Sunday, 29 July 2012

டெசோ - அரசியலில் பிழைத்திருக்க திமுகவின் ஆயுதம்!

(நிஜமாகவே) சமீப காலமாக டெசோ வருகிறது. விழுப்புரத்தில் இருக்கிறது. விக்கிரவாண்டி தாண்டிவிட்டது, செங்கல்பட்டு வந்துவிட்டது. ஆகஸ்டு 12ல் சென்னை வந்து சேரும் என்று பலவிதமான அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அது போலவே ஈழம் காண்பதே லட்சியம் என்று முழங்கி, ஈழம் லட்சியம் தான் ஆனால் இப்போது லட்சியம் செய்யவேண்டியது ஈழத்தமிழர் நல்வாழ்வு மட்டுமே என்று இறங்கி, தனி ஈழம் கோரித் தீர்மானம் என்று தீர்மானித்து, சிதம்பர ரகசியத்தால் தனி ஈழத்தீர்மானத்தைத் தீர்மானமாகத் தீர்த்துக் கட்டி தனி ஈழம் லட்சியம் வாழ்வாதாரம் நிச்சயம் என்று நைச்சியம் பேசி ழப் போர் நிறுத்த உண்ணாவிரதப் புகழ்  மு. கருணாநிதி குட்டிக்கரணங்கள் பல அடித்து வருகிறார்.

Saturday, 14 July 2012

மெய்வருத்தக் கூலியும் செயலின் முழுப்பலனும்

ஸ்ருங்கேரி மஹா ஸந்நிதானம் ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் சென்னை வந்த அன்று அருளிய அனுக்ரஹ பாஷணத்தில் ஒரு கருத்தைச் சொன்னார். "குருவருளும் திருவருளும் இன்றி எவ்வளவு திறமை கொண்டு என்ன செய்தாலும் உரிய பலன் கிட்டாது" என்றார். அதற்கு எல்லாம் குருவருளும் இறையருளும் தான். நான் எதுவும் செய்யவில்லை என்று கர்வப்படக்கூடாது என்று விளக்கம் சொல்லிக் கொண்டேன். சற்றே யோசித்த போது ஒரு கேள்வி எழுந்தது.