாக விழும்படி என்ன செய்ய முடியும் பாருங்கள் என்று உத்தரவிட்டுள்ளது. காப்பாற்ற முனையவில்லை என்பதே அங்கிருந்து வரும் தகவல்.</p><div class="separator" style="clear: both; text-align: center;"><img border="0" data-original-height="1099" data-original-width="3641" height="194" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSOMwAJP0U5nl2iwqTjdULu5y7Hk-HNw8dzXX4vpX_S0v8bG0JDEEFc83EFQY5BU7DuZKt9lwE4wLh1_mZrx0d2gFkq8D5SuoSYMWVBGfL6XY9czGubQr3hBzGXcezd6hruuPtxs-JvGpTEPePOeBydIbFXLYYTYqO14IHcmsV1gwIVxF3k2jUlw/w640-h194/IMG_2383.HEIC" width="640" /></div><p></p><span><a name='more'></a></span><p>சில மாதங்களாகப் பார்த்தால் சீனாவின் பல்வேறு தனியார் பெரு நிறுவனங்கள் குற்றச்சாட்டுகள் எதிலாவது சிக்கி அரசுடமை ஆக்கப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. அலிபாபா நிறுவனத்தின் ஜாக் மா காணாமல் போனார். திரும்பி வந்து டிவியில் பேசினார். அதன் பிறகு என்ன ஏதென்று விவரம் இல்லை. சீனக் காப்பீட்டு நிறுவனம் ஆன்பாங் அரசுடமை ஆக்கப்பட்டு அதன் நிறுவனர் சிறை சென்றுள்ளார். இவர் முன்னாள் தலைவர் டெங்க் ஸியோ பிங்கின் பேரன் முறை ஆவார். HNA என்ற தனியார் நிறுவனம் கடந்த ஜனவரியில் அரசுடமை ஆனது. அதன் நிறுவனர் சிறை சென்றுள்ளார். இதெல்லாம் சீன அரசின் திட்டங்களின் ஏதாவது பாகமா என்று கேட்டால் சதித்திட்ட வதந்திகள் பற்றி நாம் இங்கே பேசப்போவதில்லை.</p><p><br /></p><p>கட்டுமானத் தொழில் என்று எடுத்துக்கொண்டால் எவர்கிராண்ட் தவிர சீன நிறுவனங்கள் பல உள்ளன. அனைத்துமே சற்றே அயர்ந்து போய் நிற்பது உண்மை. கட்டுமானத் துறை மட்டும் சீனப் பொருளாதாரத்தில் 29-30% பங்கு வகிக்கிறது. மேலும் வீட்டுக்கடன், தனிநபர் வீட்டுத்தேவைக்கான கடன் என்று பார்க்கிறபோது மொத்தப் பொருளாதாரப் புழக்கத்தில் ஏறத்தாழ 65-67% வரை உள்ளது. (இவை சீனக் கம்பெனிகள் பற்றி ஆய்வு செய்யும் நிறுவனங்கள் தொகுத்த புள்ளிவிவரங்கள். இணையத்தில் உள்ளன.)</p><p><br /></p><p>சீனாவில் நம்மூர் போல சொந்த வீடு வாங்க முடியாது. பணம் சேர்த்துக் கொடுத்தாலோ அல்லது வங்கியில் கடன் பெற்றுக் காசு கொடுத்தாலோ 70 ஆண்டுகள் குத்தகைக்கு வீடு தருவார்கள். பிறகு அதைத் திருப்பித் தரவேண்டும். குத்தகையை நீட்டிக்க மேலும் பணம் கட்டி நீட்டிக்கலாம். என் சொத்து என் வாரிசுக்கு என்றால் எல்லாம் அரசாங்கச் சொத்து என்று முடித்துவிடுவார்கள். உங்கள் மகனோ மகளோ வீடு வாங்க வேண்டும் என்றால் மறுபடி வங்கிக்கடன், குத்தகை என்று ஆரம்பிக்க வேண்டும், 70 ஆண்டுகளுக்கு. இந்த நிலையில் எவர்கிராண்ட் நிறுவனம் மட்டுமே 16லட்சம் வாடிக்கையாளர்களிடம் குத்தகைப் பணம் பெற்றுக் கொண்டுள்ளது. வீடு கட்டவே ஆரம்பிக்கவில்லை. அரசு தலையிட்டு இப்போது மறு சீரமைப்பு என்று வங்கிகளுக்கு வட்டி/அசல் பணமும் வாடிக்கையாளர்களும் வீடும் கொடுப்பதற்கான தேதிகள் தள்ளி வைப்பதைச் செய்கிறது.</p><p><br /></p><p>இந்நிலையில் நம் நாட்டில் இது போன்ற பெரும் பாதிப்பு நிகழுமா என்றால் இல்லை என்பதே பதில். நம் நாட்டில் 2019-20ல் கட்டுமானத் தொழில் மொத்தப் பொருளாதாரத்தில் 7% மட்டுமே இருந்தது. 2021ல் சில சதவிகிதங்கள் ஏறி இருக்கலாம். சரியான புள்ளிவிவரம் இன்னும் வரவில்லை. ஏற்றம் ஏனென்று பார்த்தால் அரசு செய்துவரும் கட்டுமானங்கள், உள்கட்டமைப்பு விஸ்தரிப்புகள் போன்றவற்றால் நிகழ்கிறது. தனியார் வீட்டுக்கடன்/கட்டுமானக்கடன் என்று எடுத்துக்கொண்டால் நம் கடந்த சில ஆண்டுகளாகவே நம் நாட்டில் ஏற்றம் என்பது இல்லை. காரணம் கட்டுமானத் தொழில் உச்சத்தை அடைந்தது கடந்த 2011ல். அதன் பிறகு சற்றே இறங்குமுகம் தான். இதில் பாதிப்பு என்று பார்த்தால் முதலீடு என்று வீடுகள் வாங்கிப் போட்டவர்கள் விலை வீழ்ச்சியால் சொத்துமதிப்புக் குறைந்தும் வாடகை வருமானம் குறைந்தோ அல்லது ஏற்றமில்லாமலோ போனதால் பாதிக்கப்பட்டுள்ளனர். சில இடங்கள் வீடுகளில் ஆளில்லாமல் நீண்டகாலம் பூட்டுப் போடப்பட்டு ghost city என்று வர்ணிக்கப்படும் உயிரற்ற நகரங்களாகக் காணப்படுகின்றன. கொரோனாவுக்கு முன்பிருந்தே இந்நிலை உள்ளது. கொரோனாவுக்குப் பிறகு மேலும் தீவிரமடைந்துள்ளது.</p><p><br /></p><p>கட்டுமானத் தொழிலை ஊக்குவிக்க வேண்டும் என்று பலர் கூறிவருகிறார்கள். காரணம் என்று அவர்கள் சொல்வது:</p><p>1. சுலபமான வேலைவாய்ப்பு</p><p>2.திறம் குறைந்த வேலையாட்களுக்குப் பணி</p><p>3.விரைந்த பணச்சுழற்சி</p><p><br /></p><p>இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது கட்டுமானத் தொழிலாளர்கள் தொடங்கிக் கட்டுமானப் பொருட்கள் கட்டுமானம் சார்ந்த தொழில்கள் இவற்றின் செயல்பாடுகள்/வளர்ச்சி இவற்றையும் சேர்த்தே வளர்ச்சிக்குத் திட்டமிட வேண்டும். வங்கிகள் கடன் கொடுத்து மக்கள் வீடு வாங்க பதிவு செய்வதும், காத்திருப்பதும் பணச்சுழற்சிக்கு ஓரளவு வழி செய்தாலும் தொழில் வளர்ச்சியோ தனிநபர் நிறைவோ முழுமை பெறாது. நிறுவனங்களும், தனிநபர்களும் கடன்பெற்று தொழில் நிறைவடையாமல் வராக்கடன் என்று சீனத்தின் திசையில் நம் பயணம் அமைவது நல்லதல்ல. ஏற்கனவே நம் வங்கிகளுக்கு வராக்கடன் ஒரு சுமை. ஆகவே வங்கிகள் கட்டுமானம் என்றால் மிகுந்த எச்சரிக்கை கொண்டே தனிநபர்களுக்கோ நிறுவனங்களுக்கோ கடன் தரும். பாய்ச்சலான வளர்ச்சி என்பதை உடனே எதிர்பார்க்க முடியாது.</p><p><br /></p><p>மேற்கூறிய மூன்று காரணிகளும் பிற தொழில்கள் வேலை தொடங்கினாலும் நடக்கும்.</p><p><br /></p><p>பல தொழில்கள் நம் நாட்டை நோக்கி நகர்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் இன்றைய உலகப் பொருளாதாரச் சூழ்நிலையில் அரசு தொழில் பரவலாக்கத்துக்கு முனைந்தால் மேற்சொன்ன நிகழ்வுகள் சாத்தியப்படும். சாலைவசதிகள், அடிப்படைக் கட்டமைப்புகள் போன்றவை இல்லாத/சரியில்லாத நிலை 2014க்குப் பிறகு வேகமாக மாறிவருகிறது. ஒரு துறையில் கவனம் குவிவதும், ஒரு துறையை மட்டுமே நம்பி பொருளாதார வளர்ச்சியைக் கொள்வதும் சிறப்பான எதிர்காலத்துக்குத் தக்க துணை செய்ய வாய்ப்புகள் மிகக் குறைவு. தகவல் தொழில்நுட்பம் நம்முடைய கோட்டை என்கிறோம். ஆனால் அதிலும் சேவைப்பிரிவில் மட்டுமே இதுவரை சாதித்திருக்கிறோம். புதுக்கண்டுபிடிப்புகள், மென்பொருள் சுய தயாரிப்பு, இணையப் பாதுகாப்பு என்று நம் நிறுவனங்கள் சாதிக்கத் தொடங்கியுள்ளன. அதிலும் நம் பிடிமானம் பரவலாக வேண்டும். மின்னணு உற்பத்தித் துறை, கனரகத் தொழில், வாகனத் தொழில் என்று நம் நாட்டில் கால்பதித்துள்ள சர்வதேச நிறுவனங்கள் பல உள்ளன. அவற்றின் சார்புத் தொழில்களில் நம்மவர்கள் ஈடுபட்டு சில காலத்தில் தனியான பொருள் உற்பத்திக்குச் செல்லலாம்.</p><p><br /></p><p>சிறு குறு நிறுவனங்களுக்குக் கடன் தந்து ஊக்குவிக்கலாம். தொழில் வாய்ப்புகளை ஒரே இடத்தில் குவிய விடாது பரவலாக்கலாம். சில நிறுவனங்கள் கடற்கரை ஒட்டிய இடங்களை வேண்டுவார்கள். அந்த நிறுவனங்களுக்கு கிழக்கு மற்றும் மேற்குக் கடற்கரையில் பரவலாகப் பல்வேறு ஊர்களில் இடம் கொடுத்து வளர்ச்சியைப் பரவலாக்கலாம். அது பல்வேறு சார்புத் தொழில்கள் அங்கே வளர உதவும். கடற்கரை என்று குறிப்பிட்டுக் கேட்காத நிறுவனங்களை வேறு ஊர்களுக்கு அனுப்பலாம். வேலைவாய்ப்புகள் பரவலாகப் பெருகுவதோடு பொருளாதார வளர்ச்சி ஒரே இடத்தில் குவிவதைத் தவிர்க்கவும் இது உதவும். கட்டமைப்புகள் சீரமைவதால் பரிமாற்றத் தாமதங்கள் நேர வாய்ப்புகள் குறைவு.</p><p><br /></p><p>மேலும் மருத்துவம், கல்வி உள்ளிட்ட பல விஷயங்களில் எல்லா ஊர்களிலும் தரம் உயரவும் கிராம/நகர தர வேறுபாட்டைக் களையவும் இந்த முறை துணைசெய்யும். பணப்புழக்கம் பரவலாகும். வேலைவாய்ப்புகள் திறம் குறைந்த வேலைகளுக்கும் அதிகரித்தால் இளைஞர்கள் வழிமாறுவதும் பெருமளவில் குறையும். வேலை, வளர்ச்சி, குடும்ப நிறைவு, மகிழ்ச்சி என்று மக்களின் நிறைவான வாழ்க்கைக்கு வாய்ப்புகள் கிட்டும். </p><p>வந்தே மாதரம்.</p><span><!--more--></span>Arun Ambiehttp://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6493698527091962490.post-54285327394986711792021-09-29T23:46:00.002-07:002021-09-29T23:50:27.035-07:00இருளும் சீனம் பாயுமா பாரதம்?<p> <span style="background-color: white; color: #050505; font-family: inherit; font-size: 15px; white-space: pre-wrap;">சீனம் இருளில் வீழ்ந்துவிட்டது. ஆமாம். ஊஹான் வைரஸைப் பரப்பிய அதே நாடுதான். இப்போது போக்குவரத்து சிக்னல் தொடங்கி வீட்டு விளக்குகள் வரை அணைத்து வைக்கச் சொல்லி உத்தரவு. கேட்டால் வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் அக்கறை என்று மூஞ்சியில் இருக்கிற மஞ்சாக் கலரைக் காட்டுகிறார்கள். (அதாகப்பட்டது பீலா விடுகிறார்கள்)</span></p><div class="" data-block="true" data-editor="7vikt" data-offset-key="b93m2-0-0" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; white-space: pre-wrap;"><div class="_1mf _1mj" data-offset-key="b93m2-0-0" style="direction: ltr; font-family: inherit; position: relative;"><span><a name='more'></a></span><span data-offset-key="b93m2-0-0" style="font-family: inherit;"><br data-text="true" /></span></div></div><div class="" data-block="true" data-editor="7vikt" data-offset-key="5defl-0-0" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; white-space: pre-wrap;"><div class="_1mf _1mj" data-offset-key="5defl-0-0" style="direction: ltr; font-family: inherit; position: relative;"><span data-offset-key="5defl-0-0" style="font-family: inherit;">என்ன தான் நடக்கிறது? அணில் அங்கே மனித ஜனத்தொகை போலப் பெருத்துவிட்டதா? இல்லை. ஆனால் மின்வெட்டு அதிகரித்திருக்கிறது. தொழிற்சாலைகள் நிலக்கரி, எரிபொருள் வாங்கிக் கட்டுபடியாகவில்லை என்று கையறுநிலையில் இருக்கின்றன. புகை வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தி சுற்றுச்சூழலை மேம்படுத்த இந்த நடவடிக்கை என்கிறது சீன அரசு.</span></div></div><div class="" data-block="true" data-editor="7vikt" data-offset-key="49fv9-0-0" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; white-space: pre-wrap;"><div class="_1mf _1mj" data-offset-key="49fv9-0-0" style="direction: ltr; font-family: inherit; position: relative;"><span data-offset-key="49fv9-0-0" style="font-family: inherit;"><br data-text="true" /></span></div></div><div class="" data-block="true" data-editor="7vikt" data-offset-key="apo5c-0-0" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; white-space: pre-wrap;"><div class="_1mf _1mj" data-offset-key="apo5c-0-0" style="direction: ltr; font-family: inherit; position: relative;"><span data-offset-key="apo5c-0-0" style="font-family: inherit;">”அதை இப்படியா செய்வான் ஒருத்தன்?” என்று கேட்கிறது உலகம். திடீரென்று தெரு விளக்கை அணைத்து, வீடுகளில் விளக்குப் போடாதே என்று உத்தரவு போட்டு, தொழிற்சாலைகளுக்கு குறைந்த அளவில் விளக்கெரித்து சூரிய வெளிச்சத்தில் பல வேலைகளை முடியுங்கள் என்று சொல்லி..... என்ன கலாட்டா இது?</span></div></div><div class="" data-block="true" data-editor="7vikt" data-offset-key="2bghl-0-0" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; white-space: pre-wrap;"><div class="_1mf _1mj" data-offset-key="2bghl-0-0" style="direction: ltr; font-family: inherit; position: relative;"><span data-offset-key="2bghl-0-0" style="font-family: inherit;"><br data-text="true" /></span></div></div><div class="" data-block="true" data-editor="7vikt" data-offset-key="ethjl-0-0" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; white-space: pre-wrap;"><div class="_1mf _1mj" data-offset-key="ethjl-0-0" style="direction: ltr; font-family: inherit; position: relative;"><span data-offset-key="ethjl-0-0" style="font-family: inherit;">சூரிய சக்தி மின்சாரம், காற்றாலை மின்சாரம் என்று போக வேண்டியது தானே? அதற்கு இடவசதி அதிகம் உள்ளதே? சீனாவில் பெரும் பாலை நிலம் உள்ளது. அதில் கூட இந்த ஏற்பாடுகளைச் செய்யலாமே? </span></div><div class="_1mf _1mj" data-offset-key="ethjl-0-0" style="direction: ltr; font-family: inherit; position: relative;"><span data-offset-key="ethjl-0-0" style="font-family: inherit;"><br /></span></div><div class="_1mf _1mj" data-offset-key="ethjl-0-0" style="direction: ltr; font-family: inherit; position: relative;"><span data-offset-key="ethjl-0-0" style="font-family: inherit;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgojJHjgq9zJB13Zd-L7ZhxrQ1hbr_prOMM28lewOAyfWYykmYGgwhc72SJFwOYL9camhLuu2-lGFlx8tRl39UUDliDdZVm0tRCLwqR_2mOYstJWbkWMnzT-jUp_VSarEUU5vVuhow8/" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" data-original-height="808" data-original-width="1373" height="188" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgojJHjgq9zJB13Zd-L7ZhxrQ1hbr_prOMM28lewOAyfWYykmYGgwhc72SJFwOYL9camhLuu2-lGFlx8tRl39UUDliDdZVm0tRCLwqR_2mOYstJWbkWMnzT-jUp_VSarEUU5vVuhow8/w320-h188/image.png" width="320" /></a></div><br /><span style="font-family: inherit;">செய்வதற்கு துட்டு? மாசேதுங் வைத்துவிட்டுப் போயிருக்கிறாரா இல்லை அவர் வைத்திருந்தவர்கள் வைத்திருக்கிறார்களா? எதுவுமில்லை!</span></span></div></div><div class="" data-block="true" data-editor="7vikt" data-offset-key="8gc6h-0-0" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; white-space: pre-wrap;"><div class="_1mf _1mj" data-offset-key="8gc6h-0-0" style="direction: ltr; font-family: inherit; position: relative;"><span data-offset-key="8gc6h-0-0" style="font-family: inherit;"><br data-text="true" /></span></div></div><div class="" data-block="true" data-editor="7vikt" data-offset-key="arsdf-0-0" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; white-space: pre-wrap;"><div class="_1mf _1mj" data-offset-key="arsdf-0-0" style="direction: ltr; font-family: inherit; position: relative;"><span data-offset-key="arsdf-0-0" style="font-family: inherit;">உலகை வளைக்கிறேன் என்று கிளம்பி ரோடு போடுகிறேன், கடன் கொடுக்கிறேன் என்று துட்டை நிறைய இழந்திருக்கிறது சீனா. ஆனாலும் ”ஏய் எவம்லே அவன்?” என்று உதார் விட்டுக்கொண்டு திரிகிறது.</span></div></div><div class="" data-block="true" data-editor="7vikt" data-offset-key="fsq66-0-0" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; white-space: pre-wrap;"><div class="_1mf _1mj" data-offset-key="fsq66-0-0" style="direction: ltr; font-family: inherit; position: relative;"><span data-offset-key="fsq66-0-0" style="font-family: inherit;"><br data-text="true" /></span></div></div><div class="" data-block="true" data-editor="7vikt" data-offset-key="77i5d-0-0" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; white-space: pre-wrap;"><div class="_1mf _1mj" data-offset-key="77i5d-0-0" style="direction: ltr; font-family: inherit; position: relative;"><span data-offset-key="77i5d-0-0" style="font-family: inherit;">இப்போது ஆஸ்திரேலியாவுடன் போன வருடம் கொரொனாவைப் பரப்பியது யார் என்று ஒரண்டை இழுத்துக் கொண்டு ”என் நாட்டுக்கு உன் பொருள் எதுவும் தேவையில்லை போடா” என்று சவடால் பேசியது சீனா. ஆஸ்திரேலிய நிலக்கரியை மட்டுமே நம்பி 60% அனல் மின் உற்பத்திச் சாலைகளை வைத்திருக்கிறது சீனா. </span></div></div><div class="" data-block="true" data-editor="7vikt" data-offset-key="bgopl-0-0" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; white-space: pre-wrap;"><div class="_1mf _1mj" data-offset-key="bgopl-0-0" style="direction: ltr; font-family: inherit; position: relative;"><span data-offset-key="bgopl-0-0" style="font-family: inherit;"><br data-text="true" /></span></div></div><div class="" data-block="true" data-editor="7vikt" data-offset-key="bhdjo-0-0" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; white-space: pre-wrap;"><div class="_1mf _1mj" data-offset-key="bhdjo-0-0" style="direction: ltr; font-family: inherit; position: relative;"><span data-offset-key="bhdjo-0-0" style="font-family: inherit;">நாம் பெரிய ஆள். ஆஸ்திரேலியாக்காரன் கும்பிட்டு விழுந்து கரி கொடுப்பான் என்று எண்ணியிருந்தது சீனா. ஆனால் ஆஸ்திரேலியா கொரோனா என்று கொஞ்ச நாள் சும்மா இருந்துவிட்டு மீண்டும் இப்போது புதுப்புது நாடுகளைப் பிடித்து நிலக்கரி விற்கிறது. சீனாவைச் சீந்தவில்லை. </span></div></div><div class="" data-block="true" data-editor="7vikt" data-offset-key="7qg8a-0-0" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; white-space: pre-wrap;"><div class="_1mf _1mj" data-offset-key="7qg8a-0-0" style="direction: ltr; font-family: inherit; position: relative;"><span data-offset-key="7qg8a-0-0" style="font-family: inherit;"><br data-text="true" /></span></div></div><div class="" data-block="true" data-editor="7vikt" data-offset-key="1kl3v-0-0" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; white-space: pre-wrap;"><div class="_1mf _1mj" data-offset-key="1kl3v-0-0" style="direction: ltr; font-family: inherit; position: relative;"><span data-offset-key="1kl3v-0-0" style="font-family: inherit;">சீன அரசு ”அதெல்லாம் இல்லை. நாங்கள் கொஞ்சம் கொரோனாவுக்காக மெதுவாக வேலை செய்தோம். இந்த வருஷம் வெயில் அதிகம். ஜனங்க ஏசி போட்டுக்கறாங்க. அதான் தேவை அதிகம், உற்பத்தி குறைவுன்னு போச்சு. இன்னும் 2 வருஷத்தில சரி பண்ணிருவோம்” என்று மண்ணே இல்லை மீசையில் என்கிறது. (மீசை எங்கய்யா உன் மூஞ்சில?)</span></div></div><div class="" data-block="true" data-editor="7vikt" data-offset-key="3jimh-0-0" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; white-space: pre-wrap;"><div class="_1mf _1mj" data-offset-key="3jimh-0-0" style="direction: ltr; font-family: inherit; position: relative;"><span data-offset-key="3jimh-0-0" style="font-family: inherit;"><br data-text="true" /></span></div></div><div class="" data-block="true" data-editor="7vikt" data-offset-key="e5nj2-0-0" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; white-space: pre-wrap;"><div class="_1mf _1mj" data-offset-key="e5nj2-0-0" style="direction: ltr; font-family: inherit; position: relative;"><span data-offset-key="e5nj2-0-0" style="font-family: inherit;">பல கம்பெனிகளை வாரத்துக்கு 2 நாட்கள் வேலை என்று கட்டுப்படுத்தியிருக்கிறது சீன அரசு. சில கம்பெனிகள் (பெரும்பாலும் செமிகண்டக்டர் கம்பெனிகள்) 3 நாட்கள் இயங்க உத்தரவு. மற்றபடி கரியுமிழ்தலைத் தடுக்க அரசு உத்தரவுப்படி 2 நாள் வேலை 5 நாள் லீவு. </span></div></div><div class="" data-block="true" data-editor="7vikt" data-offset-key="23t97-0-0" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; white-space: pre-wrap;"><div class="_1mf _1mj" data-offset-key="23t97-0-0" style="direction: ltr; font-family: inherit; position: relative;"><span data-offset-key="23t97-0-0" style="font-family: inherit;"><br data-text="true" /></span></div></div><div class="" data-block="true" data-editor="7vikt" data-offset-key="fm0kh-0-0" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; white-space: pre-wrap;"><div class="_1mf _1mj" data-offset-key="fm0kh-0-0" style="direction: ltr; font-family: inherit; position: relative;"><span data-offset-key="fm0kh-0-0" style="font-family: inherit;">சம்பளம்? கேடுத்தான் பாருங்களேன்!</span></div></div><div class="" data-block="true" data-editor="7vikt" data-offset-key="fnfoj-0-0" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; white-space: pre-wrap;"><div class="_1mf _1mj" data-offset-key="fnfoj-0-0" style="direction: ltr; font-family: inherit; position: relative;"><span data-offset-key="fnfoj-0-0" style="font-family: inherit;"><br data-text="true" /></span></div></div><div class="" data-block="true" data-editor="7vikt" data-offset-key="edngv-0-0" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; white-space: pre-wrap;"><div class="_1mf _1mj" data-offset-key="edngv-0-0" style="direction: ltr; font-family: inherit; position: relative;"><span data-offset-key="edngv-0-0" style="font-family: inherit;">சீனா 2022ல் குளிர்கால ஒலிம்பிக்கை நடத்துகிறது. அதற்கு வருபவர்களுக்கு புகை அடிக்கக் கூடாது. சுற்றுப்புறம் சுத்தபத்தமாக இருக்க வேண்டும் என்று அதிபர் ஜின்பிங் உத்தரவு போட்டுள்ளாராம். அதற்காக இப்படிக் கரியுமிழ்தல் புகை வெளிப்பாட்டைத் தடுத்து ஊரைச் சுத்தமாக வைக்க இப்படி ஏற்பாடாம். அதற்காக விளக்கு வைப்பதை தடுத்தால் எப்படி?</span></div></div><div class="" data-block="true" data-editor="7vikt" data-offset-key="b1ej0-0-0" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; white-space: pre-wrap;"><div class="_1mf _1mj" data-offset-key="b1ej0-0-0" style="direction: ltr; font-family: inherit; position: relative;"><span data-offset-key="b1ej0-0-0" style="font-family: inherit;"><br data-text="true" /></span></div></div><div class="" data-block="true" data-editor="7vikt" data-offset-key="fgd7n-0-0" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; white-space: pre-wrap;"><div class="_1mf _1mj" data-offset-key="fgd7n-0-0" style="direction: ltr; font-family: inherit; position: relative;"><span data-offset-key="fgd7n-0-0" style="font-family: inherit;">அரசு இலக்கு வைத்துவிட்டது. அடைந்தே தீரும் என்கிறார் சீன பொருளாதார ஆலோசகர் லாரி ஹூ. சீனா தன் கையைத் தானே கிழித்துக் கொண்டு நிற்கிறது என்றும் சொல்கிறார் லாரி. கிட்டத்தட்ட 160 கம்பெனிகள் அரசு உத்தரவுப்படி வாரத்துக்கு கண்டிப்பாக 16 மணி நேர வேலை மட்டுமே செய்யவேண்டும். </span></div></div><div class="" data-block="true" data-editor="7vikt" data-offset-key="1bs40-0-0" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; white-space: pre-wrap;"><div class="_1mf _1mj" data-offset-key="1bs40-0-0" style="direction: ltr; font-family: inherit; position: relative;"><span data-offset-key="1bs40-0-0" style="font-family: inherit;"><br data-text="true" /></span></div></div><div class="" data-block="true" data-editor="7vikt" data-offset-key="26ql4-0-0" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; white-space: pre-wrap;"><div class="_1mf _1mj" data-offset-key="26ql4-0-0" style="direction: ltr; font-family: inherit; position: relative;"><span data-offset-key="26ql4-0-0" style="font-family: inherit;">ஃபோர்டு, வோல்க்ஸ்வேகன் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உதிரிபாகங்கள் கிடைப்பதில் சிக்கல். ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்குத் தேவையான மின் பொருட்கள் தயாரிப்பு கிட்டத்தட்ட நின்றே விட்டது. செமி கண்டக்டர்கள் தவிர மற்றவை தயாரிக்க முக்கியத்துவம் தரப்படுவதில்லை. ஏனென்றால் தைவான் அங்கே மொத்த வியாபாரத்தையும் மொத்தமாகவும் சில்லறையாகவும் கைப்பற்றக் காத்திருக்கிறது.</span></div></div><div class="" data-block="true" data-editor="7vikt" data-offset-key="8vj52-0-0" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; white-space: pre-wrap;"><div class="_1mf _1mj" data-offset-key="8vj52-0-0" style="direction: ltr; font-family: inherit; position: relative;"><span data-offset-key="8vj52-0-0" style="font-family: inherit;"><br data-text="true" /></span></div></div><div class="" data-block="true" data-editor="7vikt" data-offset-key="cgbj1-0-0" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; white-space: pre-wrap;"><div class="_1mf _1mj" data-offset-key="cgbj1-0-0" style="direction: ltr; font-family: inherit; position: relative;"><span data-offset-key="cgbj1-0-0" style="font-family: inherit;">ஆப்பிள் உள்ளிட்ட ஃபோன் தயாரிப்பாளர்கள் இந்த நிலை இரண்டு வாரங்களுக்குத் தொடர்ந்தால் ஒன்று ஃபோன் தயாரிப்பு நிற்கும், அல்லது வேறிடத்துக்கு நகர்வோம் என்கிறார்கள்.</span></div></div><div class="" data-block="true" data-editor="7vikt" data-offset-key="3b3jq-0-0" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; white-space: pre-wrap;"><div class="_1mf _1mj" data-offset-key="3b3jq-0-0" style="direction: ltr; font-family: inherit; position: relative;"><span data-offset-key="3b3jq-0-0" style="font-family: inherit;"><br data-text="true" /></span></div></div><div class="" data-block="true" data-editor="7vikt" data-offset-key="4s7sk-0-0" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; white-space: pre-wrap;"><div class="_1mf _1mj" data-offset-key="4s7sk-0-0" style="direction: ltr; font-family: inherit; position: relative;"><span data-offset-key="4s7sk-0-0" style="font-family: inherit;">இந்த லட்சணத்தில் சோயா பீன்ஸ் முதல் சர்கியூட் போர்டு வரை மூலப் பொருள்/விளை பொருள் விலையேற்றம் என்கிறது சீனா. விவசாய விளைச்சல் வழித்துக் கொண்டு போய்விட்டது. மற்றவற்றின் விலைவாசி வாசி வாசி என்று போய் சிவா சிவா என்று கைலாசம் தொட்டு நிற்கிறது.</span></div><div class="_1mf _1mj" data-offset-key="4s7sk-0-0" style="direction: ltr; font-family: inherit; position: relative;"><span data-offset-key="4s7sk-0-0" style="font-family: inherit;"><br /></span></div><div class="_1mf _1mj" data-offset-key="4s7sk-0-0" style="direction: ltr; font-family: inherit; position: relative;"><span data-offset-key="4s7sk-0-0" style="font-family: inherit;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhk2sVOuj6zIrgB3qHB7emjDwSHmGt8r9LVo7-MCtZXzjOUQaWmFzcvQf0coMRVwYgtc2w8VoZCssBTBeaa5HbBLEIfeg0wSFjdTld1KT-3uBLNggIju5d2EqkXvUW4TkHF8LuVqORd/" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" data-original-height="651" data-original-width="864" height="241" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhk2sVOuj6zIrgB3qHB7emjDwSHmGt8r9LVo7-MCtZXzjOUQaWmFzcvQf0coMRVwYgtc2w8VoZCssBTBeaa5HbBLEIfeg0wSFjdTld1KT-3uBLNggIju5d2EqkXvUW4TkHF8LuVqORd/w320-h241/image.png" width="320" /></a></div><br /><span style="font-family: inherit;">காசை எங்கே விட்டார்கள் என்று பார்த்தால் சிலுக்கு ரோடு போடுகிறேன் என்று (Belt & Road Initiative - Silk route of older times) ஜிங்கு ஜிங்கென்று ஆடி கண்ணில் பட்ட நாட்டுக்கெல்லாம் கடன் கொடுத்துவிட்டார்கள். இன்று வாங்கிய எந்த நாடும் திருப்பித் தரவில்லை. ஐரோப்பிய யூனியன் கொஞ்சம் பேச்சு வார்த்தைக்கு வருகிறேன் என்று சொல்கிறது. மற்ற சின்னச்சின்ன ஆப்பிரிக்க நாடுகள் ”வேலை நடக்கலை, காசில்லை. கொரோனாவை பரப்பிவிட்டவனைக் கேளு” என்று சொல்கின்றன. சீன GDPல் பாதி இந்தக் கடனில் அடைபட்டுக் கிடக்கிறது. கடனை அடைக்க ஆளில்லை.</span></span></div></div><div class="" data-block="true" data-editor="7vikt" data-offset-key="871ag-0-0" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; white-space: pre-wrap;"><div class="_1mf _1mj" data-offset-key="871ag-0-0" style="direction: ltr; font-family: inherit; position: relative;"><span data-offset-key="871ag-0-0" style="font-family: inherit;"><br data-text="true" /></span></div></div><div class="" data-block="true" data-editor="7vikt" data-offset-key="1j48m-0-0" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; white-space: pre-wrap;"><div class="_1mf _1mj" data-offset-key="1j48m-0-0" style="direction: ltr; font-family: inherit; position: relative;"><span data-offset-key="1j48m-0-0" style="font-family: inherit;">கொரோனாவானாலும் 8.2% வளரும் என்று சொல்லப்பட்ட சீனப் பொருளாதாரம் 7.2% தான் வளரும் என்று சிங்கப்பூரில் வசிக்கும் சீனப் பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்கள். இல்லை இல்லை 7.7% என்று சீனாவில் வசிக்கும் பொருளாதார நிபுணர்கள் சூடன் அணைக்கிறார்கள். அப்படியானால் நிஜ % இன்னும் பயங்கரமானதாகக் கீழே இருக்கும். பல கம்பெனிகள் சீனாவை விட்டு விலகி வெளியே வரும். Supply Chain எனப்படும் பொருட்கள் நகர்வு விஷயத்தில் இந்த சீனச் சொதப்பல் ஒரு சிறந்த failure case studyஆக அமையும்.</span></div></div><div class="" data-block="true" data-editor="7vikt" data-offset-key="e27mt-0-0" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; white-space: pre-wrap;"><div class="_1mf _1mj" data-offset-key="e27mt-0-0" style="direction: ltr; font-family: inherit; position: relative;"><span data-offset-key="e27mt-0-0" style="font-family: inherit;"><br data-text="true" /></span></div></div><div class="" data-block="true" data-editor="7vikt" data-offset-key="bhf9p-0-0" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; white-space: pre-wrap;"><div class="_1mf _1mj" data-offset-key="bhf9p-0-0" style="direction: ltr; font-family: inherit; position: relative;"><span data-offset-key="bhf9p-0-0" style="font-family: inherit;">இம்ரான்கான் வகையறாவுக்கு இனி யார் சோறு போடுவார்கள் என்று தெரியவில்லை. நம்மூர் சிண்டு, தீக்கதிர் உள்ளிட்ட அ(ந)ச்சுக் காகிதங்களுக்குப் படியளப்பதும் பெரிதாக இருக்காது. </span></div></div><div class="" data-block="true" data-editor="7vikt" data-offset-key="fpghf-0-0" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; white-space: pre-wrap;"><div class="_1mf _1mj" data-offset-key="fpghf-0-0" style="direction: ltr; font-family: inherit; position: relative;"><span data-offset-key="fpghf-0-0" style="font-family: inherit;"><br data-text="true" /></span></div></div><div class="" data-block="true" data-editor="7vikt" data-offset-key="f6s32-0-0" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; white-space: pre-wrap;"><div class="_1mf _1mj" data-offset-key="f6s32-0-0" style="direction: ltr; font-family: inherit; position: relative;"><span data-offset-key="f6s32-0-0" style="font-family: inherit;">இந்நிலையில் பாரதம் சோலார், காற்றாலை என்று பல விதங்களில் மின்சாரம் எடுத்து பல்வேறு சிக்கல்களைச் சீரமைத்துத் தொழில் செய்ய ஏதுவான சூழலை உருவாக்கி வைத்துள்ளது. இன்னும் நிறையச் செய்யவேண்டும் என்றாலும் இப்போதே பாய்ச்சலை ஆரம்பித்தால் ஒரு கை பார்க்கலாம். உலகின் முன்னோடி ஆகலாம்.</span></div><div class="_1mf _1mj" data-offset-key="f6s32-0-0" style="direction: ltr; font-family: inherit; position: relative;"><span data-offset-key="f6s32-0-0" style="font-family: inherit;"><br /></span></div><div class="_1mf _1mj" data-offset-key="f6s32-0-0" style="direction: ltr; font-family: inherit; position: relative;"><span data-offset-key="f6s32-0-0" style="font-family: inherit;">ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் போக்கிலே. </span></div></div>Arun Ambiehttp://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6493698527091962490.post-20738408450775079702021-09-19T08:13:00.007-07:002021-09-19T08:16:32.205-07:00பாகிஸ்தான் தலைநகரில் இரத்தச்சிவப்பு மசூதி<p> <span style="background-color: white; color: #050505; font-family: inherit; font-size: 15px; white-space: pre-wrap;">இந்தப் படத்தில் உள்ள கட்டடம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள லால் மஸ்ஜித். இங்கு உள்ள ஜாமியா ஹஃப்ஸா என்ற மதரசாவில் ஆண், பெண், குழந்தைகள் உள்ளிட்ட பலர் படிக்கிறார்கள். அவர்கள் மாணவர்கள் என்பதால் தாலிப் என்று அழைக்கப்படுகிறார்கள். ஆஃப்கன் ஆட்களிடமிருந்து வித்தியாசம் காட்ட பாகிஸ்தானி தாலிபான் என்பார்கள். </span></p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjXwKGEPaMJZ-p-KGJJSgmYyf6gqK8JDK_QszsYGJ7-8e7_yahLZ8sArxy_cYlN144o5EDWfllkURPQXAynGCMg5VOkBh7lQq5b3s3pwfKz9DBKXQg2NqvRFPCTJAH4E9jvz6rJ28S/s816/lal+masjid.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="612" data-original-width="816" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjXwKGEPaMJZ-p-KGJJSgmYyf6gqK8JDK_QszsYGJ7-8e7_yahLZ8sArxy_cYlN144o5EDWfllkURPQXAynGCMg5VOkBh7lQq5b3s3pwfKz9DBKXQg2NqvRFPCTJAH4E9jvz6rJ28S/w400-h300/lal+masjid.jpg" width="400" /></a></div><span style="background-color: white; color: #050505; font-family: inherit; font-size: 15px; white-space: pre-wrap;"><p><span style="font-family: inherit;">இவர்கள் 2007ல் மூன்று பெண்களைக் கடத்தி அவர்கள் விபச்சாரம் செய்தார்கள் என்று குற்றம் சுமத்தி கல்லால் அடித்து கொல்ல வேண்டும் என்றார்கள். சீனத் தூதுவர் தலையிட்டதும் ஏதும் சொல்ல முடியாமல் பாகிஸ்தான் அரசு போலீஸை அனுப்பி அவர்களை மீட்டது. </span></p><p><span></span></p><a name='more'></a></span><p></p><p></p><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">இதில் கோபம் கொண்ட 'மாணவர்கள்’ பக்கத்தில் இருந்த ஒரு அமைச்சகக் கட்டிடத்தைக் கொளுத்திவிட்டார்கள். போலீஸ் உள்ளே புகுந்து உதை வாங்கித் திரும்பியது. ரேஞ்சர் படையினர் வந்ததும் சிலர் சரணடைந்தார்கள். பலர் கொஞ்சம் யோசித்துச் சரணடைவோம் என்றார்கள். </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">இந்த மசூதியின் தலைமை போதகர் அப்துல் அசீஸ் என்பவர் தன் தம்பி அப்துல் ரசீதை அரசுடன் பேச்சு வார்த்தைக்கு அனுப்பினார். பலமுறைகள் சரணடையக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. பெண் பிள்ளைகள் பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள். ஆனாலும் சில பெண்கள் துப்பாக்கி ஏந்தி ரேஞ்சர்களைச் சுட சண்டையில் சில பெண்கள், ஆண்கள் உள்ளிட்ட ’மாணவர்கள்’ கொல்லப்பட்டனர். ரேஞ்சர்கள் சிலர் காயம். </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">முஷரஃப் கோபப்பட்டு ஜூலை 7ஆம் தேதி எல்லோரும் சரணடையக் கெடு விதித்தார். ராணுவத்தின் சிறப்புக் கமாண்டோ படை தயாராக இருந்தது. மசூதித தலைவர் அப்துல் அசீஸ் பர்தா போட்டு பெண்களோடு பெண்ணாகத் தப்பி ஓட முயலகையில் பிடிபட்டார். பேச்சு வார்த்தையில் இருந்த அவர் தம்பி அப்துல் ரசீது எல்லா ‘மாணவர்களுக்கும்’ பாதுகாப்பு, பொது மன்னிப்பு, தலைக்கு 5000₹ பணம் எல்லாம் கொடுத்தால் தாங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுச் சரணடைவோம், அதோடு கல்வியில் கவனம் செலுத்த மட்டுமே செய்வோம் என்றார். </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">உன் அண்ணன் ஒத்துக்கொள்வாரா என்ற கேள்விக்கு ரசீதிடம் பதில் இல்லை. போலீஸ் கைதியாக இருந்த அண்ணன் அசீஸ் வாய் திறக்க மறுத்தார். </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">இதற்கிடையே பலுசிஸ்தானுக்கு வெள்ளச் சேதத்தைப் பார்க்க முஷரஃப் விமானம் ஏறினார். விமானம் ராவல்பிண்டியில் பறக்கும் போது ‘மாணவர்கள்’ ஒரு வீட்டுக் கூரையில் நின்றபடி ராக்கெட் லாஞ்சர், விமான எதிர்ப்பு ஏவுகணை என்று விட்டு அடித்தார்கள். விமானமும் முஷரஃபும் தப்பிவிட்டனர் என்று ஏக வருத்தம் அந்த ‘மாணவர்’களுக்கு.</div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">இந்தத் தாக்குதல் காரணமாக ஐரோப்பிய நாடுகள் சில தங்கள் தூதரகங்களை தற்காலிகமாக மூடின. பாகிஸ்தானுக்கு வேதனை, அவமானம், வெட்கம் என்று துடித்தார் முஷரஃப். ஆனால் ‘மாணவர்கள்’ கவலையே படவில்லை. ஒழிந்தான் ஐரோப்பியன் என்று கொண்டாடினார்கள்.</div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">இஸ்லாமாபாத் திரும்பிவந்த முஷரஃப் ட்ரோன் மூலம் மசூதியைக் கண்காணிக்கச் சொன்னார். உள்ளே 100 பெரிய ஆள் தீவிரவாதிகள், 300 பெண்கள் (’மாணவிகள்’), 500 ‘மாணவர்கள்’ இருப்பதாகத் தகவல் வந்தது. இது தவிர சில குழந்தைகளும் உள்ளே இருந்தார்கள்.</div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">மசூதிக்கும் மதரசாவுக்கும் பாதிப்பு வந்தால் அரசுக்கு விழும் அடிக்குத் தாம் பொறுப்பில்லை என்றார் அப்துல் ரசீது. இரண்டு நாட்கள் பல்வேறு முக்கியக் கமாண்டோ குழுவினரைச் சேர்த்து மசூதியைத் தாக்கப் பாக் ராணுவம் திட்டமிட்டது. திட்டத்துக்கு 10ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு ஒப்புதல் அளித்தார் முஷரஃப்.</div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">உள்ளே புகுந்த ராணுவம் பீரங்கித் தாக்குதல் நடத்தியதில் மசூதி, மதரசாவை வளைத்துக் கட்டப்பட்டிருந்த நெடிய நீண்ட காம்பௌண்ட் சுவர் இடிக்கப்பட்டது. அப்துல் ரசீது ஒரு மாதத்துக்குத் தேவையான உணவும் ஆயுதங்களும் இருக்கின்றன, நாங்கள் ராணுவத்தை ஒரு கை பார்ப்போம் என்றார். </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாக் ராணுவ கமாண்டோக்கள் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி காத்திருந்தது. தேர்ந்த ராணுவம் முற்றுகையைச் சமாளிப்பது போலச் சமாளித்தார்கள் ‘மாணவர்கள்’. அவர்களிடம் இருந்த ஆயுதங்களும் கையாண்ட தாக்குதல் முறைகளும் பயத்தைக் காட்டின பாக் கமாண்டோக்களுக்கு. </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">எவனாக இருந்தாலும் சுட்டுக் கொன்று சிக்கலை முடிவுக்குக் கொண்டு வாருங்கள் என்று சொன்ன முஷரஃப், பாக் அரசின் மத விவகார மந்திரியை பேச்சு வார்த்தையில் இருந்து நீக்கி வீட்டோடு வைத்தார். ராணுவம் முழுக்கட்டுப்பாட்டைக் கையில் எடுத்தது. </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">உள்ளே போனால் ராணுவ பங்கர்கள் போல அங்கே பல இருந்தன. மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து அதன் பின்னே பதுங்கியிருந்து சுட்டார்கள். மசூதியின் கூம்பு வடிவக் கூரையில் இருந்து சுட்டார்கள். பெண்களை நிறுத்தி வைத்து ராணுவம் சுடாமல் தடுத்தார்கள். </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">கடும் சண்டைக்குப் பிறகு தரைத் தளத்தைக் கைப்பற்றினர் கமாண்டோக்கள். முதல் தளம் கூரை என்று போனால் முன்னேற முடியாமல் சுட்டுக் கொண்டே இருந்தனர் ‘மாணவர்கள்’. ஒரு வழியாக ஒவ்வொரு தளமாகப் பிடித்து ஜூலை 11 அன்று மசூதியையும் மதரசாவையும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது ராணுவக் கமாண்டோ படை. ஒரு கர்னல், ஒரு ரேஞ்சர் படைக் கமாண்டர், 30 ரேஞ்சர்கள், 10 கமாண்டோக்கள் பலியானார்கள். பலர் காயப்பட்டனர். </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">தரைத் தளத்துக்குகீழே பதுங்கியிருந்த அப்துல் ரசீது தன்னைக் கொன்றுவிடுவார்கள் என்றும், துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்த தன் தாய்க்குச் சிகிச்சை அளிக்க மாட்டார்கள் என்றும் சாட்டிலைட் ஃபோனில் டிவிக்காரர்களிடம் புலம்பினார். அவரது தாயை ராணுவம் பத்திரமாக ஆஸ்பத்திரிக்கு அனுப்பியது. சரணடைய வந்த ரசீது ராணுவத்தை எச்சரிக்க அவர் ஆட்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானார். சரணடைய ஒப்புக்கொண்டதால் அண்ணன் அசீசே தம்பி ரசீதைக் கொல்ல உத்தரவிட்டார் என்றும் தகவல் உண்டு. </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">மாணவர்கள் இருந்த கல்வி பயிலும் இடம், பங்கர்கள், காவல் மாடங்கள் என்று சோதனை போட்டதில் கிடைத்த ஆயுதங்கள்: RPG rockets, anti-tank and anti-personnel landmines, suicide bombing belts, three to five .22-caliber rifles, RPD, RPK and RPK-74 light machine guns, Dragunov Sniper Rifles, SKS rifles, AK-47s, pistols, night vision equipment, and more than 50,000 rounds of various calibre ammunition, three crates of gasoline bombs prepared in green soft drink bottles, gas masks, recoilless rifles, two-way radios, large plastic buckets containing homemade bombs the size of tennis balls, as well as knives. (<span style="font-family: inherit;"><a class="oajrlxb2 g5ia77u1 qu0x051f esr5mh6w e9989ue4 r7d6kgcz rq0escxv nhd2j8a9 nc684nl6 p7hjln8o kvgmc6g5 cxmmr5t8 oygrvhab hcukyx3x jb3vyjys rz4wbd8a qt6c0cv9 a8nywdso i1ao9s8h esuyzwwr f1sip0of lzcic4wl py34i1dx gpro0wi8" href="https://l.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.thenews.com.pk%2Ftop_story_detail.asp%3FId%3D8988%26fbclid%3DIwAR2F5NVrc854KL29zCg-WgKuVMKaRe7yjjOrCI91bqH-ogPkUpbVy2YAqvA&h=AT2TuVCA6sTrHSzQl29oICxt5VLawbp58tCmCH6o4-IFcnaofC-AcUUZiJnK9m7K_K6m_mYqStE6y3B7F8gmRpI3Y4gQ2mHmbCXp2CmL-P_jw-GYCG4Ety03drCVGvbqhKbT&__tn__=-UK-R&c[0]=AT2FWwv3kfxwFgyyszDOxD9LJ-_ZBVomUqnqq337p705oG5987KV6p7965QuKZPGNDoSuTvJ-9BkUmxJj8mRaO7AQ03kNWM_OGK2kVPr8ieKLUEP33UP2MNah6j21oQBfr61" rel="nofollow noopener" role="link" style="-webkit-tap-highlight-color: transparent; background-color: transparent; border-color: initial; border-style: initial; border-width: 0px; box-sizing: border-box; cursor: pointer; display: inline; font-family: inherit; list-style: none; margin: 0px; outline: none; padding: 0px; text-align: inherit; text-decoration-line: none; touch-action: manipulation;" tabindex="0" target="_blank">http://www.thenews.com.pk/top_story_detail.asp?Id=8988</a></span>) </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">இறந்த ‘மாணவர்கள்’ பட்டியலில் உஸ்பெகிஸ்தான், ஆஃப்கனிஸ்தான், எகிப்து உள்ளிட்ட பல வெளிநாட்டவர்கள் இருந்தனர் என்பது ஐஎஸ்ஐ சம்பவத்துக்குப் பிறகு பிணங்களை அடையாளம் கண்டபின் கண்டுபிடித்துச் சொன்னது. </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">இதில் சம்பந்தப்பட்ட அண்ணன் போதகர் அப்துல் அசீசை பாக் அரசு பின்னர் மன்னித்து விடுவித்தது. விடாட்டி விட்ருவமா என்று அவர் மீண்டும் லால் மஸ்ஜிதைத் தன் கையில் எடுத்துக்கொண்டார். </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">இப்போது ஆஃப்கனில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மசூதியில் தாலிபான் கொடி ஏற்றிவிட்டார். தங்கள் தலைநகரில் தாலிபான் கொடியா என்று பாக் ராணுவமும் அரசும் பதறிப் போய் அவரிடம் கேட்க என்னைச் சுட்டுவிட்டு கொடியை இறக்குங்கள் என்று துப்பாக்கியோடு மசூதி வாசலில் உட்கார்ந்துவிட்டார்.</div><div dir="auto" style="font-family: inherit;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvFDd4typZUaseWUWB4qN3od-k-WuYZSucqoJdCnMMesp0ig-tudjgrB8Ud6Pcp7fbnsop_qxapoQdIaUb7tmjL4VfBSqd2M1BSA04iFRbqm2zK8MnAcug0uBiz9qLzABuMQTuu9XA/s680/aziz+ghasi.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="510" data-original-width="680" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvFDd4typZUaseWUWB4qN3od-k-WuYZSucqoJdCnMMesp0ig-tudjgrB8Ud6Pcp7fbnsop_qxapoQdIaUb7tmjL4VfBSqd2M1BSA04iFRbqm2zK8MnAcug0uBiz9qLzABuMQTuu9XA/w400-h300/aziz+ghasi.jpg" width="400" /></a></div><div dir="auto" style="font-family: inherit;"><br /></div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">உலகின் தலைசிறந்த உளவுத்துறை என்று சொல்லிக் கொள்ளும் ஐஎஸ்ஐ அவரிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறது. இதுவரை ஆனதைப் பார்த்துக்கொள் என்று தெனாவட்டாக இருக்கிறார். ஆவது என்ன என்று நாமும் பார்ப்போம்.</div></div>Arun Ambiehttp://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6493698527091962490.post-82805454682895961052021-09-13T10:45:00.009-07:002021-09-13T10:58:09.296-07:00நாடகக்காதல் உலகில் நாம் நலம் வாழ வழி<p> அனைத்து சாதியினரும் அர்ச்சகர் மாதிரி மாப்பிள்ளையும் ஆக மந்திரி ஆதரிப்பார்னு யோசிச்சிட்டான் போலருக்கு! வெளியே தெரிவதற்கு முன்பே பேசியிருக்க வேண்டுமே என்றால், மந்திரி கூட இருக்கிற ஆளுங்கதான் விஷயத்தை வெளியே விட்டிருப்பான். இந்த பஞ்சாயத்துல இந்தாள் சிக்கிட்டா அந்த மந்திரி இடத்துக்கு வரலாம்னு யோசிச்சிருப்பாங்க. Political killer instinct. </p><span></span><span><a name='more'></a></span><p>அப்பன்ங்கிற கோணத்தில யோசிச்சா பொண்ணை மாடர்னா வளர்க்கிறேனாக்கும்னு பேசுற அப்பனுங்களுக்கு இதுதான் கதி. நம்ம பாரம்பரியம், நம்ம குடும்பம், நம்ம வாழ்க்கை முறை இதெல்லாம் சொல்லிக்கொடுத்து அடிப்படையை பலமானதா வெச்சிட்டு படி, ஊர்சுத்து ஆனா உன் எல்லைக் கோடுகளில் கவனம் வைன்னு அனுப்பணும். ஆனாலும் கண்காணிக்கணும், ஏன்னா நம்ம தெளிவா இருந்தாலும் பேசிக் கரைச்சு மாத்தித் தூக்கிட்டுப் போகன்னே ஒரு கும்பல் அலையும். </p><p>மந்திரி சேகர் பாபு failed as a father. </p><p>ஆனால் இன்னின்ன சாதிப் பெண்களை இன்ன சாதி ஆள் ‘காதலித்துத் திருமணம செய்தால் ஊக்கத் தொகை கொடுப்போம் என்று வாக்குறுதி கொடுத்தார்கள். சொத்தே இல்லாத குடும்பமானாலும் இன்னின்ன சாதிப்பெண்ணைத் தூக்கிவந்து திருமணம் செய்தால் சர்க்கார் காசு 60000₹, அரை பவுன் தங்கம், பாதுகாக்க கூட்டம் என்றெல்லாம் ஆசைகாட்டித் தூண்டிவிட்டார்கள். நாடகக் காதல் வேண்டாம் என்பவனும் ஆசைப்படும் வகையில் வாக்குறுதிகள் வீசப்பட்டன. அதற்கு சேகர்பாபுவும் உடந்தை. பெண்ணைப் பெற்ற எத்தனை பெற்றோரின் மனம் எவ்வளவு பதறியிருக்கும்? இன்னமும் பதற்றத்திலேயே இருப்பவர் எத்தனைபேர்?</p><p>(வேறு யார் வீட்டில் இப்படி நடந்திருந்தாலும் சமூக நீதி காக்க கிளம்பி வந்திருப்பார்கள் இந்த திராவிடப் புள்ளிங்கோ. இந்த சம்பவத்தில் சமூகநீதி பேசினால் சிக்கலாகும் என்று அடக்கி வாசிக்கிறாரகள்.)</p><p>ஏன் என்ற கேள்வி எழாமல் இல்லை. புள்ளிகளை இணைத்துப் பார்த்தால் நாடகக்காதல் கும்பல் திமுகவின் கட்டுப்பாட்டில் இருப்பது என்பது ஒரு தோற்ற மயக்கம் என்று புலப்படும். அவர்களை இயக்குவது அமைதியும் அன்பும் அரிதாரமான மரபுகள் என்பது புலப்படும். இவ்விரண்டும் அடித்துக்கொள்ளாத இடம் உலக வரலாற்றில் மிகக் குறைவு. பாரத மண்ணில் இவற்றுக்குப் பொது எதிரி இந்த மண்ணின் தொல்லறம். </p><p>அவை ஒரளவு வளரும் வரை பொது எதிரியை சமாளிக்க ஆள் வேண்டும். கம்யூனிஸ்டுகள் வர்க்க பேதம் வளர்த்து உதவினார்கள். இந்த மண்ணின் மக்கள் தங்கள் முன்னோர் பற்றிப் புரிந்துகொள்ளாது இருக்க அறிவை மழுங்கடிக்கும் பணியில் கல்விச்சாலைகளை ஆக்கிரமித்த இடதுசார் அறிவுசீவிகள் கைகொடுத்தார்கள். திராவிடக் கும்பல் சாதி/மொழி பேதங்களை வளர்த்து உதவியது.</p><p>முறைகெட்டு வளர்த்த கடா மட்டுமல்ல கடா வளர்ப்பு என்ற முறைமையே முறையற்றுச் செய்தால் மார்பில் முட்டி வீழ்த்தும் என்ற பாடம் இதன் மூலம் படிக்கப்படுவதே யதார்த்தத்தை ஏற்பதாக இருக்கும். இதில் நம் வீட்டுப் பெண்பிள்ளைகளின் பாதுகாப்பு பற்றிய கேள்வி வருகிறது. </p><p>காப்பானா கள்ளனா என்றால் கள்ளனுக்கே அனுகூலம் அதிகம் என்பது நடைமுறை உண்மை. அப்படியானால் காத்துக் கொள்ள என்னதான் வழி? </p><p>நம் குழந்தைகளுக்குச் சிறு வயதில் இருந்தே நம் அறம் சார்ந்த விஷயங்களைச் சொல்லித்தர வேண்டும். குடும்பம் பாரம்பரியம் உள்ளிட்ட விஷயங்கள் கற்றுத்தரப்பட வேண்டும். </p><p><br /></p><p><i><b><span style="color: #2b00fe;">இடதுபுறம் பேசுவோரைக் கண்டால் நீ</span></b></i></p><p><i><b><span style="color: #2b00fe;">கேட்டுக்கொள்ள லாகாது பாப்பா</span></b></i></p><p><i><b><span style="color: #2b00fe;">இகழ்வாகப் பெரியோரை ஏசும் அவரை</span></b></i></p><p><i><b><span style="color: #2b00fe;">இகழ்நதாலும் குற்றமில்லை பாப்பா</span></b></i></p><p><br /></p><p>என்று மனதில் பதியவைப்பது சிறப்பு. </p><p>நான் யார் பெண்ணையும் கையைப் பிடித்து இழுக்கவில்லை. என் பெண்ணை எவனும் கையைப் பிடித்து இழுக்க மாட்டான் என்று யாரும் எண்ணினால் அவர் போல முட்டாள் எவருமில்லை. நீங்கள் சைவர் என்பதால் காட்டுப்புலி உங்களைத் தின்னாமல் இருக்காது. மனிதன் சமூக விலங்கு என்பதை மறந்துவிட வேண்டாம். </p><p>இராணுவத்தில் learn to fight alone என்று கற்றுத்தருவார்கள். யாரும் வராவிட்டாலும் நமக்காக நாம் நின்று போராடத் துணிய வேண்டும். அஃதிலார் இருத்தலின் இல்லாமை நன்று. </p>Arun Ambiehttp://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6493698527091962490.post-76504282626974177942019-11-05T03:50:00.003-08:002022-01-09T01:53:45.150-08:00RCEPயும் நம் அரசின் நிலைப்பாடும்<div style="font-family: Helvetica; font-size: 12px; font-stretch: normal; line-height: normal;">
RCEP கையெழுத்தாகவில்லை. ஏதோ தாங்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக இது நடந்தது என்று காங்கிகள் புளுகுகிறார்கள். </div>
<div style="font-family: Helvetica; font-size: 12px; font-stretch: normal; line-height: normal; min-height: 13.8px;">
<br /></div>
<div style="font-family: Helvetica; font-size: 12px; font-stretch: normal; line-height: normal;">
இதை ஆமோதித்து பல அறிவு சீவிகள் ஐயகோ பியூஷ் கோயல் தலைமையில் பேச்சுவார்த்தைக்கு ஒரு குழு போனதே அது மட்டும் வெற்றி பெற்றிருந்தால் நம் நாடு என்ன ஆகியிருக்கும் என்று கவலைப் படுகிறார்கள். </div>
<div style="font-family: Helvetica; font-size: 12px; font-stretch: normal; line-height: normal; min-height: 13.8px;">
<br /></div>
<div style="font-family: Helvetica; font-size: 12px; font-stretch: normal; line-height: normal;">
கொஞ்சம் வரலாறு பார்ப்போமா?</div>
<div style="font-family: Helvetica; font-size: 12px; font-stretch: normal; line-height: normal; min-height: 13.8px;">
<br /></div>
<div style="font-family: Helvetica; font-size: 12px; font-stretch: normal; line-height: normal;">
RCEP நாடுகளுடனான நமது வணிக பற்றாக்குறை 2004ல் $7 பில்லியனாக இருந்தது. 2014ல் அது $78 பில்லியன் ஆனது. அதாவது இது நமது ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்குமான வித்தியாசம் டாலர் மதிப்பில். நம் ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரித்து, நாம் இறக்குமதிக்குத் தரவேண்டிய பணம் பல மடங்கு உயர்ந்த போது எடுத்த நடவடிக்கை என்ன என்று காங்கிரசார் சொல்லவேண்டும். அந்தக் கால கட்டத்தில் ஆட்சியில் இருந்தது இராகுல காந்தியார் கட்சிதான். பொருளாதார மாமேதை மனமோகனச் சிங்கனார் தான் பிரதமர். சட்டமேதை, ஹார்வேர்ட் எம்பிஏ, இந்திராணி புகழ் பனாசினா நிதியமைச்சர். </div>
<div style="font-family: Helvetica; font-size: 12px; font-stretch: normal; line-height: normal; min-height: 13.8px;">
<br /></div>
<div style="font-family: Helvetica; font-size: 12px; font-stretch: normal; line-height: normal;">
2010ல் ASEAN நாடுகளுடன் தடையற்ற வணிக ஒப்பந்தம் போடப்பட்டது. (மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா, கம்போடியா, பிலிப்பைன்ஸ், பர்மா, புருனே, வியட்னாம், லாவோஸ் ஆகிய 10 நாடுகள்)</div>
<div style="font-family: Helvetica; font-size: 12px; font-stretch: normal; line-height: normal; min-height: 13.8px;">
<br /></div>
<div style="font-family: Helvetica; font-size: 12px; font-stretch: normal; line-height: normal;">
2010ல் தென் கொரியாவுடன் தடையற்ற வணிக ஒப்பந்தம் போடப்பட்டது. </div>
<div style="font-family: Helvetica; font-size: 12px; font-stretch: normal; line-height: normal; min-height: 13.8px;">
<br /></div>
<div style="font-family: Helvetica; font-size: 12px; font-stretch: normal; line-height: normal;">
2011ல் மலேசியாவுடன் தடையற்ற வணிக ஒப்பந்தம் போடப்பட்டது. (ASEAN ஒப்பந்தம் இருக்கும் போது இது எதற்கு தனியாக?)</div>
<div style="font-family: Helvetica; font-size: 12px; font-stretch: normal; line-height: normal; min-height: 13.8px;">
<br /></div>
<div style="font-family: Helvetica; font-size: 12px; font-stretch: normal; line-height: normal;">
2011ல் ஜப்பானுடன் தடையற்ற வணிக ஒப்பந்தம் போடப்பட்டது. </div>
<div style="font-family: Helvetica; font-size: 12px; font-stretch: normal; line-height: normal; min-height: 13.8px;">
<br /></div>
<div style="font-family: Helvetica; font-size: 12px; font-stretch: normal; line-height: normal;">
2011-12ல் சீனாவுடன் தடையற்ற வணிகம் மற்றும் RCEP பேச்சுவார்த்தை நடத்தியே தீர வேண்டும் என்று பேச்சுவார்த்தை மேசைக்குப் போய் பிடிவாதமாக உட்கார்ந்து கொண்டது அன்றைய ஐமுகூ அரசு.</div>
<div style="font-family: Helvetica; font-size: 12px; font-stretch: normal; line-height: normal; min-height: 13.8px;">
<br /></div>
<div style="font-family: Helvetica; font-size: 12px; font-stretch: normal; line-height: normal;">
இதில் சேராவிட்டால் ஆசியாவில் தனிமைப்பட்டு நிற்போம் என்று காரணம் சொன்னவர்கள் பசியும் ம.மோ.சிங்கனாரும்.</div>
<div style="font-family: Helvetica; font-size: 12px; font-stretch: normal; line-height: normal; min-height: 13.8px;">
<br /></div>
<div style="font-family: Helvetica; font-size: 12px; font-stretch: normal; line-height: normal;">
சீனாவோ இந்தியா கையெழுத்துப் போட்டால் அதை வைத்து மற்ற சிறு குறு நாடுகளையும் மிரட்டி தன்னிடம் தேங்கியுள்ள பொருட்களை தள்ளிவிடலாம் என்று இருந்தது. அமெரிக்காவுடனான வணிகச் சண்டையில் சீனாவுக்கு பலத்த அடி. </div>
<div style="font-family: Helvetica; font-size: 12px; font-stretch: normal; line-height: normal; min-height: 13.8px;">
<br /></div>
<div style="font-family: Helvetica; font-size: 12px; font-stretch: normal; line-height: normal;">
ட்ரம்ப் MAGA என்று சொல்லி தொழில்கள் அமெரிக்காவுக்கு வரவேண்டும், அங்குள்ளோருக்கு வேலை வேண்டும் என்கிறார். மோடி Make in India என்று கம்பெனிகளை உள்ளே அழைக்கிறார். </div>
<div style="font-family: Helvetica; font-size: 12px; font-stretch: normal; line-height: normal; min-height: 13.8px;">
<br /></div>
<div style="font-family: Helvetica; font-size: 12px; font-stretch: normal; line-height: normal;">
ஆனால் இன்று: </div>
<div style="font-family: Helvetica; font-size: 12px; font-stretch: normal; line-height: normal; min-height: 13.8px;">
<br /></div>
<div style="font-family: Helvetica; font-size: 12px; font-stretch: normal; line-height: normal;">
சீனம் தன் இளவட்டத் தலைமுறையை இழந்து வருகிறது. இனி அடித்து வேலை வாங்க அங்கே ஆள் குறைவு. ராணுவமா, கம்பெனி வேலையா என்று இளவயதினருக்குச் சொல்ல வேண்டிய நிலை அரசுக்கு. வெளிநாடுகளை மிரட்டி ரவுடித்தனம் செய்ய இனி முடியாது. ட்ரம்ப் போடா என்கிறார். மோடி இளநீர் எல்லாம் கொடுத்து கிளம்புங்க என்கிறார்.</div>
<div style="font-family: Helvetica; font-size: 12px; font-stretch: normal; line-height: normal; min-height: 13.8px;">
<br /></div>
<div style="font-family: Helvetica; font-size: 12px; font-stretch: normal; line-height: normal;">
இன்று தாய்லாந்து போய் பேசி கையெழுத்தெல்லாம் கிடையாது என்று சொல்லிவிட்டு, நான் சொல்லும் விவரங்களைப் பேசி எல்லா நாடுகளுக்கும் நல்லதாக முடிக்கப் பார்க்கலாம். இல்லாவிட்டால் பேச்சும் இல்லை வார்த்தையும் இல்லை. என் சந்தையில் நீ வியாபாரம் செய்ய நான் சொல்கிறபடி வா. நீ சொல்வதை அப்படியே நிறைவேற்ற வேறு ஆளைப்பார் என்று சொல்லியிருக்கிறார் மோடி. </div>
<div style="font-family: Helvetica; font-size: 12px; font-stretch: normal; line-height: normal; min-height: 13.8px;">
<br /></div>
<div style="font-family: Helvetica; font-size: 12px; font-stretch: normal; line-height: normal;">
சந்தை வேண்டும் என்போர் வருவார்கள். </div>
<div style="font-family: Helvetica; font-size: 12px; font-stretch: normal; line-height: normal; min-height: 13.8px;">
<br /></div>
<div style="font-family: Helvetica; font-size: 12px; font-stretch: normal; line-height: normal;">
ஆனாலும் நாம் மிகுந்த எச்சரிக்கை கொள்ள வேண்டிய தருணம் இது. சீனம் தன் வணிகத்தை முன்னெடுக்க எதுவும் செய்யும். எதுவும்! என்ன ஏதென்று தெளிவில்லாமல் கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் நம்மூரில் அதிகம். </div>
<div style="font-family: Helvetica; font-size: 12px; font-stretch: normal; line-height: normal; min-height: 13.8px;">
<br /></div>
<div style="font-family: Helvetica; font-size: 12px; font-stretch: normal; line-height: normal;">
கடல்சார் பாதுகாப்பு பலப்பட வேண்டும். இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட சிறு நாடுகள் வழி வரும் சரக்கு போக்குவரத்து தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். சீனன் சுற்றிக் கொண்டு வர வாய்ப்புண்டு. </div>
<div style="font-family: Helvetica; font-size: 12px; font-stretch: normal; line-height: normal; min-height: 13.8px;">
<br /></div>
<div style="font-family: Helvetica; font-size: 12px; font-stretch: normal; line-height: normal;">
சீனச் சொம்புகள் பத்திரிகைகள் வாயிலாக ஏற்படுத்தும் இரைச்சலுக்கு தக்க பதிலடிகள் தரப்பட வேண்டும். </div>
<div style="font-family: Helvetica; font-size: 12px; font-stretch: normal; line-height: normal; min-height: 13.8px;">
<br /></div>
<br />
<div style="font-family: Helvetica; font-size: 12px; font-stretch: normal; line-height: normal;">
இன்னும் ஆட்டம் அதிக்கரிக்கும் என்றே தெரிகிறது. ஆகட்டும் பார்க்கலாம். ஆட்டத்தின் முடிவிலே! </div>
Arun Ambiehttp://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6493698527091962490.post-7544321516658567602018-12-31T10:01:00.001-08:002018-12-31T10:01:45.706-08:00இரண்டு புள்ளி பூஜ்ஜியம் - ஒரு பார்வைகதை என்ன என்றால் பெரிதாக ஏதுமில்லை. இந்தியன், அந்நியன் உள்ளிட்ட சங்கர் படங்களின் அடிப்படை. தான் விரும்பும் நேசிக்கும் ஒரு விஷயத்தை சமூகம் மதிக்காது போக கோபத்தில் வன்முறை கொண்டு தன் நியாயத்தை நிறுவ முற்படும் போராளியின் கதை. இதிலே கொஞ்சம் ஆவி விஷயங்களுக்கு ஆரா, மைக்ரோ ஃபோடான் என்று அறிவியல் சார்ந்த பெயர்களைக் கொடுத்துக் கதை விட்டிருக்கிறார்கள்.<br />
