ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Sunday, 27 July 2025

AI - தொழில்நுட்ப மாற்றம் - மனிதத் தேவை குறையும் - மேற்செல்ல வழி என்ன?

 Blunt truth. தொழிலநுட்ப மாற்றம் வர வரப் பழைய நுட்பங்கள் போகத்தான் செய்யும். புதியன வரத்தான் செய்யும். 

Phone booth 500₹ செல்ஃபோனால் முற்றாக அழிந்தது. Browsing center ரிலையன்ஸ், ஹாத்வே போன்ற இண்டர்நெட் இணைப்புகளால் வீழ்ச்சி தொடங்கி ஜியோவால் முற்றழிந்தது. 

கொரியன் லேப்டாப் 10000/15000 என்று கிடைக்கத் தொடங்கியபோது கம்பியூட்டர் ஒப்பந்தப் பணி நிலையங்கள் பயனிழந்து போயின.  

இப்போது லேப்டாப் (i-macஏ ஆனாலும்) சுமையாகிறது. 

இது போலவே IT வேலைகள் பழைய ஊதியப் பளபளப்பை இழக்கும். பல வேலைகள் ஏஐ வசம் போகும். இதுவரை மரியாதைக்குரிய வேலைகள் என்று பார்க்கப்பட்டவை மனிதர்கள் தேவையில்லை என்றாகும். உம்: coding, web design, security monitoring/patching, customer care, healthcare basics, basics of any work that involves computers, so to speak. 

Ethics சம்பந்தப்பட்ட வேலைகள், சட்டம்-முறைமைகள் பின்பற்றுதல் உள்ளிட்ட பணிகளில் மனிதத் தலையீடு தேவைப்படும். மருத்துவத்தில் மனிதத் தலையீடு கண்டிப்பாக இருக்கும், ஆனால் மிகக் குறைவாக. பாரா மெடிக்கல் வேலைகள் சில ஏஐக்குப் போகும். 

கணினித் துறை பழைய mass employer, mega paymaster அந்தஸ்தை இழக்கும். ஏஐ கற்றுக்கொண்டு ஓரளவு பிழைக்கலாம். ஆனால் பல விளம்பரங்கள் அளப்பது போல ஏஐ கற்றால் ஆண்டுக்கு 70லட்சம் என்பது எர்வாமேட்டின் கூந்தல் வளர்த்த கதை தான்.

அரசு தலையிட்டுக் காசு தருமா என்றால் ராகுல் காந்தி அவரோடு திரியும் அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டஃப்லோ உள்ளிட்ட பொர்லாதார வல்லுனிஸ்ட்கள் அப்படித் துட்டு தரச் சொல்ல வாய்ப்புள்ளது. அது விளங்காத செயல்பாடு. மோடி அப்படிக் காசு கொடுத்துச் செலவு செய்யச் சொல்ல மாட்டார். 

எந்த regulated பொருளாதார அமைப்பும் காலத்தால் நிலைக்காது. ஏற்ற இறக்கம் தன்னாலே நிகழும். சில வரைமுறைகள் மாறும். அதற்குப் பழகிக் கொள்வதே நீடித்திருக்க வழி.

மக்கள் IT தவிர்த்து வேறு core வேலைகளுக்குப் போவது நடக்கும். புதிய வேலைகள் தோன்றி அவற்றுக்கும் போகலாம். ஆனால் herd mindsetல் படிப்பில் ஒரே துறையைச் சார்வதும் அதிலும் ஓப்பியடித்தாலும் பட்டம் வாங்கிவிட்டால் போதும் விரல் பாவத் தெரிந்தால் வேலை என்பதும் நடக்காது. கற்றவை கற்றபின் எந்தளவுக்கு நிற்கிறதோ அந்தளவுக்குக் கற்றவன் நிற்கலாம். 

எதையும் ஆழ, அகலப் படித்துக் கூரோடு இருந்தால் மேம்படலாம். அல்லாத நிலையில் also ran அல்லது attempted run என்று வாழ்க்கை முடியும்.

No comments: