ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Wednesday 12 June 2013

மணிமண்டபமும் மானங்கெட்ட அரசியலும் - பாகம் 2

நண்பர் பால கௌதமன் எழுதிய பதிவு. இங்கே வெளியிடுவதில் மகிழ்கிறேன்.

உலகத்தை உலுக்கிய பயங்கரவாதி ஒசாமா பின் லாடன், அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டான். அவன் உடலை விமானத்தில் எடுத்துச்சென்று நடுக்கடலில் விட்டெரிந்தனர் அமெரிக்கர்கள்! என்ன காரணம்? நிலத்தில் அடக்கம் செய்தால் அது தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு நினைவுச் சின்னமாகிவிடும்! அது உலக அமைதிக்கு நிரந்தரத் தலைவலி ஆகிவிடும் என்பதால் கடலில் மீன்களுக்கு இரையாக வீசப்பட்டது ஒசாமாவின் சடலம் ! உலகம் இச்செயலை வரவேற்றது. இது தான் உலக ஒழுக்கம்.

Monday 3 June 2013

திருக்குறள் - தெளிவுரை - தேடிப்பதிக்க விழையும் நல்லோர்

இந்த தீரா...விட ஆதிக்கக் காலகட்டத்தில் திருவள்ளுவர் ஒருசமய சார்பற்றவர் என்றும் சமண சமயத்தை தழுவியவர் என்றும், இன்னும் ஒரு படி மேலே போய் வள்ளுவர் கிருஸ்துவ தாமசின் நட்பு மூலம் விவிலியத்தை அறிந்து கொண்டு  எழுதியது தான் திருக்குறள் என்றும் பித்தலாட்டச் செயல் அரங்கேறி வந்திருக்கிறது. இந்தத் தமிழ் துரோகிகள் எப்படியெல்லாம் திருக்குறளோடு தங்கள் மனதுக்கு ஏற்றபடி விளக்க உரை எழுதி தங்கள் வயிறை வளர்த்து கொண்டு திரிந்தார்கள் என்பதை தமிழ் மக்களுக்கு நாம் புரிய வைக்கவேண்டும்.

இந்து வேதாந்தமும், இந்து தத்துவங்களும் அறிந்த வடிவேலு செட்டியார் என்ற பெரியவர் ஒவ்வொரு குறளும் இந்து தத்துவங்களிளிருந்துதான் எடுத்தாளப்பட்டிருக்கிறது என்பதை ஆதாரங்களுடன் எழுதி இருக்கிறார்.