<br />
சென்னையில் (மட்டும்) திடீர் திடீரென்று செல்ஃபோன்கள் பறந்து காணாமல் போகின்றன. மக்கள் கூட்டம் கூட்டமாக காவல்துறையில் புகார் தருகிறார்கள். மந்திரி செல்ஃபோனும் பறந்து காணாமல் போகிறது. ஆனால் இது எல்லாம் சென்னையில் மட்டுமே நடக்கிறது. ஆந்திரா எல்லை என்ற போர்டைத் தாண்டி எதுவும் இல்லை. விழுப்புரத்துக்குத் தெற்கேயும் ஒன்றுமில்லை. செல்ஃபோன் கதிரியக்கமுமா என்று கேட்கலாம். பதில்?<br />
<br />
அரசு, முந்தைய எந்திரன் படத்தில் சிட்டி ரோபோவை உருவாக்கிய டாக்டர் வசீகரன் (ரஜினி) உள்ளிட்ட பல விஞ்ஞானிகளை அழைத்து விவரம் கேட்கிறது. (அவர் தன் அழகிய ரோபோ உதவியாளினி நிலாவுடன் (எமி ஜாக்சன்) மீட்டிங்கிற்கு வருகிறார்). முந்தைய எந்திரன் படத்தில் சிட்டி ரோபோவை வில்லனாக்கி சிட்டி கையாலே மாண்ட வில்லன் விஞ்ஞானியின் மகன் எதோ குடும்ப பிசினஸ் போல அப்பா செத்ததும் அதே அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் சீனியர் டைரக்டர் ஆகிறார் என்பது கருணாநிதி குடும்பம் திமுக தலைமைக்கு வருவது போலவே இருக்கிறது. அதிலும் வசீகரன் ஐஎஸ்ஆர்ஓ டேட்டா, நாசா ரிப்போர்ட் என்றெல்லாம் பேசி சிட்டியை மீண்டும் கொண்டு வர உத்தேசிக்கிறார். வில்லன் விஞ்ஞானியின் மகன் விஞ்ஞானி சிட்டியால் பிரச்சினை வரும் என்று சொல்லி சிக்கல் செய்கிறார். அப்பா சாவுக்கு பழி வாங்குவேன் என்கிறார். உள்துறை மந்திரியும் சிட்டியை மீண்டும் கொண்டுவர மறுக்கிறார்.<br />
<br />
அந்நியன் படத்தில் வரும் கருட புராண தண்டனைகள் போலவே இந்தப் படத்திலும் குரூரமாக சிலர் இறக்கிறார்கள். ஆனால் செல்ஃபோன் மூலமாக மட்டுமே. வேறு வஸ்துக்கள் படத்தில் கொலைபாதகம் செய்வதில்லை. மந்திரி உத்தரவுப்படி ராணுவம் வருகிறது. ஆனால் எதுவும் செய்ய முடியவில்லை. தொலைபேசித்துறை மந்திரியும் கொடூரமாக இறந்தவுடன் உள்துறை மந்திரி சிட்டியை உயிர்பிக்க உத்தரவு தருகிறார். இல்லை, இல்லை.... வசீகரனிடம் கெஞ்சிக்கூத்தாடி தாஜா செய்கிறார். சிட்டி ரோபோ மீண்டும் வருகிறது. சம்பந்தப்பட்ட ஃபோன் கூட்டத்தோடு சண்டை போடுகிறது.<br />
<br />
இந்த செல்ஃபோன் பறவை சிட்டியுடனும் ராணுவத்துடனும் சண்டையிடும் கட்டங்களில் காட்ஜில்லா படத்தில் ராணுவம் காட்ஜில்லாவை துரத்த ஆனால் காட்ஜில்லா ராணுவ தளவாடங்களைச் சுக்குநூறாக்கும் காட்சிகள், மாற்றுப்பாதைகளில் புகுந்து வந்து ராணுவ வண்டிகளை சிதறடிக்கும் காட்சிகள் நினைவுக்கு வருவது என் நினைவுத் திறனை மெச்சிக் கொள்ளத் தோன்றுகிறது. அதே நேரம் சூடு அதிகம் தெரிகிறது. கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் சுட்ட சூட்டைச் சற்றே குளிர்வித்திருக்கலாம். குளிர் கால ரிலீஸ் என்பதால் சூட்டோடு விட்டுவிட்டார்களோ என்னவோ! சென்னையில் போருரிலும் டி நகரிலும் நடக்கும் இந்தச் சண்டைக் காட்சிகளை திடீரென்று ஆளரவமற்ற ஒரு பகுதிக்குக் கொண்டு போய் ஒரு ஆளில்லா அணு ஆராய்ச்சி மையத்தில் சிட்டிக்கு பேட்டரி டவுன் என்று நிறுத்துகிறார்கள். வில்லப்பறவை அங்கிருக்கும் ஒரு சிக்னல் எமிட்டர் கதிர்களுக்குப் பயந்து பறந்துவிடுகிறது. அந்த இடம் செக்டார் டூ என்று நொய்டா, சண்டிகட் பக்கம் காட்டுகிறார்கள். சைஃபை என்ற விளம்பரத்தோடு வந்தாலும் தமிழ்ச்சினிமா அப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது.<br />
<br />
அந்தப் பறவை சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகளை ஆராய்ந்து அது ஒரு மனிதனின் சக்தி என்று வசீகரன் கண்டுபிடிக்கிறார். அந்த இடம் விண்வெளிக்கு சிக்னல் அனுப்பும் இடம் என்கிறார்கள். The Battleship படம் நினைவுக்கு வருகிறது. பாசிடிவ் சிக்னல் மட்டுமே அனுப்பி விண்வெளியில் உள்ள பாசிடிவ் சக்திகளை மட்டும் பூமியின் பக்கம் ஈர்ப்பதே நோக்கமாம். விஞ்ஞானம் பேசுவார்கள் என்று பார்த்தால் ரெய்கி, பிராணிக் ஹீலிங், ஃபெங்ஷுய் வகையறா ஆட்களைப் போல அந்த விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானியைப் பேச வைத்துள்ளார்கள். இந்த பாசிடிவ் நெகடிவ் சக்திகளை மைக்ரோ ஃபோடான் என்று ஒரு பெயர் சொல்லி எமிட்டர் மூலம் பறவையின் எதிர்மறை சக்தியை சமன் செய்ய முடிவெடுக்கிறார் வசீகரன். சிட்டி உதவியுடன் சமன் செய்ய போராடும் போது ஃப்லாஷ்பேக் போட்டு ஏன் இப்படி என்று சொல்கிறார்கள்.<br />
<br />
<img alt="Akshay Kumar, Rajinikanth, and Amy Jackson in 2.0 (2018)" class="pswp__img" height="320" src="https://m.media-amazon.com/images/M/MV5BOGNhMWE2YzktYzU0Yi00OGFlLTlhYzMtODBiOGFiZTM1YjI1XkEyXkFqcGdeQXVyODIwMDI1NjM@._V1_QL50_.jpg" style="display: block;" width="227" /><br />
பறவைகள் மீது மிகுந்த அன்பு கொண்ட ஒருவர் பறவையியல் பேராசிரியராக இருக்கிறார். பக்ஷிராஜன் என்று பெயர். திருக்கழுகுன்றத்தில் வசிப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் ஏதோ மலைப் பிரதேசத்தில் வசிப்பது போல எந்நேரமும் ஸ்வெட்டர் போட்டுக் கொண்டே இருக்கிறார். ஆழ்வார் பாசுரத்தில் ஒரு வரி சொல்கிறார். அதையே வைத்து மாணவர்களுக்கு பறவையியல் வகுப்பு நடத்துகிறார். அதிலும் பெரிதாக எந்த விளக்கமோ விவரமோ இல்லை, பாசுரம் குறித்தும் பறவைகள் குறித்தும். சிட்டுக்குருவி வீட்டுக்குள் வரவில்லை, வேடந்தாங்கலுக்குப் பறவைகள் வரவில்லை போன்ற கவலைகளை மாணவர்கள் சொல்லும் போது சோகமாக பேசாமல் இருக்கிறார்.<br />
<br />
செல்ஃபோன் வந்த பிறகுதான் பறவைகளின் எண்ணிக்கை குறைகிறது. அதை சரிசெய்ய செல்ஃபோன் டவர்கள் 90%தை ஏறக்கட்ட வேண்டும் என்று செமினார் நடத்துகிறார். செல்ஃபோன் சேவை வழங்கும் கம்பெனி வாசலில் பறவைகளைக் கொல்லாதே என்று அட்டை பிடித்துக் கோஷம் போடுகிறார். செல்ஃபோன் விற்கும் கடை வாசலில் ஒவ்வொரு ஃபோனும் குருவியின் சவப்பெட்டி என்று கூவுகிறார். வியாபாரிகள் இவரைத் துரத்திவிடுகிறார்கள். நிலத்தில் செல்ஃபோன் டவர் வைக்கவிடும் விவசாயியிடம் பறவைகளைக் கொல்பவர்களுக்கு இடம் தருகிறாயே என்று சண்டை போடுகிறார். ஒரு eccentric நிலையில் இருந்தே இந்த விஷயத்தை அணுகியும் பேசியும் வருகிறார். நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு அங்கே இவரது வாதங்களுக்கு அறிவியல் பூர்வமான நிரூபணங்களோ, குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களோ இல்லை என்று வழக்கில் தோற்கிறார். நம்மாழ்வார் பாசுரத்தின் அதே ஒரு வரியைச் சொல்லியபடி செல்ஃபோன் டவரில் தூக்கில் தொங்கிவிடுகிறார்.<br />
<br />
வசனம் எழுதியது மூன்று பேர் (ஜெயமோகன், சங்கர், தொழில்நுட்ப விஷயங்களுக்கு கார்க்கி) என்ற நிலையில் வசன உச்சரிப்பிலாவது ஜெயமோகன் கொஞ்சம் உறுத்துக் காட்டியிருக்கலாம். குறைந்தது அந்த நம்மாழ்வார் பாசுரம் ஒரே ஒருவரி சொல்வதில் மட்டுமாவது டப்பிங் பேசியவரை உச்சரிப்பு விஷயத்தில் வேலை வாங்கியிருக்கலாம்.<br />
<br />
இறந்த உடலில் இருந்து நெகடிவ் ஆரா மட்டும் வரும். உயிருடன் இருக்கும் உடல்களில் பாசிடிவ் ஆரா மட்டும் இருக்கும். எதிர்மறை ஆராவை மைக்ரோ ஃபோடான்+ கதிர்களைக் கொண்டு சமன் செய்யலாம், இது விஞ்ஞானம் என்று சொல்கிறார்கள். அடக்கப்பட்ட ஆவியை (ஆரா) எந்திரன் படத்தில் இறந்துபோன வில்லன் விஞ்ஞானியின் மகன் விஞ்ஞானி திறந்து விடுகிறார். அது வந்து வசீகரனின் உடலில் புகுந்து கொள்கிறது.<br />
<br />
செத்தவர்களின் நெகடிவ் ஆரா இப்படி உயிருள்ளவர்களின் உடல்களில் புகுந்துகொள்ள விஞ்ஞான விளக்கம் ஏதும் தருவார்களா என்று பார்த்தால் எருமைப் பால் அடர்த்தி அதிகம், கேனின் கீழே இருக்கும்; பசும்பால் அடர்த்தி கம்மி, கேனின் மேலே இருக்கும், ஆக ஒரே கேனில் ரெண்டு பால் என்று கவுண்டமணி முன்பொரு படத்தில் பேசிய விஞ்ஞான ரீதியிலான விளக்கம் கூட தரவில்லை.<br />
<br />
இந்நிலையில் டி.நகரில் அந்நியன் படத்தில் அம்பி அந்நியன் மாறி மாறி வரும் காட்சியை வசீகரன் பக்ஷிராஜன் மாறி மாறி வருவது போல வைத்து கொஞ்ச நேரம் ஓட்டுகிறார்கள். சிட்டியை பார்ட் பார்ட்டாகக் கழட்டி வீசுகிறது வசீகரன், பக்ஷிராஜன் கூட்டணி. சிட்டியின் கால்களைப் பிய்த்துப் போட்டு யுவர் கால் இஸ் டிஸ்கனெக்டட் ஹெஹ்ஹெஹ்ஹே என்று மொக்கை போடுகிறார் பக்ஷிராஜன் (ஜெயமோகன்? சங்கர்? கார்க்கி?). நிலா ரோபோ சிட்டி ரோபோவை மறுபடியும் பழைய வில்லத்தனமான ரெட் சிப் வைத்து அசெம்பிள் செய்து ஆக்டிவேட் செய்கிறது. மேலும் பல சிட்டிக்களைச் செய்து எந்திரன் படம் போலவே கும்பலாக சிட்டி ரோபோக்கள் வருகின்றன.<br />
<br />
விடுவிக்கப்பட்ட பக்ஷிராஜன் ஆவி(ஆரா) ஒரு ஸ்டேடியத்தில் புகுந்து அங்கிருக்கும் மொத்தப் பேரையும் செல்ஃபோன் ரேடியெஷன் வைத்துக் கொல்லப்போவதாக மிரட்டுகிறது. சாம்பிளுக்கு தன்னை விடுவித்த வில்லனை கொன்றுவிடுகிறது. மற்றவர்களைக் கொல்வதற்குள் சிட்டி அங்கே வந்து சேரந்து வசீகரன் உடலை வெளிப்படுத்தும் பக்ஷிராஜன் ஆவியை (ஆராவை) எந்திரன் படத்தின் மேஏஏஏ மேனரிசத்துடன் எதிர்கொள்கிறது சிட்டி.<br />
<br />
அங்கேயும் பக்ஷிராஜனுடன் சண்டை போடும் போது சிட்டிக்கு பேட்டரி போய்விடுகிறது. இவ்வளவு கோடிகள் செலவு செய்து எடுத்த படத்தில் சிட்டி ரோபோவுக்கு ஒரு ட்யூரசெல் பேட்டரி வாங்கி மாட்டிவிட்டிருக்கலாம். சார்ஜ் கூடக் கொஞ்ச நேரம் வந்திருக்கும். அடுத்த படத்திலாவது சங்கர் யோசிப்பாராக. இல்லை என்றால் கடிகாரங்களுக்கு வருவது போல அணு சக்தி பேட்டரி மாட்டிவிடலாம். கூடங்குள உதயகுமார் கோர்டுக்குப் போகாமலிருக்க வேண்டும்.<br />
<br />
3.0 குட்டி என்று ஒரு மினியேச்சர் ரோபோ காட்டுகிறார்கள். புறாக்களின் மீது பறந்து வந்து புறாவைக் கொல்வேன் என்று பக்ஷிராஜனை மிரட்டி சிட்டிக்கு சார்ஜ் போடுகிறது. பிறகு அதுவும் பல மினியேச்சர் ரோபோக்களைக் கூட்டமாகச் சேர்த்துக் கொண்டு செல்ஃபோன் வடிவெடுத்து ப்க்ஷிராஜன் கட்டுப்பாட்டில் உள்ள செல்ஃபோன்களை வெடிக்க வைக்கிறது. சண்டையில் சிட்டி துப்பாக்கியால் சுட பக்ஷிராஜன் ஆவி (ஆரா, ஆரா) வசீகரன் உடலை விட்டுவிடுகிறது. சென்னை ஸ்டேடியத்தில் இருந்து திடீரென்று முன்பு போன செக்டார் டூ போய் பாழடைந்த முன்னாள் அணு உலை, வேற்றுக்கிரகவாசிகளுக்கு சிக்னல் அனுப்பும் இடத்தில் சிட்டி ரோபோ நுழைந்து அங்கிருக்கும் ஆபீசரை அடித்துப் போட்டுவிட்டு பக்ஷிராஜனை அடக்குகிறது.<br />
<br />
திரைப்படத்தின் இறுதியில் எழுத்துப்போட்டு முடிப்பதை வசீகரன் அட்வைஸ் செய்யும் காட்சிகளுக்கு நடுவே செய்கிறார்கள். சரி முடிந்தது என்று எழுந்தால் எந்திர லோகத்து சுந்தரியே என்று ஒரு பாட்டுப் போடுகிறார்கள். (எமி ஜாக்சனை ஒரு பாட்டுக்காவது ஆடவிடாமல் விட்டால் எல்லிஸ் டங்கன் குற்றமாகுமோ!?) பிறகு சாவகாசமாக 3.0 குட்டியை வசீகரனுக்கு சுய அறிமுகம் செய்யவைத்து படத்தை முடிக்கிறார்கள், ஒரு வழியாக.<br />
<br />
2.0 படத்தில் அந்நியன் படத்தின் தாக்கம் சற்றே தூக்கலாக இருக்கிறது. வேறு சில படங்களின் தாக்கமும் அப்பட்டமாகத் தெரிகிறது. சங்கர் வேறு களம் யோசிக்கலாம் அல்லது அறிவியல் தெரிந்தவர்களைக் கொண்டு கதை செய்யலாம். ஆவி சம்பந்தப்பட்ட சமாச்சாரங்கள் நல்லெண்ணம், நல்ல நோக்கம் எல்லாம் பேசினாலும் நிம்மதி தராது என்பது அடிநாதமாக ஒலிக்கிறது. நேரடியாகச் சொல்ல முடியாமல் ஆரா பூரா என்று பீலா விட்டிருக்கிறார்கள்.<br />
<br />
வைரமுத்து என்று ஒரு மந்திரிக்குப் பெயரிட்டு மலையாள வாடையுடன் தமிழ் பறைய விட்டிருக்கிறார்கள். என்ன கோபமோ? ஆண்டாளுக்கே வெளிச்சம்!! தமிழ் டிவிக்களின் சகலகலா விவாத நிபுணர் மயில்சாமி மந்திரிக்குப் பிஏவாக இந்தப் படத்தில் வருகிறார். அடுத்த படத்தில் மந்திரி பிரமோஷன் கிடைக்க வாழ்த்துக்கள்.<br />
<br />
ஆங்காங்கே எடுத்தாண்ட மணிரத்னம் பட வசனம், வடிவேலு காமெடி வசனம் ஆகியவற்றுக்கு ஒரு நன்றி அட்டை காட்டியிருக்கலாம். எழுத்தாவது ஓட்டியிருக்கலாம். சுஜாதா இல்லாத குறை நன்றாகத் தெரிகிறது. திரைக்கதை சுவையற்ற ஜவ்வுமிட்டாய், வசனம் மொக்கை, கதை.... விட்டிருக்கிறார்கள். படமெடுத்த மூன்றாண்டுகளில் நிறைய விடுமுறைகள் எடுத்திருப்பார்கள் போலத் தெரிகிறது. ஆனால் கடந்த இரு பா.ரஞ்சித் குதறல்களை benchmark என்று கொண்டால் ரஜினிக்கு 2.0 வானளாவிய பரவாயில்லை ரகம்.<br />
<br />
முதல் பாதி முரட்டு ரசிகர்களுக்கானது. இரண்டாவது பாதி குழந்தை அறிவுடன் பார்த்தால் குதூகலிக்கலாம்.Arun Ambiehttp://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6493698527091962490.post-90880896907858650982017-05-13T06:55:00.002-07:002017-05-13T06:55:56.049-07:00வாழ்க்கை வாழ்வதறகே!+2 தேர்வு எழுதி முடிவுகள் தெரியப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். 10ஆவது, +2 வெற்றி, தோல்வி என்பது கவலைப்படத்தக்க ஒரு விஷயமில்லை என்பதை நீட் தேர்வு நிரூபித்துவிட்டது. இங்கே தொண்ணூறு தொட்டவன் அங்கே திணறி நிற்கிறான். நீட் பற்றி நிறையப்பேர் நிறையச் சொல்லிவிட்டார்கள். ஆகவே அது பற்றி நான் ஏதும் பேசப் போவதில்லை.<br />
<br />
கல்வித்திட்டம், பாடங்கள் கற்றுத்தரப்படும் விதம் இவற்றில் குறைகள் எண்ணிலடங்காது இருந்தாலும் இங்கே அடுத்த கட்ட நகர்வுக்கு குறைந்த பட்சத் தேர்ச்சி ஒரு அச்சாரம் என்பதை மனதில் கொள்ளுங்கள். தேர்ச்சி தேவை. முதல் முயற்சியில் வந்தால் மகிழ்ச்சி. வராவிட்டால் மேலும் சற்றே முயன்று பெற்றுவிடலாம். கம்பசூத்திரம் இல்லை நம் பாடத்திட்டம்.<br />
<br />
<a name='more'></a><br /><br />
ரேங்க் இல்லை என்றாலும் மார்க் என்ற எண் கொண்டு உங்களைப் பந்தயக் குதிரையாக நடத்தும் மனோபாவத்தை இந்தச் சமுதாயத்தில் உள்ளவர்கள் விடமாட்டார்கள். நீ எப்படியாவது 95 மார்க் எடுத்தே ஆகவேண்டும் என்று யார் பேசினாலும் அவர்கள் எந்த வகையிலும் நம் முன்னேற்றத்துக்கு உதவ லாயக்கற்றவர்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள். இவர்களைப் புறந்தள்ளுவதே முன்செல்லும் வழி. இவர்களிடம் பேசினால் கூட தன்னம்பிக்கை முழுதும் போய்விடவே வாய்ப்பு அதிகம்.<br />
<br />
(10ஆவதிலும, +2விலும், பட்டப்படிப்புகளிலும் 95,98 என்று மதிப்பெண் பெற்றவர்கள் 70% பெற்று average என்று ஏளனப் பார்வை பார்க்கப்பட்ட என்னுடன் ஒரே கம்பெனியில் ஒரே பணியைச் செய்கிறார்கள். ஊதியமும் வித்தியாசம் ஏதுமில்லை.)<br />
<br />
உங்கள் மீது அக்கறை கொண்ட, கல்வி பற்றிய விவரங்கள் புரிந்தவர்களிடம் பேசுங்கள். எதிர்காலம் ஐடி துறை என்று யாராவது சொன்னால் நான் என் பெற்றோர் திட்டினாலும் பரவாயில்லை என்று செருப்பைக் கழற்றுவேன். உங்கள் வசதிப்படி இந்த மாதிரி செம்மறி ஆடுகளைக் கையாளுங்கள். ஐடி சகாப்தம் முடிந்து போய் மாமாங்கம் நெருங்குகிறது. ஜாக்கிரதை!<br />
<br />
We don't have employable engineers among the huge population of engineering graduates என்று IIT Deanகள் உள்ளிட்ட பல கல்வியாளர்களும், தொழில்துறைத் தலைவர்களும் முகத்தில் அறைவது கிட்டத்தட்ட 2010ல் இருந்து நடக்கிறது. ஆனாலும் நம் கல்வித்துறை மாற்றங்கள் இப்போது தான் பிள்ளையார் சுழிக்குப் பேனா திறந்த நிலையில் உள்ளன.<br />
<br />
நிற்க!<br />
<br />
பொறியியல் ஆர்வம் இருப்போருக்கு Civil engineeringஐ முதல் தேர்வாக இருக்கட்டும். Mechanical engineeringல் தொய்வின்றிப் பணிகள் கிட்டும் என்று விவரம் அறிந்தோர் சொல்கிறார்கள். Electronics, communication அல்லது IT என்றால் networking, cyber security போன்ற துறைகளில் அப்பழுக்கற்ற நிபுணத்துவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். ஒரே மாதத்தில் உன்னை SAP, JAVA இன்னபிற மென்பொருள் நுட்பங்களில் நிபுணன் ஆக்குவேன் என்ற வாக்குறுதிகளைத் தரும் நோட்டீசுகள் கடும் தண்ணீர்ப் பஞ்ச காலங்களில் துடைத்துக் கொள்ள உதவும்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiDFI8rzGFzIplrfTwFjIrSFZIrzdo1lIhzfCFHUtsofULCvClq3wrJSeuAeCMuuL6aMbjxtYunb6S6odLR-B1RQsPPwfK_k-SR5k-entd6hIlkQiJfApDs_sD4HXxBJgktQvzE1tZQ/s1600/images+%25285%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiDFI8rzGFzIplrfTwFjIrSFZIrzdo1lIhzfCFHUtsofULCvClq3wrJSeuAeCMuuL6aMbjxtYunb6S6odLR-B1RQsPPwfK_k-SR5k-entd6hIlkQiJfApDs_sD4HXxBJgktQvzE1tZQ/s1600/images+%25285%2529.jpg" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
B.Sc Mathematics என்னைப் பொறுத்தவரை என்றும் அழிவற்றது. M.Sc இன்னும் நல்லது. கணிதத்தில் நிபுணர்கள் எங்கும் வரவேற்கப்படுவார்கள். இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற B.Sc பட்டங்கள் நீங்கள் வளரத்துக் கொள்ளும் திறமைக்கேற்ப எதிர்கால வளர்ச்சிக்கு முதல்படி.<br />
<br />
B.Com உள்ளிட்ட கலைக்கல்லூரிகளில் கற்றுத்தரப்படும் மொழி, பொருளாதார, வரலாற்றுப் பட்டப்படிப்புகளும் இதே விதம்தான். நீங்கள் வளரத்துக் கொள்ளும் திறமைக்கேற்ப எதிர்கால வளர்ச்சிக்கு இந்த Bachelor's degreeக்கள் முதல்படி.<br />
<br />
எதுவானாலும் மாறிவரும் சூழலுக்கேற்ப மாறிக்கொள்ளவும், நம்மை update செய்து கொள்ளவும் தயாராக இருப்பதே நல்வாழ்வுக்கு வழி. "அந்தக்கலத்து SSLC... எனக்கென்ன கொறை வந்துச்சு?" என்ற கேள்வி முடக்கத்தின் தொடக்கம். அவர்களுக்குப் புரிய வைப்பதை பிறகு பார்த்துக் கொள்ளலாம். நாம் நகர்வது முக்கியம். நின்று பேசினால் சிலர் நம்மைத் தேக்கிவிடும் அபாயமும் உண்டு.<br />
<br />
நிற்க!<br />
<br />
சமூக சேவை என்று ஒரு குழு கிளம்புவார்கள். நல்லது. ஆனால் எச்சரிக்கை அவசியம். நிஜமாகவே தொண்டு செய்யும் அமைப்புகளில் சேர்த்து கொள்ளலாம். விடுமுறை நாட்களில் மட்டும் போய்வரலாம். சமூக சேவையை முழு நேரம் செய்தால் நம் எதிர்காலம் அதிலேயே போய்விடும். படித்து, வேலைக்குப் போய்த் தன்னையும், சார்ந்த உறவுகளையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு இருப்பவர்களுக்கு சமூக சேவை முழுநேர வேலையாவது வேலைக்காகாது.<br />
<br />
உங்கள் பாட்டனார் கோடிகளில் சொத்து வைத்திருந்தாலும் பாகப் பிரிவினைகள் போக உங்கள் தகப்பனாருக்கே சில, பல லட்சங்கள்தான் தேறியிருக்கும். ஆகவே இந்தப் பழம்பெருமை பீற்றும் பழக்கமிருந்தால் விட்டுவடுங்கள். அந்தப் பழக்கத்தை விடாதவர்களையும் விட்டுவிடுங்கள். பழம்பெருமை முன்னேற்றத்துக்கு முதல் எதிரி.<br />
<br />
மொழி மிக முக்கியம். தொழில்நுட்பம் நன்றாகத் தெரிந்திருத்தும் தெரிந்ததை மற்றவர்க்குப் புரியும்படி சொல்லத் தெரியாமல் அதனால் வாய்ப்புகளை இழந்தவர்கள் பலர். எந்த மொழி படித்தாலும் தெளிவாகப் படித்துக் கொள்வது மிக முக்கியம். தடையின்றி உரையாடத் தேவையான தேர்ச்சி பெறுவது கட்டாயம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgd7mpT9zmFZQLOs8E8YReYo1DOq3qFrrr4TwyaFWM4b9xkR05ddfNO6ZilhPvyPyPFL7Np_w2ob5dLJrx-ZB_FMiK2SqFmzA9tHPvHsCRcJUD6R3FU_KB2EHLyF6Ho0jtlm0q3TdQJ/s1600/images.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgd7mpT9zmFZQLOs8E8YReYo1DOq3qFrrr4TwyaFWM4b9xkR05ddfNO6ZilhPvyPyPFL7Np_w2ob5dLJrx-ZB_FMiK2SqFmzA9tHPvHsCRcJUD6R3FU_KB2EHLyF6Ho0jtlm0q3TdQJ/s1600/images.png" /></a></div>
<br />
சில மொழிகளில் குட்மாரனிங், குட்ஈவினிங், ஹலோ உள்ளிட்ட மிக அடிப்படை வாக்கியங்கள் தெரிந்து கொண்டு எனக்கு இத்தனை மொழிகள் தெரியும் நான் கற்றுத் தருகிறேன் என்று கிளம்புபவர்களை விட்டு விலகுவது முன்னேற விழைவோர்க்கு மிக அவசியம். ஆயிரம் பாடல்களுக்கு அடி தெரிந்து கொள்வதை விட ஒரு செய்யுளைப் படித்துப் புரிந்துகொள்வது உத்தமமான செயல்.<br />
<br />
எது படித்தாலும் ஆழ்ந்து படியுங்கள், துறைசார்ந்த அறிவை எவ்வளவு வளர்த்துக் கொள்ள முடியுமோ வளர்த்துக் கொள்ளுங்கள். கவனம் சிதறாமல் கூர்மையான சிந்தனைத் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்.<br />
<br />
இந்த மூன்றையும் பெற தியானம் உதவும். தியானத்தின் எளிமைப்படுத்தப்பட்ட முறை இறை வழிபாடு. கடவுளின் முன் கைகூப்பி இரண்டு நிமிடங்கள் வேறு சிந்தனை இன்றி நிற்பது மன ஒருமைப்பாட்டின் முதல்படி. படிப்படியாக அதை வளர்த்துக் கொண்டால் தியானம் சுலபம். இப்படி கவனம் சிதறாமை கைவந்தால் வாழ்க்கை வசந்தமன்றி வேறில்லை.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEig_Idawcee14hgsRBp9pFCaZXxEabSBQm_oiODW5uLcr0T3tNUgliXCpC3H-Kk4OrOUQXJgDHPXLb3KCQpnOjzBxQhlJvQLBQ4SOxhS3mqDArfWDJHWOLX4KdVeEEcAFBEBzKQFGSQ/s1600/images+%25284%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEig_Idawcee14hgsRBp9pFCaZXxEabSBQm_oiODW5uLcr0T3tNUgliXCpC3H-Kk4OrOUQXJgDHPXLb3KCQpnOjzBxQhlJvQLBQ4SOxhS3mqDArfWDJHWOLX4KdVeEEcAFBEBzKQFGSQ/s1600/images+%25284%2529.jpg" /></a></div>
<br />
அறிவு எப்படி இருக்க வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டவே முருகப் பெருமான் கையில் வேல் வைத்துள்ளார் என்பர் கற்றறிந்தோர் சிலர். அறிவு என்பது கூர்ந்தும், அகன்றும், ஆழ்ந்தும் இருக்க வேண்டும்.<br />
<br />
வேலோடு வெல்க! நலம் பெருகி வாழ்க!! வந்தே மாதரம்!!!Arun Ambiehttp://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6493698527091962490.post-87722533554214102292016-05-09T19:25:00.003-07:002016-05-09T19:25:47.616-07:00சலுகை - செலவு - வரவுஇருசக்கர வாகனங்களின் விற்பனை சரிந்துவருகிறது. முன்பு போல இரு சக்கர வாகனங்களின் மீதான ஈர்ப்பு குறைந்து வருகிறது. கார்கள் வசதிக்கும் குடும்பத்துடன் செல்வதற்கான ஒப்பீட்டளவிலான கூடுதல் பாதுகாப்பும் கொண்டிருக்கின்றன என்று மக்கள் மத்தியில் ஒரு கருத்து பரவி வருகிறது.<br /><br />மேலும் பலர் high end எனப்படும் உயர்தர இருசக்கர வாகனங்கள் பக்கம் செல்கின்றனர். அதற்கு பெருமை உள்ளிட்ட பல காரணிகள் உண்டு.<br /><br />ஆக இந்த ஸ்கூட்டி, ஆக்டிவா போன்ற சாதாரண ஸ்கூட்டர் வகையறாக்கள் மெல்லச் சரியத் தொடங்கிவிட்டன் என்பதேசந்தை நிலவரம் .<br /><br />இதை எல்லாம் மீறி உற்பத்தி செய்துவரும் low end வாகனங்களை விற்றுத் தள்ள நிறுவனங்கள் செய்யும் சந்தைப்படுத்தல் உத்திதான் “ஸ்கூட்டர் வாங்க மானியம்” என்று பிகாரிலும் தமிழகத்திலும் அரசியல் கட்சிகள் செய்திருக்கும் அறிவிப்பு என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.<br /><br />இதில் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏதுமில்லை. பிரஷாந்த் கிஷோர் பிஹாரில் கொடுத்த திட்டம் இது என்பது உலகறிந்த ரகசியம். பிரஷாந்துக்கும் பிரச்சினையில்லை. அரசியல் கட்சியிடமும் நிறுவனங்களிடமும் ஆலோசகருக்கான கட்டணம் பெற்றுக் கொண்டு போய்விடுவார்,<br /><br />நாட்டுப் பொருளாதாரம் மேலும் மேலும் இலவசங்களைத் தாங்குமா என்பதே இப்போதைய கவலைக்குரிய விஷயம்.<br /><br />கேட்பவர்கள் இதைத்தான் கேட்டார்கள் நான் என்ன செய்ய என்று பிரஷாந்தும் மக்கள் இதையே விரும்புகிறார்கள் அதனால் கொடுத்தோம் என்று அரசியல் கட்சிகளும் பேசிக் கொண்டிருப்பார்கள்.<br /><br />கிரேக்கம் சலுகைக்கான செலவுகளுக்குத் தன் நாட்டின் தீவுப் பகுதிகளை விற்றது போல நாமும் சலுகைகளுக்கான செலவுகள் கட்டுப்படியாகவில்லை என்று எதையாவது விற்கலாம் என்றால் கச்சத்தீவு கூட நம்மிடமில்லையே விற்பதற்கு!!<br /><br />Arun Ambiehttp://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6493698527091962490.post-92065408751203131242016-05-07T01:02:00.003-07:002016-05-07T01:50:53.776-07:00தமிழக சட்டசபைத் தேர்தல் 2016 - ஒரு பார்வை2016 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான ஓட்டத்தில் விலை பேசப்பட்ட, சரியான அடிப்படை இல்லாத பல்வேறு கருத்துக் கணிப்புகள் மக்களைக் குழப்பியிருப்பது உண்மை. <br />
<br />
15 சீட் தேறினால் பெரிய விஷயம் என்றிருந்த திமுக ஒரு 30 - 35 சீட் தேற இது உதவும். அசுர பல மெஜாரிட்டி என்றிருந்த அதிமுக சிலபல சீட்கள் குறையவும் இது உதவலாம். இலவசம் பொங்கி வழிந்தோடும் தேர்தல் அறிக்கை தொங்கு சட்டசபை என்ற திரிசங்கு சொர்க்கத்தைத் தடுக்க உதவ வாய்ப்புண்டு.<br />
<br />
எதிர்க்கட்சிகள் எதுவுமே ஆளுங்கட்சிக்கு எதிராக உருப்படியான ஒரு பிரச்சினையைக் கிளப்பி ஆட்சியின் மீதான அதிருப்தியைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதே <span style="font-family: "georgia" , "times new roman" , serif;"><span style="font-size: small;">anti incumbency</span></span>ஐ முக்கியமாக எதிர்கொள்ளும் அதிமுகவின் பலம்.<br />
<br />
<a name='more'></a><br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0OPNz2xQRYb7F5Nh7TC3yvwu_HNvjCPNOVPkBj7DNnsHhFw8PaMTkKhOfKQBgrL4Vmt9vVa0avZDCcLIkxCm02poTavDZR4EbxCZ_XOZ4K25_CTbv8dW7V_7L5njGwPGPrWTcR-XK/s1600/26-1461645531-karunanidhi-jayalalitha35-600.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0OPNz2xQRYb7F5Nh7TC3yvwu_HNvjCPNOVPkBj7DNnsHhFw8PaMTkKhOfKQBgrL4Vmt9vVa0avZDCcLIkxCm02poTavDZR4EbxCZ_XOZ4K25_CTbv8dW7V_7L5njGwPGPrWTcR-XK/s320/26-1461645531-karunanidhi-jayalalitha35-600.jpg" width="320" /></a><br />
<span id="goog_1550484122"></span><span id="goog_1550484123"></span><br />
ஊழல் குறித்து மட்டுமல்ல, திமுக <span id="goog_1550484124"></span><span id="goog_1550484125"></span>எது பேசினாலும் 176000 கோடில இம்புட்டூண்டு கிள்ளிக் கொடுத்தால் நானே இன்னமும் பேசுவேனே என்ற மனநிலையில் இருந்து மக்கள் மாறவில்லை.<br />
<br />
விஜயகாந்த் வடிவேலு சினிமாவில் பேசுவதைவிடவும் காமெடியாகப் பேசுகிறார். சிரிப்பு மூட்டவே அவரைப் பேச வைக்கிறார்களோ என்ற கேள்வி எழுகிறது. <br />
<br />
வைகோ பேசுவதைக் கலிங்கப்பட்டிக்கார மக்களே நம்புவதில்லை. ஸ்டெர்லைட் பிரச்சினையில் வேதாந்தா குழுமத்திடம் துண்டு போட்டு மூடி என்னனென்ன விரல்கள் பிடிக்கப்பட்டன என்ற கேள்வியே மிஞ்சுகிறது. மதுவுக்கு எதிராகப் பொங்கி சிகரெட் விற்கிறார் என்ற இளிவரல் வேறு.<br />
<br />
கம்யூனிஸ்டுகளில் கூட்டணிக்கு ஆதரவாக யாரும் பெரிதாகப் பேசுவதில்லை. ஆனால் தா.பாண்டியன் மூச்சுப் பிடித்து அதிமுகவுக்கே பிரச்சாரம் செய்கிறார். இந்த நிலையில் கடன் வாங்கிவிட்டுக் கட்டமாட்டேன், திருப்பிக் கேட்ட வங்கியை எதிர்த்துப் போராட்டம் நடத்துவேன் என்று வாக்குமூலங்கள் வேறு.<br />
<br />
பாஜக:<br />
<br />
இந்தத் தேர்தலில் பாஜக தமிழகத்தில் வலுவாகக் காலூன்றும். அது பொது மக்களின்
பார்வை மாற்றத்தினால். அதற்குக் காரணம் திராவிடவாதத்தின் பொய்கள் கட்டிய
கச்சைகள் கழன்று போய் மறைவிடம் தேடி ஓடுவதால். எங்கும் பொய் எதிலும்
பித்தலாட்டம் என்று திரிந்து கொண்டிருந்த திராவிடம் தன்னை ஊடக பலத்தால்
நிலை நிறுத்திக் கொண்டிருந்தது. சமூக ஊடகங்கள் வந்த பிறகு இந்தப்
பிரச்சாரப் பொய்கள் உடனுக்குடன் தோலுரிக்கப்படுவதால் வாயில் வருவதே
வார்த்தை, வாய்கூசாத புளுகே வரலாறு என்று பேசித்திரிந்த திராவிடம் திகைத்து
நிற்கிறது.<br />
<br />
இந்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு பாஜக கடந்த இரண்டாண்டுகளில் தன்னை ஓரளவுக்கு நிலைநிறுத்திக் கொண்டிருக்க முடியும். ஆனால் தமிழகத்தில் என்னதான் சமூக வலைத்தளங்களில் பெரிய ஆளாக்கும் என்று மார்தட்டிக் கொண்டாலும் பாஜக அரசாங்கத்தில் இருந்தும் தன் கூட்டணிக்கார டிவி சேனலைக் கூட தன் வசப்படுத்த முடியவில்லை என்பது கேவலம் தான்.தனக்கென ஒரு பத்திரிக்கை ஒரு டிவி சேனல் இல்லாதவரை பாஜக பொதுமக்களைப் பெரிய அளவில் கவர்வது கடினமே.<br />
<br />
அதுவும் தவிர கட்சி நடத்தத் தெரிந்த தலைமை பாஜகவுக்கு அவசரத் தேவை. டிவிக்களில் முகம் காட்டிக் கொண்டிருந்துவிட்டுத் தேர்தல் நேரத்தில் மட்டும் தெருவில் இறங்கிக் கும்பிட்டால் போதும் என்ற மனநிலையிலேயே பாஜகவின் மாநிலத் தலைவர்கள் இருப்பது வளர்ச்சிக்கே வழிவகுக்காது. வெற்றி எல்லாம் வந்தால் பாரதமாதா ஜாதக விசேஷம்.<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgozJJoF1vSPbQPDDp6wBmmQ5_PYezP2rS5qFK_iVYJiNHvGpB8qvKuzBplJLGTokf3C0sGdXiXDGRo7EBWrspi0BPwHnc3VB50hyH7AkvWLwvnVzePbCWFCZFrkepTRLj7HnM1iTIp/s1600/ChyNFz0VEAAmMJb.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgozJJoF1vSPbQPDDp6wBmmQ5_PYezP2rS5qFK_iVYJiNHvGpB8qvKuzBplJLGTokf3C0sGdXiXDGRo7EBWrspi0BPwHnc3VB50hyH7AkvWLwvnVzePbCWFCZFrkepTRLj7HnM1iTIp/s400/ChyNFz0VEAAmMJb.jpg" width="305" /></a><br />
ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வராத நிலையில் தேர்தல் நடந்தால் அதிமுக வெற்றி பெறும். தேர்தலுக்குள் தீர்ப்பு ஜெ.க்கு பாதகமாக வந்தால் தடுமாற்றமே. சாதகமாக வந்தால் அதிமுகவினர் வெறியாட்டதோடு வேலை செய்வார்கள். ஓட்டுக்களின் ஊஞ்சலாட்டம் அதிமுக பக்கம் அதிகமிருக்கும். <br />
<br />
தேர்தலுக்குப் பிறகு குமாரசாமி கணக்கில் தீர்ப்பு வந்தால் 2021 வரை கடந்த ஐந்தாண்டுகால நிலவரமே தொடரும். குமாரசாமி கணக்கு அல்லாத தீர்ப்பென்றால் தீச்சட்டி, மண்சோறு, அலகு குத்தல், காவடி எடுத்தல், பாத யாத்திரை என்று பணிகள் தொடரும். அரசுப் பணி என்பது நாஞ்சில் சம்பத் சொன்னது போலக் காத்திருக்கும்.<br />
<br />
அடுத்த ஐந்தாண்டுகள் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள நாமும் தேர்தல் முடிவுகள் வரட்டும் என்று காத்திருப்போம்.Arun Ambiehttp://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6493698527091962490.post-58468853078736842562016-04-18T02:39:00.001-07:002016-04-22T08:53:35.866-07:00ஆநிரை பேணலும் அறவழி நிற்றலும்பசு மாடு சிறு வயதிலிருந்து பழகிய ஜீவன். நடுவே சிலகாலம் டச் இல்லை. பள்ளிக்கூட நண்பர்களைப் போல. விடுமுறையில் பாட்டி வீட்டுக்கு இராஜபாளையம் செல்கையில் எங்கள் வீட்டுப் பசுவைக் கண்டு குசல விசாரிப்புகள் முடித்துத் தான் வீட்டுக்குள்ளேயே போவேன். அந்தப் பசு கன்று ஈன்ற போது அதைப் பார்ப்பது பார்வதி-பரமேஸ்வரனை நேரில் தரிசிப்பது போல என்று சொல்லக்கேட்டு ஒருமணி நேரத்துக்கு ஒரு முறை கொட்டிலுக்குப் போய்ப் பார்த்துவிட்டுக் கணக்கு வைத்துக் கொண்டிருந்தேன். பிறகு சீம்பாலின் சுவை குறித்து யாரோ சொல்லத் தொடங்க தரிசனக் கணக்கு மறந்துவிட்டது!<br />
<br />
<a name='more'></a><br />
<br />
பிறகு பராமரிக்க இயலவில்லை என்று 70க்கு மேல் வயதான தாத்தாவும் 60ஐக் கடந்த பாட்டியும் பசுவை பால் வியாபாரம் செய்யும் யாருக்கோ கொடுத்துவிட்டார்கள். பசு அவரிடம் இருந்தவரை அதைப் பால் பண்ணையில் கண்டு குசலங்கள் பேசுவதுண்டு. அதன் பிறகு கொஞ்சம் படிப்பு, பணி என்று போய் கார்பொரேட் உலகில் நுழைந்த பிறகு பசு பற்றிய நினைவே இல்லை.<br />
<br />
(24மணி நேரமும் ஆபீஸ் ஆபீஸ் என்று இருந்தால் வேறு என்னதான் நினைவிருக்கும் என்பார் என் தாயார். கார்பொரேட் கலாச்சாரம் என்றால் என்னவென்றே தெரியாதவர். பொது ஆண்டு 2010ல் ஒரு முறை மூன்றாம் நாளாக வீட்டுக்குப் போகாமல் ஆபீஸே கதி என்று இருந்து வேலை செய்து அதன்பின் காய்ச்சல் கண்டு வீட்டில் படுத்துக் கொண்டேன். மறுநாள் செல்பேசியில் என் மேலாளர் எப்போ ஆபீஸ் வருவே என்று கேட்க அழைத்திருக்கிறார். போனை எடுத்த அம்மா என் மகனுக்கு எதாவது உடம்புக்கு பிரச்சினை என்று தெரிந்தால் உன்னைப் போலீசில் பிடித்துக் கொடுப்பேன் என்று கடுந்து சொல்ல மேனேஜர் 2 நாள் ஜுரம் கண்டு வீட்டில் படுத்தார். அப்போதும் விடாமல் ”அவன் இப்போ ஜுரத்தோட ஆபீஸ் போறானா? உன்ன மட்டும் கூப்டான்?” என்று கேட்ட வீரப்பெண்மணி)<br />
<br />
சரி... பசுத்தாய் பற்றிய விவரத்துக்கு வருவோம். சென்னையில் அதுவும் 2011க்கு பிறகு பசு பாதுகாப்புக் குழுவினருடன் தொடர்பு ஏற்பட்டது. அவர்களுடன் சிலபல செயல்பாடுகளில் பங்கெடுத்துள்ளேன். தக்ஷிணாம்னாய சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி மஹாசந்நிதானம் ஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் சென்னைக்கு வந்திருந்த போது கோசாலை குறித்து அவரிடம் பிரார்த்தித்துக் கொண்டதும் உண்டு.<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5L2Wm1ZT7KAHYVzc5oSgWOyrIcgKObADCTY9V4pYguyTsKtdveQRPFeoPRZv4oVdFLOyNWrmmfQOr1j6hY6fFbRCXiJlvMAely-kNTDpbOhkNJAwxzanuAcO_iP_IwFFMqLECk0vm/s1600/1601287_585524894865611_955706963_n.jpg" imageanchor="1"><img border="0" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5L2Wm1ZT7KAHYVzc5oSgWOyrIcgKObADCTY9V4pYguyTsKtdveQRPFeoPRZv4oVdFLOyNWrmmfQOr1j6hY6fFbRCXiJlvMAely-kNTDpbOhkNJAwxzanuAcO_iP_IwFFMqLECk0vm/s320/1601287_585524894865611_955706963_n.jpg" width="320" /></a><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheZ1BCJhww5T7j4SnHn7NGJMBvzpNBOKfNojG4YuAbpAWkbYbXTU_9XOTVhdYQPGAfxy4TjZAPc6NuXkLx1V887sHFlkvT_rxSnfHHA9lN9cpCuFFdVDjXCg-IVkxOtKn0YI5CkjuA/s1600/46626_574874019264032_598673492_n.jpg" imageanchor="1"><img border="0" height="212" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheZ1BCJhww5T7j4SnHn7NGJMBvzpNBOKfNojG4YuAbpAWkbYbXTU_9XOTVhdYQPGAfxy4TjZAPc6NuXkLx1V887sHFlkvT_rxSnfHHA9lN9cpCuFFdVDjXCg-IVkxOtKn0YI5CkjuA/s320/46626_574874019264032_598673492_n.jpg" width="320" /></a><br />
<br />
ஆனால் வலியதான விதி விடவில்லை. மீண்டும் ஒரு 24x7 வகையறா பணியில் அமர்த்தப்பட்டேன். அலுவல் தவிர இன்னபிற நடவடிக்கைகள் பெரிதும் முடங்கின. (இப்போது மீண்டும் முந்தைய பத்தியின் முதல் வரியை மட்டும் வாசித்துக் கொள்ளுங்கள். மானே தேனே பொன்மானே எல்லாம் சேர்ப்பதும் சேர்க்காததும் உங்கள் விருப்பம்.)<br />
<br />
வாழ்க்கைச் சக்கரம் இப்படியாகச் சுழல ஒரு சுபயோக சுபதினத்தில் ”இவனுக்கு சீக்கிரம் ஒரு கல்யாணத்தப் பண்ணணும்” (என்ன ஒரு கஞ்சத்தனம்!) என்று ஜோசியக்காரர் ஒருவரை அணுகியிருக்கிறார் என் தந்தை. ஆஞ்சனேய உபாசகரான அவர் பசுவுக்கு முடிந்ததைச் செய்யுங்கள். எல்லாம் சரியாகும் என்று சொல்லியிருக்கிறார். உடனே நம்மூர்ல கிருஷ்ணன் கோவில்ல கோசாலை இருக்கு என்று தொடங்கி இங்க நீயும் எதாவது கோசாலைக்குப் போய் பசுவுக்கு அகத்திக்கீரை வாங்கிக் கொடு என்றார். தந்தை சொல் மந்திரமாயிற்றே! சொன்னதைச் செய்தாக வேண்டுமே! அப்போதுதான் முகநூலில் சீமாச்சு அண்ணா என்றறியப்படும் ஸ்ரீநிவாசன் அவர்கள் மாம்பலம் கோசாலை பற்றி ஒரு பதிவிட்டிருந்தது நினைவுக்கு வந்தது.<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9BbEUD9coHDggNQJKS5cUgkE2WC_jxFgTx_mCIsLS1PC4OKMe7tPg5Vu9mfZcGF71phaxt5a-LU20Rr1n1R5pyHtGuMEE9dVaDM8g3AVy8F8Mg7i6PmbXDari_7LLdMqzYFz5VJSu/s1600/12711107_1057007624337800_4143103521741614379_o.jpg" imageanchor="1"><img border="0" height="265" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9BbEUD9coHDggNQJKS5cUgkE2WC_jxFgTx_mCIsLS1PC4OKMe7tPg5Vu9mfZcGF71phaxt5a-LU20Rr1n1R5pyHtGuMEE9dVaDM8g3AVy8F8Mg7i6PmbXDari_7LLdMqzYFz5VJSu/s400/12711107_1057007624337800_4143103521741614379_o.jpg" width="400" /></a><br />
<br />
அதைத் தேடிப்பிடித்துப் பகிர்ந்துவிட்டு அந்த பங்குனி 19ஆம் நாள் வெள்ளியன்று (ஏப்ரல் 1, 2016) மாலை அந்த கோசாலைக்குச் சென்றேன். மணி 6.20 என்றது கடிகாரம். வாசலில் ஒருவரிடம் இந்த கோபூஜை..... என்று ஆரம்பிக்க ஆறரையோட எல்லாம் முடிஞ்சிரும் என்றார். இல்லங்க 6.30க்கு ஆரம்பம்னு சொன்னாங்களே! என்றேன். ரிஜிஸ்டர் பண்ணாம பூஜைல ஒக்கார நீங்க என்ன சிஎம்மா பிஎம்மா? என்றார். அதெல்லாம் இனிமே அரசியல்ல புகுந்து அவ்வளவு சீக்கிரம் ஆகமுடியாது என்றேன். ஏற இறங்கப் பார்த்தவர் முறைத்துவிட்டுப் போய்விட்டார்.<br />
<br />
வாசலில் அகத்திக்கீரை விற்றுக் கொண்டிருந்த பெண்மணியிடம் 3 கட்டுகள் வாங்கிக் கொண்டு உள்ளே போனேன். சில விநாடிகள் புது இடத்துக்குப் போனால் கடைப்பிடிக்க வேண்டிய நியதிப்படி பேந்தப் பேந்த விழித்துவிட்டு பிறகு சுற்றுமுற்றும் கவனித்தேன். யாரும் யாரிடமும் பெரிதாகப் பேசிக் கொள்ளவில்லை. வருகிறார்கள். பிள்ளையாரைக் கும்பிடுகிறார்கள். போய் பசுக்களுக்கு அகத்திக்கீரை, பழம் தருகிறார்கள். வணங்கிவிட்டு நகர்கிறார்கள். அதே நடைமுறையைப் பின்பற்றி அகத்திக்கீரை கொடுத்து வணங்கிவிட்டு வந்த போது சீமாச்சு அண்ணா பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருந்தார்.<br />
<br />
அவர் பிரார்த்தனை முடித்துக் கண் திறந்த போது எதிரில் நின்றது நான். ”ஏய்! எப்படா வந்தே! வா வா!” என்றபடி அலுவலகத்துக்கு அழைத்துப் போனார். ஒரு மஞ்சள் நிறச்சீட்டு எடுத்துக் கொடுத்து “பிரார்த்தனையை எழுது” என்றார். “அண்ணா! இந்த கோபூஜைக்கு ரிஜிஸ்டர் பண்ணணுமாமே!” என்றேன். “அம்பது ரூபா குடு” என்று வாங்கிக் கொண்டு போனவர் ஒரு அச்சிட்ட வெள்ளைச் சீட்டோடு வந்தார். கோபூஜைக்கான பணம் கட்டிய ரசீது. ”சங்கல்பம் செய்ய வரிசைல நில்லு” என்றார். மஞ்சள் சீட்டில் பிரார்த்தனைகளை எழுதி பிள்ளையார் முன் இருந்த குடத்தில் போட்டுவிட்டுத் திரும்பினேன்.<br />
<br />
“வா! முரளி அண்ணாவைப் பார்த்துடலாம்” என்றார் சீமாச்சு அண்ணா. போனோம். வழமையான அறிமுகப்படலங்கள், கைகூப்பல்கள், வணக்கங்களுக்குப் பிறகு ”பையன் நம்ம பக்கம்ணா! ஸ்ட்ராங் காவி” என்று தொடங்கி என்னைப் பற்றிச் சொன்னார். ”Blog எழுதுவான், கவிதை எழுதுவான், ஃபேஸ்புக்குல ஆக்டிவ்” உள்ளிட்ட பல சங்கதிகள் வெளிவந்தன. என் மொழியறிவு குறித்து உயர்வாகவே சொன்னார். அவர் சொன்ன அளவுக்கு சம்ஸ்க்ருத அறிவில் உயர்ந்துவிடவேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.<br />
<br />
(மற்றபடிக்கு ஆங்கிலமும் ஹிந்தியும் வேண்டிய அளவு தெரிந்தே இருக்கிறது. தமிழறிவைப் பற்றிச் சொல்லவில்லையே என்று சிலர் கேட்கலாம். நேரமிருக்கும் போது தகவல் அனுப்புகிறேன், வாருங்கள். திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் தருமி, இறையனார் பேச்சுவார்த்தையை நாம் நடத்திப் பார்ப்போம்.) <br />
<br />
முரளி அண்ணா அன்பாகப் பேசினார். நிறைய விவரங்கள் சொன்னார். கோசாலை மஹா பெரியவா ஸ்ரீஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகளால் இந்த இடத்தில் தொடங்க உத்தராவனது. இது தெய்வ சாந்நித்யம் மிக்க இடம் இங்கே கோசாலையை நடத்துங்கள் என்று அவர் அருளிச் சொன்னபடியே இன்னமும் கோசாலை நடக்கிறது. ஒவ்வொரு பசுவும், ஓவ்வொரு காளையும் மிகுந்த கவனத்துடன் பராமரிக்கப்படுகின்றன.<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiW8iGniKSqzrfazycxhsXI5P9qWhpDPRwYvfUgbZyV39OxEZAZ_mF0K8qhmtcBognk-ot_VEjl9l0U6pPeJpfLf09bCoOgTEhT3wI7VD-a49sLzjCZg25uKE06NOsgT3horAzLH626/s1600/IMG_20160408_193021.jpg" imageanchor="1"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiW8iGniKSqzrfazycxhsXI5P9qWhpDPRwYvfUgbZyV39OxEZAZ_mF0K8qhmtcBognk-ot_VEjl9l0U6pPeJpfLf09bCoOgTEhT3wI7VD-a49sLzjCZg25uKE06NOsgT3horAzLH626/s400/IMG_20160408_193021.jpg" width="225" /></a><br />
<br />
காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீமடத்தின் மாம்பலம் நிலையத்தில் இருந்து வேத விற்பன்னர் ஒருவர் வந்திருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோபூஜை நடத்தி வைக்கிறார். அத்துடன் கூட்டுப் பிரார்த்தனையும் நடக்கிறது. வருவோர் அனைவருக்கும் ஒரு மஞ்சள் நிறச்சீட்டு தருகிறார்கள். அதில் நம் பிரார்த்தனைகளை எழுதி அங்கே விநாயகருக்கு முன் இருக்கும் குடத்தில் போடவேண்டும்.<br />
<br />
அதன் பின் ஐம்பது ரூபாய் கட்டி ரசீது பெற்றுக் கொண்டவர்கள் (இது கட்டாயமல்ல) கோபூஜைக்கான சங்கல்பம் செய்து கொள்ள வரிசையில் நிற்க வேண்டும். நான் சென்ற இரு வாரங்களுமே மிக நீண்ட வரிசை. பொறுமையாக ஒவ்வொருவரின் கோத்திரம், பெயர், அவரது உடனடிக் குடும்பத்தினர் பெயர்கள், (வேறு கோத்திரமாக இருந்தால் சேர்க்க இயலாது), அவர்களது வேண்டுதல் (பொதுவில் சொல்ல விருப்பமில்லை என்றால் ஒலிபெருக்கியை அணைத்துவிட்டுக் கேட்டு அந்த வேண்டுதலுக்கான சங்கல்பத்தைச் சொன்னபின் ஒலிபெருக்கியை உயிர்ப்பிக்கிறார்).<br />
ஐம்பது ரூபாய் கட்டாமலும் அங்கே இருந்து கோபூஜையை தரிசிக்கலாம்.<br />
<br />
இங்கே காதில் விழுந்த ஒரு சுவையான உரையாடலைப் பகிர எனக்கு விருப்பம்.<br />
<br />
”என்னென்ன வேண்டி இங்கே பிரார்த்தனை செஞ்சா சரியா வரும்?” என்று முக்கால் பேண்டும் டீசர்டும் அணிந்த ஒரு இளைஞர் கேட்க, குரலில் சற்றே தொனித்த எகத்தாளத்தை கவனித்த ஒரு பெரியவர் (அவர் விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்ல முன்னணியில் அமர்ந்ததை பிற்பாடு கவனித்தேன்) “நாசிக்ல நோட்டு அடிக்கிற ஆபீஸே என் கண்ட்ரோல்ல வரணும்னு கூட வேண்டிக்கலாம். ஆனா அத எப்போ தரணும்னு பகவான் முடிவு பண்றான்னு உனக்கோ எனக்கோ தெரியாது. வர வரைக்கும் பிரார்த்தனை பண்ணிண்டே இருக்கலாம். உனக்கென்ன வேணும்?” என்றார். ”அது வந்து, வேலை, பிரமோஷன் அதுக்கு வேண்டிக்கணும்”. “வேலையா, பிரமோஷனா?” “வேலை!” இத மொதல்லயே சொல்லிருக்கலாமே! கூட்டத்துல இத்தன பேர் வெய்ட் பண்ணும் போது வாதப் பிரதிவாதம் தேவையா உனக்கு?” <br />
<br />
ஒருவாறாக சங்கல்பம் முடித்து கோபூஜைக்குச் செல்லச் சொன்னார்கள். கோசாலையில் ஒரு டப்பாவில் கொஞ்சம் பூ, பழம், வெற்றிலை, பாக்கு, அக்ஷதை எல்லாம் போட்டுத் தருகிறார்கள். (ஆனால் 108 திருப்பெயர்கள் கொண்ட மஹாலக்ஷ்மி அஷ்டோத்திர பூஜைக்கு அந்தப் பூக்கள் போதாது. ஆகவே நாம் 10 ரூபாய்க்கு வாசலில் பூ விற்பவர்களிடம் வாங்கிக் கொள்ள வேண்டும். அதுவும் கோசாலையில் கொடுப்பதும் சேர்ந்து நிறைவாக இருக்கும்.)<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzIupedN0uXpXMfq1fbGqtyCAfO5RZh7PtVGsJi607FUtOrOoEmyftaJcqjTfG4s5lX2vvilIdkkyJT7bdTOch0lnOn_jQ0ZzvhxLaJUpBW8j16Eg24cA1k9SxUIYsIoGzudb1n2fQ/s1600/IMG_20160401_192241.jpg" imageanchor="1"><img border="0" height="225" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzIupedN0uXpXMfq1fbGqtyCAfO5RZh7PtVGsJi607FUtOrOoEmyftaJcqjTfG4s5lX2vvilIdkkyJT7bdTOch0lnOn_jQ0ZzvhxLaJUpBW8j16Eg24cA1k9SxUIYsIoGzudb1n2fQ/s400/IMG_20160401_192241.jpg" width="400" /></a><br />
இப்போது மாடுகளுக்கு அருகே போய் நின்று கொண்டோம். ஒரு பசுவுக்கு அருகே அதிகபட்சம் 5 பேர். அருகருகே கன்றுகளும் இருந்தன. ஒலிபெருக்கியில் லக்ஷ்மி அஷ்டோத்திரம் சொல்லச் சொல்ல அனைவரும் பசுக்களுக்கும் கன்றுகளுக்கும் பூ போட்டு அர்ச்சனை செய்தோம். பிளாஸ்டிக் கவர்களை ஆங்காங்கே போடக்கூடாது, கண்டிப்பாக வெளியே உள்ள குப்பைத் தொட்டியில் மட்டுமே போடவேண்டும் என்ற வேண்டுகோள் அவ்வப்போது விடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அதே சமயம் யாரும் பிளாஸ்டிக் பேப்பர் உள்ளிட்ட எந்தக் குப்பையையும் பசுக்கள் இருக்குமிடத்தில் போடவில்லை.<br />
<br />
அர்ச்சனை முடிந்த உடனே பூக்களையும், இலைகளையும் பணியாட்கள் சுத்தம் செய்து ஒரு ஓரமாகக் கொண்டு போய்விடுகிறார்கள். அதன் பிறகு சாம்பிராணிப் புகை போட்டனர். பிறகு பசுக்கள் அனைத்திற்கும் தீப ஆராதனை நடந்தது. எல்லாம் மஹாலக்ஷ்மி பெயராலேயே நடந்தது. பசுவில் மஹால்க்ஷ்மி வாசம் செய்கிறார் என்பது சநாதன தர்ம நம்பிக்கை. இந்தப் பூஜைகள் முடிந்ததும் அனைவரும் கோசாலையின் முதல் கொட்டகைக்கு முன் கூடி நின்றோம்.<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0RQ-XP6MLpXRHtYul9SXbnwyi758KSnT9BVZcPY_PkmZNR3l9RfePp6rB-DNo5dBjfvnz0nZdg-rhf4SwSwd2mYH0AghfcD7kvkXmcGbG5kFyu2g1KpKHJ5mKARHmqzSGu9EyvIha/s1600/IMG_20160401_192322.jpg" imageanchor="1"><img border="0" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0RQ-XP6MLpXRHtYul9SXbnwyi758KSnT9BVZcPY_PkmZNR3l9RfePp6rB-DNo5dBjfvnz0nZdg-rhf4SwSwd2mYH0AghfcD7kvkXmcGbG5kFyu2g1KpKHJ5mKARHmqzSGu9EyvIha/s320/IMG_20160401_192322.jpg" width="320" /> </a><br />
<br />
முரளி அண்ணா மைக்குடன் வந்தார். நம் பாரம்பரியத்தின் பெருமை குறித்தும், ஆநிரை சார்ந்த நம் முன்னோரின் வாழ்க்கை முறை குறித்தும் விரிவாகப் பேசினார். பசுப் பாதுகாப்புக் குறித்து சுவாமி விவேகானந்தரும், காந்தியார் அவர்களும், அம்பேத்கர் அவர்களும், கூறிய கருத்துகளை மேற்கோள் காட்டி நமது பாரம்பரிய விவசாய முறைக்குத் திரும்பினால் மட்டுமே விவசாயம் செழித்து தேசம் வளமாகும் என்ற உண்மையை வலியுறுத்தினார்.<br />
(கீழே படத்தில் வேட்டி சட்டையில் இடுப்பில் துண்டுடன் பக்திபூர்வமாக இருப்பவர் முரளி அண்ணா. அவருக்கு அருகே போலீஸ்காரர் போல கைக்ளைப் பின்னால் கட்டி விறைப்பாக நிற்பவர் சீமாச்சு அண்ணா.)<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvH3PRwVl9M5uzGAHkELxwtjYsVQ9Z0PoznRQ-YQji9VD3MC2QfH8zOinzbqO8YNkHWSEOS9_Hx6fiuIxbgnAXXFKIBRut6a7g8gexo04XqddSPfaHyY6Nr4RhY5EhgACSmOVGNjha/s1600/IMG_20160401_192621.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvH3PRwVl9M5uzGAHkELxwtjYsVQ9Z0PoznRQ-YQji9VD3MC2QfH8zOinzbqO8YNkHWSEOS9_Hx6fiuIxbgnAXXFKIBRut6a7g8gexo04XqddSPfaHyY6Nr4RhY5EhgACSmOVGNjha/s640/IMG_20160401_192621.jpg" width="360" /></a></div>
<br />
பின்னர் பிரார்த்தனை: தருமங்காத்தல், போர்ப்படை வீரர் நலன், ஏர்ப்படை உழவர் நலன், ஆநிரை சார்ந்த பயிர்த்தொழில், ஆநிரை புரத்தலும் ஆநிரை பாதுகாப்புச் சட்டமும், கோசாலை இன்றிருக்கும் நிலையில் என்றும் தொடர்தல் ஆகிய நன்மைகள் ஓங்கப் பிரார்த்திப்பதுடன், அவரவர் சீட்டுக்களில் எழுதிச் சமர்ப்பித்த வேண்டுதல்கள் நிறைவேறவும் கூட்டுப் பிரார்த்தனை செய்யத் தயாரானோம்.<br />
<br />
<span style="color: blue;"></span><br />
ஓம் எனும் வேத முதற்சொல்லை 18 முறைகள் முறையாக உச்சரித்து மேற்சொன்ன அனைத்தும் நிறைவேற இறையருள் இரங்குக என்று உளமாறப் பிரார்த்தித்தோம். பிறகு அனைவரும் சென்று பசுக்களையும், காளைகளையும், கன்றுகளையும் வலம் வந்து வணங்கினோம். பிறகு வரிசையில் வந்த அனைவருக்கும் உரிய முறையில் பிரசாதங்கள் வேதியரால் வழங்கப்பட்டன.<br />
<br />
அதன் பிறகு முரளி அண்ணாவிடம் பேசுகையில் இந்த வாராந்திர கூட்டுப் பிரார்த்தனை இணையத்தில் நேரடியாக அலைபரப்பு (webcast) செய்யப்படுகிறது என்றார். www.mambalamgohsala.in என்ற தளத்தில் வருகிறது. நேரில் வர இயலாதவர்கள் இணையம் மூலம் பிரார்த்தனையில் பங்கேற்று ஓங்காரம் சொல்லி வேண்டிக் கொள்ளலாம். நேரலை மட்டுமே. பதிவான விடியோக்கள் இனிமேல் யூடியூபிலும், இணையத்திலும் பதிவேற்றப்படும் என்றார். அதற்கு ஒரிரு மாதங்கள் ஆகும் என்றும் சொன்னார். <br />
<br />
யார் செய்கிறார்கள் என்று பார்த்து அந்தத் தொழில்நுட்ப வல்லுநரிடம் போனால் அவர் நானறிந்தவர். சீமாச்சு அண்ணாவின் நிறுவனத்தில் பணிபுரிபவர். ஆக webcastக்குப் (இணையலைபரப்பு) பொறுப்பு சீமாச்சு அண்ணாதான். விரைவில் வந்துவிடும் என்றார். இப்போது யூடியூபில் விடியோ காணக்கிடைக்கிறது.<br />
<br />
நான் ஒரு சில வாரங்களாக கோபூஜைக்கு நேரில் செல்கிறேன்.<br />
<br />
<span style="color: blue;">முரளி அண்ணா இந்தப்
பிரார்த்தனையில் பேசுவது தெய்வத்தின் குரல் புத்தகத்தில் இருந்து மஹாபெரிவா
வாக்கு மட்டுமே. ஒரு வெள்ளிக்கிழமை தேர்ந்தெடுக்க வேண்டிய மக்கள்
பிரதிநிதி குறித்து மஹாபெரியவா அருளிய வாக்கைச் சொன்னார். </span><span style="color: blue;"><span style="color: blue;">அன்று பிஜேபி தலைவர் <b>H.ராஜா</b> சில வாரங்களுக்குப் பிறகு கோபூஜையில் கலந்து கொள்ள வந்திருந்தார்!</span></span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">“தேர்தல்
ஸ்பெஷலா அண்ணா!” என்று சிரித்துக் கொண்டே கேட்ட போது பதறிவிட்டார். ”NO! இங்கே
அரசியல் கிடையாதுப்பா. தர்மம், ஆன்மிகம் மட்டும் தான். இன்னிக்கி பேச எதுவும்
அமையலை. சீட்டுப் போட்டு மஹா பெரியவா படத்தின் முன்னால நின்னேன். ஒரு
சேப்டர் வந்தது. எடுத்துப் பிரித்தால் இந்த விஷயம். நான் எதுவும் இல்லை.
எல்லாம் பெரியவா அருள்,” என்று கைகூப்பியபடியே சொன்னார். </span><br />
<br />
வெளியில் இருந்து பார்ப்பதற்கு ஓட்டுக் கேட்பது போலவே இருக்கும் என்பதால் ”சீக்கிரம் கைகயைக் கீழே போடுங்கண்ணா” என்று சொல்லிவிட்டு பிறகு கொஞ்ச நேரம் கோசாலை செயல்பாடுகள் குறித்து அவரிடம் கதைத்துவிட்டுக் கிளம்பினேன். <br />
<span style="color: purple;"><br /></span>
<span style="color: purple;">கோபூஜையில் பங்கெடுப்பதால் வாழ்வில் பல்வேறு சிக்கல்கள் தீரும் என்பது சநாதன தர்ம நம்பிக்கை. மன்னர் திலீபன் உள்ளிட்ட பலரும் பசுவை வழிபட்டு பாவங்களில் இருந்து விடுதலை பெற்றனர் என்பது நம் வரலாறு. புராணங்கள் விரித்துரைக்க, இதிஹாசங்கள் சான்று நிற்கின்றன. </span><br />
<br />
<span style="color: purple;">ஆகவே, அனைவரும் இந்த கோபூஜையிலும், கூட்டுப் பிரார்த்தனையிலும் கலந்து கொண்டு பயன் பெறவேண்டும் சமுதாயத்துக்குப் பயன் தரவும் வேண்டும் என்று கரம் கூப்பிக் கேட்டுக் கொள்கிறேன்.</span> <b><span style="color: blue;">வந்தே மாதரம்!</span></b> Arun Ambiehttp://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6493698527091962490.post-66874394485188497672015-10-23T10:55:00.001-07:002015-10-23T10:55:53.290-07:00மறைக்கப்பட்ட உலகம் - வெங்கட் சாமிநாதன் <span style="font-size: x-small;"><span style="color: blue;">இந்தக் கட்டுரை </span><a href="http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60609292&edition_id=20060929&format=html" target="_blank">திண்ணை</a><span style="color: blue;">யில் வெளியானது. </span></span><br />
<br />
<span style="font-size: x-small;"><span style="color: blue;"><span style="color: purple;">நிறுவனப் போராளிகள், சான்றளிக்கப்பட்ட எழுத்தாளர்கள், கட்சிகள், குழுக்கள் சார்ந்த எழுத்துத் தொண்டர்கள் உண்மையில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறார்கள் என்பதை எந்தப் பூச்சும் இன்றிச் சொல்லியிருக்கிறார் மறைந்த வெங்கட் சாமிநாதன் அவர்கள். உண்மை கசக்கும் என்பதை அவருக்கு இருந்த எதிர்ப்பின் வீச்சில் கண்டு கொள்ளலாம். அஞ்சலிக் கட்டுரைகளிலும் ஊடகங்கள் வஞ்சனை செய்கின்றன. ஆங்கிலத்தில் ஒரு மாதிரியாகவும் தமிழில் வேறு மாதிரியாகவும் எழுதி அரசியல் சரித்தன்மையை உறுதி செய்யும் இந்தப் போக்கைக் கடுமையாகக் கண்டித்தவர் வெங்கட் சாமிநாதன். அவருக்கு நம் </span></span></span><span style="font-size: x-small;"><span style="color: blue;"><span style="color: purple;"><span style="font-size: x-small;"><span style="color: blue;"><span style="color: purple;">உளமார்ந்த அஞ்சலிகள். </span></span></span></span></span></span><br />
<br />
<a name='more'></a><br />
ஊரோடு ஒத்து வாழத்தெரியாது எனக்கு. இந்தத் தமிழ் மண்ணோடு சற்றுப் பிடிப்பில்லாத, இதைச் சுரண்டி வாழும் ஒரு பாமரக் கோமாளி எனக்கு "ஸார்" ஆகிவிடமுடியாது, அவன் எனக்கு எவ்வளவு பணம் கொட்டிக் கொடுத்தாலும்.ஸார் ஆனது மட்டுமல்ல. அவரது மெளனம் என்னென்னவோவெல்லாம் பேசுவதாக மாய்ந்து போகிறார், அந்த முன்னணி எழுத்தாளர். யார் பெரிய கோமாளி என்று தோன்றுகிறது? ஒரு அரசியல் தலைமை கை ஸ்பரிஸத்தில் கவிதை மின்ஸாரமாகப் பாய்கிறது என்று சொல்லி அத்தலைமை மனம் குளிரவைக்க முயற்சிக்கமாட்டேன். அதிகார மமதை பிடித்த பத்திரிகாசிரியருடன் 'அட்ஜஸ்ட்" பண்ணிக்கொள்வது அருவருப்பாக இருக்கிறது எனக்கு. இப்படி எத்தனையோ பலவீனங்கள் எனக்கு. . இந்த சங்காத்தமே வேண்டாம் என்று பத்து பதினைந்து வருடங்கள் தமிழில் எழுத்துத் தொடர்பு அறுத்து தில்லி ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதி வந்தேன். சும்மா இருந்தவனை, இந்தியா டு டே சந்திக்கு இழுத்துக் கேட்கவே, அப்போதைய தமிழ் எழுத்து பற்றி எழுதினேன். '"புதை குழியிலிருந்து மீட்டு எடுக்கப்பட்டதாக," ஒரு பேராசிரியர், சித்தாந்தவாதி என்னைப்பற்றி எழுதினது மட்டுமல்லாமல் என் எழுத்து மலம் துடைக்கத்தான் லாயக்கு என்று தீர்மானம் நிறைவேற்றி அதை செயல்படுத்தவும் செய்தார்கள், அ.மார்க்ஸ் தலைமையிலான, கல்வியாளர், இலக்கியவாதிகள் கூட்டங்கள் இரு இடங்களில். இவ்வாறான அவர்களது ·பாஸிஸ செயல்பாடுகளுக்குக் காரணம், நான் 'முற்போக்கு, திராவிட இயக்க இயக்கங்கள் தமிழ் நாட்டில் ·பாசிச குணங்கொண்டவை என்றும் அவற்றில் உண்மை இல்லாத காரணத்தால் அவர்களிடமிருந்து ஏதும் இலக்கியம் பிறக்கவில்லை' என்றும் சொல்லியிருந்தேன். என் கூற்றை அவர்கள் தம் எதிர்வினையால் நிரூபிக்கத்த'ன் செய்தார்கள். மலம் துடைத்துத் தன் எதிர்ப்பைக்காட்டும் பேராசிரியரை தமிழ் நாட்டுக்கு வந்தால் காணலாம். இத்தகைய வெள்ளத்தின் ஒட்டத்தில் நான் மிதந்து வாழமுடியுமோ? கரையேறி தில்லியிலேயே இருந்தேன்.<br /><br />ஆனால் 'கதா' நிறுவனம், தமிழின் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுக்க என்னைக் கேட்டது. எனக்குக் கிடைத்த இரு பெயர்களில், இருவரும் எனக்கு புதியவர்கள், தமிழில் அதிகம் அன்று அறியப்படாதவர்கள் - சோ.தருமன் ஒருவர். 'நசுக்கம்" என்ற கதை. இரவில் இருட்டில் திருட்டுத்தனமாக பட்டாசு வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்ட சிறுவர் ஏதோ தேட மெழுவர்த்தி கொளுத்தப்போய் மருந்து வெடித்துச் சாகின்றனர். ஏதும் கோஷங்கள் இல்லை. அரசியல் சீற்றங்கள் இல்லை. சகஜமாக்கப்பட்ட இக்கோடூர நிலை ஆரவாரமற்ற சாதாரண நடையிலேயே சொல்லப்பட்டு நம்மைப் பதறச் செய்துவிடுகிறது. ஒரு கொடுமை ஆரவாரமற்று சகஜமாக்கப்பட்ட அன்றாட வாழ்க்கை நிலை வாழ்வுண்மை. அரசியல் கோஷமல்ல. இப்படித்தான் சோ தர்மனின் கதை உலகம் பின்னரும் விரிகிறது. அவர் ஒரு தலித், பஞ்சாலைத் தொழிலாளி என்பதெல்லாம் பின்னர்தான் தெரிய வருகிறது. 'நசுக்கம்" கதை மற்றெல்லா மொழி பரிசுக்கதைகளையும் பின் தள்ளி, Economic Times பத்திரிகையில் அகில இந்திய பதிப்பில் இடம் பெறுகிறது. தமிழில் சோ.தர்மன் எழுத்துலகம் அறிந்தவராகிறார். இதை அடுத்து நம் தமிழகத்தின் பண்பாட்டுப் பெருமை கூறும் ஒரு சம்பவத்தையும் சொல்லவேண்டும். 'கதா' பரிசுக்கான கதையாக சாமிநாதன் 'நசுக்கம்' தேர்ந்தெடுத்துள்ளதை கதா சோ தர்மனுக்குச் சொல்ல, சோ தர்மன் அதை தன் கோவில்பட்டி (நாமக்கல் கோழிப் பண்ணை போல, கோவில் பட்டி எழுத்தாளர் பண்ணை) எழுத்தாள நண்பர்களிடம் சொல்லப் போய் ' சாமிநாதன் பார்ப்பன வெறியனாச்சே, அந்த ஆள் உங்க கதைய தேர்ந்திருக்க மாட்டானுங்க, வல்லிக்கண்ணனாத்தான் இருக்கணும், நல்லா விசாரியுங்க" என்று திரும்பத் திரும்ப மறுத்திருக்கிறார்கள்<br /><br />தருமன் ஒரு பஞ்சாலைத் தொழிலாளி. தொழிலாளர் சங்கத்தில் தீவிரமாக செயல்பட்டவர். தலித். இவரை இந்த இரு வகையினரும் கண்டுகொள்ளவில்லை. ஏனெனில் இவ்விரு கட்சியினரும் பிடித்து வைத்துள்ள அச்சுக்குள் அவர் அடங்கவில்லை. அவர் எழுதியது தான் அறிந்த வாழ்க்கையை. அவ்வாழ்க்கை கட்சியினரின் அச்சுக்குள் பொருந்த மறுத்தது. தூர்வை என்றொரு நாவல் தொடர்ந்தது. அது மினுத்தான் - மாடத்தி என்னும் தலித் தம்பதியினரைச் சுற்றி உருளக்குடி கிராமத்து மக்களின் இரண்டு தலைமுறை வாழ்க்கையை, கடைசியில் உருளக்குடி கிராமம் வரண்டு, தீப்பெட்டி தொழிற்சாலைகளும் சாக்குக் கம்பெனிகளும் ஆக்கிரமித்துக்கொள்கின்றன. நிலத்தில் உழைத்தவர்கள் இப்போது தொழிற்சாலைகளில் வேலை செய்கிறார்கள். மினுத்தான் - மாடத்தி தம்பதிகள் தலித் சித்தாந்திகள் தயாரித்து வைத்திருக்கும் மாதிரி சித்திரங்களாக இல்லை.<br /><br />"மாடத்தியின் வீட்டுக்கு வரும் மருமக, எத்தன தலமொறென்னாலும் இருந்து திங்கலாம்" என்பது உருளக்குடி மக்கள் அறிந்தது. உருளக்குடி கிராமத்து வீடுகளின் 'குலுக்கை'களில் ரெண்டு மூணு வருஷமாய் தானியம் அள்ளாமல் மக்கிப் போய் புழுப்பிடிச்சு, நாற்றம் அடித்து மாவாகிப் போகிற அளவுக்கு செல்வம் பொழிந்த ஊர். மாடத்தி சாகக் கிடக்கிறாள். அப்போது சொத்தை தன் வளர்ப்புப் பிள்ளைக்கும் சக்களத்திக்குமாக பங்கு பிரித்துக் கொடுக்கச் சொல்கிறாள்: "சும்மக்காடு நாலு குறுக்கத்தையும், கருப்பசாமி கோயில் தோட்டத்திலே தே மொடங்கிய அரக் குறுக்கத்தையும் அந்த பய பேருக்கு மாத்திடு. வாக மரத்து புஞ்ச நாலு குறுக்கத்தையும் அவ (சீனியம்மா) பேருக்கு எழுதிடு" என்று தன் புருஷன் மினுத்தானுக்குச் சொல்கிறாள். தன் வீட்டுக்கு முன் நிற்கும் கருப்பியிடம் மாடத்தி சொல்கிறாள்: "ஏணம் கொஞ்சம் பெரிய ஏணமாக கொண்டாரப்படாது? கூடக் கொஞ்சம் சோறு குழம்பு கொண்டு போவியல்ல?" இதற்கு கருப்பி "இம்புடு போதும் தாயி, ஏராளம் தாயி, ஏராளம்."<br /><br />இது ஒரு கால கட்டத்திய தலித் குடும்பத்தின் சித்திரம். எல்லா தலித்துகளும் இப்படி என்றில்லை. கருப்பிகளும் தான் இருந்தார்கள். ஆனால், தலித்துகள் வசதியான நில உடமைக்காரர்களாக இருந்திருக்கிறார்கள். இப்படி தலித்தை வைத்துக்கொண்டு மேல்சாதிக்காரர் கொடுமைகளை எதிர்த்து எப்படி போராடுவது என்பது தலித், முற்போக்கு சித்தாந்திகளின் நியாயமான வாதம். ஆனால் எனக்கென்னமோ "தூர்வை" மிக முக்கியமான படைப்பு எனத் தீர்மானம்.<br /><br />"அமைப்பு சார்ந்த எழுத்துக்களின் மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. இந்த அமைப்புகளுக்கு அப்பால் விர்ந்து பரந்த வாழ்க்கை யன்று இருக்கிறதாகவோ, அந்த வாழ்க்கை கட்சியின் கர்க்கஸ் வேலைகளுக்கு அப்பல் வசப்படாமல் அது பாட்டிற்கு தன் போக்கிற்கு இயங்கிக் கொண்டிருப்பதாகவோ இவர்கள் கருதுவதில்லை. அதில் அக்கரை கொள்வதும் இல்லை. இவர்கள் சார்ந்த கட்சியின் கட்டுக்குள் அடக்கி வைக்கப்பட்ட ஜீவனற்ற ஒரு சதைப் பிண்டமாகவோ, அல்லது உயிர்த்துடிப்பற்ற ஒரு களிமண் பொம்மையாகவோ தான் பெரும்பாலும் அமைந்து விடுகிறது."...."இவர்கள் இலக்கியங்களில் வரும் கதா பாத்திரங்கள் எவ்வித ஆசாபாசங்களும் அற்ற மரப்பாச்சிப் பொம்மைகளாய் வர்க்க பஜனைதாசர்களாய் இருந்து வருகிறார்கள்...."என்னுடைய எழுத்துக்களை ஒரு சிலர் தலித் எழுத்துக்களாகச் சித்தரிக்கிறார்கள். நான் பிறப்பால் மட்டுமே தலித். எழுத்தால் அல்ல. "இது வரை நமக்குக் காட்டப்பட்டுள்ள தலித் சித்திரங்கள் ஒரு பக்கச் சார்புடையதாக, அழுக்கு உடை நாற்றமுடையவனாக, எளிதில் சோரம் போகும் பெண்களாக, கை கட்டி நிற்பவர்களாக, கூலிக்காக மட்டுமே போராடுபவர்களாக் காட்டப்பட்டுள்ளனர். இவையெல்லாம் இடதுசாரி மார்க்சீய எழுத்தாளர்களின் கோணல் பார்வை. இதையே சில தலித் எழுத்தாளர்களும் செய்வத்து தான் வேடிக்கை. தலித்தின் பன்முக வளர்ச்சி, ஆன்மா இவைகள் பதிவு செய்யப்பட வேண்டும்."<br /><br />என்றெல்லாம் சோ.தர்மன் தன் விளக்கம் தந்துள்ளார்.<br /><br />இதில் தகராறு என்னவென்றால், சோ.தர்மன் உருவாக்கியுள்ள பாத்திரங்கள், பொய் என்றோ கற்பனை என்றோ யாரும் வாதிடவில்லை. குற்றம் சாட்டிவிடவில்லை. உண்மையாக இருந்தாலும் அவை மறைக்கப்படவேண்டும், பதிவாகக் கூடாது. தங்கள் சித்தாந்த மாதிரிகள் தான் சித்தரிக்கப்படவேண்டும் என்பது தான் அவர்கள் கொள்கை. ஆனால், முற்போக்கு எழுத்தாளர்களுக்கு நேர் எதிர்மாறாக, தலித் எழுத்தாளர்கள் பெரும்பாலோர் தமக்குத் தெரிந்த வாழ்க்கையையே, அநுபவங்களையே எழுதினார்கள். அவர்களை, ஜாதி, வறுமை என்னும் சமூக பொருளாதார கொடுமைகள் வதைத்தன. அவர்கள் வதைபடுவது அவர்களுக்குச் சற்று ஒரிரு படிகளே மேல் இருந்த பிற்படுத்தப்பட்டோர் என்று தமக்கு பட்டயம் வழங்கிக் கொள்வதில் வெற்றி கொண்ட நாடார், தேவர், நாயக்கர், வன்னியர் ஜாதியினர். சித்தாந்திகள் தம் சாட்டையைச் சொடுக்க ஆசைப்பட்ட பார்ப்பனர் எங்கோ தூரத்தில் தான் இருந்தனர். இதன் காரணமாகவே, சோ.தருமன், பூமணி, இமையம், போன்றோரை சித்தாந்திகள் அங்கீகரிக்க மறுத்தனர். தம்மை தலித் சித்தாந்த திருமூலராக வரித்துக்கொண்டு தலித் இலக்கிய விதிகள் சமைத்த பேராசிரியர் அ.மார்க்ஸின் தீர்ப்பைக் கேட்கலாம்:<br /><br />"தீண்டாமை/சாதிகொடுமைகளின் ஆணிவேராக விளங்குவது பார்ப்பனீயமே என்பதை அம்பேத்கர் அவர்கள் அறுதியிட்டுக் கூறியுள்ள போதிலும், கிராமப்புறங்களில் நேர் அடியான அனுபவங்கள் என்பன இந்த ஆழமான உண்மையை அறிந்து கொள்ளப்போதுமானதாக இருப்பதில்லை. பிற்படுத்தப்பட்ட சாதியினரே அங்கே கொடுமைகளுக்கு உடனடிக் காரணமாக நிற்கின்றனர். எனவே அவர்களுக்கு எதிராக அணி திரள்வதே தலித்களின் உடனடி அரசியல் நடவடிக்கையாக மாறுகிறது. தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறு பான்மையோர் அகியோர் பார்ப்பனீயத்திற்கு எதிராக ஒன்றிணைவது என்கிற தலித் அரசியலின் தொலை நோக்கான பார்வைக்கு இந்த எதார்த்தம் இடையூறாக இருக்கிறது. நாடார்கள், நாயக்கர்கள், தேவர்கள், கோணார்கள்... போன்ற பிற்படுத்தப்பட்ட சாதியினரின் தீண்டாமைக் கொடுமைகளை அபிமானியின் சிறு கதைகளின் வாயிலாக படிக்கும்போது இந்த எண்ணங்கள் நமக்கு மேலோங்குகின்றன." (நிறப்பிரிகை, 1994 பக்கம் -109)<br /><br />சோ.தர்மனை நான் இப்போது தேர்ந்தெடுத்த காரணத்தைச் சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன். அவரும் தனித்து விடப்பட்டவர். அதற்காக வருந்துபவரும் இல்லை. இழ்ப்புகள் உண்டுதான். இழப்புகளைப் பற்றி எண்ணாது, தன் அனுபவங்களுக்கு உண்மையாக அவர் எழுத்து இருந்து வருகிறது என்பது இன்றைய சூழலில் சிறப்பான் விஷயம்.<br /><br />அந்த சோ தர்மனைத்தான் திரும்பவும் அவரது சமீபத்திய நாவல் 'கூகை'யிலும் காண்கிறோம். திரும்பவும் இது கோயில்பட்டியை அடுத்த சித்திரம்பட்டி கிராமத்து தாழ்த்தப்பட்ட மக்களின் இரண்டு தலைமுறை வாழ்க்கையைச் சொல்கிறது. ஒரு காலத்தில் நிலத்தில் கூலி வேலை செய்து வயிறு நிரப்பிக்கொண்டிருந்தவர்களுக்கு, காலவோட்டத்தில் தீப்பெட்டி பட்டாசுத் தொழிற்சாலைகளும், ஜின்னிங் ·பாக்டரிகளில் மறுபடியும் கூலி வேலைதான் விதிக்கப்பட்டிருக்கிறது. அன்று பண்ணை முதலாளிகளாக இருந்தவர்கள் நிலத்தை விற்றுவிட்டு நகரத்துக்கு குடி பெயர்கிறார்கள் அல்லது இங்கு பாக்டரி முதலாளி ஆகிறார்கள். அவதாரங்கள் தான் மாறுகின்றன. விதி மாறுவதில்லை. மாறாத விதி கொண்டவர்களுக்குத்தான் கூகை குறியீடாகியுள்ளது. கூகை சக்தி வாய்ந்த பறவை. ஆனால் பகலில் கண்தெரியாது அதற்கு. சின்னச் சின்ன பறவைகள் அதன் பலவீனம் தெரிந்து பகலில் அதைச் சுற்றி வந்து கொத்தி குதறும். கூகை பயந்து ஒடுங்கிக் கிடக்கும் செய்வதறியாது. இரவில்தான் அதன் ஆக்ரோஷம் வெடித்துச் சிதறும்.<br /><br />பிறந்த குழந்தையைக் காப்பாற்றிய நன்றிக்கடனில் கூகை சீனிக் கிழவனுக்கு தெய்வமாகியது. கூகையைக் கும்பிடும் அவன் கேலிக்காளாகிறான். அவனையும் அவன் பள்ளக்குடி சகாக்களையும் சீனி தன் பணிவினால், சந்தர்ப்பம் அறிந்த அடக்கத்தினால் காப்பாற்றுகிறான், தேவர்களின் மேல் ஜாதி மிருகத்தன கொடுமையிலிருந்து. அவனும் தப்புவதில்லைதான். நாவலின் தொடக்கத்தில் இரண்டு பள்ளக்குடி வாலிபர்கள் கோவில்பட்டி புறநகர்ப்பகுதியில் உள்ள நாச்சியார் கிளப்பில் மற்றவர்க்குச் சமதையாக பெஞ்சில் உட்கார்ந்து சாப்பிட்டு வரும் ரகசிய சாகஸச் செயலைக் கண்டு பிடித்து விட்ட காவக்கார முத்தையா பாண்டியனிடம் செமத்தியாக அடி வாங்குகிறர்கள் "நாறப்பயகளே ஒங்களுக்குக் கேக்குதோ கிளப்புக்கடச் சோறு, அதுவும் பெஞ்சுமேலே உக்காந்து தொரகளுக்கு ஒய்யாரத்துலே சோறு." ஜமீன'கட்டும், மற்ற பண்ணைக்காரர்களான நாயக்கர் தேவர் என்றில்லை, அவர்களின் எடுபிடிகளின் கொடுமைகளுக்கும் ஆளாகவேண்டியிருக்கிறது. துட்டி சொல்ல மைல் கணக்கில் நடந்து போகும் ஆளைக்கண்டு இரங்கி வண்டியில் ஏறச்சொன்னவர்கள், அவன் பள்ளன் என்று தெரிந்தது, அவனை உடனே வண்டியை விட்டு இறக்கி விளாசுகிறார்கள் "துட்டி சொல்ல வார பறத் தாயோளிக்கு ஒய்யாரம் கேக்கோலெ" பண்ணை ஆட்களுக்கும் போலீசுக்கும் தப்பி ஒடும் அப்புச்சுப்பன் (பள்ளன்) ஏரித்தண்ணீரில் மூழ்கி ஒளிந்தவன், கரையில் பேச்சுக்குரல் கேட்கவும் "சாமியோவ்" என்று கூவி தான் அம்மணமாக தண்ணீரில் இருப்பதால் வெளியே வர துணி கேட்கிறான். அவர்கள் தூக்கி எறிந்த துண்டைக் கட்டிக்கொண்டு வெளியே வந்தவன் தன் கதையைச் சொல்கிறான். தான் பகடை{சக்கிலியன்} என்று சொல்லிக்கொள்கிறான். அவர்கள் அவனுக்கு உடுக்க வேட்டியும் கொடுத்து சாப்பிட தேனீரும் தருகிறார்கள். பனை ஓலை வழியாக தேனீர் ஊற்றப்படுகிறது பகடைக்கு. அவர்களுக்கும் ஒரு பகடை சமம் இல்லை. ஆனாலும் அதை மீறிய மனிதாபிமானம் அவர்களிடம் துளிர்கத்தான் செய்கிறது. சித்திரக்குடியில் அப்புச்சுப்பன் எந்த தேவர் நாயக்கரிடமும் காணாத மனிதாபிமானம். முன்னர் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் சொன்னதைத் தான் திரும்பச் சொல்லத் தோன்றுகிறது.<br /><br />"மிருகத்தனம் ஜாதியின் குணமல்ல. மனிதனின் குணம். ஜாதி இல்லாமலும் மிருகத்தனம் தனக்கு வேறு வடிகால்களைத் தேடிக்கொள்ளும். ஜாதியை ஒழிக்கிறேன் என்ற கோஷ வடிகாலையும் அது தேடிக்கொள்ளும்., இத்தலைமுறையில் நடப்பது போல. மனிதாபிமானம் உள்ள மனிதிற்கு ஜாதி இருப்பதும் இல்லாமல் போவதும் ஒரு பொருட்டல்ல. மிருகத்தனத்திற்கும் ஜாதி இருப்பதும் இல்லாததும் ஒரு பொருட்டல்ல. எத்தடையையும் மீறி, மனிதாபிமானமும் சரி, மிருகத்தனமும் சரி தன் வடிகால்களைத் தேடிக் கொள்ளும்."<br /><br />கால மாற்றத்தில் நிலம் படைத்தவர்கள் தம் நிலங்களை விற்றோ, குத்தகைக்குக் கொடுத்தோ கிராமத்தைவிட்டு வெளியேறுகிறார்கள். நடராஜய்யரும் தன் நிலங்களை, அதில் இதுகாறும் உழைத்துவந்த பள்ளக்குடிக் காரர்களிடம் ஒப்படைத்துவிட்டுப் பட்டணம் போய்விடுகிறார். அவர் வருட முடிவில் வந்து தன் பங்கை வாங்கிக் கொள்வார். சீனி, நடராஜய்யர் வீட்டிலிருந்து கொண்டே மேற்பார்வை செய்வான். அவர் பங்கு பிரித்துக் கொடுத்த அன்று அவர்கள் எல்லோரும் (பள்ளர்கள்) அய்யர் வீட்டின் தாழ்வாரத்தில் அவர் முன் குந்தியிருக்க முடிகிறது. அவர் வீட்டு தாழ்வாரத்தில் கோழி வளர்க்கமுடிகிறது. கிராமத்து மேல் ஜாதி மக்கள் பள்ளர்களை ஒதுக்கி வைத்தபோது, அந்த வீட்டில் ஒர் கடை திறந்து நடத்த முடிகிறது.; நடராஜ ஐயரின் மனைவி ராஜலட்சுமி அம்மாளின் படத்தை வைத்து தெய்வமாக பூஜிக்கிறார்கள், சீனியும் அவன் தோழர்களும். ஏதோ விசாரணைக்காக போலீஸ் அந்த வீட்டுக்குள் நுழையும்போது அவர்களைச் சீனி தடுத்து விடுகிறான்." செத்தாலும் இங்கன சாவன ஒழிய பூட்ஸ் காலோட வீட்டுக்குள்ள நுழைய விடமாட்டேன்" என்கிறான். "படியேறக் கால் கூசியது. பக்தனின் எல்லை படிவாசல் தானே! பூசாரிக்குத்தான் தெரியும் கர்ப்பக்கிரஹத்தின் சூட்சுமம். சீனிக் கிழவன் பூசாரியானான். நடராஜ ஐயரின் வீடு கோயில். ஈசன், தேவி என இரண்டு தெய்வங்கள். சீனிக் கிழவன் மெதுவாய் எட்டு வைத்து உள்ளே போனான்." இது நடராஜ ஐயரின் நிலத்தில் வேலைசெய்த பள்ளர்களுக்கும் நடராஜ ஐயர் தம்பதிகளுக்கும் இடையே இருந்த உறவைச் சோல்கிறது. அய்யர் தம் நிலத்தை அவரிடம் வேலை செய்த 80 பள்ளக் குடும்பங்களுக்கே பிரித்து விவசாயம் செய்து கொள்ளச் சொல்லிப் போனது, மற்ற நில உடமைகளுக்குப் பிடிக்கவில்லை. "முந்தியெல்லாம் கூப்ட்டா, கூப்ட்ட மாயந்த் தெரியாம நாய்க்கெணக்கா ஒடுன பயக, இப்பப் பாரு எதுக்கு, என்ன வெசயம், ..இதெல்லாம் மப்பு ஏறுனதுக்கு அடையாளம்ல். எல்லாத்துக்கும் காரணம் அந்த அய்யப்பய. அவன இங்கயே பூணுல அத்திருந்தா வயக்காட்டப் பூராத்தையும் வித்திட்டுப் போயிருப்பான். அய்யர்னு கொஞ்சம் மரியாத காட்டப் போயி, வேண்டாத வேலையெல்லாம் பாத்திட்டுப் போய்ட்டான். இப்ப இந்த பயக நம்மள மதிக்க மாட்டேங்கா"<br /><br />இத்தகைய துவேஷம் காட்டாத மேல் ஜாதி பண்ணைகளே அங்கு இல்லை. இதுவே பின்னால் திருட்டு அறுவடைக்கும், குடிசைகள் எரிவதற்கும், கொலைகள் பலவுக்கும், காரணமாகிறது. பள்ளர்கள் எதிர்க்கவே கலவரம் மூள்கிறது. சித்திர குடியில் உள்ள ஜமீன், பண்ணைகளுக்கு மட்டுமல்ல. கூகையைப் பற்றி எழுத வந்த தலித் சித்தாந்தி ஒருவருக்குக் கூட இப்படி ஒரு நடராஜ ஐயர் தருமனிடமிருந்து வந்துள்ளது பிடிக்கவில்லை. ஜமீனுக்கும் நாயக்கர், தேவர்கள் பண்ணைகளுக்குப் பதிலாக நடராஜ ஐயரும் ஒரு கோரப்பற்கள் காட்டும் மிருகமாக படைத்திருந்தால் குதூகலப்பட்டிருப்பார். இவர்களில் மாதிரிக்கு ஒருவர் இவர் என, இவரது கருத்து: "நெருக்கடிகள் வருகிற போது பொது நலத்தின் பெயரால் சுய நலத்தை மறைத்துக் கொண்டு வினையாற்றி, அதன் வழி தங்களது முன்னேற்றம் அரசதிகாரத்தில் முதனிலைப் பங்கு என நகர்வதில் இந்திய பிராமணர்கள் கவமாக இருந்துள்ளனர் என்பது வரலாறு. அந்த வரலாற்றின் ஒரு கண்ணியாகவே இந்நாவலில் வரும் நடராசய்யர் படைக்கப்பட்டுள்ளார்." அப்படித்தானா? இப்படித்தான் திரித்தல்கள் வரலாற்றில் எழுதப்பட்டு வருகின்றன. பிராமணன் ஒருவன் ஈர மனதுடையவனாக மனிதாபிமானம் உள்ளவனாக சொல்லப்படக் கூடாது. பிராமணனே எல்லாவற்றிற்கும் ஆணி வேரானதால், கொடுமைக்காரன் எந்த இடைசாதிக்காரனாக இருந்தாலும், பிராமணனே கொடுங்கோலனாக முன் வைக்கப்படவேண்டும். இரக்க மனதுள்ளவராக பிராமணர்களில் ஒருவர் இருந்துவிட்டாலும் அது மறைக்கப்பட வேண்டும். ஒரு காலத்தில் தலித்துகளும் நிலம் படைத்தவர்களாக இருந்தார்கள் என்பது மறைக்கப்படுவது போல.<br /><br />எனக்கு இதெல்லாம் புதிய செய்திகள். தூர்வையில் பார்த்த மாடத்தி மினுத்தான், கூகையில் காணும் நடராச அய்யர், போன்றவர்கள் வரலாற்றில் இருந்திருக்கிறார்களா, கோபால கிருஷ்ண பாரதியின் நந்தனாரும், ஐயர் ஆண்டையும் மூலப் பிரதிகளாக உருவாக்கப்பட்டு நம் அடிமன ஆழம் வரை வேர் கொண்டுள்ளனர். சோ.தர்மனிடமே என் சந்தேகங்களைக் கேட்டேன். 'அதெல்லாம் உண்மைதான் என்றும், 'எங்கள் ஊரில் இப்போது ஐயர் நிலங்கள் என்று தான் சொல்வார்கள்" இதையெல்லாம் மறைக்கிறார்கள். மதுரை வைத்திய நாத அய்யர் பற்றி எவன் இப்போது நினைத்துப் பார்க்கிறான்? அவர் ஜாதியினரிடமிருந்தே எவ்வளவு எதிர்ப்பை சமாளிக்க வேண்டியிருந்தது, அப்படியும் அந்தக் காலத்திலேயே சாதித்தது எவ்வளவு பெரிசு? இவர்கள் மறைத்ததையெல்லாம், சொல்ல மறுப்பதையெல்லாம், இவர்கள் அழிக்க விரும்பும் உண்மைகளையெல்லாம் தான் நான் சொல்லிக் கொண்டு வருகிறேன்." என்று அவர் பதிலளித்தார், இரு வேறு சந்தர்ப்பங்களில், நேரிலும், தொலை பேசியிலும்.<br /><br />அப்புச்சுப்பன் தலை மறைவாகப் போகிறான். பேச்சியின் வீட்டுக்கு முன் இருந்த மரத்தில் ஏறி மறைந்து கொள்கிறான். தேடி வந்த போலீஸ் மரத்தைச் சுற்றி வளைத்து டார்ச் அடித்துத் தேடுகிறார்கள். மரத்தில் இருந்த கூடை அவர்களைத் தாக்கி விரட்டுகிறது. அப்புச்சுப்பன் மரத்தின் மேல் இருக்கிறான் அவனை ஒன்றும் செய்யாத கூகை கீழே இருந்து வளைத்த போலீஸை மாத்திரம் தாக்கும் மாயம் என்ன என்று தர்மனிடம் கேட்டேன். இரவு நேரம். கூகைக்கு தன்னுடன் பழகிய ஆள் வேற்று ஆள் தெரியும் அதான் விஷயம் என்றார். இதே போல தூர்வை நாவலிலும் தெய்வயானைப் பாட்டியைச் சுற்றி, நாயின் குழைவுடன் நரி ஒன்று சுற்றி அலையும். பாட்டி வளர்த்த் நரி அது. கஞ்சிக்கு குழைந்து நிற்கும் நரிக்கும் பாட்டிக்கும் இடையிலான வக்கணைப் பேச்சுக்கள் மிக சுவாரஸ்யமாக் இருக்கும். இப்படி எத்தனையோ. நம் ஒவ்வொருவரின் அனுபவக் குறுகலை மனதில் கொண்டால் போது. அதை மீறி நடப்பவை மாயா ஜாலங்களாகத் தோன்றாது. வேண்டுமென்றே உண்மைகளை மறைக்க, அங்கீகரிக்க மறுக்கும் சித்தாந்திகள், கட்சியாளர்கள் சமாச்சாரமே வேறு.<br /><br />கூகை நாவல் நடப்பு வாழ்க்கை என்னும் யதார்த்த தளத்தில் மட்டுமே தன் இருப்புக்கு எல்லை வகுத்துக் கொளள வில்லை. கூகை ஒரு குறியீடாகி விட்ட பிறகு, குறியீட்டுத் தளத்திலும், சில தருணங்களில் அமானுஷ்ய தளத்திலும் நாவல் ஊடாடுகிறது. தருமனின் மொழியும் கவிதையோவென ஆங்காங்கே பல இடங்களில், உரு மாறுகிறது. சில இடங்களில் அமானுஷ்யமாகவே இன்னமும் நமக்குத் தோன்றுகிறது. மற்ற எல்லா நிலங்களிலும் வெட்டுக்கிளிகளும் புழுக்களும் பயிர்களைப் பாழ் செய்ய அய்யர் நிலத்தில் மாத்திரம் பறவைகள் கொத்தி புழுக்களைத் தின்று பயிரைக் காக்கின்றன. சோ தருமனிடம் ஜாதி பார்த்து துவேஷம் பிறப்பதில்லை. ஜாதியில் பிறக்காத மிருகத் தனத்தைக் கண்டு சீற்றம் பொங்குகிறது.<br /><br />தமிழ் சமூகத்தில், கோஷமாகிவிட்ட பல 'புரட்சி'க் கருத்துக்களைச் சத்தமிட தைரியம் தேவை இல்லை. இப்புரட்சியாளர்கள் வெள்ளத்தின் போக்கில் மிதப்பவர்கள். இதற்கு எதிராகக் குரல் கொடுப்பதற்குத் தான் தைரியம் வேண்டும். அதில் இழப்புக்களும், உதாசீனமும், நிறைய எதிர்கொள்ள வேண்டியிருக்கும். புகழ்வதான தோற்றத்தில் வரும் திருகல் விளக்கங்கள் தரும் அங்கீகாரமும் ஆபத்தானதும் பொயானதுமாகும். அதையும் தருமன் எதிர் கொள்ளவேண்டியிருக்கிறது.<br /><br />நிலத்தில் கூலி விவசாயம் செய்தவர்கள் இன்று நிலம் வரள, தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் கூலி வேலை செய்ய தம் குஞ்சு குளுவான்களுடன் ஏறிச்செல்ல விடியும் முன் பஸ்ஸ¤க்கு ஓடுகிறார்கள். காலம் மாறியுள்ளது. வதை படும் களம் இவர்களுக்கு மாறியுள்ளது,. கூகை மற்றவர்கள் சொல்லாத உலகை தைரியத்துடன் முன் வைக்கிறது.<br /><br />வெங்கட் சாமிநாதன்<br /><br />28.2.06 Arun Ambiehttp://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6493698527091962490.post-24955933645254458012015-09-10T21:57:00.000-07:002015-09-10T21:57:37.150-07:00தமிழ் நாட்டின் விழிப்பு - மஹாகவி பாரதியார்<br />
கும்பகர்ணன் தூங்கினானாம். இலங்கையில் சண்டை நடக்கிறது. மூன்று லோகமும் நடுங்குகிறது. "ராமராவண யுத்தத்திற்கு ராமராவண யுத்தமே நிகர்' என்று முன்னோர் சொல்லியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சண்டையின் அதிர்ச்சியிலே கூட, கும்பகர்ணனுடைய தூக்கம் கலையவில்லை. ஆயிரக்கணக்கான ஆடுமாடுகுதிரைகளின் காலில் கூர்மையான கத்திகளைக் கட்டி அவன் மேலே நடக்கச் சொன்னார்கள்; தூக்கம் கலையவில்லை. ஏழெட்டு மேகங்களை அவன் காதுக்குள்ளே போய் இடியிடிக்கச் சொல்லி " ராவணன் கட்டளையிட்டானாம்; மேகங்கள் போய் இடித்தனவாம்; கும்பகர்ணன் குறட்டை நிற்கவே யில்லை.<br /><br />மேற்படி கும்பகர்ணனைப்போலே சில தேசங்கள் உண்டு. அண்டங்களத்தனையும் இடிந்து விழுந்தாலும் காதுகேட்காத செவிடர் வாழும் தேசங்கள் சிலவுண்டு. அந்த தேசங்களிலே வாஸம் செய்வோர் மஹா பாவிகள். மாதுர் துரோகம், பிதுர் துரோகம், சகோதரத் துரோகம், தெய்வத் துரோகம், சுதேசத் துரோகம் முதலிய பெரிய பாதகங்கள் செய்து சீரழிந்த மானிடர் அப்படிப்பட்ட தேசங்களில் வாழ்கிறார்கள்.<br /><br />ஆனால், ஹிந்து தேசம் அப்படி................யில்லை! இங்கு தமிழ் நாட்டைப்பற்றி முக்யமாகப் பேச வந்தோம்; தமிழ் நாடு மேற்படி மஹா பாதக ஜாப்தாவைச் சேர்ந்த தன்று, அன்று!<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6GyQ1pqHsRZTA0Vs5MVUDHsn7o5MJTQAvJ1ti_6cwQsn40zxkjMIJj6bRo0G_apHCpfST5-QgP6ycBi_6gO26iqwsPsTOwMfzGQmhKDAMRZ2zBNGwuB93IcUvUeqXlUODeaYjfod2/s1600/bharathiyar.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="279" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6GyQ1pqHsRZTA0Vs5MVUDHsn7o5MJTQAvJ1ti_6cwQsn40zxkjMIJj6bRo0G_apHCpfST5-QgP6ycBi_6gO26iqwsPsTOwMfzGQmhKDAMRZ2zBNGwuB93IcUvUeqXlUODeaYjfod2/s320/bharathiyar.png" width="320" /></a></div>
ராமலிங்க சுவாமிகளும், 'சுதேசமித்திரன்' சுப்பிரமணிய அய்யரும், இவர்களைப்போன்ற வேறு சில மகான்களும் தமிழ் நாட்டின் புதிய விழிப்புக்கு ஆதிகர்த்தாக்களாக விளங்கினர். ஹிந்து தர்மத்தின் புதுக் கிளர்ச்சிக்கு விவேகாநந்தர் ஆரம்பம் செய்தார். அவரைத் தமிழ் நாடு முதலாவது அங்கீகாரம் செய்துகொண்ட பிறகு தான், வங்கம், மாஹாராஷ்ட்ரம் முதலிய ஹிந்து தேசத்து மாகாணங்கள் அவருடைய பெருமையை உணர்ந்தன.<br /><br />பூமண்டல முழுதிலும் பெரிய விழிப்பொன்று வரப் போகிறது. அதற்காதாரமாக ஹிந்துஸ்தானம் கண்ணை விழித்து இருபதாண்டுகளாயின. ஹிந்துஸ்தானத்துக்குள் தமிழ் நாடு முதலாவது கண் விழித்தது. ஆனால், இன்னும் புத்தி சரியாகத் தெளியாமல் கண்ணை விழிப்பதும் கொட்டாவி விடுவதுமாக இருக்கிறது.Arun Ambiehttp://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6493698527091962490.post-34525192382882167642015-07-02T04:01:00.000-07:002015-07-09T11:01:32.085-07:00மணிபத்ரபுரி @ மாணா - பாரதத்தின் கடைசிக் கிராமம்வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று பீற்றித் திரியும் அரசியலார், தமிழ் பிழைப்பாளர்கள் கெடுத்த தமிழகத்தில் வெளியூர்த் தமிழனே ஏமாற்றப்படும் அவலம் அடிக்கடி நடப்பது. அப்படி இருக்கையில் மொழி தெரியாத வேற்று மாநிலத்தவர், வேற்று நாட்டார் நிலை?<br />
<br />
ஆனால், வடக்கே நிலை வேறு. பத்ரிநாத்துக்கு அருகில் இருக்கிறது அப்பகுதியின் பாரதத்தின் கடைசிக் கிராமமான மணிபத்ரபுரி என்கிற மாணா. நவீன வசதிகள் மிகச் சிலவே எட்டிப் பார்த்திருக்கும் அங்கே இந்த வந்தாரை வாழவைக்கும் மனப்பாங்கைக் கண்கூடாகக் கண்டோம்.<br />
<br />
<a name='more'></a><br />
நாங்கள் மாணாவுக்குச் சென்றபோது மாலை மங்கும் நேரம். மழை பெய்தால் சிக்கிவிடுவோம், சீக்கிரம் சீக்கிரம் என்று நண்பர்கள் கௌதமன், ஹரன் மாமாஜி, உள்ளூர் நண்பர் கமல் உள்ளிட்டோர் விரைவுபடுத்திக் கொண்டே வந்த போதும் சரஸ்வதி, மானசரோவர் உள்ளிட்ட தீர்த்தங்களையும், பீமன் அனுமனைச் சந்தித்த தலத்தையும் பார்த்துவிட்டு, அருகிருந்த கோவில்களிலும் வழிபட்டபின், பாரதத்தின் கடைசித் தேநீர்க் கடையில் தேநீர் அருந்திவிட்டு, அந்தத் தேநீர்க்கடை உரிமையாளர் சந்திர சிங் பட்வாலுடன் சற்றே அளவளாவிவிட்டுக் கீழே இறங்கும் போது மழை பிடித்துக் கொண்டது. உறைபனி பெய்வது போன்ற தட்பம் (வெப்பமே இல்லை).<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgz9BEtxFEvyJvUQpVlEqJfan5CX4oHa3BlWbhCpO6MepVHctsleMwOCj8fwFtba7TpdvchWJ5HRN9uJcpxjGUZ98s10Nr7hFaUkRRvWVRvmhh0Zd6EU6VJI5egnO-uQXlYnNwEqML-/s1600/IMG_20150523_173533473.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="223" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgz9BEtxFEvyJvUQpVlEqJfan5CX4oHa3BlWbhCpO6MepVHctsleMwOCj8fwFtba7TpdvchWJ5HRN9uJcpxjGUZ98s10Nr7hFaUkRRvWVRvmhh0Zd6EU6VJI5egnO-uQXlYnNwEqML-/s400/IMG_20150523_173533473.jpg" width="400" /></a></div>
<div style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 19.3199996948242px; margin: 6px 0px; orphans: auto; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 1; word-spacing: 0px;">
</div>
ஓடிவரவும் முடியவில்லை. மலைப் பாதை கடினமானது. சற்றே எட்டி நடை போட்டுக் கொண்டிருந்தபோது அங்கே கம்பளி ஆடைகள், கம்பளிக் குல்லாய்கள், கம்பளிக் கையுறைகள் செய்து விற்றுக் கொண்டிருந்த ஒரு மூதாட்டி சில குல்லாக்களைத் தந்து ”தலை நனையாமல் பாதுகாப்பாகப் போங்கள். மழையில் நனைந்துவிட்டால் உயிருக்கு ஆபத்து வர வாய்ப்புண்டு” என்று சொன்னார். பணம் கொடுத்த போது வாங்க மறுத்தார். (கம்பளி ஆடைகள் விற்பது மட்டுமே அவருக்கு வருமானம் தரும் தொழில்.) ”உங்கள் உயிரைக் காத்துக் கொள்ளத்தான் தருகிறேன். பணம் வேண்டாம்” என்றார். அவரிடம் பேசி(கெஞ்சி)ப் பணம் கொடுத்தபின் “பாரத் மாதா கி ஜெய்” என்று சொல்ல சில பற்களே இருந்த தன் வாயை முழுதாகத் திறந்து மகிழ்ந்து சிரித்தபடி “பாரத் மாதா கி ஜெய்” என்று உரக்கச் சொன்னார் அந்த மூதாட்டி.<br />
<br />
தமிழகத்திலும் இப்படி உதவும் மனதுடன் பலர் உள்ளனர். அவர்கள் ஈவெரா பிராண்ட் தீராவிடத்தால் தீண்டப்படாதவர்கள்.<br />
<br />
யோசித்துப் பார்க்கையில் இந்த நிலையில் மாணா போன்ற இடத்தில் வந்தாரை வாழவைப்பது பற்றி வாய்கிழியப் பேசும் தீராவிடர்கள் யாரேனும் இருந்திருந்தால் 50 ரூபாய் பொருளை 500 ரூபாய் சொல்லிவிட்டு உசுரு பெருசா காசு பெருசா என்று விண்ணாளம் வேறு பேசுவார்கள் என்ற உண்மையும் முகத்தில் அறைகிறது.<br />
நிற்க.<br />
<br />
மாணா என்று பொதுவாக அறியப்படும் மணிபத்ரபுரி பற்றி நான் கவனத்தில் கொண்ட சில தகவல்கள்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhb-8gQcYty02_sMGFPeQqB95QMykuAbfK2JNpYa6Ecxdkz0kOuPiT_eXwWJ-k8Jcv_WgUJtZVkZ5HT3oW7zoA9llf1VJGrEG_p3VWVV7Z9xMe7yiJ060qoaMQdjPC8KTKzHLSWr7Ap/s1600/DSCF3611.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhb-8gQcYty02_sMGFPeQqB95QMykuAbfK2JNpYa6Ecxdkz0kOuPiT_eXwWJ-k8Jcv_WgUJtZVkZ5HT3oW7zoA9llf1VJGrEG_p3VWVV7Z9xMe7yiJ060qoaMQdjPC8KTKzHLSWr7Ap/s400/DSCF3611.JPG" width="400" /></a></div>
<div style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 19.3199996948242px; margin: 6px 0px; orphans: auto; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 1; word-spacing: 0px;">
</div>
<div style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 19.3199996948242px; margin: 6px 0px; orphans: auto; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 1; word-spacing: 0px;">
<br />
மாணா கிராமம் தன்னிறைவு பெற்ற ஊராக இருக்கிறது. அங்கேயே கோதுமை, அரிசி, காய்கனிகள் பயிரிட்டுக் கொள்கிறார்கள். செம்மறி ஆடுகள் வளர்க்கிறார்கள், மாடுகள் வளர்க்கிறார்கள். அவர்களது தேவைக்கான பால் மற்றும் உணவுப் பொருட்கள் அங்கேயே கிடைத்துவிடுகிறது. செம்மறி ஆட்டிலிருந்து ரோமத்தை எடுத்துக் கம்பளி ஆடை தயாரித்து விற்கிறார்கள். மாடுகளைப் பேணிக் காக்கிறார்கள். குப்பைகளை அதற்குரிய இரும்புப் பெட்டியில் போட்டு மாலை வேளையில் எரித்து விடுகிறார்கள். முடிந்த வரை இயற்கையோடு ஒன்றி வாழ்கிறார்கள். சூரிய ஒளி மின்சாரம் இப்போதுதான் அந்தக் கிராமத்தை எட்டிப் பார்க்கிறது. BSNL மொபைல் சிக்னல் மட்டும் அவ்வப்போது வந்து போகிறது. ஆனால் எல்லாக் கம்பெனிகளும் அங்கே டவர் வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்!!<br />
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinChS-0gm6pTcnSYJ9E962MYwGfSQ-h2pcnat__z8YNiNNz7G2uI_Sy0k9KNuD6vz__ylRTFCv9rD5Zqy2BHIqzEFWNRV-TqJ2jArKJ75gIfRT1dwykGQJuIKbdRTBjWZ9bp3doUP7/s1600/DSCF3626.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinChS-0gm6pTcnSYJ9E962MYwGfSQ-h2pcnat__z8YNiNNz7G2uI_Sy0k9KNuD6vz__ylRTFCv9rD5Zqy2BHIqzEFWNRV-TqJ2jArKJ75gIfRT1dwykGQJuIKbdRTBjWZ9bp3doUP7/s400/DSCF3626.JPG" width="400" /></a></div>
<br />
அந்த கிராமத்துக்காரர் ஒருவரிடம் பேசியபோது ”ஹிந்தி சீனி பாய் பாய் என்று சொல்லிக் கொண்டே எங்கள் உறவினர் பலரை நேரு காலத்தில் சீனர்கள் கொன்று போட்டார்கள். எங்களைப் பற்றிக் கவலைப்படாமல் முந்தைய அரசாங்கத்தினர் சீனாக்காரனுக்கு வால் பிடித்தார்கள். நாங்கள் எப்போது என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் இருந்தாலும் பத்ரிவிஷால் பகவான் மீதான நம்பிக்கையில் தான் இங்கே வாழ்ந்து வந்தோம். சீனாக்காரனுக்கு மோடிதான் சரியான ஆள். அவனிடம் சிரித்துப் பேசியபடியே இருந்தாலும் இங்கே ராணுவத்தினருக்கு அவன் அத்துமீறினால் கடுமை காட்டச் சொல்லி உத்தரவு போட்டுவிட்டார். இனி சீனன் இங்கே வாலாட்ட மாட்டான். நாங்கள் இப்போது பாதுகாப்பாக உணர்கிறோம்”, என்றார்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPxU5pNjX9t_WUfItz3hMi4JN4IRNJTw1wLvEBngzeloNdtEI2bTMx8VUDXNMlRIOchZzJWS5nJWAp9PGntS4sBB7nMFOXVLbS1IIl2zn-MJiG4Nsj9KmLkA6JOeC5wiaw5MuJd8wU/s1600/DSCF3614.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPxU5pNjX9t_WUfItz3hMi4JN4IRNJTw1wLvEBngzeloNdtEI2bTMx8VUDXNMlRIOchZzJWS5nJWAp9PGntS4sBB7nMFOXVLbS1IIl2zn-MJiG4Nsj9KmLkA6JOeC5wiaw5MuJd8wU/s400/DSCF3614.JPG" width="400" /></a></div>
<br />
அவர் முந்தைய காங்கிரசு அரசுகளையும் சில அரசியல்வாதிகளையும் திட்டிய வார்த்தைகளை இங்கே எழுத முடியாது. சரியாகப் புரியாத சில கெட்ட வார்த்தைகளை வடக்கே சில ஆண்டுகள் வாழ்ந்த நண்பர் ஸ்ரீகாந்திடம் கேட்டு புரிந்து கொண்டு சற்றே அதிர்ந்தேன். எவ்வளவு பாதிப்புக்கு ஆளாகியிருந்தால் இப்படிக் கோபப்படுவார். அவர் எந்த அரசியல் கட்சியிலும் இல்லையாம். எங்களைப் பாதுகாப்பவர் எங்கள் தலைவர், அவ்வளவுதான் என்றார். ஆனாலும் பாரதம் என்ற தேசத்தின் மீதும் பத்ரிவிஷால் என்ற இறைவன் மீதும் நம்பிக்கை வைத்து இதுவே என் நாடு என்று வாழ்கிறார்கள் அந்த மக்கள்.Arun Ambiehttp://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6493698527091962490.post-46030339090359525972015-02-07T10:36:00.000-08:002016-04-17T10:10:17.146-07:00சமூகத்தினொரு பாகன்இன்றைய தினங்களில் ஒரு வரைமுறை இல்லாமல் அமீபாவின் உருவம் போல வரையறுக்கப்படுவது தனிமனித உரிமை எனும் கோட்பாடு. ஒவ்வொரு தனிமனிதனும் தன்னைப் பற்றி மட்டுமே சிந்தித்துத் தன் நலனை என்பதை மட்டுமே யோசித்துப் பேசப்படுவதாகவே தனிமனித உரிமை, தனிநபர் சுதந்திரம் என்ற பெயர்களால் அழைக்கப்படும் கோட்பாடு உள்ளது. மனிதன் ஒரு சமுதாய விலங்கு என்பதில் சமுதாய என்ற சொல்லைப் பலர் வசதியாக மறந்துவிட்டு தனிமனித உரிமை பேசுவது வேடிக்கை.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhI_P9zNZHV8WzXhA8P273wmnK6dZ06zEsBiHZmPKeZdAKhh8YEX9ixuuwB4n6t9TyivuIFO7erh1jBh-YkuFg0Jq3vtcgMgdr1MAjbzZXnfSKFZsTD-010yuYCTCnTz-ZpYl627ahZ/s1600/ardhanari+temple.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="235" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhI_P9zNZHV8WzXhA8P273wmnK6dZ06zEsBiHZmPKeZdAKhh8YEX9ixuuwB4n6t9TyivuIFO7erh1jBh-YkuFg0Jq3vtcgMgdr1MAjbzZXnfSKFZsTD-010yuYCTCnTz-ZpYl627ahZ/s1600/ardhanari+temple.jpg" width="400" /></a></div>
<br />
சிலர் புரியாது செய்கிறார்கள், சிலர் ஒரு உள்நோக்கத்தோடு செய்கிறார்கள், சிலர் இப்படிச் சிந்திக்கப் பயிற்றுவிக்கப்பட்டதால் மாற்றுச் சிந்தனை வழியறியாது இதைச் செய்தபடி தற்குறியாகத் திரிகிறார்கள். இத்தனை நாட்களாக இல்லாத எதிர்ப்பு ஏன் இப்போது என்ற கேள்வி நியாயமானதே. இத்தனை நாட்களாக இருந்த எதிர்ப்பு வெளியே தெரியவரவில்லை. காரணம், ஊடகங்களில் நிரம்பி வழியும் சில உள்நோக்கர்கள், அவர்களால் பயிற்சியளிக்கப்பட்ட பலர், மற்றும் சில ஒத்து வாழ்வோர். இவர்களைத் தாண்டி இவர்களுக்கு எதிரான கருத்துக்கள் இவர்கள் நிரம்பியிருக்கும் ஊடகங்களில் வரும் என்று எதிர்பார்ப்பது இந்தி படிக்காமல் இருந்தால் தமிழ் வளரும் என்று நம்புவதைவிட முட்டாள்தனம்.<br />
<br />
<a name='more'></a><br /><br />
பெருமாள் முருகனுக்கு ஆதரவாக படைப்புச் சுதந்திரம் என்ற வாதம் வந்தது. படைப்பாளிக்குப் படைப்புக்கும் அதை மிளிரவைக்கும் புனைவுக்கும் சுதந்திரம் உண்டு. ஆனால் மாதொரு பாகன் புத்தகத்தின் முன்னுரையில் அது ஒரு ஆய்வு நூல் என்று பெருமாள் முருகன் சொல்லியிருக்கிறார். கள ஆய்வுகள் செய்து திருச்செங்கோடு பகுதியின் பழக்க வழக்கங்களை நாவல் வடிவில் தொகுத்துத் தருகிறேன் என்று பேசித்தான் காசு வாங்கியிருக்கிறார்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHrBtXfb1BXMUeiQlvD78LxtVisKqwV76Af989V51BEUndneC7YVrfTrNyDja109yVqvlt2yjjwI_6ICiz37-YPd5QBfN-5PrNq1OYrnU7t5IJPGL1nZKg4d-TrzvbH2zPQkUEC-QJ/s1600/ardhanari.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHrBtXfb1BXMUeiQlvD78LxtVisKqwV76Af989V51BEUndneC7YVrfTrNyDja109yVqvlt2yjjwI_6ICiz37-YPd5QBfN-5PrNq1OYrnU7t5IJPGL1nZKg4d-TrzvbH2zPQkUEC-QJ/s1600/ardhanari.jpg" width="275" /></a></div>
<br />
கள ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்ட புத்தகத்தின் சில கருத்துக்கள் ஏற்கத் தக்கவையல்ல என்று சொல்லிச் சிலர் எதிர்த்த போது கள ஆய்வு செய்த குறிப்புகள் உள்ளன என்று துணிந்து சொன்னார் பெருமாள் முருகன். ஆய்வுக்குறிப்புகளைக் காட்டுங்கள் பார்க்கவேண்டும் என்று இவர் புத்தகத்தில் குறிப்பிட்டு எழுதிய அந்தப் பகுதி மக்கள் கேட்ட போது எந்தக் குறிப்புகளையும் தரவில்லை. ஊர் மொத்தமாகக் கூடி போராட்டத்தில் இறங்கிய போது அரசு அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் அளித்த வாக்குமூலத்தில் ”<span style="color: blue;">ஆய்வு என்று எதுவும் செய்யவில்லை. புத்தகம் மொத்தமும் புனைவு</span>” என்று எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளார் பெருமாள் முருகன்.<br />
<br />
ஆகவே இங்கே பிரச்சினை எழுத்தளானின் படைப்புச் சுதந்திரமோ, புனைவுரிமையோ அல்ல. அடிப்படையில் பொய் சொல்லியிருப்பதே குற்றம். ஆய்வு செய்து எழுதுவதாகச் சொல்லிக் காசு பெற்ற பின் ஆய்வே செய்யாமல் கற்பனையில் கதை எழுதியது பித்தலாட்டம். அந்தக் கற்பனையில் ஒரு பகுதி மக்களை ஒழுக்ககேடானவர்களாகச் சித்தரித்து எழுதியது வக்கிரம். இப்படி எழுதுவதே படைப்புச் சுதந்திரம் என்றால் அந்தச் சுதந்திரம் யாராலும் பயன்படுத்தப்படலாம். யாரும் அதனால் சிறுமைப்படுத்தப்படலாம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjs2qc8nZMfDw6BL4Kks9Pa0D8LXoJGd4oQ-AfbINnRj0x14GU2VW6-b6zoWb__5FBAh7oj-ksm17lldaLtyqYY_EutoXMKVwb1SLMnFiVliZZ9ILq-KtxresdC_wzajPtutVc709ot/s1600/dali-writing.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="266" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjs2qc8nZMfDw6BL4Kks9Pa0D8LXoJGd4oQ-AfbINnRj0x14GU2VW6-b6zoWb__5FBAh7oj-ksm17lldaLtyqYY_EutoXMKVwb1SLMnFiVliZZ9ILq-KtxresdC_wzajPtutVc709ot/s1600/dali-writing.jpg" width="320" /></a></div>
<br />
எழுத்தாளன் என்பவன் சமுதாயத்தைச் சிறுமைப்படுத்துவதற்காக எழுதுபவன், மக்களின் சிந்தனையைச் சிற்றின்பத்தைச் சுற்றியே வைத்திருக்கச் செய்பவன் என்ற கருணாநிதித்தனம் வேரறுக்கப்படவேண்டும். வாழ முடியாதவர்கள் என்ற கருணாநிதியின் கதை ஒரு எழுத்தாளன் எப்படி எழுதக்கூடாது என்பதற்குச் சிறந்த உதாரணம். திராவிடப் பொன்னாடு என்ற கனவை அரசியல் மேடைகளில் விற்ற பலரும் இலக்கியம் என்று எழுதிவைத்தது இப்படிப்பட்ட இழிவுகளைத்தான். <br />
<br />
மாளிகையைப் பார்க்க வந்தவன் மாட்டுக் கொட்டகையை ரசிப்பதுபோல் ஒளி உலகைக் காணவந்த தமிழ்நாட்டுச் சீர்திருத்தவாதிகள் இருண்ட பகுதிகளையே சுவைத்து எழுதி ஆயிரக்கணக்கில் விற்பனை செய்து இளைஞர்களை கெடுத்தார்கள். நாகரிகம் மிகுந்த ஒரு சமுதாயத்தின் அழிவுக்காலம் இதுபோன்ற படைப்புகளில் இருந்துதான் தொடங்கியது என்கிறார் கவியரசு கண்ணதாசன். கருணாநிதியின் படைப்புகள் முழுவதையும் படித்து முடித்தபோது தமிழ்ச் சமுதாயத்தின் எதிர்காலத்தைப் பற்றிய பயம் கண்ணதாசனுக்கு ஏற்பட்டதாகவும் குறிப்பிடுகிறார். அந்தப் பயத்தை அதிகப்படுத்துகின்றன மாதொரு பாகன் போன்ற படைப்புகளும், எழுத்தாளர்கள் கையாளும் கபடுகளும்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJ0Xe7X-UG_uQOpL-0GSsLZapK2uaI9da2kmnHZ_vMybBhsHr6d-3hn98UYzfs9bb7p2InDAZwLJWr-ef-Y8430dNSN-Q1eHehfD3lTeVfuaGZH99eVzlSzy7xNTNXwzXrLyQGDkvB/s1600/pemu.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="143" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJ0Xe7X-UG_uQOpL-0GSsLZapK2uaI9da2kmnHZ_vMybBhsHr6d-3hn98UYzfs9bb7p2InDAZwLJWr-ef-Y8430dNSN-Q1eHehfD3lTeVfuaGZH99eVzlSzy7xNTNXwzXrLyQGDkvB/s1600/pemu.jpg" width="320" /></a></div>
<br />
அடிப்படையில் சுய ஒழுக்கம் இல்லாதவன் சமுதாயத்தைச் சீர்திருத்த என்ன செய்ய இயலும்? குறிப்பிட்ட ஊர் பற்றிய ஆய்வு செய்கிறேன் என்று சொல்லிக் காசு பெற்று அந்த ஊர் பக்கம் வெயிலுக்குக் கூட ஒதுங்காமல் யாரையும் பாராமல் எதுவும் கேளாமல் கிழவிகள் சொன்னார்கள், கிழவர்கள் ஒப்பினார்கள் என்று சொல்வதும், ஆய்வுக் குறிப்புகளைக் காட்டச் சொன்னால் எழுதியது ஆய்வே அல்ல கற்பனை என்று குட்டிக்கரணம் அடிப்பதும் ஒழுக்கம் என்பதற்கு நேரெதிர். இவர் கல்லூரி ஆசிரியராம். ஒழுக்கத்தின் நிழல் கூடப் படியாத இந்தப் பித்தலாட்டக்காரர் எப்படி நம் நாட்டின் எதிர்காலச் சந்ததியை உருப்படியாக்க உறுதுணையாய் இருக்க முடியும்? <br />
<br />
இப்படிப்பட்ட ஒரு மனிதன் இனி பேனா பிடிக்கமாட்டேன் என்று சொன்னால் சமுதாயம் உருப்பட ஒளிக்கீற்று ஒன்று தோன்றியது என்று மகிழ வேண்டும். எழுத்தாளன் பேனாவைக் கீழே வைப்பது படைப்பாளிக்கு அநீதி என்று பொங்கக்கூடாது. கூட்டத்தோடு கூச்சலிடும் பொதுப்புத்தி கொண்டவர்களே தமிழகத்தில் எழுத்தாளர்கள் என்றால் இவர்கள் அனைவரின் படைப்புகளையும் தனித்தனியே வாசிக்க வேண்டியதில்லை. தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் போல எல்லாம் ஒரே கூளத்தில் கிடைத்த சிந்தனைக் குப்பைகளாகவே இருக்கும் எனும் நிலையில் பொழுது போகவே வழியில்லை என்றால் ஒருவரது படைப்பை மட்டும் வாசித்துவிட்டுப் போகலாம்.<br />
<br />
அருளுக்கும் மருளுக்கும் வேறுபாடு அறியாதவர்கள் என்றால் இடதுசாரிகள் என்று அவர்களைக் கடந்து போய்விடலாம். அறிந்தும் சொல்ல அஞ்சுவோர் எழுத்தாளர்கள என்ற மரியாதைக்கு உரியவர்கள் அல்லர். அறிந்தும் சுயலாபத்துக்காக சமுதாயத்தைக் கெடுப்போருக்குத் துணைபோகிறவர்கள் கையெழுத்துப் போடக்கூடப் பேனா பிடிக்கக்கூடாது என்று தடைவிதிக்க வேண்டும். <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-C06QZYJU2CWf-PzlsS06I_Z6LqDOn1UTh6MDtq5CU2ndnLPK0_BsxiDQhJi-tU5m4wqayF3NOS0vktpAWS_iCnf_JDTZ37VPc1fzUTt8ZN4_XYgnFFhVfdzVeG1ZSRWzfmmA7poA/s1600/break+pencil.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="233" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-C06QZYJU2CWf-PzlsS06I_Z6LqDOn1UTh6MDtq5CU2ndnLPK0_BsxiDQhJi-tU5m4wqayF3NOS0vktpAWS_iCnf_JDTZ37VPc1fzUTt8ZN4_XYgnFFhVfdzVeG1ZSRWzfmmA7poA/s1600/break+pencil.JPG" width="320" /></a></div>
<br />
பெருமாள் முருகனுக்கு ஆதரவாக வருவோரில் பலர் மிரட்டப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கு இவரது நாவலின் தரம் குறித்து எழுதிய இரு எழுத்தாளர்களின் கதியே சான்று. ஒருவர் எழுதியதை அழித்துவிட்டார். இன்னொருவர் கொலை மிரட்டலுக்கு ஆளானார். இதனால் அறியப்படுவதென்ன? இந்தப் பித்தலாட்டப் பேனாக்காரனின் பின்னே ஒரு சக்தி மிக்க அமைப்போ குழுவோ இருக்கிறது.<br />
<br />
இவர்களில் பலர் தாந்தோன்றித்தனமாக எழுதுவதும் அதுவே இலக்கியம், வரலாறு, இன்னபிற வகையறா என்று மூர்க்கத்தனமாகக் கூவுவதும் அதைத் தம் பின்புலத்தின் பலத்தால் நிலைநிறுத்துவதுமான வழக்கத்தைக் கொண்டவர்கள். ஊடக வலுவால் உலகெங்கும் இவர்களும், இவர்களைச் சார்ந்தும், அண்டியும் பிழைப்போரும் புகழ் பெறுவதும் நிகழ்ந்து வந்தது. <br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5_xQjp-NdpF_TVv8HHvq0xyWR09BHEelEupG2dW76FBlSQn1giFpKfFHOleJKf4L-ZmMqSXn_lukPiQVYDDypyMPmalAFeaA9V6LWtLSqbFg-pHpx2jECFzHdIWVAotbWb7rkPabJ/s1600/Commie+media.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5_xQjp-NdpF_TVv8HHvq0xyWR09BHEelEupG2dW76FBlSQn1giFpKfFHOleJKf4L-ZmMqSXn_lukPiQVYDDypyMPmalAFeaA9V6LWtLSqbFg-pHpx2jECFzHdIWVAotbWb7rkPabJ/s1600/Commie+media.png" /></a></div>
சமூக ஊடகங்கள் வலுப்பெற்ற இந்தக் காலகட்டத்தில் எதிர்ப்புகளை இவர்களது வழமையான பாணியில் அடக்க இயலவில்லை. எழுத்தோ கருத்தோ பொதுவில் வருவதற்கு இவர்களது அங்கீகாரமோ ஆதரவோ தேவையில்லை என்ற நிலை இன்று. இவர்களைச் சாராதவர்களை மிரட்டிப் பணியவைக்கவும் இவர்களால் இயலாது.<br />
<br />
சரி, பெருமாள் முருகன் இப்படி ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் சமுதாயம் முழுவதையும் ஒழுக்கக்கேடானவர்கள் என்ற பிம்பத்தில் ஏன் அடைக்கிறார்? இவருக்கு ஏதாவது முன்விரோதம் இருக்கிறதா? உற்று நோக்கினால் <a href="http://www.karikkuruvi.com/2014/06/blog-post.html" target="_blank">ஆமாம்</a> என்பதே பதிலாகத் தெரிகிறது. பெருமாள் முருகன் தன் நாவலில் இழிவுபடுத்திய குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்தவரே தான். ஆனால் இவரது தந்தை குடிப்பழக்கத்தால் சொந்தபந்தங்களிடம் இருந்து அந்நியப்பட்டார். இவரது குடும்பம் சமுதாயத்தை விட்டு விலகியே இருந்திருக்கிறது. இந்நிலையில் இவர் இடதுசாரிகளால் ஈர்க்கப்பட்டு அவர்களுடனேயே வளர்ந்திருக்கிறார். தான் அந்நியப்பட்ட சமூகத்தின் மீதான ஒரு அடிப்படைக் காழ்ப்புணர்ச்சி இவரை இப்படி எழுதத் தூண்டியிருக்க வாய்ப்புள்ளது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhiIRzxvz3_W-z_dSMwQEncVXtj2JLwY00WZAW8NmUrgYKvWPPXbZaWEjVAfbwEHhYhy3BUeXjsM05P-yL2ZJgLv-Inl1JJX9q7WEkovw7_u8lGKqwsMm6O3eAlceBf-T2EmM7t_Fmf/s1600/index.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhiIRzxvz3_W-z_dSMwQEncVXtj2JLwY00WZAW8NmUrgYKvWPPXbZaWEjVAfbwEHhYhy3BUeXjsM05P-yL2ZJgLv-Inl1JJX9q7WEkovw7_u8lGKqwsMm6O3eAlceBf-T2EmM7t_Fmf/s1600/index.jpg" /></a></div>
<br />
பெருமாள் முருகனுக்குப் பின் இருப்போரின் வெற்றுக்கூச்சலுக்கு அஞ்சாதவர்களுக்குச் சமூக வலைத்தளங்கள் ஒரு வரப்பிரசாதம். உண்மைகளும், இவர்களது புனைசுருட்டுகளுக்கு எதிர்வினைகளும் இன்று சமூக வலைத்தளங்களால் மக்களைச் சென்றடைகின்றன. அது இந்தக் கூட்டத்துக்கு வலிக்கிறது. ஆகவே கூச்சல் அதிகரிக்கிறது. இந்தக் கூச்சல் கண்டு அஞ்சாது நிற்கும் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் தங்கள் தரப்பை சமூக ஊடகங்கள் மூலமாகவே எடுத்துரைத்து வருகிறார்கள். ஏன்?<br />
<br />
முதன்மை ஊடங்கள் என்று அரியப்படும் ஊடகங்கள் முற்றிலுமாக இடது சார்ந்தே நிற்கின்றன. அவற்றில் நியாயம் என்பதை எள்ளளவும் எதிர்பார்க்க முடியாது. தேசிய அளவில் இந்தப் பிரச்சினை ஏதோ ஒரு எழுத்தாளனை சில அரசியல் சக்திகள் மிரட்டுவது போலப் பேசப்பட்டு அதுவே நிலை நாட்டப்பட்டும் வருகிறது. இந்த ஊடகங்கள் கோவிலும் இந்துமத நம்பிக்கையும் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதால் வசதியாக இதற்கு இந்துத்வ சாயம் பூசி விவகாரத்தைத் திசை திருப்பக் கடுமையாக முயன்றன. ஆனால் இது குறிப்பிட்ட சில இயக்கங்கள் முன்னெடுக்கும் போரட்டம் அல்ல, பொதுமக்கள் மனம் நொந்து கொதித்தெழுந்ததன் விளைவு என்ற உண்மை நிலை நிறுத்தப்பட்டது சமூக ஊடகங்களின் வாயிலாகவே.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjo_vjRm5fJz00lZD-OLnGJOQtDjpcuo2J-tFtfoaFVSaJq5LyKTPbGcxHdRqWCiJMYIeJgA4i5d9orcaik_Ugj0NZZkgNT5shaO7thEnOY7omCvFSsvr9VjxE3COgPLp6g0abx0sWV/s1600/msm.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjo_vjRm5fJz00lZD-OLnGJOQtDjpcuo2J-tFtfoaFVSaJq5LyKTPbGcxHdRqWCiJMYIeJgA4i5d9orcaik_Ugj0NZZkgNT5shaO7thEnOY7omCvFSsvr9VjxE3COgPLp6g0abx0sWV/s1600/msm.jpg" width="320" /></a></div>
<br />
இன்றும் சில ஆங்கிலப் பத்திரிக்கைகளில் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக பல கருத்துக்கள் வருகின்றன. அவர் குற்றமே செய்யாதவர் என்பது போலவும் பொறுமையும், சகிப்புத்தன்மையும் அற்ற ஒரு சமூகம் அவரைச் சித்திரவதை செய்வது போலவும் எழுதிவருகிறார்கள். இவர் செய்தது சட்டப்படி ஒப்பந்த மீறல், பொருளாதாரக் குற்றம். இதை உலகறிய எடுத்துச் சொல்ல வேண்டும். சமூக ஊடகங்களில் இன்னும் வலுவாக ஆங்கிலத்திலும், இயன்றால் வேறு பல மொழிகளிலும் இவர்களது பித்தலாட்டங்கள் தோலுரித்துக் காட்டப்படவேண்டும். அப்போதே தமிழகம் தாண்டிய வாசகர்களுக்கும் தமிழ் இலக்கிய உலகின் தற்கால (அவல)நிலை புரியும்.<br />
<br />
படங்கள் உதவி: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் முகநூல் பக்கம், கூகிள் படங்கள்.Arun Ambiehttp://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6493698527091962490.post-14995711770614354462014-12-26T23:21:00.000-08:002014-12-27T07:18:23.220-08:00மகாத்மா(?) காந்தியார்<div style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; color: #141823; display: block; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 19.3199996948242px; margin: 0px 0px 6px; orphans: auto; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
மோகந்தாஸ் கரம்சந்த் காந்தியார் சிறந்த தலைவரில்லை. ஆனால் தனிப்பட்ட
முறையில் தனக்கு உண்மையாக இருக்க முயன்றவர். பௌத்தம் சார்ந்த அஹிம்சை
வழியைப் பின்பற்றி அதைப் பிறர் மீதும் சுமத்தினார்.<br />
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-H1BeDYH2yUw/VJ5dCHhpfiI/AAAAAAAAL9o/cGNci15_1pI/s1600/Gandhi_Juhu_May1944.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-H1BeDYH2yUw/VJ5dCHhpfiI/AAAAAAAAL9o/cGNci15_1pI/s1600/Gandhi_Juhu_May1944.jpg" height="400" width="301" /></a></div>
அதனால் அதர்மம் கண்டு பொங்கிடும் அறச்சீற்றம் மக்களிடையே மங்கியது. குறிப்பாக க்ஷாத்திரம் எனும் க்ஷத்ரிய குணம் தேயக் காரணமானார் காந்தியார். எதுவானாலும் காந்தி சொல்லே இறுதி என்ற தனிமனிதப் போற்றுதலுக்கு இது இட்டுச் சென்றது. காந்தியாரோ தலைமை என்பது அனைவரையும் அரவணைத்தல் மட்டுமே என்று புரிந்து வைத்திருந்ததால் அவரது பல முடிவுகள் பொது நன்மைக்குப் பங்கமாக அமைந்தன. நன்மை தீமைகளைச் சீர்தூக்கி நோக்காமல் அனைவரும் ஏற்பதே நல்லது என்ற மடத்தனம் அங்கே மேலோங்கி நின்றது. Consensus building என்பது நல்லதை அனைவருக்கும் புரியும்படி எடுத்துரைத்து ஏற்கச் செய்வது என்ற அடிப்படைப் புரிதல் இல்லாத பல ‘அரவணைப்பு முடிவுகளின்’ விளைவுகள் தேசத்தை இன்னும் பீடித்துள்ளன.<br />
<br />
ஆனால் அவரால் லாபம் பெற்ற ஒரு கூட்டம் அவர் மீது எந்தக் குற்றமும் வராது அவரைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் எழுப்பி அவரை மகாத்மா ஆக்கியது. அடித்தால் பட்டுக்கொள், உதைத்தால் வாங்கிக்கொள், கொன்றால் செத்துப் போ போன்ற கொள்கைகள் தனி மனிதனுக்கு ஆன்மிக சாதனைகளில் அடிமேலடி வைத்துப் போகப் பாதையாகலாம். ஆனால் ஆளும் தலைமைக்கு அது உகந்ததல்ல, அந்நிலையில் இத்தகைய அஹிம்சை ஆட்சிக்கோ தலைமைக்கோ உகந்ததல்ல என்ற உண்மையை காந்தியாரும் புரிந்து கொள்ளவில்லை. பிறர் சொன்னதையும் இவ்விஷயத்தில் அவர் கேட்கவில்லை. இவரது இத்தகைய பிடிவாதத்தால் தேசம் இழந்தது ஏராளம்.<br />
<br />
<div class="text_exposed_show" style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; color: #141823; display: inline; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 19.3199996948242px; orphans: auto; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-aW46K94IV6E/VJ5dd8h05HI/AAAAAAAAL9w/maG54Tqv3ck/s1600/Nathuram_Godse-3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-aW46K94IV6E/VJ5dd8h05HI/AAAAAAAAL9w/maG54Tqv3ck/s1600/Nathuram_Godse-3.jpg" height="400" width="300" /></a></div>
<div style="margin: 0px 0px 6px;">
</div>
<div style="margin: 6px 0px;">
இவை எல்லாம் நாதுரம் விநாயக் கோட்சேவின் கோபத்துக்குக் காரணமாகின. அவர் கோபத்தின் உச்சத்தில் திட்டமிட்டுக் காந்தியைக் கொன்றார். கோபமிகுதியில் கொலை செய்துவிட்டு வருந்தவில்லை. கோபத்தில் அமைதி கொண்டு யோசித்துத் திட்டமிடும் புத்திவல்லமை தேசத்தின் ஆட்சிப் பொறுப்புகளை - குறிப்பாக ராணுவம், காவல் சார்ந்த பொறுப்புகளை - ஏற்போருக்கு மிக அவசியம்.</div>
<div style="margin: 6px 0px;">
<br /></div>
<div style="margin: 6px 0px;">
காந்தியார் நல்ல தனிமனிதர், ஆனால் தலைமையில் சறுக்கினார். காந்தியார் முற்றிலும் கெட்டவரல்ல. அவரைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்ட பிம்பத்தில் அவரே சிக்கிக் கொண்டார் என்று கருதும்படியாக அவரது பல நடவடிக்கைகள் அமைந்தன. அவரைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் போடப்பட்டு மஹானாக காந்தியார் மிகைப்படுத்தப்பட்டார். காந்தியார் தேசத்தந்தை என்பதற்கு எந்த வரலாற்றுச் சான்றுமில்லை என்ற சமீபத்திய மைய அரசின் ஒப்புதல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டால் உடைந்து நொறுங்கும் பிம்பத்தை எழுப்பியே காந்தியாரை உச்சியில் ஏற்றி வைத்திருப்பதற்குச் சான்று.</div>
<div style="margin: 6px 0px;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-m7rb6w0DzZw/VJ5dr1Gt4sI/AAAAAAAAL94/Wyhy8nu509E/s1600/India_02_04_09_Overdorf_Gandhi_Analysis.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-m7rb6w0DzZw/VJ5dr1Gt4sI/AAAAAAAAL94/Wyhy8nu509E/s1600/India_02_04_09_Overdorf_Gandhi_Analysis.jpg" height="266" width="400" /></a></div>
<div style="margin: 6px 0px;">
கோட்சேவின் நீதிமன்ற வாக்குமூலம் இருட்டடிக்கப்பட்டு அவர் கொலை வெறி பிடித்துத் துப்பாக்கியோடு தெருத்தெருவாக அலைந்து கொண்டிருந்த மனம் பிறழ்ந்தவர் என்பது போலச் சித்தரிக்கப்பட்டது அநியாயம். இந்த இருட்டடிப்பு மூலம் காந்தியார் குறித்த தெய்வீகப் பிம்பம் மேலும் உயர்த்தி அமைக்கப்பட்டது. இப்போது கோட்சேவின் நீதிமன்ற வாக்குமூலம் புத்தகமாக வெளிவருவது மறுபக்கத்தைப் புரிந்து தெளிவதற்கு உதவும்.</div>
<div style="margin: 6px 0px;">
<br /></div>
<div style="margin: 6px 0px;">
கோட்சேவுக்குக் கோவில், சிலை என்று அவருக்கு ஒளிவட்டம் போட்டு காந்தியாருக்குச் செய்த அதே முட்டாள்தனங்களைச் செய்ய ஒரு கூட்டம் விழைகிறது. இது உணர்ச்சிக் கூவல். ஆகவே கால விரயம்.</div>
<div style="margin: 6px 0px;">
<br /></div>
<div style="margin: 6px 0px;">
என் வரையில் காந்தியார் மகாத்மாவுமல்ல கோட்சே மகாபாவியுமல்ல. இருவரது நிலைப்பாடுகளையும் சீர்தூக்கிப் பார்த்து நம் நிலைப்பாட்டை தேசத்துக்கு நலம் பயக்கும் வகையில் அமைத்துக் கொண்டு பயணிப்பதே புத்திசாலித்தனம்.</div>
</div>
Arun Ambiehttp://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6493698527091962490.post-33380598189825096732014-12-24T21:21:00.001-08:002014-12-24T21:21:25.552-08:00பாரத ரத்னா விருது பெருமைப்படுத்தப்பட்டுள்ளது<div style="-webkit-text-stroke-width: 0px; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
</div>
<div style="-webkit-text-stroke-width: 0px; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
முன்னாள் பிரதமர் அண்ணல் அடல் பிஹாரி வாஜ்பாயி அவர்களுக்கும் பண்டித மதன் மோகன் மாளவியா அவர்களுக்கும் இவ்வாண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலின் பீஷ்ம பிதாமகர் என்று போற்றப்படும் அடல்ஜி குறித்து நாம் அனைவரும் நன்றாக அறிவோம். அவர் நம் காலத்தில் நம்மிடையே வாழ்ந்தார் என்ற பெருமை நமக்குக் கிட்டியிருக்கிறது.</div>
<div style="-webkit-text-stroke-width: 0px; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfeQZhhq-FlYUEwNzxHE2egqUxiFdikjrv3_-pdGfJGmlCJH_OWdFs-v2z7-jDWd7TQIVnTERHmmTZpksIaXHV_wRpfLLNSKVtT7hukYj2LjWzT9DO90fSGtIM3w70DMxLZVSpgm41/s1600/vajpayee.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfeQZhhq-FlYUEwNzxHE2egqUxiFdikjrv3_-pdGfJGmlCJH_OWdFs-v2z7-jDWd7TQIVnTERHmmTZpksIaXHV_wRpfLLNSKVtT7hukYj2LjWzT9DO90fSGtIM3w70DMxLZVSpgm41/s1600/vajpayee.jpg" height="257" width="400" /></a></div>
<div style="-webkit-text-stroke-width: 0px; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
</div>
<div style="-webkit-text-stroke-width: 0px; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
<br /></div>
<div style="-webkit-text-stroke-width: 0px; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
<span style="color: blue;">போருக்குத் தயாரான பெருவீரனின் அறைகூவல்</span></div>
<div style="-webkit-text-stroke-width: 0px; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
<span style="color: blue;">தோற்றவன் வெறுப்பில் தேம்பும் விசும்பலல்ல</span></div>
<div style="-webkit-text-stroke-width: 0px; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
<span style="color: blue;">அரண்டவன் உளறிடும் அரற்றலென எண்ணாதீர்</span></div>
<div style="-webkit-text-stroke-width: 0px; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
<span style="color: blue;">பாரதியன் வரைந்திட்ட வெற்றிக்கவி கேளீரோ</span></div>
<div style="-webkit-text-stroke-width: 0px; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
<br /></div>
<div style="-webkit-text-stroke-width: 0px; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
என்று தன் துவண்ட தம் தொண்டர் படை எழுச்சி கொள்ளக் கவிபாடிய காவியத் தலைவன் நம் அடல்ஜி.</div>
<div style="-webkit-text-stroke-width: 0px; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
<a name='more'></a></div>
<div style="-webkit-text-stroke-width: 0px; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
<br /></div>
<div style="-webkit-text-stroke-width: 0px; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
அடல்ஜி போன்ற பெரியோருக்கு வழிகாட்டிகளாகத் திகழ்ந்து மறைந்த மூத்தோர் பலரில் முதன்மையானவர் மஹாமனா என்று போற்றப்பட்ட பண்டிதர் மதன் மோகன் மாளவியா அவர்கள். இவர் ஹிந்து ராஷ்டிரம் என்பதை முன்னெடுத்துச் சென்ற முன்னோடிகளில் ஒருவராவார். இவரது பூர்வீகம் மத்தியப் பிரதேசத்தில் உள்ள மால்வா. இவர்களது மூதாதைகள் உத்திரப் பிரதேசத்தில் பிரயாகை நகருக்குக் குடிபெயர்ந்ததை அடுத்து அங்கே மால்வாக்காரர்கள் என்ற பொருளில் மாலவ்யர் என்று அழைக்கப்பட்டனர். நாளடைவில் அவர்களது குடும்பப் பெயரான வியாஸ் என்பது மறைந்து மாளவியா என்ற பெயர் நிலைத்தது. இவர்கள் பரம்பரையாக பாகவத புராணத்தைப் பொது மக்களுக்குச் சொல்வதிலும், கல்வி பயிலும் மாணவர்களுக்கு விரிவுரை செய்வதிலும் ஈடுபட்டுவந்தனர். </div>
<div style="-webkit-text-stroke-width: 0px; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
<br /></div>
<div style="-webkit-text-stroke-width: 0px; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
மதன் மோகன் ஐந்து வயதில் தர்ம ஞானோபதேச பாடசாலையில் தன் கல்வியைத் தொடங்கினார். அங்கே அடிப்படைக் கல்வி முடித்ததும் வித்யா வர்த்தினி சபை நடத்திய கல்விக் கூடத்தில் பயின்றார். பின்னர் அலாஹாபாத் ஜில்லா பள்ளிக்கூடத்திலும் முயிர் மத்தியக் கல்லூரியிலும் படித்தார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார். எம்.ஏ படிக்க இவர் விரும்பிய போதும் குடும்ப நிதி நிலை காரணமாக அலாஹாபாத் மாவட்டப் பள்ளியில் ஆசிரியப் பணி ஏற்றார்.</div>
<div style="-webkit-text-stroke-width: 0px; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
<br /></div>
<div style="-webkit-text-stroke-width: 0px; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
1886ல் இரண்டாவது இந்திய தேசிய காங்கிரசு மாநாடு கல்கத்தாவில் நடந்தது. அதில் மதன் மோகன் மாளவியா கலந்துகொண்டார். அங்கே இவர் ஆற்றிய உரை மாநாட்டுத் தலைவர் தாதாபாய் நௌரோஜியை மிகவும் கவர்ந்தது. அங்கே வந்திருந்த கலங்கர் பகுதி ஜமீந்தார் இவருக்கு ஹிந்துஸ்தான் பத்திரிகையின் ஆசிரியப் பணியை அளித்தார். 1887ல் கல்வியாண்டு முடிந்ததும் பார்த்துவந்த கல்விப் பணியைத் துறந்து பத்திரிகைப் பணியை ஏற்றார். இரண்டரை ஆண்டுகள் பணியாற்றிய பின் அலாஹாபாத்தில் சட்டம் படிக்கச் சென்றார். அங்கே தி இந்தியன் யூனியன் என்ற ஆங்கில நாளிதழின் ஆசிரியராகப் பகுதி நேரப்பணி செய்தபடியே படித்தார். அலாஹாபாத்தில் மாவட்ட நீதிமன்றத்திலும் பின்னர் உயர்நீதிமன்றத்திலும் வழக்கறிஞராகப் பணியாற்றினார். </div>
<div style="-webkit-text-stroke-width: 0px; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1CeNFUR107oLJA6YuzGeikrXee_V6-eKrerBszQeDio5mZFlHsVqS5JTbfOictSDz91XmLaQxta8dayItebTCtZK5O4PHcjoNIa8t164S7KC5nXCzvwy7WtaslO0lub0OUcK2GlcA/s1600/Malaviya.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1CeNFUR107oLJA6YuzGeikrXee_V6-eKrerBszQeDio5mZFlHsVqS5JTbfOictSDz91XmLaQxta8dayItebTCtZK5O4PHcjoNIa8t164S7KC5nXCzvwy7WtaslO0lub0OUcK2GlcA/s1600/Malaviya.jpg" height="400" width="287" /></a></div>
<div style="-webkit-text-stroke-width: 0px; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
</div>
<div style="-webkit-text-stroke-width: 0px; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
1909ல் காங்கிரசு மாநாட்டுக்குத் தலைமை வகித்தார். 1911ல் தனது சட்டத் தொழிலை நிறுத்திவிட்டு சந்நியாச வாழ்வு போன்ற ஒரு வாழ்வை மேற்கொண்டார். அதுவரை சம்பாதித்த சொத்துக்களை தம் பிள்ளைகளுக்கு அளித்துவிட்டு சமூகத் தொண்டில் ஈடுபட்டார். பொருள் ஈட்டுவதிலோ, வழக்கறிஞர் தொழிலிலோ ஈடுபடுவதில்லை என்று சத்தியம் செய்து கொண்டார். ஆனால் தன் சத்தியத்தை சௌரி சௌரா போராட்டத்தில் 177 பேரை பிரிட்டிஷ் அரசு கைது செய்த போது மீறினார். நீதிமன்றத்தில் வாதாடி 177ல் 156 பேரை விடுவித்தார். </div>
<div style="-webkit-text-stroke-width: 0px; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
<br /></div>
<div style="-webkit-text-stroke-width: 0px; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
1912 முதல் 1926 வரை மத்திய மாகாண சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தார். 1916ல் லக்னௌ உடன்படிக்கையில் முஸ்லிம்களுக்குத் தனித் தொகுதி அளிக்கப்பட்டதை தேச ஒற்றுமைக்கு எதிரான செயல் என்று எதிர்த்தார். ஒத்துழையாமை இயக்கத்தில் மிக முக்கியப் பங்காற்றிய மாளாவியா கிலாபத் இயக்கத்தில் காங்கிரசு பங்கெடுப்பதை எதிர்த்தார். காந்தியாரின் ஆற்றுப்படுத்தும் அரசியலைச் (politics of appeasement) சாடினார். முதல் வட்ட மேஜை மாநாட்டில் பாரதத்தின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார். 1932ல் சட்ட மறுப்பு இயக்கத்தில் பங்கேற்றுச் சிறை சென்றார். வகுப்புவாரி இடஒதுக்கீட்டை எதிர்த்து காங்கிரசு தேசிய இயக்கம் என்ற கட்சியைத் தொடங்கி 1934 மத்திய மாகாணத் தேர்தலில் 12 இடங்களில் வெற்றி கண்டார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் குழுமத்தின் தலைவராக 1924 முதல் 1946 வரை இருந்தார். இந்த நாளிதழ் நிறுத்தப்படுவதில் இருந்து காப்பாற்ற 50000 ரூபாய் வசூலித்துக் கொடுத்தார். </div>
<div style="-webkit-text-stroke-width: 0px; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
<br /></div>
<div style="-webkit-text-stroke-width: 0px; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
இவர் ஹரிஜனங்களின் கோவில் நுழைவுக்காகப் போராடினார். மஹாராஷ்டிரத்தில் உள்ள பஞ்சவடியில் ராமர் கோவிலுக்குள் ஹரிஜனங்கள் நுழைய இருந்த தடையை எதிர்த்து ஹரிஜனங்கள் 200 பேரைச் சேர்த்துக் கொண்டு போராட்டம் நடத்தி வெற்றி கண்டார். இவரது இத்தகைய போராட்டங்களுக்காக இவரை பிராமண சாதியில் இருந்து ஒதுக்கிவைக்க வேண்டும் என்று எதிர்ப்புக் குரல் எழுப்பிய பலரும் பின்னர் எதிர்ப்பைக் கைவிட்டனர். </div>
<div style="-webkit-text-stroke-width: 0px; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
<br /></div>
<div style="-webkit-text-stroke-width: 0px; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
<span style="color: blue;">சத்தியமேவ ஜெயதே</span><span class="Apple-converted-space"> </span>என்ற கோஷத்தை மாளாவியாதான் பிரபலப்படுத்தினார். தேசியத்தோடு தெய்விகம் என்ற கொள்கையைக் கடைப்பிடித்தவர் மாளவியா. ஹரித்வாரில் கங்கைக்கு ஆரத்தி காட்டும் வழக்கத்தில் மக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு தேச விடுதலைக்குப் பிரார்த்தனை செய்ய வேண்டுகோள் விடுத்தார். இன்றும் அங்கே ஆரத்தி காட்டும் போது தேசத்துக்காகக்ப் பிரார்த்தனை நடக்கிறது. அங்கே கங்கை ஆற்றின் நடுவே ஒரு சிறு தீவுப் பகுதி மாள்வியா த்வீபம் என்று இவர் பெயரால் வழங்கப்படுகிறது. </div>
<div style="-webkit-text-stroke-width: 0px; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivnpIzU_Nv-8cxpmvqxYRf4Rb2TCrRe-KffU8w4kfZ0nyXMfRXnr64JypqTVSuCeiVu5D-3A5q5Cv5ZdD0MjPWJ9vNlF7hu5iJMENHrCbUEMnPtoT3cuoN-fy9qqyXSEaXMLSI1trC/s1600/ganga-aarti.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivnpIzU_Nv-8cxpmvqxYRf4Rb2TCrRe-KffU8w4kfZ0nyXMfRXnr64JypqTVSuCeiVu5D-3A5q5Cv5ZdD0MjPWJ9vNlF7hu5iJMENHrCbUEMnPtoT3cuoN-fy9qqyXSEaXMLSI1trC/s1600/ganga-aarti.jpg" /></a></div>
<div style="-webkit-text-stroke-width: 0px; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
</div>
<div style="-webkit-text-stroke-width: 0px; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
</div>
<div style="-webkit-text-stroke-width: 0px; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
1904ல் நாலந்தா, தக்ஷசீலம் போன்ற பண்டைய பல்கலைக்கழகங்களை ஒத்த ஒரு பெரிய கல்விச்சாலை நிறுவ வேண்டும் என்ற தம் எண்ணத்தை நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டார். இதற்கு உறுதுணையாக அன்னி பெசண்ட் அம்மையார் நின்றார். இது குறித்து பல இடங்களில் பேசியும் பலரிடம் நன்கொடை பெற்றும் 1911ல் ஹிந்து பல்கலைக்கழக குழு ஒன்றை அமைத்து தம் கனவுப் பல்கலைக்கழகம் அமைக்க உழைத்தார் மாளாவியா. ஜமீந்தார்கள், நிலச்சுவாந்தார்கள், தொழிலதிபர்கள், அரசர்கள் என்று பலரிடம் பல்கலைக்கழகம் அமைக்க பொன்னும் பொருளும் நன்கொடை பெற்றார். 1915ல் காசி ஹிந்து விஸ்வவித்யாலய சட்டம் மத்திய மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டு பிரிட்டிஷ் அரசால் அங்கீகரிக்கப்பட்டது. </div>
<div style="-webkit-text-stroke-width: 0px; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZ8xE3QvPbOatkE14OzdxtmjQomS2qSiW-4VgT8ZWO7ckrOd9DTcO7xqUT4KwjdUhiyn35NkwRX3qzp8Gx5gGOeLyUkb1IK1yVjJRsvj3Oiue6G57ljvoou4nP1PpEKFCyaNqGR6II/s1600/BHU.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZ8xE3QvPbOatkE14OzdxtmjQomS2qSiW-4VgT8ZWO7ckrOd9DTcO7xqUT4KwjdUhiyn35NkwRX3qzp8Gx5gGOeLyUkb1IK1yVjJRsvj3Oiue6G57ljvoou4nP1PpEKFCyaNqGR6II/s1600/BHU.jpg" /></a></div>
<div style="-webkit-text-stroke-width: 0px; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
<br /></div>
<div style="-webkit-text-stroke-width: 0px; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
</div>
<div style="-webkit-text-stroke-width: 0px; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
1916ல் ஹைதராபாத் நிஜாமைச் சந்தித்து காசி நகரத்தில் ஒரு ஹிந்துப் பல்கலைக்கழகம் அமைக்கவிருப்பதைச் சொல்லி நன்கொடை கேட்டார். இஸ்லாமிய மன்னன் என்னிடம் வந்து ஹிந்து பல்கலைக்கழகம் அமைக்க உதவி கேட்கிறாயே? உன்னைச் சிரச்சேதம் செய்வேன்! என்று நிஜாம் கோபப்பட்டார். மாளவியா அமைதியாக தன் பல்கலைக்கழகம் குறித்த திட்டத்தை எடுத்துச் சொல்லி ”ஒரு நல்ல கல்வித்திட்டத்துக்கு உதவிய பெருமை உங்களுக்குக் கிடைக்கும்!” என்று கூறினார். </div>
<div style="-webkit-text-stroke-width: 0px; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
<br /></div>
<div style="-webkit-text-stroke-width: 0px; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
கோபம் தணியாத நிஜாம் ”வெளியே போ இல்லையென்றால் கைது செய்யப்படுவாய்!” என்று எச்சரித்தார். அஞ்சாத மாளவியா உங்களுக்கு வரலாற்றில் நீங்காத நற்பெயர் வேண்டுமெனில் இந்தப் பல்கலைக்கழகம் அமைக்க உதவுங்கள் என்று மீண்டும் கேட்டார். <a href="http://www.newindianexpress.com/cities/chennai/article1274340.ece?service=print" target="_blank">கோபத்தின் உச்சிக்குச் சென்ற நிஜாம் தன் கால் செருப்பைக் கழற்றி மாளவியா மீது எறிந்துவிட்டார்</a>. மத்திய மாகாண கவுன்சில் உறுப்பினரை இப்படி அவமதித்ததைக் கொண்டு பிரிட்டிஷ் அரசு என்ன செய்யுமோ என்று நிஜாமின் அவையினர் பதறினர். பதறாத மாளவியா செருப்பை எடுத்துக் கொண்டு ”இதையே உங்கள் நன்கொடையாகக் கொள்கிறேன் நிஜாம் அவர்களே!” என்று சொல்லிவிட்டு வெளியேறினார். </div>
<div style="-webkit-text-stroke-width: 0px; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
<br /></div>
<div style="-webkit-text-stroke-width: 0px; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
நேராகச் சந்தைக்குச் சென்றார் மாளாவியா. அங்கே நிஜாமின் செருப்பைக் காட்டி அதை ஏலத்தில் விடப் போவதாக அறிவித்தார். அரசரின் செருப்பு என்பதால் ஒரு ரூபாயில் ஏலம் தொடங்கியது. (அந்தக் காலத்தில் அது சாமானியனுக்குப் பெரிய தொகை) அரண்மனை ஒற்றர்கள் மூலம் தகவல் அறிந்த நிஜாம் தம் செருப்பை யாரேனும் குறைந்த விலைக்கு ஏலம் எடுப்பது தமக்கு அவமானம் என்று கருதி அரண்மனை ஒற்றர்கள் மூலம் பெருந்தொகை கொடுத்து தம் செருப்பையே வாங்கிக் கொண்டார். தன் லட்சியத்திற்காக நிதானமிழக்காது செயல்பட்டு அவமானங்களை வெகுமானமாக மாற்றிக் காட்டியவர் பண்டிதர் மதன் மோகன் மாளவியா அவர்கள். </div>
<div style="-webkit-text-stroke-width: 0px; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
<br /></div>
<div style="-webkit-text-stroke-width: 0px; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
</div>
<div style="-webkit-text-stroke-width: 0px; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
அப்பழுக்கற்ற ஹிந்து தேசியவாதியான மாளாவியாவைச் சேர்வதன் மூலம் பாரத ரத்னா விருது பெருமை பெறுகிறது.</div>
<div style="-webkit-text-stroke-width: 0px; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
<br /></div>
<div style="-webkit-text-stroke-width: 0px; color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
வந்தே மாதரம்.</div>
<span style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; color: #222222; display: inline !important; float: none; font-family: arial, sans-serif; font-size: x-small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;"></span>Arun Ambiehttp://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6493698527091962490.post-73852704210736813992014-12-23T22:15:00.000-08:002014-12-23T22:15:04.551-08:00நம்பிக்கையும் சட்டமும் - இராம ஜென்ம பூமிஇராம ஜென்ம பூமி இராம ஜென்ம பூமியேதான் என்று பிரயாகை (அலாகாபாத்) உயர்நீதிமன்றம் 2010ல் அளித்த தீர்ப்புக்குப் பின் அது மசூதியே என்று வழக்காடிய ஹஷிம் அன்சாரி என்ற முதியவர் உள்ளிட்ட பல முஸ்லிம் அமைப்புகள் உச்சநீதிமன்றத்தை நாடினர். இத்தீர்ப்பை விமர்சிப்பவர்கள் வைக்கும் முக்கியமான வாதம் இராமன் பிறந்த இடம் குறித்த முடிவை எடுத்த விதம் பற்றியதே. ஆயிரக்கணக்கான வருடங்களாக நிலவிவரும் மக்களின் நம்பிக்கை கண்டிப்பாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. <br />
<a name='more'></a><br />
<br />
சட்டத்தின்படி மட்டுமே பார்த்தால் அந்த இடம் இராம ஜென்ம பூமியா என்ற கேள்வியே வழக்கில் இல்லை. கும்மட்டம் நின்றிருந்த அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்பதே வழக்கு. அது இராமர் பிறந்த இடம் அதனால் அங்கே கோவில் மீண்டும் கட்டப்படவேண்டும் என்ற விஷயத்தில் விவாதத்துக்கே இடமில்லை. ஆனால் இடத்தின் உரிமை குறித்த தீர்ப்பில் தன் முடிவுகளுக்கு வலுச் சேர்க்கும் வகையில் நீதிமன்றம் சில கேள்விகளை எடுத்துக் கொண்டு அவற்றுக்கு பதிலும் அளித்துள்ளது. <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZj_TwFfT0N7dTnjlSrkhnWkLtGfa3mbXosoxprg8ebobQ9C4tQd3_eve9hXmEwlGEMqlLt_Qw6mPjY2bVJ0fDh-AOJkqQ-FiITmG4zKAMtcbZpZhGtHIVkut5dLGSDQR7P6QCwibs/s1600/ram+mandhir.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZj_TwFfT0N7dTnjlSrkhnWkLtGfa3mbXosoxprg8ebobQ9C4tQd3_eve9hXmEwlGEMqlLt_Qw6mPjY2bVJ0fDh-AOJkqQ-FiITmG4zKAMtcbZpZhGtHIVkut5dLGSDQR7P6QCwibs/s1600/ram+mandhir.jpg" /></a></div>
<br />
நம்பிக்கை குறித்த எந்தப் பிரச்சினையிலும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட உறுதியான ஆதாரங்களும், மாறாத உண்மைகளும் மட்டுமே சட்டப்பூர்வமானதாகும் என்ற வாதம் ஏற்கத்தக்கதல்ல. நீதிமன்றங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் பல விஷயங்களை சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட உறுதியான ஆதாரங்களும், மாறாத உண்மைகளும் இல்லாமலேயே ஏற்றுக் கொண்டுள்ளன. <br /><br />ஒருவர் சாட்சியாகவோ, குற்றம் சாட்டப்பட்டவராகவோ அல்லது குற்றம் சாட்டுபவராகவோ நீதிமன்றக் கூண்டுக்கு அழைக்கப்பட்டதும் அவரிடம் கேட்கப்படும் ஒரு கேள்வி அவரது தந்தை பெயர். உலகில் அனைவருக்குமே அது தாயின் சொல்லால் மட்டுமே ஏற்கத்தக்க உண்மை என்பது புரியும். தந்தை பெயர் சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட உறுதியான ஆதாரங்களும், மாறாத உண்மைகளும் கொண்டு நிரூபிக்கப்பட்டதா என்று கேட்டால் வழக்கு மானநஷ்ட வழக்காக திசை திரும்பும் வாய்ப்பே அதிகம்! தந்தை பெயர் குறித்த சர்ச்சையே வழக்கு என்றில்லாத வரை சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட உறுதியான ஆதாரங்களும், மாறாத உண்மைகளும் கொண்டு நிரூபிக்கப்படத் தேவையற்ற விஷயம் அது. <br /><br />நம்பிக்கை என்பது ஒரு செய்தியின் மீதோ, நபரின் மீதோ, கொள்கையின் மீதோ, எண்ணம், யோசனை இவற்றின் மீதோ ஒரு மனிதன் கொண்டுள்ள மாறாப்பற்று. இவை சாட்சிகள், ஆதாரங்கள் இவற்றால் நிரூபிக்கப்படத் தேவையற்ற இறைநம்பிக்கை, நெறிகள் வழி ஒழுகுதல், ஒழுக்க விதிகளைக் கடைப்பிடித்தல், கடமை தவறாமை, கற்பு நெறி, நேர்மை, சொல் தவறாமை ஆகியன போன்ற வாழ்வியல் நம்பிக்கைகள். இவற்றுக்கு மனிதனின் நம்பிக்கையும் இவற்றைக் கடைப்பிடிப்போர் மீதான மரியாதையுமே சாட்சிகளும் ஆதாரங்களும் ஆகும். ஆகவே நம்பிக்கையின் அடிப்படையை அப்படியே ஏற்றுக் கொண்ட நீதிமன்றத் தீர்ப்புகளை விமர்சிப்பது மனித வாழ்வின் அடித்தளத்தை அசைத்துப் பார்க்கும் அவலச் செயல். <br /><br />அரசு அளிக்கும் அடையாளச் சான்றுகளின் மீது அவ்வப்போது உண்மைதவறுதல் உள்ளிட்ட சில குற்றச்சாட்டுகள் வரும் போதிலும் அரசு அளித்த அடையாளச் சான்றுகள் அரசு முறைமைகள் மீதும் ஆட்சிக் கட்டமைப்பின் மீதுமான நம்பிக்கையையே பரைசாற்றுகின்றன. அரசு அளிக்கும் அடையாளச் சான்றுகளுக்கு எவரும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட உறுதியான ஆதாரங்களைக் கேட்பதில்லை. இவை அனைத்தும் சரிபார்க்கப்பட்டு வழங்கப்பட்ட சான்று என்ற நம்பிக்கையில் அவை ஏற்கப்படுகின்றன. சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட உறுதியான ஆதாரங்களும், மறுக்கப்பட முடியாத சான்றுரைகளும் ஒவ்வொரு விஷயத்துக்கும் கேட்கப்படுமானால் கதிரவன் உதிப்பதை நாம் காணும் திசை கிழக்கு என்பதற்கும் அது நம் பார்வையிலிருந்து மறைவதைக் காணும் திசை மேற்கு என்பதற்கு ஆதாரம் தேடிக்கொண்டிருக்க வேண்டியதுதான். பூமி சுற்றிக் கொண்டே இருப்பதனால் கிழக்கும் மேற்கும் மாறாது என்பதற்கு சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட உறுதியான ஆதாரங்களும், மறுக்கப்பட முடியாத சான்றுரைகளும் தேவை என்று அலையவேண்டியது தான். <br /><br />இந்நிலையில் இசுலாமிய முதியவர் அன்சாரி இவ்வழக்கைத் தாம் திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் அங்கே இராமபிரானுக்கு ஆலயம் அமைவதையே தாம் விரும்புவதாகவும் சொல்லியிருக்கிறார். அதற்கு அவர் சுட்டிக் காட்டிய காரணங்கள் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட பல முஸ்லிம் அரசியல்வாதிகள் இதை வைத்துப் பெரும் பணம் சேர்த்ததாகவும் போராட்டக்குழுவில் இருந்த அசீம்கான் உத்திரப் பிரதேச வக்ஃப் வாரியத்தின் பொறுப்பில் அமைச்சராக இருந்தும் இவ்வழக்கில் வக்ஃப் வாரியம் எந்த அக்கறையும் காட்டவில்லை என்றும், அயோத்தியைச் சுற்றி இருக்கும் அத்தனை ஆலயங்களுக்கும் சென்று இவை இராமபிரான் ஆலயத்தோடு தொடர்புடையவை என்று பேசிவரும் அசிம்கான் இராமபிரான் ஆலயத்தை மட்டும் எதிர்ப்பது அரசியல் விளையாட்டு என்றும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த அசிம்கான் மேய்ச்சலுக்குச் சென்ற தன்வீட்டு எருமை மாடுகளைத் தேடிப்பிடித்து வர காவல்துறையினரை அனுப்பிய பெரிய மனிதர்.<br /><br />வழமை போல ஊடகங்கள் அன்சாரி மிரட்டப்பட்டாரா? ஏன் கோவில் மட்டுமே வேண்டும் என்று சங்க பரிவாரம் சொல்கிறது? இது மதவெறி இல்லையா என்றெல்லாம் கேட்கின்றன. ஆனால் தவறியும் மசூதியே வேண்டும் என்று சொல்வது மதவாதம் என்று முனகக் கூட இல்லை ஊடகங்கள்.<br /><br />சரி சட்டம் குறித்த சில விவரங்களைப் பார்ப்போம். <br /><br />சட்ட வல்லுநர்களின் கருத்துப்படி உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்படும் போது 1940ஆம் ஆண்டு ஆங்கிலேய ப்ரிவி கௌன்சிலால் தீர்பளிக்கப்பட்ட லாகூர் குருத்வாரா வழக்கின் தீர்ப்பு மிக முக்கியமாக விவாதிக்கப்படும். <br /><br />லாகூரில் அப்துல்லாகான் மசூதி என்ற ஒன்று ஷாஜகான் ஆட்சிக்காலத்தில் (பொது ஆண்டு 1653) அப்துல்லா கான் என்ற லாகூரின் காவல் தலைவரால் (கொத்வால்) கட்டுமானம் தொடங்கப்பட்டது. இந்த அப்துல்லா கான் ஷாஜகானின் மகன் <br /><br />தாரா ஷுகோவின் சமையல்காரனாக இருந்தார். அவரது நல்ல சமையலைப் பாராட்டும் விதமாக லாகூரின் காவல் தலைவராக்கப்பட்டார். ஆனால் இந்த மசூதி பொது ஆண்டு 1722ல் ஃபலக் பெக் கான் என்பவரால் கட்டி முடிக்கப்பட்டது. இதன் அருகே ஒரு மைதானம் இருந்தது. இஸ்லாமுக்கு மாற மறுத்தவர்களையும் எஞ்சிய முகலாயரை எதிர்த்தவர்களையும் தலையைச் சீவ அந்த இடம் தண்டனைக்கூடமாகப் பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில் 1762ல் தாரு சிங் என்ற சீக்கிய வீரர் அந்தப் பகுதியின் மொகலாய ஆளுநர் ஜக்காரியா கான் ஆணையின் பேரில் தலை சீவப்பட்டுக் கொல்லப்பட்டார். உடனடியாகக் களமிறங்கிய சீக்கியர்கள் அந்த மைதானத்தை தியாகி தாரு சிங் மைதானம் என்று அறிவித்தனர். படையுடன் வந்து மசூதியையும் மைதானத்தையும் கைப்பற்றிக் கொண்டனர். முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதிக்கப்படவில்லை. மைதானத்தின் ஒரு பகுதியில் ஒரு குருத்வாராவை எழுப்பிக் கொண்ட சீக்கியர்கள் மசூதி இருந்த கட்டிடத்தை தங்கள் மதகுருமார்கள் தங்குமிடமாக பயன்படுத்திக் கொண்டனர். <br /><br />ஆங்கிலேயர் இந்தப்பகுதியில் ஆட்சியைக் கைப்பற்றிய பின் முஸ்லிம்கள் ஆங்கிலேய ஆளுநரிடம் புகாரளித்தனர். 1850ல் நூர் முகமது என்பவர் தாம் தான் அந்த மசூதியின் முத்தவல்லி என்று சொல்லி வழக்குத் தொடர்ந்தார். 1853 முதல் 1883 வரை பல்வேறு வழக்குகளை அவர் தொடர்ந்தபோதும் ஆங்கிலேய நீதிமன்றம் அப்போதைய நிலையையே உறுதி செய்தது. 1935ல் சீக்கியர்கள் அந்த மசூதியை இடித்துவிட்டு குருத்வாராவை விரிவுபடுத்தப் போவதாக அறிவித்தனர். முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கில் ஒன்றுகூடி மசூதியை இடிக்க எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்போதைய பஞ்சாப் பிரதேசத்தின் ஆங்கிலேய கவர்னர் சர்.ஹெர்பர்ட் எமர்சன் இரு தரப்பாரையும் அழைத்துச் சமாதானம் பேசினார். 1935 ஜூலை 7ஆம் நாள் இரவு அந்த மசூதியை சீக்கியர்கள் இடித்தனர். இதன் பிறகு தொடரப்பட்ட வழக்கில் லாகூர் நீதிமன்றம் இசுலாமியர்களுக்கு உரிமையில்லை என்றது. பம்பாய் உயர்நீதிமன்றம் மேல் முறையீட்டைத் தள்ளுபடி செய்தது. பிரிவி கௌன்சிலுக்குச் சென்றார்கள் இசுலாமியர். அங்கே அளிக்கப்பட்ட தீர்ப்பு மிகத்தெளிவானது. <br /><br />வழக்குத் தொடுத்த நூர் முகமது தனது புகாரில் அந்த இடத்தைத் தங்களுக்கு மீட்டு அளிக்க வேண்டும் என்றோ, அந்த இடம் தங்களுக்குச் சொந்தமானது என்றோ கூறவில்லை. அவ்விடம் மசூதியாக அறிவிக்கப்பட்டு அங்கே இசுலாமியர் தொழுகைக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்றே கோரியிருந்தார். Statute of Limitation விதிப்படி ஆக்கிரமிக்கப்பட்டு பல்லாண்டுகள் கடந்தபின் அந்தச் சொத்தில் பயன்பாட்டு உரிமை மட்டுமே கோரப்பட்ட வழக்கு அது. அதற்கும் இராமஜென்ம பூமி வழக்குக்கும் துளியும் சம்பந்தமில்லை.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimnKERT6ELBx1AIZ8iStwL6tUMSaxQ_pooXJ0L4drQ0QGbEVX10qsfHpXYMan6trzRaqvac1cjZZ4T-pcSpnRQDFoxnlo40atV8Og-K53FwRP7zxcntBxqUtsQr2s3ZvkFgCDjW_pi/s1600/b6552178-a91d-402a-a115-604ea9165f03MediumRes.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimnKERT6ELBx1AIZ8iStwL6tUMSaxQ_pooXJ0L4drQ0QGbEVX10qsfHpXYMan6trzRaqvac1cjZZ4T-pcSpnRQDFoxnlo40atV8Og-K53FwRP7zxcntBxqUtsQr2s3ZvkFgCDjW_pi/s1600/b6552178-a91d-402a-a115-604ea9165f03MediumRes.JPG" /></a></div>
<br />இராமஜென்மபூமி வழக்கில் இராமபிரான் ஆலயத்தை இடித்துக் கட்டப்பட்டதே மீர் பாகி கட்டிய பாப்ரி மசூதி என்றழைக்கப்பட்ட கட்டிடம் என்பது முதல் இஸ்லாமிய ஆட்சியின் போதே பல்வேறு காலகட்டங்களில் கோவிலை மீட்கப் போராட்டங்கள் நடைபெற்றதும், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கோவிலை மீண்டும் கட்டவேண்டும் என்று தொடரப்பட்ட நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த கொடுமை என்பதால் அதைச் செய்ய இயலாது என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆக இவ்வழக்கில் கட்டிடத்தைக் கோவில் என்று அறிவித்து வழிபாட்டு உரிமை தாருங்கள் என்று யாரும் கேட்கவில்லை. சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட இடம் இது. இங்கே உள்ள கோவில் மீண்டும் நிறுவப்படவேண்டும் என்பதே வழக்கின் சாரம். அங்கே கோவில் இருந்தது என்பதை ஐயம் திரிபற அகழ்வாராய்ச்சிகளின் மூலம் நிரூபித்துள்ளனர். <br /><br />பிரயாகை நீதிமன்றத் தீர்ப்பிலேயே நீதியரசர் ஷர்மா நிலம் மொத்தம் ஹிந்துக்களைச் சேர்ந்தது என்ற கருத்தைத் தெரிவித்துள்ளார். ஆனால் மற்ற இரு நீதிபதிகள் நிலத்தை மூன்றாகப் பிரித்து வழக்காடிய ஹிந்துக்களில் இருபிரிவினருக்கும் இசுலாமியர்களுக்கு ஒரு பிரிவும் என்று அளித்துள்ளனர். இங்கே தான் ஒரு கேள்வி எழுகிறது. உதாரணமாக, எங்கள் முப்பாட்டனாரின் வீட்டை ஒரு மூர்க்கன் நெறியற்ற முறையில் ஆக்கிரமித்துக் கொண்டு அந்த வீட்டை இடித்துவிட்டு அங்கே தனக்கென ஒரு வீடு கட்டிக் கொண்டான். ஆனால் அங்கே அவனோ அவன் சம்பந்தப்பட்ட யாருமே குடியிருக்கவில்லை. அது ஒரு பூத் பங்களாவாக என் முப்பாட்டனாரின் காலத்திலிருந்து நின்று வருகிறது. பல தலைமுறைகளாகப் போராடி வந்தனர் என் முன்னோர். என் காலத்தில் அந்த பாழடைந்த வீட்டை நாங்கள் இடித்துவிட்டோம். அதற்கு எங்களில் சிலர் மீது ஒரு வழக்கு நடக்கிறது. ஆனால் எங்கள் பாட்டனார் காலத்தில் நிலத்தின் உரிமைக்காகத் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பில் அது ஆக்கிரமிப்பு என்பதும், என் முப்பாட்டன் வீடு அங்கே இருந்தது என்பதும் சந்தேகத்துக்கு இடமே இல்லாமல் நிரூபிக்கப்பட்ட போதும், என் முப்பாட்டனின் வழித்தோன்றல்களான எங்களுக்கு நிலத்தின் இரு பிரிவுகளும் ஆக்கிரமித்தவர் குடும்பத்துக்கு ஒரு பிரிவுமாக நிலத்தைப் பகிர்ந்தளித்தால் அது பாதிக்கப்பட்ட நாங்கள் மனம் குளிர்வதற்கான நீதி அல்லவே? <br /><br />மேலும் நிலத்தில் பங்கு வேண்டும் என்று இந்த வழக்கில் யாரும் கேட்கவில்லை. நிலம் யாருக்குச் சொந்தம் என்பதே கேள்வி. நிலம் ஹிந்துக்களுக்குச் சொந்தம் என்று நிரூபணமான பிறகு ஏன் ஆக்கிரமித்தவர்களுக்கு மூன்றில் ஒரு பங்கு தரவேண்டும்? அங்கே வரவேண்டியது தேசத்தின் மாண்பின் காவலன், சக்ரவர்த்தித் திருமகன் இராமபிரானின் ஆலயமே. இதில் நாம் எக்காலமும் எத்தனை பிறவிகள் எடுப்பினும் உறுதியுடன் இருப்போம். தர்மத்தை நிலைநாட்டவே பாடுபடுவோம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiufKArT12sFR_y5eD2Zgtu5RJJBQf7jgtrpH0tszYVMpZThWjMlmGqdjm0K0M_teeUlMUCTDTTUoBXL3xuBZ9YYVmLyaIgx8hEbpLLeRlqwiVaj22GXVw-AQPI4scMxKFOSkYgF4bm/s1600/vande_mataram_image_1_20060911.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiufKArT12sFR_y5eD2Zgtu5RJJBQf7jgtrpH0tszYVMpZThWjMlmGqdjm0K0M_teeUlMUCTDTTUoBXL3xuBZ9YYVmLyaIgx8hEbpLLeRlqwiVaj22GXVw-AQPI4scMxKFOSkYgF4bm/s1600/vande_mataram_image_1_20060911.jpg" /></a></div>
<br />
<br />
வந்தே மாதரம்! ஜெய் ஸ்ரீ ராம்.<br />Arun Ambiehttp://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6493698527091962490.post-25957559117019465342014-12-13T09:57:00.002-08:002014-12-13T09:58:29.989-08:00வந்தே குரு பரம்பராம்<div style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 19.3199996948242px; margin: 0px 0px 6px; orphans: auto; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
<a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D?source=feed_text&story_id=329310810590211" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;"><span class="_58cl" style="color: #6d84b4;"></span><span class="_58cm"></span></a></div>
<div style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 19.3199996948242px; margin: 6px 0px; orphans: auto; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
<span style="font-size: x-small;">நண்பர் <a href="https://www.facebook.com/vivekajothy" target="_blank">விவேக ஜோதி</a> அவர்கள் எழுதியது. முன்னுரை எனது.</span><br />
<br />
ஆதிசங்கரர் சிருங்கேரியில் இருந்த போது காலநாத கிரி என்ற சிறுவன் அவரை வணங்கினான். பெரிய ஞானத் தேடலோ ஆன்மீக விழைவுகளோ இல்லாது இட்டபணி செய்து கொண்டு இன்பமாக இருந்து வந்தான் கிரி. ஆனால் சங்கரர் பெரிய ஞானி என்பதும் அவருக்குத் தொண்டு செய்வது நல்லது என்பதும் அவனது மனதில் ஆழப்பதிந்து இருந்தது. ஒரு நாள் தன் மூன்று சீடர்களுடன் வேதாந்த வகுப்பிற்கு அமர்ந்தார். கிரி துணிகளைத் துவைத்து உலர்த்திக் கொண்டிருந்தான். பாடத்தைத் தொடங்காது இருந்த குருவிடம் சீடர்கள் ஏனென்று கேட்க கிரி வரட்டும் என்றார் சங்கரர்.<br />
<br />
அருகில் அமர்ந்திருந்த பத்மபாதர் ஒரு கல்லைச் சுட்டிகாட்டி அதற்குப் பாடம் சொல்வதும் கிரிக்குப் பாடம் சொல்வதும் ஒன்றே என்றார். சற்றே நகைத்த பகவத்பாதர் கிரியை அழைத்து ஆசீர்வதித்து இதுவரை நீ கற்றதைச் சொல் என்றார். அப்போது கிரி பாடிய எட்டுச் செய்யுட்கள் (அஷ்டகம்) குருவின் மகிமையை விதந்தோதுவதாக இருந்தது. சங்கர தேசிகாஷ்டகம் என்று அதற்குத் தலைப்பிட்டார் கிரி. அப்போதே கிரியை தோடகாச்சாரியார் என்ற சந்நியாசப் பெயருடன் தன் சீடர்களில் ஒருவராக ஏற்றார் பகவத் பாதர். அவர் பாடிய சங்கர தேசிகாஷ்டகம் அவரது பெயரிலேயே தோடகாஷ்டகம் என்று விளங்கட்டும் என்றும் ஆதிசங்கரர் ஆசீர்வதித்தார்.<br />
<br />
ஸ்ரீ ஸ்ரீ தோடகாச்சாரியார் பாடிய தோடகாஷ்டக சுலோகமும் அதன் அர்த்தமும் இனி பார்க்கலாம்.<br />
<br />
<a name='more'></a><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://www.sringeri.net/wp-content/uploads/2009/09/adi-shankaracharya-with-shishyas.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://www.sringeri.net/wp-content/uploads/2009/09/adi-shankaracharya-with-shishyas.jpg" height="320" width="400" /></a></div>
</div>
<div style="background-color: white; font-family: Helvetica,Arial,"lucida grande",tahoma,verdana,arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 19.32px; margin: 6px 0px; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; word-spacing: 0px;">
<span style="color: blue;">விதிதாகில சாஸ்த்ர ஸூதா ஜலதே<br />
மஹிதோபநிஷத் கதிதார்த்தநிதே!<br />
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்<br />
பவ சங்கர தேசிக மே சரணம்!!</span></div>
<div style="background-color: white; font-family: Helvetica,Arial,"lucida grande",tahoma,verdana,arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 19.32px; margin: 6px 0px; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; word-spacing: 0px;">
<span style="color: purple;">புகழ்பெற்ற கடல் போன்ற அனைத்து சாஸ்திரங்களையும் அறிந்தவரும், உபநிஷத்துக்களில் கூறி இருக்கும் தத்துவங்களை உணர்ந்து அதில் உறைந்தவரும் ஆன அந்த பரமேஸ்வரனுக்கு நிகரான சங்கர குருவே, உங்கள் பாதங்களில் என்னுடைய ஹ்ருதயத்தைச் சமர்ப்பிக்கிறேன். தாங்களே எனக்கு குரு, வழிகாட்டி (தேசிக என்பதற்கு இங்கே வழிகாட்டி என்ற பொருள்)</span></div>
<div style="background-color: white; font-family: Helvetica,Arial,"lucida grande",tahoma,verdana,arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 19.32px; margin: 6px 0px; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; word-spacing: 0px;">
<span style="color: blue;">கருணா வருணாலய பாலய மாம்<br />
பவஸாகர துக்க விதூன ஹ்ருதம்<br />
ரசயாகிலதர்சன தத்வவிதம்<br />
பவ சங்கர தேசிக மே சரணம்!!</span></div>
<div style="background-color: white; font-family: Helvetica,Arial,"lucida grande",tahoma,verdana,arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 19.32px; margin: 6px 0px; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; word-spacing: 0px;">
<span style="color: purple;">குருவே, எனக்கு எதுவுமே தெரியாதே! நான் நிர்மூடன்! எந்தக் கலையும் என்னால் அறியப் படவில்லை. ஆகையால் என்னால் பிறருக்குப்பயன் தரும் எந்த வித்தையையும் கற்பித்துப் பொருள் ஈட்டித் தங்களுக்கு வேண்டியவற்றைச் செய்து குரு தக்ஷிணையும் தர இயலவில்லை. இப்படி எதுவுமே இல்லாத ஏழையான எனக்குத் தாங்கள் தங்கள் சுபாவமான கருணையாலும், அன்பாலுமே அனைத்தையும் கற்பித்துக் காட்ட வேண்டும். ஹே சங்கரகுருவே, தங்கள் திருவடியே எனக்குச் சரணம்! கருணை நிறைந்தவரே, தங்கள் கருணையாகிய கடலால் இந்தப் பிறப்பு இறப்பு என்னும் சாகரத்தில் மூழ்கித் தவிக்கும் என்னைக் காத்துக் கரை சேருங்கள்.<span class="Apple-converted-space"> </span><br />
என்னை ஞாநவானாக ஆக்குங்கள். சங்கர குருவே தாங்களே எனக்குக் கதி! தங்களைச் சரணடைகின்றேன்.</span></div>
<div style="background-color: white; font-family: Helvetica,Arial,"lucida grande",tahoma,verdana,arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 19.32px; margin: 6px 0px; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; word-spacing: 0px;">
<span style="color: blue;">பவதா ஜனதா ஸுகிதா பவிதா<br />
நிஜபோதவிசாரண சாருமதே<br />
கலயேச்வர ஜீவ விவேகவிதம்<br />
பவ சங்கர தேசிகமே சரணம்!!</span></div>
<div style="background-color: white; font-family: Helvetica,Arial,"lucida grande",tahoma,verdana,arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 19.32px; margin: 6px 0px; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; word-spacing: 0px;">
<span style="color: purple;">தாங்களே பரப்பிரும்மம். அதனால் தாங்கள் தெளிந்த ஞானத்தை உடையவராய் இருக்கிறீர்கள். தங்கள் ஞான போதனை எனக்கு மட்டுமின்றி உலகத்து மக்களுக்கும் பயன்பட்டு அதனால் க்ஷேமம் உண்டாகும். என்னை விவேகம் உள்ளவனாக என்னை ஜீவனை அறிந்தவனாக ஈஸ்வரனை அறிந்தவனாக மாற்றுங்கள். ஹே, சங்கர குருவே, தாங்கள் தான் எனக்குச் சரணம்!</span></div>
<div style="background-color: white; font-family: Helvetica,Arial,"lucida grande",tahoma,verdana,arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 19.32px; margin: 6px 0px; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; word-spacing: 0px;">
<span style="color: blue;">பவ ஏவ பவானிதி மே நிதராம்<br />
ஸமஜாயத சேதஸி கெளதுகிதா<br />
மம வாரய மோஹமஹாஜலதிம்<br />
பவ சங்கர தேசிக மே சரணம்!!</span></div>
<div style="background-color: white; font-family: Helvetica,Arial,"lucida grande",tahoma,verdana,arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 19.32px; margin: 6px 0px; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; word-spacing: 0px;">
<span style="color: purple;">தாங்களே அந்த சாட்சாத் பரமேஸ்வரன். என்னுடைய சித்தம் பகுத்து அறிந்து காமத்தை விலக்கும் அறிவை நீங்களே எனக்குத் தரவேண்டும். என்னுடைய விருப்பமே தங்களால் எனக்கு ஞானம் ஏற்படவேண்டும் என்பதே! ஹே சங்கர குருவே சரணம்!</span></div>
<div style="background-color: white; font-family: Helvetica,Arial,"lucida grande",tahoma,verdana,arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 19.32px; margin: 6px 0px; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; word-spacing: 0px;">
<span style="color: blue;">ஸுக்ருதே (அ)திக்ருதே பஹுதா பவதோ<br />
பவிதா ஸமதர்சன லாலஸதா<br />
அதிதீனமிமம் பரிபாலய மாம்<br />
பவ சங்கர தேசிக மே சரணம்!!</span></div>
<div style="background-color: white; font-family: Helvetica,Arial,"lucida grande",tahoma,verdana,arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 19.32px; margin: 6px 0px; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; word-spacing: 0px;">
<span style="color: purple;">தங்களின் எங்கும் பிரும்மமே என்ற கொள்கையே எத்தனைவிதமான புண்ணியங்களைச் செய்ததால் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும்?? எங்கும்<span class="Apple-converted-space"> </span><br />
நிறைந்திருப்பது அந்தப் பிரம்மமே தான் என்ற இத்தகைய எண்ணம் ஏற்பட எத்தகைய புண்ணியங்களைச் செய்யவேண்டும்?? அப்படி ஒன்றுமே செய்யாமல் மிகவும் ஏழையாக இருக்கும் என்னை உங்கள் கருணை ஒன்றே காப்பாற்ற வேண்டும். ஹே சங்கர குருவே, தங்கள் திருவடி சரணம்!</span></div>
<div style="background-color: white; font-family: Helvetica,Arial,"lucida grande",tahoma,verdana,arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 19.32px; margin: 6px 0px; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; word-spacing: 0px;">
<span style="color: blue;">ஜகதீ மவிதும் கலிதாக்ருதயோ<br />
விசரந்தி மஹா மஹஸஸ்சலத:<br />
அஹிமாம் சுரிவாத்ர விபாஸி குரோ<br />
பவசங்கர தேசிக மே சரணம்!!</span></div>
<div style="background-color: white; font-family: Helvetica,Arial,"lucida grande",tahoma,verdana,arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 19.32px; margin: 6px 0px; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; word-spacing: 0px;">
<span style="color: purple;">குருவே! தங்கள் உண்மையான ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டும் அத்தகைய ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டு உலாவும் தேவாதி தேவர்களுக்கு நடுவே தாங்கள் ஒளி விட்டுப்பிரகாசிப்பது சூரியனைப் போல விளங்குகிறது. ஹே சங்கர குருவே, தங்கள் திருவடி சரணம்!</span></div>
<div style="background-color: white; font-family: Helvetica,Arial,"lucida grande",tahoma,verdana,arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 19.32px; margin: 6px 0px; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; word-spacing: 0px;">
<span style="color: blue;">குருபுங்க புங்கவ கேதந தே<br />
ஸமதாம் அயதாம் நஹி கோபி ஸுதீ:<br />
சரணாகத வத்ஸல தத்வநிதே<br />
பவ சங்கர தேசிக மே சரணம்!!</span></div>
<div style="background-color: white; font-family: Helvetica,Arial,"lucida grande",tahoma,verdana,arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 19.32px; margin: 6px 0px; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; word-spacing: 0px;">
<span style="color: purple;">ரிஷபக் கொடியைக் கொண்ட பரமேஸ்வர ஸ்வரூபமே தாங்கள் தானே, குருக்களுக்கெல்லாம் மேலான குரு சிரேஷ்டரே! தங்களுக்கு ஈடு இணை எவரும் இல்லை. எப்படிப் பட்ட புத்திமானும் உங்களுக்கு இணையாக மாட்டானே! உம்மைச் சரணடைந்தால் கருணையுடன் ஆத்ம தத்துவத்தைப் போதித்து இவ்வுலக மாயையான சம்சாரக் கடலில் இருந்து தாண்டச் செய்பவரே! ஹே சங்கர குருவே தங்கள் திருவடி சரணம்!</span></div>
<div style="background-color: white; font-family: Helvetica,Arial,"lucida grande",tahoma,verdana,arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 19.32px; margin: 6px 0px; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; word-spacing: 0px;">
<span style="color: blue;">விகிதா ந மயா விசதைககலா<br />
நசகிஞ்சன காஞ்சந மஸ்தி குரோ<br />
த்ருதமேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்<br />
பவ சங்கர தேசிக மே சரணம்!!</span></div>
<div style="background-color: white; font-family: Helvetica,Arial,"lucida grande",tahoma,verdana,arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 19.32px; margin: 6px 0px; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; word-spacing: 0px;">
<span style="color: purple;">ஆழமாய் விரிந்த ஞானத்தில் சிறு கிளை அளவிற்கு கூட அறிவில்லாத அடியேனுக்கு அருள் கூர்ந்து வாழும் வழியை போதித்து வீழ்ச்சியில் இருந்து அடியேனை காப்பாற்றுவதற்கு நின் திருவடியை சரணடைந்தேன். ஹே சங்கர குருவே தங்கள் திருவடி சரணம்!</span></div>
<div style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 19.3199996948242px; margin: 6px 0px; orphans: auto; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
============================================================</div>
<div style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 19.3199996948242px; margin: 6px 0px; orphans: auto; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="//www.youtube.com/embed/aBXfU4n9Fs8" width="420"></iframe><br />
<br />
ஆதிசங்கரர் அருள் பெற்று காலநாத கிரி என்கிற தோடகர் பாடிய தோடகாஷ்டகம் என்னும் அற்புதமான சுலோகத்தை மறைந்த கர்நாடக இசை மேதை திருமதி எம் எஸ் சுப்புலட்சுமி தனது இனிய குரலில் பாடி இருக்கிறார். </div>
<div style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; color: #141823; display: inline; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 19.3199996948242px; margin: 6px 0px 0px; orphans: auto; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
<br /></div>
Arun Ambiehttp://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6493698527091962490.post-9370093468425117812014-12-07T06:59:00.000-08:002014-12-07T06:59:21.985-08:00திருமதி தமிழிசை சௌந்தர்ராஜனிடம் சில கேள்விகள்
கேள்விகள் <span style="color: blue;"><span style="color: black;">கேட்பவர்</span><b> </b></span><b><span style="color: orange;">- பத்தமடை சுப்பிரமணியன்.</span></b> <br />
<br />
1. அன்புள்ள சகோதரி, திருவள்ளுவர் திருநாள் வைகாசி அனுடம் என எழுதியும் பேசியும் வருபவர்கள் எந்த ஓர் அரசியல் கட்சியையும் சாராதவர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா ?<br />
<br />2. அவர்கள் அரசியல் கட்சி சாந்தவர்கள் என உங்களால் கூற முடியுமா?<br />
<br />3. நீங்கள் தி.மு.க. சார்பில் நின்று பேசுவதற்காக திருவள்ளுவர் பிறந்த நாள் தொடர்பாக்க் கருத்துக் கூறுபவர்களைப் பார்த்து இதனை அரசியல் ஆக்க வேண்டாம் எனக் கேட்பது எந்த விதத்தில் நியாயம் ?<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFW35xO4Jyo_GAK_XSQEf2bv9D7uBs64MGvZOHcAlQx3Pxky4NknNHkOS-PJ4V_3oyPyxoWXe5fY35p2YN418sE6TahdFYuDN2VJ-0U27ry_UipdIg7dnLNV3dpt8eTwko6wr1qBJ-/s1600/TH14_TAMILISAI_2106823e.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFW35xO4Jyo_GAK_XSQEf2bv9D7uBs64MGvZOHcAlQx3Pxky4NknNHkOS-PJ4V_3oyPyxoWXe5fY35p2YN418sE6TahdFYuDN2VJ-0U27ry_UipdIg7dnLNV3dpt8eTwko6wr1qBJ-/s1600/TH14_TAMILISAI_2106823e.jpg" height="320" width="216" /></a></div>
<br />
<br />4. இதில் எங்கே வந்தது அரசியல் ?<br />
<br />5. தை மாதம் இரண்டாம் நாள்- திருவள்ளுவர் பிறந்த நாள் என அறிவித்த கலைஞரின் நிலைப்பாடு சரிதான் எனக் கூறுகிறீர்களா ?<br />
<br />6. கலைஞர் அறிவிப்பில் நியாயம் உண்டு என உங்களால் கூற முடியுமா?<br />
<br />7. திருவள்ளுபவர் பிறந்த நாள் தொடர்பான வரலாறு உங்களுக்குத் தெரியுமா?<br />
<br />8. தமிழ் வருடம் சித்திரையில் தொடங்காது தை மாதத்தில் தொடங்குகிறது எனக் கலைஞர் அறிவித்த போது – நீங்கள் என்ன செய்தீர்கள்? எங்கே போயிருந்தீர்கள்?<br />
<br />9. சித்திரை - தை என்ற வருடப் பிறப்பு சர்ச்சையில் தங்கள் நிலைப்பாடு என்ன?<br />
<br />10. இந்த வருடப் பிறப்பு சர்ச்சை தொடங்கிய காலத்தில் 14-2-14 சனிக்கிழமை தினமணி நாளிதழில் பேராசிரியர் சாமி.தியாகராசன் எழுதிய கட்டுரையைப் படித்துள்ளீர்களா?<br />
<br />11. 1935- 18ஆம் நாள்(வைகாசி அனுடத்தில்) மறைமலை அடிகள் தலைமையில் தமிழகத்தின் பெரும் பேராசிரியர்கள், தமிழ்ச் சான்றோர்கள் அனைவரும் கூடி வள்ளுவர் நாளைக் கொண்டாடியது உங்கட்குத் தெரியுமா?<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjj4eMMv-zc-tUwyYaKaLYx7N2zXJhUobZhqpS4h0jOt8QS-0yyMt8l0W6c0E5tk78sc3XDpwhKgQAUm32CQ1JFRFV7_Qqy2y2imIcdjUSpgXb83UgJeIm-al0DPUMaWeNP6WZGx5dh/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjj4eMMv-zc-tUwyYaKaLYx7N2zXJhUobZhqpS4h0jOt8QS-0yyMt8l0W6c0E5tk78sc3XDpwhKgQAUm32CQ1JFRFV7_Qqy2y2imIcdjUSpgXb83UgJeIm-al0DPUMaWeNP6WZGx5dh/s1600/images.jpg" height="320" width="244" /></a></div>
<br />
12. 1935- 19ஆம் தேதி வைகாசி அனுடத்தில் சென்னையில் உள்ள ஏழுகிணறு, ஏழுகிணற்றுத் தெருவில் அறிஞர் அண்ணா தலைமையில் திருவள்ளுவர் திருவிழா கொண்டாடப்பட்டது உங்கட்குத் தெரியுமா?<br />
<br />13. இலங்கை, கொழும்பில் வாழ்ந்த பண்டிதர் கா.பொ.இரத்தினம் தான்கண்ட தமிழ் மறைக் கழகத்தின் சார்பில் “ வைகாசி அனுடம் வள்ளுவர் திருநாள் – அதுவே தமிழினத்தை ஒன்றுபடுத்தும் நாள்” என அறிவித்து உலகம் முழுதும் விழா நடத்தியது உங்கட்குத் தெரியுமா?<br />
<br />14. 1966- ஜூன் 2-ஆம் நாள் வைகாசி அனுட நாளில் சென்னை மயிலை சமஸ்கிருத கல்லூரி அருகில் இருக்கும் திருவள்ளுவர் சிலையை – அப்போதைய குடியரசுத்தலைவர் டாக்டர் இராதா கிருஷ்ணன் அவர்கள் திறந்து வைத்ததை நீங்கள் அறிவீர்களா?<br />
<br />15. அப்போதைய முதலமைச்சர் பெரியவர் பக்தவத்சலம் வைகாசி அனுட நாளை வள்ளுவர் திருநாள் எனக் கொண்டாடி அரசு விடுமுறையாக அறிவித்ததை நீங்கள் அறிவீர்களா?<br />
<br />16. தங்கள் தந்தை இலக்கியச் செல்வர் திரு. குமரி அனந்தனை இது தொடர்பாகக் கேட்டு அறிய முயற்சி மேற் கொண்டீர்களா?<br />
<br />17. சென்னை, மயிலைத் திருவள்ளுவர் திருக்கோயிலில் வள்ளுவர் அவதாரத்தினமாக வைகாசி அனுட நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்களா?<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjRJ-GN9wJ376wQJClFNtUHbGpBB__vwBCJPgz0qoaXf4rHoYmi1abBrsLs25-6jJ6HVkitfJirjLLeI_xIkZz-mHp43BwhCWYlUi5Xhq36pAmVZXZ5kHAXEVIyiexdASD6rjkTS1n/s1600/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjRJ-GN9wJ376wQJClFNtUHbGpBB__vwBCJPgz0qoaXf4rHoYmi1abBrsLs25-6jJ6HVkitfJirjLLeI_xIkZz-mHp43BwhCWYlUi5Xhq36pAmVZXZ5kHAXEVIyiexdASD6rjkTS1n/s1600/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D.jpg" /></a></div>
<br />
<br />18. வள்ளுவர் பிறந்த நாள் தொடர்பாகக் கருத்துரைப்பவர்களைக் கண்டு நீங்கள் கலந்து பேசினீர்களா?<br />
<br />
<br />19. அவ்வாறு பேசியிருந்தால் அவர்கள் கருத்தில் உங்கட்கு உடன்பாடா? இல்லையா? என்பதை வெளியிட்டீர்களா?<br />
<br />20. இப்படி எதுவும் நீங்கள் செய்யாமல் இருந்து கொண்டு “இதனை அரசியல் ஆக்க வேண்டாம்” எனச் சொல்வது நீங்கள் தான் இதனை அரசியலாக்குகிறீர்கள் என்ற எண்ணத்தை உண்டாக்கவில்லையா?<br />
<br />21. உங்கள் அரசியல் ஆதாயத்திற்காகத் திருவள்ளுவர் பிறந்த நாளை வைகாசி அனுடத்தில் கொண்டாடிய மறைமலை அடிகள், திரு.வி.க, டாக்டர் உ.வே.சா, அண்ணா, ஈ.வே.ரா, வையாபுரிப்பிள்ளை, ரா.பி.சேதுப்பிள்ளை, தெ.பொ.மீ, மா.பொ.சி, கி.வா.ஜ, கல்கி -கிருஷ்ணமூர்த்தி முதலான பெருமக்களை நீங்கள் அவமதிக்கிறீர்களே! இது உங்கட்கு வெட்கமாக இல்லையா?<br />
<br />22. “எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்” என்ற நாலாந்தர அரசியல்வாதி போல நீங்கள் பேசலாமா? நீங்கள் இருக்கும் இட்த்திற்கு அழகா?<br />
<br />23. நீங்கள் கலைஞரின் கருத்துப் பினாமியாக பாரதிய ஜனதா கட்சியில் செயல்படுபவர் எனப் பலர் சொல்வதை உங்கள் பேச்சு உறுதிப்படுத்தவில்லையா?Arun Ambiehttp://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6493698527091962490.post-40146094061840186582014-11-22T23:18:00.000-08:002014-11-22T23:40:03.635-08:00பாரத பூமி பழம்பெரும் பூமி<span style="color: purple;"><span style="font-size: x-small;">2014ஆம் ஆண்டு <a href="http://www.ammandharsanam.com/" target="_blank">அம்மன் தரிசனம்</a> தீபாவளி மலரில் வெளியான என் கட்டுரை.</span></span> <br />
<br />
மஹான்கள் பலரும் தோன்றி அறம் வளர்த்த புண்ணிய பூமி நம் பாரத நாடு. நம் தர்மம் ஸ்நாதனம் என்று அறியப்படும். அழிவற்றது, பழமையானது என்பது இதன் பொருள். நன்மைகள் பெருகிவரும் காலத்தே சற்றே தீமையும் இழையோடிச் செல்லும் என்பது போல நடுவே சிலகாலம் நம் பண்பாட்டுக்குப் பொல்லாக் காலமாகிவிட்டது. மேற்கத்திய உலகின் தாக்கமும் மேற்காசியத்தின் ஆட்சியும் நம் தர்மத்தைச் சற்றே மங்கலான ஒளியில் உலகுக்குக் காட்டிவந்த காலம் சில நூற்றாண்டுகள்.<br />
<br />
<a name='more'></a>மேற்கத்திய உலகம் பாரத கலாசாரத்தை மறைந்துபட்டுப் போனது என்று முடிவுகட்டிய சமயம் அது. ஹிந்து தர்மம் பயனற்றது என்று ஒரு கருத்து உருவாக்கி வைக்கப்பட்டிருந்த நேரம். இந்தியர்கள் அடிமைகள் என்று உலகம் தூற்றிய காலம். கப்பலேறிக் கடல் தாண்டி மேற்கே போன ஒரு இளம் ஹிந்துத்துறவி பாரதத்தின் பெருமையை எடுத்துரைத்து நம் கலாசாரத்தின் மேன்மையை உலகுக்கு உணர்த்தினார். அவர் சொன்ன சொல் இது.”<span style="color: blue;">எதிர்காலம் குறித்து நான் கனவேதும் கொண்டிருக்கவில்லை. அது எனக்குத் தேவையுமில்லை. ஆனால் நிதர்சனம் என் கண்களில் தெரிகிறது. ஸநாதனத்தாய் விழித்துக் கொண்டுவிட்டாள். அவளது பொன்னாசனத்தில் மேலும் கம்பீரமாக அமர்ந்துவிட்டாள். அகில உலகத்தையும் அவளுக்கு அமைதியாக சமர்பித்து வணங்குவோம்.</span>” ஆம். ஸ்வாமி விவேகானந்தர் தான் அந்த இளம் துறவி.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEit71n9QCXhTIICaj45fA9adaSmb1ho5JQcJPb5tsq2PrIjpuUZwpz5HneNxW5s0fjvauCKBZwJ2ljhPl8NqEzheDoLQ6A0vH4OhByClOOUCsegFf3rYnoOJcTc1X157HBjbLMwe4Hk/s1600/150273_10152411447145165_1396135202_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEit71n9QCXhTIICaj45fA9adaSmb1ho5JQcJPb5tsq2PrIjpuUZwpz5HneNxW5s0fjvauCKBZwJ2ljhPl8NqEzheDoLQ6A0vH4OhByClOOUCsegFf3rYnoOJcTc1X157HBjbLMwe4Hk/s1600/150273_10152411447145165_1396135202_n.jpg" height="320" width="320" /></a></div>
<br />
பாரத தேசம் என்பதை ஒருங்கிணைத்து வைத்ததே மொகலாயர்களும் ஆங்கிலேயர்களும் என்று ஒரு வரலாற்றுப் பிழை நம் புத்தகங்கள் பலவற்றில் உலா வருகிறது. நம்மில் சிலரும் சற்றே யோசித்து,”ஆமாம். இங்கேயே என்ன வாழ்ந்தது? சேரன் சோழன் பாண்டியன் என்று பிரிந்து கிடந்தது சரித்திரம் தானே?” என்று பிழைக்குப் பின்பாட்டுப் பாடுவதைக் காண்கிறோம். <br />
<br />
<span style="color: blue;">வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்,<br />தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்,<br />குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்,<br />குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்</span><br />
<br />
இப்பாடல் புறநாநூற்றில் காரிக்கிழார் எனும் புலவர் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை வாழ்த்திப் பாடிய பாடலின் தொடக்கம். இதில் பாரத தேசத்தின் எல்கைகள் குறித்துச் சொல்லி அதை வென்று ஆளும் மன்னன் முதுகுடுமிப் பெருவழுதி என்று புகழ்ந்துரைக்கிறார்.<br />
<br />
இதையே பாரதியார் சற்றே எளியதமிழில் <br />
<span style="color: blue;">வடக்கில் இமய மலை பாப்பா<br />தெற்கில் வாழும் குமரியடி பாப்பா<br />கிடக்கும் பெரிய கடல் கண்டாய் - அதன்<br />கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா</span><br />
என்று தேசத்தைப் போற்றுகிறார்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7XrqMFyNIR5pFJu1Z2BEqKkY0JxyWn87brxGtOs7ogsunLYYr1yxhvDyWQqV0XimvRyYAwOkVzs-4xvug4Kx8cc0oqVyC77rtU_FW2JulCqysORdclXPZCeMzX1kRCGBevj7TpQmN/s1600/bharathiyar.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7XrqMFyNIR5pFJu1Z2BEqKkY0JxyWn87brxGtOs7ogsunLYYr1yxhvDyWQqV0XimvRyYAwOkVzs-4xvug4Kx8cc0oqVyC77rtU_FW2JulCqysORdclXPZCeMzX1kRCGBevj7TpQmN/s1600/bharathiyar.jpg" /></a></div>
<br />
சங்கப் பாடல்கள் போலவே தொன்மை மிக்க நம் புராணங்களிலும் பாரத தேசத்தைப் பற்றிய எல்லை வரையறைகள் தெளிவாக உள்ளன.<br />
<span style="color: purple;">உத்தரம் யத் ஸமுத்ரஸ்ய ஹிமாத்ரே: சைவ தக்ஷிணாம்|<br />வர்ஷம் தத் பாரதம் நாம பாரதீ யத்ர சந்ததி:||<br />(விஷ்ணு புராணம்)</span><br />
கடலுக்கு வடக்கிலும் இமயத்திற்குத் தெற்கிலும் இருக்கும் நிலப்பரப்பு பாரதம் எனப்படும் அதன் மக்கள் பாரதியர் என்றும் அறியப்படுகிறார்கள் என்கிறது விஷ்ணு புராணம்.<br />
<br />
இதே விதமாக <br />
<span style="color: purple;">ஹிமாலயம் ஸமாரப்ய யாவதிந்து சரோவரம்|<br />தம் தேவநிர்மிதம் தேசம் ஹிந்துஸ்தானம் ப்ரசக்ஷதே||</span><br />
<span style="color: purple;"><span style="color: black;">என்று <span style="color: purple;">பிரஹஸ்பத்ய ஸாஸ்திரத்தில்</span> சொல்லப்படுகிறது</span>.</span> இது ஹிதோபதேசம் உள்ளிட்ட பல நூல்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.<br />
”ஹிமாலயத்தில் தொடங்கி இந்து மஹா சமுத்திரம் வரை தேவர்களால் அமைக்கப்பட்ட தேசமே ஹிந்துஸ்தானம்” என்பது இதன் பொருள்.<br />
ஹி என்ற ஹிமாசலத்தின் முதலெழுத்தையும் இந்து மாக்கடலின் பெயரில் ‘ந்து’ என்பவற்றையும் இணைத்து ஹிந்து என்ற பெயர் வந்தது. ஸ்தானம் என்பதற்கு இடம், நிலம் என்பது பொருள். ஆகவே இந்த நிலப்பரப்பு ஹிந்துஸ்தானம். இங்கே வசிக்கும் மக்கள் ஹிந்துக்கள்.<br />
<br />
இது வழிபாட்டுமுறை சார்ந்த பிரிவு அல்ல. உலகின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு வாழ்க்கைமுறை இருப்பது போல இமயத்துக்கும் குமரிக்கும் இடைப்பட்ட பூமியில் வாழும் மக்களின் வாழ்வுமுறை சார்ந்தே ஹிந்துக்கள் என்று அறியப்பட்டனர்.<br />
<br />
ஹிந்துஸ்தானத்தின் வாழ்வியல் முறை ஸநாதன தர்மம் என்று அறியப்படுகிறது. ஸநாதனம் என்றால் தொன்மைமிக்கது, அழிவில்லாதது என்று பொருள். <br />
<br />
ஸநாதன தர்மத்துக்கு என்று தனி விதமான அடையாளங்கள் சின்னங்கள் ஏதுமில்லை. பல்வேறு அடையாளங்களையும் சின்னங்களையும் தன்னகத்தே கொண்டது நம் தர்மம். வழிபாட்டு முறைகள் என்று பார்த்தாலும் பல்வேறு முறைகளின் சங்கமமே நம் தர்மத்தின் வழிபாட்டு முறை. ஆதிசங்கர பகவத் பாதர் தொகுத்தளித்த ஆறு வழிபாட்டு நெறிமுறைகளும் அதனோடு இயைந்து வரும் நாட்டார் தெய்வ வழிபாடும் நம் தர்மத்தின் அங்கம்.<br />
ஸநாதனிகள் தம் நடத்தையால் அறியப்படுபவர்கள். வசுதைவ குடும்பகம் என்ற கோட்பாட்டை மனதில் நிறுத்தி உலகின் ஒவ்வொரு உயிரினத்தையும் தன்னில் ஒருவராக உணரும் எவரும் ஸநாதன தர்மத்தைப் பின்பற்றுபவரே. <br />
வசுதைவ குடும்பகம் என்றால் என்ன? <br />
<span style="color: purple;">अयं बन्धुरयं नेति गणना लघुचेतसाम् | उदारचरितानां तु वसुधैव कुटुम्बकम् ||<br />அயம் பந்துரயம் நேதி கணனா லகுசேதஸாம்|<br />உதாரசரிதானாம் து வஸுதைவ குடும்பகம்||<br />(மஹோபநிஷத்)</span><br />
இவை நெருக்கமானவை இவை அந்நியமானவை என்று கொள்வது தாழ்ந்த மனது.<br />
உலகம் முழுமையும் ஒரு குடும்பம் தான் என்று கொள்வது உயர்ந்த மனது.<br />
என்பதே இதன் பொருள்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEZmd1z5u7gDK2-hYPmEZZx2aiXV1NIua6oPN_oyBbTLzsXB-WcqUi-J5TbfuajHNCW9OX4z3dcwyIT51-kWTc6BYV4Z8oygBkU-7wjr51gwCVfQl7yyrGQN-420kz4FGAyGrvps_zdnCF/s1600/c08e8226623116f4cc614f886d4991e8_1024.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEZmd1z5u7gDK2-hYPmEZZx2aiXV1NIua6oPN_oyBbTLzsXB-WcqUi-J5TbfuajHNCW9OX4z3dcwyIT51-kWTc6BYV4Z8oygBkU-7wjr51gwCVfQl7yyrGQN-420kz4FGAyGrvps_zdnCF/s1600/c08e8226623116f4cc614f886d4991e8_1024.jpg" /></a></div>
இது ஆன்ம சாதனையில் மிக உயரிய நிலை அடைந்த ஒரு மனிதனின் மனோநிலையாகச் சொல்லப்பட்டுள்ளது. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பது இதற்கு இணையான வாக்கியம். ஆப்பிரிக்க கலாசாரத்தின் உபுண்டு தத்துவம் இதே போன்றது. <br />
<br />
ஆன்ம சாதனையில் மிக உயரிய நிலை எட்டிய மஹான்களுக்கு மண்ணில் நெளியும் புழுவும் மண்ணாளும் மன்னனும் படைப்பின் பல்வேறு அம்சங்களைப் பிரதிபலிக்கும் தன்னைப் போன்ற உயிரினங்கள். அவ்வளவே! ஒரு கேள்வி எழலாம். இப்படி எல்லோரும் ஓர் குடும்பம் என்றால் தவறுகளக் கண்டிப்பதும் குற்றங்களை தண்டிப்பதும் எப்படி? இதற்கான விடை தேடும் போது தர்மத்தைச் சற்றே ஆழ்ந்து நோக்கவேண்டும். புரிந்து கொள்ளக் கடினமானது அல்ல. <br />
<br />
உலகியல் வாழ்வில் ஈடுபட்டிருக்கும் மக்களுக்கு அவர்களது வாழ்வு முறைக்கேற்ப வெவ்வேறு விதமான நியாயங்கள் இருக்கின்றன. பகவத் கீதையில் கண்ணன் பார்த்தனுக்குச் சொன்ன வாக்கே அதுதான். தர்மம் என்பதும் அதர்மம் என்பதுமே வாழ்வியல் முடிவுகளுக்கு முக்கியமான அடிப்படைகளாக இருக்கவேண்டும். தர்மம் முறையே பின்பற்றப்படுவது தர்மம் காக்கப்படுவதாகும். தர்மம் வழுவும் செயல்களைக் கண்டிப்பதும் தர்மத்துக்கு விரோதமான செயல்களை கடுமையாக எதிர்த்து தண்டிப்பதுமே கற்றறிந்தவர்களும் ஆட்சிப்பணி செய்வோரும் ஆற்றவேண்டிய கடமை.<br />
வாழ்வுமுறை என்பது ஒவ்வொருவர் செய்யும் பணி சார்ந்தும் இருக்கும் இடம் சார்ந்தும் அமைகிறது. நம் தேசம் முழுதும் சுற்றினாலும் பழக்க வழக்கங்கள் வேறுபட்டிருக்கும் ஆனால் வாழ்வின் அடிநாதம் மாறாது. நம் கிராமங்களில் இன்றும் மக்கள் காலையில் எழுந்ததும் சூரியனை வணங்கிவிட்டுப் பசுவையும் வணங்குவர். பின் ’எல்லாத்தையும் நல்லா வெச்சிரு சாமி’ என்று ஒரு பிரார்த்தனை. அதன் பின் அன்றைய தினத்தின் பணியைச் செய்யக் கிளம்பிவிடுவர். <br />
<br />
வட இந்தியாவில் போய்க் கிராமங்களில் பார்த்தாலும் இதே முறை. காலையில் எழுந்து சூரியனையும் பசுவையும் வணங்கிவிட்டு, “ஸப்கா சுக் சுக் ரகோ பகவான்” என்ற பிரார்த்தனையுடன் பணிகளைத் துவக்குவார்கள். இதை ஏன் செய்கிறோம்? யார் சொல்லிக் கொடுத்தார்கள்? இந்த முறையின் வரலாறு என்ன என்பதெல்லாம் அந்த மக்களுக்குத் தெரிந்துதான் செய்கிறார்களா?<br />
கேட்டபோது வந்த பதில் “இது காலங்காலமாக நடப்பது” என்பதே. ஆனால் அதோடு நில்லாமல் இதை ஏன் எதற்கு என்று கேட்கிறாயே உனக்கு உன் தாய் தந்தையர் இதைக்கூடவா சொல்லித்தரவில்லை என்று பல இடங்களில் எதிர்க்கேள்வி திணறச் செய்ததும் உண்டு. எல்லோரும் இன்புற்றிருக்க என்பதே சநாதன தர்மம் எனப்படும் இந்த மண்ணின் வாழ்வியல் முறையின் அடிநாதம். <br />
<br />
இதில் ஒவ்வொருவர் தொழிலுக்கு ஏற்ப அவரவருக்கான நியாயங்கள் நிர்ணயிக்கப்பட்டன. இது <span style="color: blue;">வர்ணாஸ்ரம தர்மம்</span> என்று அறியப்பட்டது. இதில் நான்கு பிரிவுகள் இருந்தன. <br />
<span style="color: #351c75;">கற்றறிந்தவர்களாக, சான்றோராக இருந்தவர்கள் பிராமணர்கள் </span>என்று அறியப்பட்டனர். இவர்கள் தர்மத்தையும் வாழ்வியல் சிக்கல்களுக்குத் தீர்வுகளையும் சொல்லி சமுதாயத்துக்கு உதவினர். <br />
<span style="color: #351c75;">காவல் தொழிலும் ஆட்சிப்பணியும் செய்துவந்தோர் க்ஷத்ரியர்</span> என்று அறியப்பட்டனர். போர்த்திறம் கொண்டு தேசம் காக்கும் பணியில் ஈடுபட்டுவந்தனர் இவர்கள்.<br />
<span style="color: #351c75;">வணிகம் செய்து பொருள் ஈட்டி சமுதாயத்துக்கு பொருளாதாரம் செழிக்க உதவியோர் வைசியர் </span>எனப்பட்டனர். பொருளாதார விவகாரங்களில் இவர்கள் நிபுணர்களாக இருந்தனர்.<br />
<span style="color: #351c75;">உடல் உழைப்பில் ஈடுபட்டோர் சூத்திரர்கள் </span>என்று அடையாளப்படுத்தப்பட்டனர். வயல்களிலும் பிற இடங்களிலும் உழைப்பது இவர்கள் பணியாக இருந்தது. <br />
<br />
பாரத சமுதாயம் தன்னிறைவு பெற்ற கிராமங்களாக இருந்தது. ஒவ்வொரு கிராமத்திலும் இந்த நால்வருண அமைப்பும் அவர்கள் கிராம நன்மைக்குப் பாடுபடுவதுமாக வாழ்க்கை இருந்தது. இப்படிப் பல கிராமங்கள் சேர்ந்து ஒரு ராஜ்ஜியம் என்று மொத்தமாக 57 ராஜ்ஜியங்கள் இமயத்துக்கும் குமரிக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பில் இருந்தன. 57 ராஜ்ஜியங்களில் பல சிற்றரசுகள் இருந்தன. அது வரலாறு.<br />
<br />
இந்த வர்ணாஸ்ரமம் மிகப் பெரிய குற்றம் என்பது போலச் சில சித்தாந்திகளால் சித்தரிக்கப்படுகிறது. ஆனால் அது தொழில்சார் பிரிவு மட்டுமே, நம் புராணங்கள் இதிஹாசங்கள் இவற்றை வலியுறுத்தியே வந்திருக்கின்றன. தொழில் சார்ந்த பிரிவுகளையும் வேற்றுமைப் படுத்தியோ உயர்வு தாழ்வு கொண்டோ நோக்குதல் கூடாது என்பது வழிவழியாக ஆதிசங்கரர் முதலான பெரியவர்களாலும் (மனீஷா பஞ்சகம்) அறிவுறுத்தப்பட்டு வந்திருக்கிறது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjffxVLV4lC59sYxL7T8XS3KzY4TDVGeBt6mbHMB1dgUVSQbQTPIGtCuj4bW7rws4QD84bYUrkM7WELov71zscZAUEgzMxLLKOsq2EaOLPDV3G8aKDuJq4jMBi_8mOSGNae9SG9oyxZ/s1600/shankaracharya_new.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjffxVLV4lC59sYxL7T8XS3KzY4TDVGeBt6mbHMB1dgUVSQbQTPIGtCuj4bW7rws4QD84bYUrkM7WELov71zscZAUEgzMxLLKOsq2EaOLPDV3G8aKDuJq4jMBi_8mOSGNae9SG9oyxZ/s1600/shankaracharya_new.jpg" height="320" width="243" /></a></div>
நம் சநாதன தர்மத்தைக் குறைகூறுவோர் இந்த வர்ணப் பிரிவினையைத் தவிர வேறெதுவும் சொல்ல வழியில்லை. ஆதிசக்தி அம்பிகையின் துதியாம் லலிதா சகஸ்ரநாமத்தில் வர்ணாஸ்ரம விதாயினீ என்றொரு திருநாமம் தேவியைக் குறித்துச் சொல்லப்படுகிறது. உலகின் அனைத்து உயிர்களுக்கும் தாயாக ஆப்ரம்ஹ கீட ஜனனீ என்று போற்றப்படும் தேவி வர்ணாஸ்ரமம் தீயது என்றால் அதனுடன் சம்பந்தப்பட்டிருப்பாளா? இது குறித்து ஒரு சிறு விளக்கத்தைப் பார்க்கலாம்.<br />
<br />
<span style="color: blue;">ஆப்ரம்ஹ கீடஜனனீ => அற்பப்புழு முதற்கொண்டு ஆதிபகவன் வரையான அனைவருக்கும் தாய்.<br />வர்ணாஸ்ரம விதாயினீ => வர்ணாஸ்ரமத்தை அளித்து ஆள்பவள்.</span><br />
விதாயின் என்ற சொல்லுக்கு அளித்தல், நிர்வகித்தல். ஆளுதல், அதிகாரப்ரயோகம் செய்தல், நடாத்துதல், காரணமாயிருத்தல் என்றெல்லாம் பொருள்.<br />
<br />
விதாயினீ என்றால் அளிப்பவள், நிர்வகிப்பவள், ஆள்பவள், நடாத்துபவள், அதிகாரப்ரயோகம் செய்பள், காரணமாயிருப்பவள் என்பதே பொருள்.<br />
வர்ணாஸ்ரமம் என்பது தொழில் ரீதியான குழுக்களாக மாந்தரைப் பிரித்து வைத்த சமுதாயச் செயல்பாடு. இதற்கும் இறையை அடைய வழிகாட்டும் தர்மக் கோட்பாடுகளுக்கும் சம்பந்தமில்லை.<br />
இந்த வர்ணாஸ்ரமத்தை அளிப்பவள், நிர்வகிப்பவள் இதில் அதிகாரப்ரயோகம் செய்பவள் என்று இறைவியை ஏன் சொன்னார்கள்?<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6MYsIgnoym-J-W29bFuNX0mpJpk5Fvf3uQ8hKMG79HedL0qFDEueWjm8-3wK8LzmiJRCYd_uvpWWVFGeCFBkNQVXbSIBOiSzooI3Of8JE8s9cVgPGfb4houYWMJ8iirv20M1vZWRL/s1600/lalitha+p.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6MYsIgnoym-J-W29bFuNX0mpJpk5Fvf3uQ8hKMG79HedL0qFDEueWjm8-3wK8LzmiJRCYd_uvpWWVFGeCFBkNQVXbSIBOiSzooI3Of8JE8s9cVgPGfb4houYWMJ8iirv20M1vZWRL/s1600/lalitha+p.jpg" height="320" width="224" /></a></div>
<br />
இந்தப் பிரிவுகளில் ஒவ்வொரு மனிதனும் இருக்கும் இடம் அவனுக்கு இறை அளித்த கொடை. இது குறித்து மனிதா நீ பெருமை கொள்! ஆனால் கர்வம் கொள்ளாதே. இதில் உயர்வு தாழ்வு கண்டு கர்வத்தில் கொக்கரித்தால் இந்த ஏற்பாடுகளை நிர்வகித்து அதிகாரம் செலுத்தும் இறைவியால் நீ கீழானது என்று தூற்றும் நிலைக்குத் தள்ளப்படுவாய் என்பது எச்சரிக்கை.<br />
<br />
உன்னால் ஆவது இங்கு எதுவுமில்லை. வர்ணாஸ்ரமத்தில் உன் இடம் இறைக் கொடையே அன்றி உன் உயர்வு தாழ்வு ஒரு பொருட்டே அல்ல என்பதைக் குறிக்கவே இந்தப் பெயர் இறைவிக்கு வந்ததாக அறியப்படுகிறது.<br />
எந்தச் சமுதாய ஏற்பாட்டையும் இறையின் துணை கொண்டு செய்வது நீதி பரிபாலனத்துக்கு பேருதவியாக இருக்கும் என்பது மனசாட்சி உயிர்ப்புடனிருந்த நம் முன்னோர் செய்த ஏற்பாடு.<br />
<br />
ஆப்ரம்ஹ கீடஜனனீ என்று அனைத்துயிர்களுக்கும் தாயாக அறியப்படுபவளின் பிள்ளைகள் ஒருவருக்கொருவர் வேற்றுமை பாராட்டலாமா என்ற கேள்விக்கு, வர்ணாஸ்ரம விதாயினீ என்று பணி சார்ந்த பிரிவுகளை அளித்தாள்பவளே தாய்தான் என்பது பதில்.<br />
<br />
ஆக, வர்ணாஸ்ரமப் பிரிவுகள் தாயால் தரப்பட்டவை. பணிகளின் வேறுபாட்டைக் கொண்டு பிள்ளைகள் தமக்குள் உயர்வுதாழ்வு பாராட்டினால் தாய் கண்டிப்பாள். திருந்தாவிடில் தண்டிப்பாள். பணி சார்ந்து வேறுபாடுகள் இருக்கும், ஆனால் அவற்றைக் கொண்டு வேற்றுமை பாராட்டாதே என்று சொல்கிறது லலிதா ஸகஸ்ரநாமம்.<br />
<br />
இது போல நம் முன்னோர் தர்மம் குறித்துச் சொல்லிச் சென்ற நல்ல பல விஷயங்களைக் காலப் போக்கில் சரியான புரிதலின்றி நாம் விட்டிருக்கிறோம். நம் தர்மம் வாழ்வின் ஒவ்வொரு நிலைக்கும் வழிகாட்டுகிறது. அதைச் சரியாகப் புரிந்து கொள்ள தக்கதோர் நல்லவரின் வழிகாட்டுதல் அவசியம். அத்தகைய வழிகாட்டுதல் இல்லை என்றால் சொல்லபட்ட விஷயங்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாது நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு தர்மத்தையும் பின்பற்றாது விட்டுவிடும் அபாயம் இருக்கிறது. <br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuYmvFO03ffxLn_1L98R4Fje3dIYYyOqUjxKRnuuzpt-_sj73pTRcXxERno84Qx_XbQ7FE-aqdLjMXkr90egEGuG1MmwsKrqjqt0PJ1ltQKN3dYUdh2Dz8WComfRAmYCXiRM9E5YAu/s1600/acharya.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuYmvFO03ffxLn_1L98R4Fje3dIYYyOqUjxKRnuuzpt-_sj73pTRcXxERno84Qx_XbQ7FE-aqdLjMXkr90egEGuG1MmwsKrqjqt0PJ1ltQKN3dYUdh2Dz8WComfRAmYCXiRM9E5YAu/s1600/acharya.jpg" height="320" width="236" /></a></div>
தாய்நாடும் தர்மமமும் நம்மிரு கண்கள் என்பது பெரியோர் வாக்காகும். ஆகவே தேசம் குறித்தும் தர்மம் குறித்தும் தெளிவு பெற விழைவோர் தக்க குருவை நாடிச் சரியாகப் புரிந்து தெளிவதே சிறப்பு. Arun Ambiehttp://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6493698527091962490.post-11243128767360502232014-09-10T22:17:00.002-07:002014-09-10T23:08:36.897-07:00ஓம் சக்தி - கொள்கைக்கும் செய்கைக்குமுள்ள தூரம்<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
ஒவ்வொருவரும் ஒவ்வொரு கொள்கையை உடையவராயிருக்கலாம். அதாவது, மற்ற எல்லாரையும் விட ஒரு நியாயம் அல்லது ஒரு தர்மம் அல்லது ஒரு மதம் இவற்றில் ஒன்றில் ஒருவன் விசேஷ மனப் பற்றுடையவனாய் இருக்கலாம். இவை ஒவ்வொன்றும் ஸர்வ ஸம்மதமாய் நன்மை பயக்கத் தக்கதாய் இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. ஒரு கொள்கை தீமையை விளையச் செய்யினும் செய்யும். ஆனால், ஒருவர் ஒரு கொள்கைப்படி கருமங்களைச் செய்யும் பொழுது அது தனக்காகவது பிறருக்காகவது நன்மை தருமென்றே செய்வார். <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhaOi5oN3fkjXtZT3Ut2FEWFCAOIq1MWTtDQUP4iPT-NszaEN7UCs2IkJzacZCCCWKpAb_CWKXyF3GUuKQk1ha3ebH7-A40NmobZmmrr60OIgTdPL8J_n6U3dcc1aRaRfMoU4SdFmZc/s1600/11-bharathiar200.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhaOi5oN3fkjXtZT3Ut2FEWFCAOIq1MWTtDQUP4iPT-NszaEN7UCs2IkJzacZCCCWKpAb_CWKXyF3GUuKQk1ha3ebH7-A40NmobZmmrr60OIgTdPL8J_n6U3dcc1aRaRfMoU4SdFmZc/s1600/11-bharathiar200.jpg" /></a></div>
<br />
ஒருவன் கொடுங்கோல் அரசில் குடித்தனம் செய்தால் வயிற்றுக்குச் சோறில்லாமலும் சர்க்கார் அதிகாரிகளின் ஹிம்சையால் மானமிழந்தும் துன்பமடைய வேண்டியிருக்கிறது; குடியானவனாயிருந்து பயிர்த்தொழில் செய்யவோ அநேக தடங்கல்கள் இருக்கின்றன; பட்டத்தில் மழை பெய்யவில்லை;அப்படி மழை பெய்தாலும், உழ எருதுகள் இல்லை; உழுதாலும், விதைக்க வித்துக்களில்லை; விதை விதைத்தாலும்,களைகளைச் சரியான காலத்தில் எடுத்துப் பயிர் அடித்துக் காவல் காத்து மாசூலை அறுவடை செய்து வீடு கொண்டுவந்து சேர்த்து ஸூகிக்க ஐவேஜி இல்லை; அப்படி வீடு கொண்டு வந்து சேர்த்துப் பலனை அநுபவிக்கவும் இடமில்லை; ஏனென்றால் சர்க்கார் தீர்வைக்கே தானிய தவசங்களைக் களத்தில் விற்றுவிட வேண்டியிருக்கிறது. ஆகையால், உழுது உண்ணுவதைவிட வேறு என்ன தொழில் செய்தாயினும் பிழைக்கலாமென்று "கொள்ளைக்கூட்டத்தோடு சேர்ந்து பிரயாணிகளை வழிப்பறி செய்தோ, கன்னம் வைத்துத் திருடியோ பிழைக்க ஆரம்பிக்கிறான். <br />
<br />
அவன் செய்யும்தொழில் ஒரு கொள்கையினடியாய் உண்டானதாயினும், அது அவனுக்குத்தான் நன்மை தருமேயல்லாது இதரர்களுக்குத் தீமையே செய்யும். இருந்தாலும், ஆபத் தர்மம் என்ற கொள்கையை அவன் அனுசரிக்கிறான் மனைவி மக்கள்உடுக்க உடையின்றி, உண்ண உணவின்றிப் பார்த்தவரெல்லாம்பரிதாபங் கொள்ளும்படியாய், ஒரு புருஷன் குடும்ப சவரக்ஷனை செய்தால், அவன் மானம் அழிந்து போகிறது.'பயிர்த் தொழிலில் ஒன்றும் கிடைக்காது' என்ற நிச்சயம் ஏற்பட்டு விட்டது. திருட்டுத் தொழிலில் ஏதேனும் பசியாரஉண்ணக் கிடைக்கும் என்ற திண்ணம் உண்டு. பிரயாணிகளோஆங்கிலேயர் ஆசீர்வாதத்தால் நிராயுதபாணிகளாய் இருக்கிறார்கள். போலீஸ் என்ற உள் நாட்டுக் காவற்காரரோ சம்பளம் சொற்பமானதாலும், அந்நியர் அரசாட்சி தங்கள் தயவின்றி நடவாதென்ற நம்பிக்கையாலும், தாங்களே திருடத் தயாராயிருக்கிறார்கள். கொள்ளைக் கூட்டத்தாரோடு 'எக்கிரிமெண்டு' (உடன்படிக்கை) செய்து கொண்டு அவர் கொள்ளையில் ஒரு பங்கு பெற்றுக் காலத்தைத் தள்ளக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். <br />
<br />
இத்தியாதி சவுகரியங்களால் திருட்டுப் பிழைப்பே மேலானதென்று ஒரு குடியானவன்அதைக் கைக் கொள்ளுகிறான். ஆனால், அந்தத் தொழிலில் ஜீவஹிம்ஸை செய்தே நடக்க வேண்டியிருக்கிறது. அப்படிச்செய்வது பாபமாகும். அந்தப் பாபத்தால் பாபத்திற்குரிய மோட்சத் தடை நேரிடும் என்ற பயமோ, சந்தேகமோஅவனுக்கு உண்டாகிறது. அதற்கு ஈடாக அவன் வழிப்பறி செய்யுங்காலத்தில் ஒரு தருமத்தை அனுசரிக்கிறான். அதாவது, சில வகுப்பார்களை அவன் தொடுவதில்லை.ஏழைகள், துணையின்றிச் செல்லும் ஸ்திரீகள் நோயாளிகள், தூர ஸ்தலங்களிலிருந்து வரும் யாத்திரைக்காரர்கள் ஆகியஇவர்களையும் இவர்களைப் போன்ற மற்றவர்களையும் ஹிம்ஸிப்பதில்லை. <br />
<br />
அதோடு நில்லாமல், தான் கொள்ளையடித்து ஈட்டிய பொருளில் ஒரு பாகத்தைக் கொண்டு தான தருமங்களும் செய்கிறான். தன்னைப் பகலில் கொள்ளையடித்த "சாவுகாரனையும், லேவாதேவி செய்யும் நிஷ்கண்டகனையும், ஏன் இரவிற் கொள்ளையடிக்கக் கூடாதென்று தன்னைத்தானே கேட்கிறான். 'குனிந்தால் வரி, நிமிர்ந்தால் வரி, நின்றால் வரி, உட்கார்ந்தால் வரி, நில வரி, நீர் வரி, பாசி வரி, ரோட்டு வரி, காட்டு வரி, வீட்டு வரி, மோட்டு வரி, கொடுக்கல் வரி, வாங்கல் வரி, வருமான வரி, தொழில் வரி, தோல்கேட்டு (Toll Gate) வரி, ரயில் வரி, சாக்கடை வரி, சாராயக்கடை வரி, மாட்டு வரி, ஆட்டுவரி, நாய் வரி, பூனை வரி, இறக்குமதி வரி, ஏற்றுமதி வரி, - இன்னும் எண்ண முடியாத வரிகளைப் போட்டு, வீடு வாசல், நிலம் கரை, ஆடு - மாடு, சட்டி பொட்டி இவைகளை ஜப்தி செய்து ஏலங்கூறி கொள்ளையடித்துப் போகும் சர்க்கார் பணத்தை நாம் ஏன் திரும்பக் கொள்ளையடிக்கப் படாது?' என்ற கேள்வியும் அவனுக்கு உண்டாகிறது. <br />
<br />
இவ்விதமாக ஆட்சேபணை ஸமாதானங்களால் தம் மனதில் கொள்ளையடித்துப் பிழைப்பதே நல்லதென்று ஒரு தீர்மானம் செய்து கொள்கிறான். இந்தத் தீர்மானம் அவன் பிறவிக் குணத்துக்கு விரோதமாய் இருப்பினும், தர்ம சாஸ்திரத்திற்கு முற்றும் ஒவ்வாததாய் இருப்பினும், காலசுபாவம் என்ற அவசியத்தால்ஆபத் தர்மமாக அவன் சித்தத்தில் நிலைத்து விடுகிறது. இதை ஒரு கொள்கையாக வைத்துக்கொண்டு அவன் காரியங்களை ஆரம்பிக்கிறான். சிலர் இதை நல்லதென்று சொல்லுவார்கள். எவர் எதைச் சொல்லினும், எவர் எதைச் செய்யினும், தான் கொண்டதே கொள்கையென்று அவன் காலத்தைக் கழித்துவருகிறான். அவன் கொள்கைக்கும் செய்கைக்கும் ஒற்றுமை இருக்கிறது. இரண்டும் ஒன்றையொன்று அடுத்துத் தொடர்ந்தே வருகிறது. அவன் மனோதிடம் வாய்ந்த புருஷன் என்றே சொல்லலாம்.<br />
<br />
- <span style="color: blue;">பாரதியார்.</span>Arun Ambiehttp://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.com0